Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லி ஷாங்ஃபூ: சீன பாதுகாப்பு அமைச்சர் எங்கே? கேள்வி எழுப்பும் அமெரிக்க தூதர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
லி ஷாங்ஃபூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜெனரல் லீ ஷாங்ஃபூ

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டெஸ்ஸா வோங்
  • பதவி, ஆசியா டிஜிட்டல் நிருபர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ அண்மைகாலமாக பொதுவெளியில் தென்படாதது குறித்து அமெரிக்காவின் உயர்மட்ட தூதரக அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளது, சீன ராணுவத்தின் ஊழல் ஒழிப்பு பற்றிய ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஜெனரல் லி கடந்த இரண்டு வாரங்களாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் காணப்படவில்லை, முக்கியமான பல கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹம் இமானுவேல், லி விவகாரத்தை சுட்டிக்காட்டி சீனாவில் ”வேலையின்மை விகிதம்” மிக அதிகமாக இருப்பதாக ட்விட் செய்தார்.

சீனாவில் சமீபமாக பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் லி ஷாங்ஃபூவையும் பல நாட்களாக பொதுவெளியில் காணப்படுவதில்லை.

லி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு கிடைத்த தகவல்களை குறிப்பிட்டு 'தி லால் ஸ்ட்ரீட் ஜர்னல்' கடந்த வெள்ளியன்று செய்தி வெளியிட்டது.

 
 

பட மூலாதாரம்,GETTY IMAGES

லி ஷாங்ஃபூ
படக்குறிப்பு,

சீன அதிபர் ஷி ஜின்பிங்

வெளியுறவு அமைச்சராக இருந்த ஷின் கேங் கடந்த சில மாதங்களாக பொதுவெளியில் காணப்படாத நிலையில், ஜூலையில் அவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். எனினும், இதற்கான காரணம் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது லியும் பொதுவெளியில் காணப்படுவதில்லை. இது தொடர்பாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

கடைசியாக ஆகஸ்ட் 29ஆம் தேதி பீய்ஜிங்கில் நடைபெற்ற ஆப்ரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மன்றத்தில் ஜெனரல் லி காணப்பட்டார். பாதுகாப்பு அமைச்சர்கள் வாரக்கணக்கில் பொதுவெளியில் தென்படாமல் இருப்பது என்பது வழக்கமானதுதான்.

விண்வெளிப் பொறியாளரான லி ஷாங்ஃபூ தனது வாழ்க்கையை செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுகணை மையத்தில் தொடங்கினார். ஜெனரல் லி ராணுவத்திலும் சீன அரசியலிலும் படிப்படியாக முன்னேற்றத்தை கண்டவர்.

ஷின்னை போலவே லியும் அதிபர் ஷி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு உரியவர் என்று கூறப்படுகிறது. ஷின்னுக்கு பிறகு சமீபத்திய மாதங்களில் பொதுவெளியில் தென்படாமல் இருக்கும் இரண்டாவது அமைச்சராகவும் லி இருக்கிறார்.

 
லி ஷாங்ஃபூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷின் கேங் (வலது), லீ ஷாங்ஃபூ (இடது) இருவருமே அதிபர் ஷி ஜின்பிங்கின் விருப்பத்திற்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது

ஆகஸ்ட் தொடக்கத்தில் சீனாவின் ராக்கெட் படை பிரிவில் இருந்து இரண்டு முக்கிய ஜெனரல்கள் மாற்றப்பட்டபோது ராணுவ ஊழல் குறித்த ஊகங்கள் சமூக ஊடகங்களில் எழுந்தன. ராணுவ நீதிமன்ற தலைவரும் நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அப்பொறுப்பிலிருந்து இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹம் இமானுவேல், ஷின் மற்றும் பிற ராணுவ அதிகாரிகள் காணாமல் போனதை குறிப்பிட்டு ஜெனரல் லி பொதுவெளியில் தென்படவில்லை என்பதையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

சமீபத்தில் சிங்கப்பூர் கடற்படைத் தலைவர்- சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற சந்திப்பு, வியட்நாம் பயணம் ஆகியவற்றில் லி பங்கேற்காததை சுட்டிக்காட்டி அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இமானுவேல் குற்றஞ்சாட்டினார்.

இமானுவேலின் சமூக ஊடக பதிவுகள் பிரபலமானவை. லி பொதுவெளியில் காணப்படாமல் இருப்பது தொடர்பாக ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வரும், Something is rotten in the state of Denmark' என்பதை குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை குறிப்பிட இச்சொற்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த வாரம் வியட்நாம் பாதுகாப்புத் தலைவர்களுடனான சந்திப்பில் லி திடீரென இடம்பெறாமல் போனார். இதற்கு லியின் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது என வியட்நாம் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது.

