அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3339 topics in this forum
-
காந்தியின் உருவ படம் மீது துப்பாக்கிச்சூடு: பெண் உள்ளிட்ட ஐவர் கைது! காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்று ஒளிப்படம் எடுத்த இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். தப்பால் பகுதியிலிருந்த இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா ஷகுண் பாண்டேவை, அவரது கணவர் அசோக் பாண்டேவை உள்ளிட்ட ஐவரை பொலிஸார் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இந்து மகாசபையின் பெண் தலைவர் உள்ளிட்ட 13 பேர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த பொலிஸாரின் விசாரணைகளில், காந்தியை சுட்டதால் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் மரணத்தை மேன்மைப்படுத்தும் வகையில் குறித்த சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 308 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய - மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜியுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து. கே. தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்? …
-
- 0 replies
- 606 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாபஸ் பெற்றார். தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார். ''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பா…
-
- 0 replies
- 524 views
-
-
விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானியா அனுமதி February 5, 2019 இந்தியாவில் வங்கி மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரித்தானிய உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி வழங்கியுள்ளார். அவரை விசாரணைக்கு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா, இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்டு, அதனை மீளச் செலுத்தாமல், லண்டன் தப்பிச் சென்றுள்ள நிலையில் இந்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ளன. இந்தநிலையிலேயே இவ்வாறு அவ…
-
- 0 replies
- 405 views
-
-
ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகின்றது February 5, 2019 விசாட் இணைய இணைப்பு , டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் கைத்தொலைபேசி சேவைகளுக்காக ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந’;தியாவின் 40ஆவது செயற்கைக்கோளான ஜிசாட்-31ஐத் தயாரித்துள்ளது. நாளை பிரெஞ்ச் கயானாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாகவும் 15 ஆண்டுக் கால சேவையை முன்னிறுத்தி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ வெளியட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் ஜிசாட் ரக செயற்கைக்கோள் வரிசையில் உருவாக்கப்பட…
-
- 0 replies
- 391 views
-
-
திருப்பதி பெருமாளின் 3 தங்க கிரீடம் திருட்டு. -திருடர் அர்ச்சகரா அதிகாரியா.! ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒன்றிய மிகப் பெரிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கோவிந்தராஜாஸ்வாமி கோவிலில் இருந்து சனிக்கிழமையன்று விலை உயர்ந்த மூன்று தங்க கிரீடங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.கோவில் கண்காணிப்பாளர் ஸ்ரீ கயானா பிரகாஷ் தொடுத்துள்ள புகாரின் படி, சுவாமி கிரீடங்கள் மாலை பிரசாதம் வழங்கும் நேரத்தில் திருடப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் இருந்த சுவாமி கிரீடங்கள் திருடப்பட்டுள்ளதால் கோவில் நிர்வாகி மற்றும் கோவிலின் ஊழியர்கள் அனைவரிடமும் காவல்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.பிரசாதம் வழங்க மாலை 5 மணி முதல் 5:45 …
-
- 0 replies
- 703 views
-
-
சி.பி.ஐ – பொலிஸ் மோதல், ஜனநாயகத்திற்கு விழுந்த பேரடி: பொன்.இராதாகிருஷ்ணன் மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம், ஜனநாயகத்திற்கு விழுந்த அடியென, மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ண்ன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சரே களமிறங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்ற வகையில் சி.பி.ஐ மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு தடுத்து நிறுத்தியது, முறையற்ற செயற்பாடெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங…
-
- 0 replies
- 374 views
-
-
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் 129 பேரையும் விடுவிக்குமாறு அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் விடுதலை குறித்த கடிதமொன்றை டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இந்திய அரசு அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் நலன் மற்றும் மரியாதை ஆகியவை குறித்து கவலையடைகிறோம். இதனால் இந்திய தூதரக அதிகாரிகள், கைது செய்யப்பட்டோரை சந்திக்க தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் மேலும் கைது செய்யப்பட்டடுள்ள மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராக இந்தியாவுக்கு அனு…
-
- 0 replies
- 892 views
-
-
தெலுங்கானாவில் 2119 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு February 2, 2019 தெலுங்கானாவில் ஒப்பரேசன் ஸ்மைல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2119 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானா அரசு குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்காக ஒப்பரேசன் ஸ்மைல் எனும் திட்டத்தை செயல்படுத்தி அதன்மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஜனவரி மாதம் 5வது கட்டமாக ஒப்ரேசன் ஸ்மைல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதற்காக தனி குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் இதுவரை 466 சிறுமிகள் உட்பட 2,119 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மீட்கப்பட்ட 274 …
-
- 0 replies
- 296 views
-
-
தெலுங்கானாவின் பிரசார தலைவராக விஜயசாந்தி நியமனம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு! தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத் தலைவராக நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் பிரசார குழுத் தலைவராக இருந்த மாலு பாக்தி விக்ர மர்கா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பிரசாரத் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்தே குறித்த பதவிக்கு நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது விஜயசாந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இதனால் முதல்வர் சந்திரசேகரராவ் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து தனது பிரசாரங்களை…
-
- 0 replies
- 446 views
-
-
பெங்களூர் விபத்தில் இரு விமானிகள் பலி… February 1, 2019 பெங்களூரில் இன்று (01.02.19) பிற்பகல் இந்திய விடானப்படையின் மிராஜ் 2000 (Mirage 2000 aircraft of the Indian Air Force) விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமான பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக விமானத் துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏச்.ஏ.எல், (HAL) நிறுவனத்தின் மிராஜ் 2000 என்ற பயிற்சி போர் விமானம் பெங்களூரிலுள்ள (HAL).ஏ.எல்.விமான நிலையத்தில் (HAL Airport) தரையிறங்கியபோது, தரையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது. விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததுடன், பாரியளவில் தீப்பற்றிக்கொள்ள, தீயணைக்கும் படையினர் பெரும் சிரமத்தின் பின்ன…
