Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாம்தேவ் கட்கர் பதவி, பிபிசி மராத்தி 5 மே 2024 ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த விசாரணை அறிக்கையின்படி, "ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் ”ரோஹித் வெமுலா ஒரு தலித் அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. தெலங்கானா காவல்துறை தாக்கல் செய்த இந்த விசாரணை அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற முடிவுகள் அரசியல் களம் மற்றும…

  2. லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த, வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு! லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லக்கீம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. https://athavannews.com/2021/1243571

  3. லச்சித் பர்ஃபூக்கன்: ராட்ஷச வேடமிட்டு முகலாய விரிவாக்கத்தை எதிர்த்துப் போரிட்ட அசாமிய வீரன் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷோக்குமார் பாண்டே பதவி,வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர், பிபிசி இந்திக்காக 1 ஜனவரி 2023 பட மூலாதாரம்,ANI பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவில் முகலாய விஸ்தரிப்பை வெற்றிகரமாக சவாலுக்கு உட்படுத்திய அசாமிய வீரன் லச்சித் பர்ஃபூக்கன் அசாமிய சமுதாயத்தில் நாயகனாக மதிக்கப்படுகிறார். மேலும் 1930 முதல் ஒவ்வொர் ஆண்டும், அசாம் முழுவதும் அவரது பிறந்தநாள் 'லச்சித் தினமாக' கொண்டாடப்படுகிறது. லச்சித் பர்ஃபூக்கனின் 400வது பிறந்தநாளை அசாம் அரசு சமீபத்தில் கொ…

  4. லடாக் எல்லை பிரச்சினை: ஜூன் 6 ஆம் தேதி இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500 கி.மீ எல்லைய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை மற்றும் ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை. அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக…

    • 1 reply
    • 364 views
  5. லடாக் எல்லையில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேர் அணிவகுத்துள்ளதாக தகவல்! லடாக் எல்லையில் ஸ்பாங்கர் கேப் எனுமிடத்தில் இந்திய – சீன இராணுவத்தினர் நேருக்கு நேராக கைக்கெட்டும் தூரத்தில் அணி வகுத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் சீனா இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் படைகளைத் திரும்பப்பெற மறுத்து வருகிறது. சீனாவின் ஏராளமான பீரங்கிகளும் அங்கு அணிவகுத்துள்ளன. சிகரங்களில் இந்தியா தனது தேசியக் கொடியைப் பறக்கவிட்ட நிலையில் அந்த சிகரங்களில் உள்ள இந்தியப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற சீனா முயன்று வருகிறது. சீனப்படைகள் முன்னேற விடாமல் தடுக்க இந்தியாவும் பெருமளவுக்கு படைகளைக் குவித்துள்ளது. …

  6. லடாக் பகுதி எல்லை பிரச்சினை : இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடல் எல்லை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடலுக்கான ஒப்புதல்கள் இருதரப்பிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லை மாற்றுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயை சுட்டிக்காட்டியே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார் . எனவே பதற்றங்களுக்கு வழிவகுக்காது எல்லையில் காணப்பட கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டும் வகையில் மூத்த இராணுவ அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் …

  7. லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா? புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளி…

  8. லடாக் பகுதியில்... சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் நீடிக்கும் – இராணுவத்தளபதி கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் நீடித்தால், இந்திய இராணுவமும் அப்பகுதியில் நீடிக்கும் என இராணுவத்தளபதி நரவனே உறுதிப்பட தெரிவித்துள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா, இராணுவக் கட்டமைப்பையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தி வரும் நிலையில், நரவனே இதனை குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டமைப்பை சீனா மேம்படுத்துவது, அவர்கள் அங்கு நீடிப்பதையை காட்டுகிறது என தெரிவித்த நரவனே, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். உட்கட்டமைப்பு மேம்பாடு, போதியளவில் தளபாடங்கள் உள்ளிட்ட இந்தியப் படைகளின் விரைவான செயற்பாட்டால், சீன இராணுவத்தினரால் எதையும் …