 
லி ஷாங்ஃபூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2018 ஆம் ஆண்டில், ராணுவத்தின் உபகரண மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக லி இருந்தபோது, ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை சீனா வாங்கியதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டார்

சிங்கப்பூர் கடற்படைத் தலைவர் சீன் வாட் கடந்த வாரம் சீனா சென்று ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து பேசியிருந்தார். லி தொடர்பாக இமானுவேலின் குற்றச்சாட்டு குறித்து சிங்கப்பூர் கடற்படையிடம் பிபிசி கேட்டது.

சீன அதிகாரிகள் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வார்கள் என்பதால் உடல்நல குறைவு காரணமாக உயர்மட்ட கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பது என்பது அரிதினும் அரிது என கூறப்படுகிறது.

லி தொடர்பாக சர்ச்சை ஏற்படுவது முதல்முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், ராணுவத்தின் உபகரண மேம்பாட்டுப் பிரிவின் தலைவராக லி இருந்தபோது, ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை சீனா வாங்கியதற்காக அமெரிக்க அரசாங்கம் அவர் மீது தடை விதித்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அமெரிக்கப் பிரதிநிதி லாயிட் ஆஸ்டினை லி சந்திக்க மறுத்ததற்கு இந்த தடையும் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஜெனரல் லி காணாமல் போயிருப்பது மீண்டும் சீன அரசியல் தலைமையின் ஒளிவுமறைவையும் அதிபர் ஷியின் சில முடிவுகளில் உள்ள நடுக்கத்தையும் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“தற்போதைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கு ஒப்புதல் அளித்தது ஷி தான் என்பதால், உயர்மட்ட அதிகாரிகள் காணாமல் போவது, ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் போன்றவை அவருக்கு நல்லதல்ல” என்கிறார் ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட்டின் சீன அரசியல் நிபுணரான நீல் தாமஸ்.

 
லி ஷாங்ஃபூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சீன ராணுவம் மீது நீண்ட காலமாக ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது

அதேநேரத்தில், பாதிக்கப்படும் பணியாளர்கள் யாரும் ஷிக்கு நெருக்கமானவர்கள் இல்லை என்பதால் அவரின் தலைமையும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்திரத்தன்மையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சீன ராணுவம் மீது நீண்ட காலமாக ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது என்றும் தனக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே ஷியும் அதனை சமாளிக்க முயன்றதாகவும் ஆய்வாளரான பில் பிஷப் குறிப்பிடுகிறார்.

ஷி அதிகாரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நிலையிலும் இதுபோன்ற உயர்மட்ட ஊழல் இன்னும் உள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் இதற்காக தனக்கு முன்பு இருந்தவர்களை அவர் குறை கூற முடியாது என்றும் பில் பிஷப் தெரிவிக்கிறார்.

ஜெனரல் லி, ஷின் மற்றும் அண்மையில் நீக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் ஆகியோர் அதிபர் ஷி மூலம் பதவி உயர்வு பெற்றவர்கள் என்று குறிப்பிடும் பில் பிஷப், இந்த விவகாரத்தில் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதே தீர்வாக அமையும் என்கிறார்.

தைவான் அருகே ராணுவ நடவடிக்கை அதிகரித்து தென் சீனக் கடலில் பதற்றம் நிலவிவரும் நிலையிலும் இத்தகைய காணாமல் போகும் நிகழ்வுகள் நடந்துவருவதாக சீனாவில் தங்கி ஆய்வு செய்துவரும் இயன் சோங் சுட்டிக்காட்டுகிறார்.

 
லி ஷாங்ஃபூ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட சீன போர்க்கப்பல்கள் சமீப நாட்களாக தைவான் ஜலசந்தியில் அதிகம் காணப்படுகின்றன

ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட சீன போர்க்கப்பல்கள் சமீப நாட்களாக தைவான் ஜலசந்தியில் அதிகம் காணப்படுகின்றன.

வெளிவிவகாரங்களை எதிர்கொள்ளும் முக்கியமான கூறுகளாக ராணுவமும் வெளியுறவு அமைச்சகமும் இருப்பதால், இந்த நேரத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது கவலைக்குரியது என்று டாக்டர் சோங் கூறுகிறார்.

லி தொடர்பான இமானுவேலின் சமூக ஊடக பதிவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அவர் உயர்மட்ட ராஜாங்க அதிகாரி என்பதோடும் சீனாவோடு சுமூகமற்ற உறவில் உள்ள ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் இருக்கிறார்.

