Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. படத்தின் காப்புரிமை Getty Images காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிடவும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்படவும் தடை விதிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. ஏதோ ஒரு பிரிட்டன் நிறுவனத்தின் ஆவணங்களில் அவர் பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் பிரிட்டன் குடிமகன் ஆகிவிடுவாரா என்று கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜெய் பகவான் கோயல் என்பவர் தாக்கல் ச…

  2. இந்திய மாலுமிகள் கடத்தல் விவகாரம் – உறுதி செய்தார் சுஸ்மா சுவராஜ் நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐவர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர். இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்…

  3. குவைத் விமானநிலையத்தில் குவைத் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 777 விமானத்தின் சக்கரத்தில் சிக்கி கேரளாவைச் சேர்ந்த ஊழியர் ஆனந்த் ராமச்சந்திரன் (36) பலியான சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் குவைத் ஏர்வேஸின் தொழில்நுட்ப பிரிவு ஊழியர் ஆவார் ஆனந்த் ராமச்சந்திரன். இந்தச் சம்பவம் குவைத் சர்வதேச விமானநிலையத்தில் நிகழ்ந்தது. விபத்து நடக்கும் போது விமானம் காலியாக இருந்தது. 4ம் முனையத்திலிருந்து விமானத்தை அதன் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் சென்ற போது விமானத்துக்கு அருகில் நின்று கொண்டு அதனை எடுத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த போது விமானத்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானதாக குவைத் ஏ…

  4. 5ஆம் கட்ட தேர்தல்: 11மணி நிலவரம்! 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று (மே 6) 5ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தில் தலா 7, பிகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2014 ஆம் தேர்தலில் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் 40 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் இந்த தொகுதிகளைக் கைப்பற்ற பாஜகவும், பாஜகவை வீழ்த்த காங்கிரஸும் முயற்சித்து வரும் நிலையில் காலை முதல் விற…

  5. இந்தியாவை அறிவோம்: மகாராஷ்டிரம் வெ.சந்திரமோகன் இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலம். தலைநகர் மும்பை. மெளரியப் பேரரசர்கள், சாதவாகனர்கள், வாகாடகப் பேரரசர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், தேவகிரி யாதவப் பேரரசர்கள், முகலாயர்கள், மராத்தாக்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்த மாநிலம். கி.பி.7-ம் நூற்றண்டில் இந்தியாவுக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்பில் மகாராஷ்டிரம் எனும் பெயர் முதலில் பதிவானது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, பம்பாய் மாநிலம் உருவாக்கப்பட்டது. எனினும் மராத்தி, குஜராத்தி, கட்சி, கொங்கணி என்று பல்வேறு மொழிகள் பேசும் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. சம்யுக்தா மகாராஷ்டிர சமிதி…

  6. மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஆரம்பம்! மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெறுகின்றது. குறித்த நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி 5 மணிக்கு நிறைவு பெறுகின்றது. இதனை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகின்றது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜாரத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம் மற்றும் உருது ஆகிய 11 மொழிகளில் நீட்தேர்வு நடைபெறுகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் இம்முறை 1.4 இலட்சம் பரீட்சார்த்திகள் தேர்வெழுதுகின்றனர். இதேவேளை ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்பகுதிகளில் நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளமையும…

  7. யாருக்கு வெற்றி? 3ஆம் கட்ட தேர்தலுக்கு பிந்தைய ஆய்வு! மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றும் என்று 3 கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் வெளியாகியுள்ள சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் (CSEPR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக நடைபெறும் பொதுத்தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. மே 6ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 19ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவும், மே 23ஆம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இனி நடக்கப்போகும் 3 கட்டத் தேர்தலிலும் இந்தி…

  8. படத்தின் காப்புரிமை Reuters ஃபானி புயலின் காரணமாக வடகிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஆயிரக்கணக்காம்ன மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி மணிக்கு 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் நகர்ந்து கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒடிசாவில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள். புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்தாலும், ஆந்திரம் மற்றும் தமிழகத்திற்கும் எ…

  9. கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப் – புர்கா அணிய தடை May 3, 2019 கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களினையடுத்து இலங்கையில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இலங்கையில் சகலவிதமான முக திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்தநிலையில் கேரளாவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கேரளாவில் உள்ள முக்கிய நகரில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கேரளா…

  10. ஏழுமலையானிடம் உள்ள நாணயங்களை எடைபோட்டு வாங்க ரிசர்வ் வங்கி முடிவு.! திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள 90 டன் புழக்கத்தில் இல்லாத நாணயங்களை, டன் ஒன்றுக்கு 27 ஆயிரம் ரூபாய் கொடுத்து (இந்திய ரூபா) வாங்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் திருக்கோயில் உள்ளது. இங்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிமித்தம் முடிப்பு கட்டி நாணயங்களை சேகரித்து வைத்து, அதைக் கொண்டுவந்து உண்டியலில் செலுத்துகின்றனர். இப்படி செலுத்தப்படும் காணிக்கைகளில், தற்போத…

