Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பீகாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரிப்பு! பீகார் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த மாநிலத்தில் வெயிலின் தாக்கம் வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரை அச்சுறுத்தும் வெயில் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பீகார் மாநிலத்தில் நிலவி வருகின்ற கடுமையான வெயில் காரணமாக தற்போது வரையில் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவத…

  2. பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலி இந்தியாவின் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பீகார் பொலிஸ் துறை இதுவரை 800 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளது. அதேநேரம் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில் 20,000 லிற்றர் கள்ளச்சாராயங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். இதனிடையே நவம்பர் 16 ஆம் திகதி மதுவிலக்கு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னதாக தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப…

    • 1 reply
    • 233 views
  3. பீகாரில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! பீகாரில் 94 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகள் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 தொகுதிகளுக்கும் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 54 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை மொத்தம் 63 இடங்கள் காலியாக உள்ளபோதும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

  4. பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.. அதுவும் 2ஆவது முறையாக... பீகார் மாநிலத்தில் கங்கையின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடித்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. கிராமங்களையும் நகரங்களையும் இணைக்க புதிய உள்கட்டமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகப் பல இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கனெக்டிவிட்டி அதிகரித்து கிராமங்களும் வேகமாக வளரும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. பீகார்: இது நல்ல செயல் தான் …

    • 3 replies
    • 648 views
  5. பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலி பீகார் எல்லையில் நேபாள போலீசார் சுட்டதில் இந்திய வாலிபர் பலியானார். பதிவு: ஜூன் 13, 2020 03:15 AM பாட்னா, தங்கள் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் லிபுலேக், காலாபனி, லிம்பியதூரா ஆகிய பகுதிகளை நேபாள அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. இந்த சூழலில் உத்தரகாண்ட் மாநிலம் தார்சுலாவில் இருந்து லிபுலேக் பகுதியை இணைக்கும் 80 கி.மீ. சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த மாதம் திறந்துவைத்தார். இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா புதிதாக அமைத்துள்ள சாலை தங்கள் எல்லைக்குள் வருவதாக நேபாள அரசு குற்…

  6. பீகார் தேர்தலைப் புரிந்து கொள்ள தெரிய வேண்டியது லாலுவின் வரலாறு எல்லா தேர்தலைக் காட்டிலும் பீகார் தேர்தல் விறுவிறுப்போடு கடந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக தேர்தல் ஆணையர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, ஒரு இடம் இரண்டு இடம் வெற்றி பெற்றாலே மாநில கட்சிகளை சூறையாடி தன் ஆட்சியை நிறுவும் பாஜக குறைந்த இடங்களை வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்குவது என்று பீகார் தேர்தலின் திருப்புமுனையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் லாலு பிரசாத் யாதவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரியில் தொடங்கிய லாலுவின் முற்போக்கு அரசியல் பயணம் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள புல்வாரியா எனும் கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குட…

    • 0 replies
    • 370 views
  7. புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று! புது டெல்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு முறைப் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய ஜனாதிபதியை நேற்று (04) மாலை வரவேற்றார். பழைய நண்பரை உற்சாகத்துடன் கட்டிப்பிடித்து, இறுக்கமான கைகுலுக்கினார் மோடி. இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில் புட்டின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், அனைத்து வருகை தரும் தலைவர்களைப் போலவே, அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாத…

  8. புட்டின் இன்று இந்தியா செல்கின்றார் October 4, 2018 1 Min Read ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா மற்றும் ரஸ்யா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புட்டின் இன்று இந்தியா செல்கின்றார். புட்டினின் இந்தப் பயணத்தின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் புட்டின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில் நாளை இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள்…

  9. புதிதாக... 10 இலட்சம் பேருக்கு, மத்திய அரசுப் பணியில்... வேலை வாய்ப்பு – மோடி நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் பேரை நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள இலட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண…

  10. புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்தியாவும் ரஷ்யாவும் உறவில் இணக்கத்தைப் பேணி வருகின்றன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்தப் பயணத்தில் இருந்து இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது என்ன?" - இந்தக் கேள்வியை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டேன். "நாங்கள் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். தற்போது நாங்கள் ரஷ்யாவிடம் அதிகமாக வாங்குகிறோம், ஆனால் மிகக் குறைவாகவே விற்கிறோம். இது ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதைச் சரிசெய்ய விரும்பு…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். கட்டுரை தகவல் எழுதியவர், உமர் ஃபரூக், நியாஸ் ஃபரூக்கி பதவி, பிபிசி உருது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டிசம்பர் 27, 2023 அன்று பாகிஸ்தான் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவும் "ஃபதா 2" ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புத்துறை (ஐஎஸ்பிஆர்) தகவல்களின்படி, இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 24, 2021 அன்று, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ஃபதா 1" ராக்கெட் பாகிஸ்தானில் சோதனை செய்யப்பட்டது. …

  12. புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்! புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஓய்வு பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையர் பதவி வெற்றிடமானது. தற்போது அந்த இடத்திற்கு அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பதவி வகிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1221412