“லி விவகாரம் குறித்து பேசுவதற்கு வெள்ளை மாளிகையில் இருந்து அவருக்கு சமிக்ஞை கிடைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பசிபிக் ஃபோரம் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் பிராட் க்ளோசர்மேன் கூறுகிறார்.

“லி காணாமல் போனது தொடர்பாக சீனாவிடம் இருந்து சில பதிலைப் பெற இமானுவேல் முயற்சி செய்கிறார்” என்று டாக்டர் சோங் குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c72jyp0klg5o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'காணாமல் போகும்' சீனாவின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் – ஷி ஜின்பிங்கின் பலவீனத்தை காட்டுகிறதா?

சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டெஸ்ஸா வாங்
  • பதவி, பிபிசி ஆசிய செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சில மாதங்களாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் நம்பப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் காணாமல் போயிருக்கின்றனர். இது, ஜின்பிங் 'அரசியல் தூய்மைப்படுத்தலில்' ஈடுபடுகிறாரா, குறிப்பாக ராணுவத்துடன் தொடர்புடையவர்களைக் குறிவைக்கிறாரா என்ற தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது.

சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பு மந்திரி லி ஷாங்ஃபு என்று தெரிகிறது. இவர் கடந்த சில வாரங்களாக பொது வெளியில் காணப்படவில்லை.

முதலில் அவர் வெளியே காணப்படாதது சந்தேகத்தைக் கிளப்பவில்லை என்றாலும், உயர்மட்ட அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் அதைச் சுட்டிக்காட்டியபோது அது தீவிரமாகப் பேசப்பட்டது.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கு (People's Liberation Army - PLA) ஆயுதக் கொள்வனவுகளை மேற்பார்வையிட்ட ஜெனரல் லி, ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பின்னர் தெரிவித்தது.

 

ராணுவ ஊழல் குறித்த ஆய்வுகள்

'காணாமல் போகும்' சீனாவின்  உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் – ஷி ஜின்பிங்கின் பலவீனத்தைக் காட்டுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சீனாவின் ஷின்ஜியாங்கில் அமைந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம்

அணு ஆயுத ஏவுகணைகளைக் கட்டுப்படுத்தும் ராணுவப் பிரிவான ராக்கெட் படையில் இருந்த இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் ஒரு ராணுவ நீதிமன்ற நீதிபதி நீக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ஜெனரல் லி ‘காணாமல் போயிருக்கிறார்’.

ஆயுதப் படைகளைக் கட்டுப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவக் குழுவில் உள்ள சிலரும் விசாரிக்கப்படுவதாக இப்போது புதிய வதந்திகள் பரவி வருகின்றன.

‘உடல்நலக் காரணங்கள்’ என்பதைத் தவிர, இந்த நீக்குதல்களுக்கு அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே இந்த வெற்றிடத்தில், ஊகங்கள் பரவி வருகின்றன.

இது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் உள்ள ஊழலை ஒழிக்கும் அதிகாரப்பூர்வமான முயற்சி என்பது முக்கிய ஊகமாக உள்ளது.

சீன ராணுவம் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது. ஜூலையில் அது வழக்கத்திற்கு மாறான ஓர் அழைப்பை விடுத்தது.

அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டது.

பிபிசி மானிட்டரிங் நடத்திய சோதனைகளின்படி, ஜின்பிங், ஏப்ரல் முதல் ஐந்து முறை நாடு முழுவதும் சுற்றி, ராணுவத் தளங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 
சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமீபத்தில் காணாமல் போனவர் சீன பாதுகாப்பு மந்திரி லி ஷாங்ஃபு.

ஊழலைத் தடுப்பதில் உள்ள சிக்கல்கள்

கடந்த 1970களில் சீனா அதன் பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் தொடங்கியதில் இருந்து ராணுவத்தில் ஊழல் நீண்ட காலமாக ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது, என சீன கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of China - CCP) மற்றும் ராணுவத்திற்கு இடையிலான உறவை ஆய்வு செய்யும் சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞர் ஜேம்ஸ் சார் (James Char) குறிப்பிட்டார்.

ஒவ்வோர் ஆண்டும் சீனா ஒரு டிரில்லியன் யுவானை ராணுவத்திற்காகச் செலவிடுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாத இந்த நிலையை, சீனாவின் ஒற்றைக் கட்சி மையப்படுத்தப்பட்ட அமைப்பு மேலும் சிக்கலாக்குகிறது.

மற்ற நாடுகளின் ராணுவங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது போலல்லாமல், சீனாவின் ஆயுதப்படைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் பிரத்தியேகமாக மேற்பார்வை செய்யப்படுகின்றன, என முனைவர் சார் சுட்டிக்காட்டினார்.