  11. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா …

  12. இந்தியாவின் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ! 3 பேர் கைது கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கேரளாவில் பதுங்கியிருப்ப தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், கேரளாவில் நடத்திய அதிரடி சோதனையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில், அடுத்தடுத்து சக்தி வாய்ந்த தற்கொலைக் குண்டுகள் வெடித்தன. இதில், 253 பேர் பலியாகியுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டடோர் படுகாயம் அடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்…

  13. இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் ISIS தாக்குதல் – உளவுத்துறையின் முக்கிய எச்சரிக்கை! இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களை நடத்த ஜெய்ஸ் இ முகமது மற்றும் ISIS அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அஸார் திட்டமிட்டிருப்பதாகவும், சிரியாவின் ISIS அமைப்புடன் இணைந்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது பாதுகாப்பு பலப்பட…

  14. லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் ரீசல் விலை.. பகீர் பின்னணி! ரெல்லி: உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையான விலை ஏற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரங்களில் இந்தியா தனது புதிய அரசை தேர்வு செய்துவிடும்.அதேபோல் உலக அரசியலிலும் அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மிக முக்கியமாக அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் வெளிப்படையான பிரச்சனையும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த போகிறது. …

  15. இலங்கைக்கு தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எவ்வாறு? – இந்தியா அறிவிப்பு கோவையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கைதான ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய உளவுப் பிரிவை மேற்கோள்காட்டி பி.டி.ஐ செய்திச் சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட கோவையை சேர்ந்த மொஹமட் ஆசிப், ஜாபர் சாதிக் அலி, சாகுல் அமீட் ஆகியோரை இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த செப்டெம்பரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட காணாளிக் காட்சிகளில், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமாக கருதப்படும் தேசிய தௌகிக் ஜமாத் அமைப்ப…

  16. இம்ரான் குரேஷி பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட…

  17. படத்தின் காப்புரிமை AFP இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான தடைக்கு விலக்கு அளிப்பதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு மே மாதத்தில் முடிகிறது என்றும், அதன்பிறகு அவை அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரான் நாட்டின் வருவாயில் பிரதானப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வருவதன் மூலம், அந்த வருவாய் கிட…

  18. பாராளுமன்ற தேர்தலின் 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று April 23, 2019 இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெறுகின்றது பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்ற நிலையில் முதல் கட்டமாக கடந்த 11-ம் திகதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் திகதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மண…

  19. இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்.. பிரதமர் மோடி பிரச்சாரம்! தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஈஸ்டர் பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.ராஜஸ்தானில் பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவி…

  20. இலங்கையில் உயிரிழந்த மக்களுக்கு புத்தகாயாவில் பிரார்த்தனைகள் இந்தியாவின் புத்தகாயாவில் பௌத்த குருமார்களினால் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியை வேண்டியே குறித்த பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கொழும்பு உட்பட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இதுவரை 290 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையிலேயே புத்தகாயாவில் சிறப்பு பிரார்த்தனை நடந்துள்ளது. இதேவேளை மகாபோதி சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய பானேட்டி பி.ஷிவலை கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தாக்குதல் மனிதத்திற்கு எதிராக நடத்தப்…

  21. 40 ஆண்டுகள்... 5 ஏக்கர் காடு... 2 தேசிய விருதுகள்... யார் இந்த 85 வயது தேவகி பாட்டி? துரை.நாகராஜன் Follow வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கினார் தேவகி. 3 வருடங்கள் அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மரங்கள் வளர்ப்பது சிலருக்கு செயல், சிலருக்குப் பைத்தியம், சிலருக்குக் காதல், சிலருக்கு வாழ்க்கை. அந்த வரிசையில், இவருக்கு மரங்கள் வளர்ப்பது கடமை. அந்த 85 வயது பெண்மணியின் பெயர் தேவகி. கடந்த மாதம், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமிருந்து ’நாரி சக்தி புரஸ்கார்’ தேசிய விருது பெற்றுக் கொண்டபோது, அவர் சொன்ன வாசகம்தான் "இது எனது கடமை". ஆலப்புழாவ…

  22. 12 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் April 18, 2019 பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் திகதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது. அதேபோனறு , கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேச…

  23. 0 232 - + Subscribe to THE HINDU TAMIL YouTube இன்று இரவு அமிர்தசரஸ்-மும்பை விமானத்துடன் தற்காலிகமாக தனது அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது. ஜெட் ஏர்வேஸ் சில மாதங்களாக கேட்கப்பட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட…

  24. 2016-ம் ஆண்டு நவம்பர், 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அறிவித்தபின் கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரமதர் மோடி தெரிவித்தார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 50 நாட…

  25. படத்தின் காப்புரிமை Reuters புனேவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஜோடி பெண்களை மசூதிகளுக்குள் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தனர். இதையடுத்து இன்று மத்திய அரசு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய வக்பு வாரியம், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். நீதிபதி எஸ்.ஏ போப்டே மசூதிகளில் பிரார்த்தனை செய்வதற்கு இருக்கும் தடையை நீக்கக்கோரும் புனேவைச் சேர்ந்த முஸ்லிம் ஜோடியின் மனுவை ஏற்றுக்கொண்டார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.