  13. புதிய தொழிலாளர் சட்ட விதிகள்: ஊதியம், பணிநேரம், பிஎஃப் குறித்து என்ன சொல்கின்றன? பத்மா மீனாட்சி பிபிசி 29 ஜூன் 2022, 00:44 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 29 சட்ட விதிகளில் ஊதியம் பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட…

  14. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் பிரதமர் டெல்லியில் பிரமாண்டமாக அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டினார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டடத்தைக் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 971 கோடி ரூபா செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. 4 தளங்களுடன் அமையவுள்ள புதிய கட்டடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பே…

  15. புதிய நாடாளுமன்ற கட்டடம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு! புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக இந…

  16. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியிடம் செங்கோலை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம் 27 மே 2023 புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கிறார். அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தயாரிக்கப்பட்ட செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை பிரதமரிடம் வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழு டெல்லி சென்றது. …

  17. புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு தகவல்! புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடரை தற்போதைய கட்டடத்திலேயே நடத்துவதா அல்லது புதிய கட்டடத்தில் நடத்துவதா என்று விவாதித்து வருகின்றது. ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், இந்தியாவி…

  18. புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக பிரகடனம் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன. புது டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றதை அதிகாரப்பூர்வ தலைவர் மற்றும் குடியரசு தலைவர் திறந்து வைக்கப்பட வேண்டும் ஆனால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன. எனவே எதிர்வரும் 28 ஆம் திகதி கறுப்பு கொடிகள் பறக்கவிட்டு அந்த தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத…

  19. புதிய பக்கத்தைப் புரட்டியிருக்கும் மாலைதீவு மாலைதீவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இடைக்கால முடிவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுடனான நேரடிப் போட்டியில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் இப்ராஹிம் முஹமத் சோலீக்கு பெருவெற்றியைக் கொடுத்திருக்கின்றன. இறுதி முடிவுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும். நடைமுறைகளின் பிரகாரம் தற்போதைய அரசாங்கம் நவம்பர் 17 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்கும். ஆனால், மாலைதீவு மக்கள் மாற்றமொன்றை விரும்பியிருக்கிறார்கள் என்பதே உடனடியாகத் தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும்.வாக்காளர்களில் 58 சதவீதமானவர்கள் சோலீயை தெரிவுசெய்திருக்கிறார்கள்.அரசியல் சார்புகளுக்க…

  20. புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் இடைக்கால பிரதமராக நீடிப்பார் - பாகிஸ்தான் ஜனாதிபதி அறிவிப்பு பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் பிரதமர் இம்ரான் கான் பிரதமராக நீடிக்க முடியாது என அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில், காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் பிரதமராக நீடிப்பார் என அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றத்தை கலைக்க கோரி ஜனாதிபதி ஆரிப் அல்வியிடம் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். இதனை ஏற்ற ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள்…

  21. புதிய மாற்றத்தை சர்வாதிகார போக்குடன் மக்களுக்கு திணிக்க முடியாது: மன்மோகன் சிங் புதிய மாற்றத்தை சர்வாதிகார எண்ணத்துடன் மக்களுக்கு திணிக்க முற்பட்டால் அது அவர்களிடத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்துமென முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மன்மோகன் சிங் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எதிராக புத்தாக்கத்தன்மையை ஊக்கப்படுத்தும் போதே சமூகம் வளர்ச்சி அடையும். அத்துடன் அரசின் கொள்கையில் புத்தாக்கச் சிந்தனை, கருத்தொற்றுமை இல்லாவிடின் சவால்களை வெற்றிகொள்ள முடியாது. மேலும் சர்வாதிகார எண்ணத்துடன் செய…

  22. புதிய வகை கொரோனா அதிகரிப்பு: சபரிமலையில் சாமி தரிசனம் குறித்து அச்சமடைய தேவையில்லை! புதிய வகை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு என தெரிவித்த அவர், கடந்த காலங்களைப் போல் முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை…

  23. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் "சக்கா ஜாம்" போராட்டம் புதுடெல்லி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்தனர். அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும் 3 மணிக்கு தொடர்ந்து 1 நிமிடம் வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர…

  24. புதுடெல்லியில் காற்று மாசு தீவிரம் 13 Dec, 2025 | 10:15 AM இந்தியத் தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றின் தரம் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 400–450 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனரக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை புகை, வீதிகளில் காணப்படும் தூசி, கட்டுமான பணிகளின் போது வெளியேறும் தூசி , நிலக்கரி எரித்தல் மற்றும் எரிபொருள்கள் போன்றிலிருந்து வெளியாகும் வாயுக்களால் புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனா, குறிப்பாக பெய்ஜிங், கடந்த இருபது ஆண்டுகளில் காற்று மாசுபாட்டைக் க…

  25. புத்தாண்டு தரிசனம்: கூட்ட நெரிசலில் 12 பேர் பலி! மின்னம்பலம்2022-01-01 ஜம்மு-காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் புத்தாண்டு தரிசனத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயில் புகழ் பெற்றது. இது கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்முவில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு குகை கோயிலாகும். நாடு முழுவதும் இருந்து சுமார் 8 மில்லியன் பக்தர்கள் ஆண்டுதோறும் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். ஆந்திர பிரதேசத்தின் திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு அடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.