ஆயுதப் படைகளுக்குள் ஊழலைத் தணிப்பதிலும், அதன் நற்பெயரை ஓரளவிற்கு மீட்டெடுப்பதிலும் ஜின்பிங் சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ‘ஊழலை வேரறுப்பது கடினமானது, ஆனால் சாத்தியமானது’, ஏனெனில் அதற்கு ‘முறையான மறுவடிவமைப்புகள் தேவைப்படும்’ என்கிறார் முனைவர் சார்.

"தனது அதிகாரத்திற்குக் கீழில்லாத ஒரு முறையான சட்ட அமைப்பை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கும் வரை, இத்தகைய சம்பவங்கள் நிகழும்," என்கிறார் அவர்.

 

அமெரிக்க பெண்ணுடன் குழந்தை பெற்றுக்கொண்ட சீன அமைச்சர்

'காணாமல் போகும்' சீனாவின்  உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் – ஷி ஜின்பிங்கின் பலவீனத்தைக் காட்டுகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகாரிகள் காணாமல் போவது, ஏற்கெனவே அமெரிக்காவுடன் சிக்கலான உறவைக் கொண்டிருக்கும் சீன அரசாங்கத்தில் மேலும் ஒரு ஆழமான சிக்கலை உருவாக்கலாம்.

ஜூலை மாதம், உளவு பார்ப்பதறகு எதிரான சட்டம் சீனாவில் நடைமுறைக்கு வந்தது. இது அதிகாரிகளுக்கு விசாரணைகளை நடத்துவதில் அதிகப்படியான அதிகாரத்தைக் கொடுத்தது. மேலும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் உளவு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட உதவுமாறு குடிமக்களை பகிரங்கமாக ஊக்குவித்தது.

ஜெனரல் லி காணாமல் போனது வெளியுறவு அமைச்சர் கின் கேங் காணாமல் போனதை ஒத்திருக்கிறது. ஜூலையில் அவர் நீக்கப்பட்டதும் ஊகங்கள் அதிவேகமாகப் பரவின. இந்த வாரம், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், திரு கின், திருமணத்தை மீறிய உறவு சம்பந்தமாக விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்தது. இந்த உறவின் மூலம் அமெரிக்காவில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது.

சீன விவகாரங்கள் வல்லுநரான பில் பிஷப் கூற்றின்படி, திருமணத்தை மீறிய உறவு என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் மட்டங்களில் குற்றமாகக் கருதப்படாது என்கிறார்.

“ஆனால் வெளிநாட்டு உளவுத்துறை உறவுகளை வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படக்கூடிய ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதும், சீனாவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஒரு குழந்தையை உருவாக்குவதும், தீவிரமாக விசாரிக்கப்படும்," என்கிறார் அவர்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்துடன் சீனா போராடி வருவதால், ஊழலை ஒழிக்கும் அழுத்தத்தின் கீழ் ஜின்பிங் செயல்படுகிறார் என்ற ஊகமும் உள்ளது.

சீனாவின் அரசியல் அமைப்பின் கீழ், ஜின்பிங் சீனாவின் அதிபர் மட்டுமல்ல, ராணுவத்தின் உயர்மட்டத் தலைவராகவும் உள்ளார்.

 
சீனா, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,POOL

படக்குறிப்பு,

வெளியுறவு மந்திரி கின் கேங் திருமணத்தை மீறிய உறவு மூலம் அமெரிக்காவில் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டார்.

ஜின்பிங்கின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்

ஒரு வகையில், காணாமல் போனவர்கள், ஜின்பிங் தலைமையின் உறுதியற்ற தன்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்கள்.

அமைச்சர்கள் மட்டுமல்ல, மாநில கவுன்சிலர்களாகவும் உயர்ந்த பதவிகளை வகித்த ஜெனரல் லீ மற்றும் திரு கின் ஆகியோர் ஜின்பிங்குக்கு விருப்பமானவர்கள். எனவே அவர்களின் திடீர் வீழ்ச்சி, சீன அதிபர் அதிகாரிகளை சரியாகப் புரிந்து வைத்திருக்கவில்லை என்றும் பார்க்கப்படலாம்.

ஆனால் இது ஜின்பிங்கின் வலிமையாகவும் பார்க்கப்படலாம்.