    • 6 replies
    • 505 views
  9. லடாக் விவகாரம் : சீனாவின் குற்றச்சாட்டை புறக்கணிக்கும் இந்தியா! கிழக்கு லடாக் பதற்றத்துக்கு இந்தியாதான் மூலக் காரணம் என சீனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாடு உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும், இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து ஒப்பந்தங்களையும் மதிக்காமல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் முந்தைய நிலையை தன்னிச்சையாக சீனா மாற்ற முயன்றதும், சீன பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளுமே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்தார். எல்லைப…

  10. லடாக்கின் எல்லையில் சீன இராணுவத்தினர் படைகளை குவித்து வருவதாக தகவல்! லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன இராணுவம் தங்களது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரெச்சின்லா என்னும் இடத்தில் ஒரு படையணியையும், ஸ்பாங்குர் ஏரி அருகில் மற்றொரு படையணியையும் சீன இராணுவம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முக்ரி என்ற இடத்தில் சீன இராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய இராணுவத்தினர் தடுத்துள்ளதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது. இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் மிகப்பெரிய தாக்குதல் வரும் நாட்களில் நிகழ்க்கூடும் என அரசியல் அவதானிகள் எதிர்வுக்கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. h…

  11. லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும்’- ராணுவ நிபுணர்கள் கருத்து லடாக்கில் செய்த தவறுக்காக சீனா மிகப்பெரிய விலை கொடுக்கும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். பதிவு: ஜூன் 28, 2020 04:15 AM புதுடெல்லி, லடாக்கின் கிழக்கில் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவிய சீன ராணுவம் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதில் கடந்த 15-ந்தேதி நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் சர்வ…

  12. லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். பதிவு: ஜூன் 16, 2020 13:19 PM புதுடெல்லி லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய - சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர். சீன ராணுவத…

  13. லடாக்கில் மீண்டும் பதற்றம்: சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் – இந்தியா லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் சீன வீரர்கள் கடந்த 29ஆம் திகதி இரவு மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புலனாய்வு செய்யும் …

  14. லட்ச தீவுகளை... அழிக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது – ராகுல்காந்தி மத்தியில் ஆட்சி செய்பவர்கள் லட்ச தீவுகளை அழிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுலாவிற்கு பெயர்போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ லட்சத்தீவுகள் இந்தியக் கடலின் ஆபரணம். மத்தியில் ஆட்சியில் உள்ள அறிவற்றவர்கள் அதனை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் லட்சத்தீவுளின் மக்களுடன் உடன் நிற்கிறோம்’ எனக் குறிப…

  15. லட்சத்தீவு... குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம்! லட்சத்தீவில் பிறப்பிக்கப்படுகின்ற புதிய உத்தரவுகள் மனவேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 93 ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தில், ‘ நாங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை. நடுநிலைமை மற்றும் அரசியலபைபின் உறுதிப்பாடு மீது நம்பிக்கை வைத்துள்ளோம். லட்சத்தீவுகளின் புதிய வரைவு சட்டங்கள், தீவுக்கும் அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கும் எதிரானதாக உள்ளது. மக்கள் கருத்துக்களை கேட்காமல், புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் அனைத்தும் அன்னிய தன்மையுடனும், தன்னிச்சையான கொள்கை முடிவுகள் உடையதாகவும், உள்ளன. எனவே இந்த புதிய வர…

  16. லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி! லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சர…

  17. லவ் ஜிகாத்: மதம் கடந்த காதலை அச்சுறுத்தும் இந்திய சட்டம் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி இந்தியா பட மூலாதாரம், EPA ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,000 மதம் கடந்த காதல் ஜோடிகள் டெல்லியில் உள்ள ஏதாவது ஓர் ஆதரவு அமைப்பின் உதவியை நாடுகின்றன. இந்து - முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த ஜோடியினர் தங்கள் வீட்டில் திருமணத்துக்கு அனுமதி மறுக்கும்போது வழக்கமாக தானக் அமைப்பைத் தேடி வருகின்றனர். 20 - 30 வயது உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுமாறு அல்லது சட்ட உதவி பெற உதவுமாறு கோருகின்றனர். தானக் அமைப்பிற்கு வரும் ஜோடிகளில் 52 சதவீதம் பேர் முஸ்லிம் ஆணை திருமணம் செய்ய …