-
- 0 replies
- 584 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இன்று (வெள்ளிக்கிழமை) 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை எனபது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என்று கூறமுடியாது. இத…
-
- 0 replies
- 483 views
-
-
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: நாடு கடத்தப்பட்ட ராஜீவ் சக்சேனா கைது! ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த டுபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் எனப்படும் குறித்த வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் 450 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, இவ்விடயம் தொடர…
-
- 1 reply
- 431 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்! முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார். அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார். 1967 முதல் 9 முறை மக்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ், 1977-ல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும், 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையிலும், 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையிலும் முக்கிய இலாகாக்களை வகித்தவர். சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் பெர்னாண்டஸ். https://tamil.thesubeditor.com/india/10359-former-defence-minister-george-fernandes-passes-away-at-age-88.html டிஸ்கி : ஆழ்ந்த அஞ்சலிகள். . இவ…
-
- 13 replies
- 1.8k views
-
-
ஐதராபாத்தில் கண்காட்சியில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 கடைகள் அழிவு – 7பேர் காயம் January 31, 2019 ஐதராபாத்தில் கண்காட்சி நடைபெற்ற இடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆங்கு கடந்த முதலாம் திகதி முதல் நமாய்ஷ் என்ற பெயரில் அகில இந்திய தொழில்துறை கண்காட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 45 நாட்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், கண்காட்சி அரங்கில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்து ஏனைய கடைகளுக்கும் தீ பரவியுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதிக்கு 13 தீயணைப…
-
- 0 replies
- 267 views
-
-
பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் தொடரும்: அமெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டான் கோட்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்படுகின்றமையாலேயே அதனை முறியடிக்க முடியாமல் இருக்கின்றது. மேலும் பயங்கரவாத அமைப்புக்கள் தன்னுடைய கொள்கை முடிவுக…
-
- 0 replies
- 382 views
-
-
Image caption இந்த பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர். சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இன்னும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது. மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு…
-
- 0 replies
- 584 views
-
-
ரெல்லி குடியரசுதின ஊர்வலத்தில் 'கோவணாண்டி'யாக தமிழர்கள் ...சிறுமைப்படுத்தவா ...? பெருமைப்படுத்தவா...? ரெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் "கோவணாண்டி"களாக தமிழர்களை சித்தரித்தது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ரெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்தந்த மாநிலங்களின் பெருமைகளை, பாரம்பரியத்தை பறைசாற்றுவது போன்ற காட்சிகளை சித்தரித்து அலங்கார ஊர்திகள் கம்பீரமாக வருவதை நாட்டின் அரசியல், அதிகார உயர் பதவியில் உள்ளவர்கள் கண்டு ரசிப்பர். நாடு முழுவதும் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை கோடானுகோடி மக்கள் கண்டு ரசிப்பர். இந்த வரிசையில் தம…
-
- 0 replies
- 433 views
-
-
இந்தியாவின் கோவா கடற்கரையில் மது அருந்தினால் சிறை… January 27, 2019 இந்தியாவின் கோவா கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர். இதனால் அண்மைக் காலமாக அங்கு வேண்டத்தகாத பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுவதாக கலை வெளியிடப்பட்டுள்ளது. இது கோவா அரசுக்கும், காவற்த…
-
- 0 replies
- 426 views
-
-
இந்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த கீதா மேதா…. January 27, 2019 மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். இந்திய மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-அமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில…
-
- 0 replies
- 404 views
-
-
இறுதி ஆயுதத்தைக் கொண்டுவந்திருக்கும் காங்கிரஸ் பரந்த அளவில் தீவிர அரசியலில் பிரியங்கா காந்தியின் பிரவேசம் அதிர்ச்சிக்குரிய ஒன்றல்ல.தாயார் சோனியா காந்திக்கும் சகோதரர் ராகுல் காந்திக்கும் ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் ரேபறேலி தொகுதியிலும் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியொன்றை அமைப்பதிலும் அண்மையில் சில மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கங்களை அமைக்கும் முயற்சிகளிலும் அவர் ஒரு பாத்திரத்தை வகித்திருக்கிறார். லோக் சபா தேர்தல்களுக்கு இன்னமும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் கட்சி இப்போது அவரை பொதுச்செயலாளராக்கி உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியின் பொறுப்பை…
-
- 0 replies
- 343 views
-
-
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.. January 26, 2019 இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியின் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்ச…
-
- 0 replies
- 245 views
-
-
நடிகர் மோகன்லால், உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு… January 26, 2019 கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்பட 14 பேருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்திய மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லால், மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், இஸ்ரோ முன்னாள் விஞ்…
-
- 0 replies
- 367 views
-
-
கேரளாவில் நாளொன்றுக்கு 5 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்…. January 23, 2019 கேரளாவில் நாளொன்றுக்கு சராசரியாக 5 பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவதாக காவல்துறை இணைய தளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதாக பெண் ஆர்வலர்கள் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் கேரள காவல்துறையினரின் இணையதளத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு மட்டும் கேரளாவில் 2015 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக ந…
-
- 4 replies
- 1k views
-
-
உத்தரபிரதேசத்தில் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் January 25, 2019 உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றது முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த என்கவுன்டர் விவகாரம் அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் எதிரிகளை பாஜக அரசு சுட்டுக்கொல்வதாக எதிர…
-
- 0 replies
- 308 views
-