  18. லாக் டவுனில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம்: நிபந்தனைகளுடன் உள்துறை அமைச்சகம் அனுமதி பிரதிநிதித்துவப் படம். புதுடெல்லி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்…

  19. லாக் டவுன்: மூன்று முக்கிய கேள்விகள்-ராஜன் குறை April 15, 2020 - ராஜன் குறை · சமூகம் இந்தியா கொரோனோ நாம் பலரும் பேச்சிலும், வழக்கிலும் “வரலாறு காணாத” என்றொரு சொற்சேர்க்கையை பயன்படுத்துவோம். அந்த வார்த்தைகளின் முழுப் பொருளையும் எதிர்கொள்ளும் ஒரு சூழலை மானுடம் சந்தித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த சூழல் அனைவரையுமே திகைப்பிலும், குழப்பத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது எனலாம். அதனால் நம்மால் தர்க்க ரீதியாக சிந்திக்க முடியுமா என்பதே சவாலாக உள்ளது. இந்த சிறு கட்டுரையின் நோக்கம் தர்க்க ரீதியாக சில கேள்விகளை உரத்துக் கேட்பது. இதற்கான பதில்களை ஆட்சியாளர்கள்தான், குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசுதான் இக்கேள்விகளுக்கான முழுமையான பதில்களை அளிக்க முடியும். அவ்வி…

    • 3 replies
    • 609 views
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெனரல் லீ ஷாங்ஃபூ கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வோங் பதவி, ஆசியா டிஜிட்டல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதது குறித்து அமெரிக்காவின் உயர்மட்ட தூதரக அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது, சீன ராணுவத்தின் ஊழல் ஒழிப்பு பற்றிய ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. ஜெனரல் லி கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் காணப்படவில்லை, முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹம் இமானுவேல், லி…

  21. லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்ததாக ஒருவர் கைது - டெல்லியில் இன்னொரு கொடூரம் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CASPAR BENSON / GETTY IMAGES 'லிவ் - இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக, உணவக (தாபா) உரிமையாளர் ஒருவரை நேற்று, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14, 2023) காவல்துறையினர் கைது செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. டெல்லி ஒட்டிய நஜஃப்கர், மித்ரோன் கிராமம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வழ…

  22. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான் இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஆகிறார் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய பாதுகாப்பு படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகானை நியமிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்களுக்கான துறைக்கும் இவர் செயலராக பொறுப்பு வகிப்பார் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்திய மாநிலங்களில் ஆயுத போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைள் பலவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர் இவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இ…

  23. லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் ரீசல் விலை.. பகீர் பின்னணி! ரெல்லி: உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையான விலை ஏற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரங்களில் இந்தியா தனது புதிய அரசை தேர்வு செய்துவிடும்.அதேபோல் உலக அரசியலிலும் அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மிக முக்கியமாக அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் வெளிப்படையான பிரச்சனையும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த போகிறது. …

  24. லோக்சபா தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை! நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இன்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. மே 19ம் தேதி வரை இந்த தேர்தல் திருவிழா நடக்க உள்ளது. அதன்பின் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அற…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேச ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்டதாக இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளிதழான எகனாமிக் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசூர் ரஹ்மான் வேறு சில ஜெனரல்களின் ஆதரவுடன் தற்போதைய ராணுவத் தளபதியாகச் செயல்பட்டு வரும் வகார் உஸ் ஜமானை நீக்க முயன்றதாகவும், ஆனால் போதிய ஆதரவில்லாத காரணத்தால் தோல்வியடைந்ததாகவுவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என வங்கதேச ராணுவம் இப்போது நிராகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, வங்கதேசத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டரே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.