காணாமல் போன சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரியின் மகனான ஜின்பிங், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். இது அவரது எதிரிகளை வேரறுக்கும் நோக்கில் அரசியல் சுத்திகரிப்புகளாகவும் செயல்படுகிறது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மாவோ சேதுங்கிற்கு பிறகு, ஜின்பிங் தான் இந்த ஒடுக்குமுறைகளை அதிகளவில் செயல்படுத்தியிருக்கிறார். 2013இல் அவர் பதவியேற்றதில் இருந்து கீழ்மட்ட மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைக் குறிவைத்து எடுக்கபட்ட நடவடிக்கைகளில், பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஜின்பிங் ஆயுதப்படைகளையும் குறிவைத்து 2017இல் 100க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளை நீக்கினார். அந்த நேரத்தில் மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா ஒரு கட்டுரையில், இப்படியாக நீக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, “புதிய சீனாவை உருவாக்குவதற்காக போர்களில் கொல்லப்பட்ட தளபதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது,” என்று கூறியது.

 

அரசியல் ஸ்திரத்தன்மையை பற்றிய கேள்விகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாவோ சேதுங்கிற்கு பிறகு, ஜின்பிங் தான் இந்த ஒடுக்குமுறைகளை அதிகளவில் செயல்படுத்தியிருக்கிறார்.

ஆனால் இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், சமீபத்தில் நடவடிக்கைகள் என்ன சமிக்ஞை அனுப்புகின்றன, மற்றும் அவற்றின் இறுதி தாக்கம் என்ன என்பது.

இது ராணுவத்திலும் அரசாங்கத்திலும் அச்சமான சூழலை உருவாக்கும் என அரசியல் கூர்நோக்கர்கள் கூறுகின்றனர். இது மனச்சோர்வையும் ஏற்படுத்தும்.

பல ஆண்டுகளாக, தனக்கு வேண்டாமல் போனவர்களை வேரறுத்து, தனக்கு நெருக்கமானவர்களுக்கு உயர் பதவிகளைக் கொடுத்ததால், ஜின்பிங்கை சூழ்ந்திருப்பவர்கள் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கின்றனர்.

குழு மனப்பான்மையே ஜின்பிங் தலைமையின் ‘உண்மையான ஸ்திரமற்றத் தன்மை’. ஏனெனில் இது சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று முனைவர் சார் குறிப்பிடுகிறார்.

தைவான் ஜலசந்தியில் பதட்டமான சூழ்நிலை நிலவும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சமீப வாரங்களில் சீனா அதிக போர்க்கப்பல்களையும் ராணுவ ஜெட் விமானங்களையும் அங்கு அனுப்பியுள்ளது.

மற்றொரு சாரார், சீனாவின் ராணுவத் தலைமை, சில உயர்மட்ட அதிகாரிகளின் மாற்றங்களைத் தாங்கும் அளவுக்கு வலிமையானது என்று வாதிடுகின்றனர்.

மேலும் சிலர், சமீபத்திய சம்பவங்கள், ஜின்பிங் தலைமையின் ஸ்திரத்தன்மையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று நம்புகின்றனர். இதுவரை குறிவைக்கப்பட்ட அதிகாரிகள் எவரும் அவரது உள்வட்டத்தினர் இல்லை என்று ஆசிய சொசைட்டி பாலிசி இன்ஸ்டிட்யூட்டின் சீன நிபுணரான நீல் தாமஸ் கூறுகிறார்.

ஆனால் பெரும்பாலான உலக அரசியல் பார்வையாளர்கள் இந்தச் சம்பவங்கள் சீன அமைப்பின் மறைவான தன்மையை எடுத்துக்காட்டுகின்றன என்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cll8lg0nl4mo

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் அடுத்தடுத்து 2 அமைச்சர்கள் நீக்கம்: அரசியல் எதிரிகளை களை எடுக்கிறாரா ஷி ஜின்பிங்?

சீனாவில் களை எடுக்கிறாரா ஜின்பிங்?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

லி ஷங்ஃபூ

25 அக்டோபர் 2023, 13:28 GMT
புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரான லி ஷங்ஃபூ பொதுவெளியில் இருந்து மறைந்து 2 மாதங்களுக்குப் பிறகு சீன அரசு அதிகாரப்பூர்வமாக அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

லி ஷங்ஃபூவை நீக்கியதற்கான காரணத்தையோ அவருக்கான மாற்று அமைச்சரையோ சீன அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் குவென் கேங்க் உள்பட பல மூத்த ராணுவ அதிகாரிகளை சமீபத்தில் சீன அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சீன அரசின் கவுன்சிலில் இருந்தும் குவென் மற்றும் லி ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரின் பதவி நீக்கத்திற்கு சீன அரசின் மூத்த உறுப்பினர்களும் அரசின் நிலைக்குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

இந்த வாரம் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள சர்வதேச ராணுவ அதிகாரிகளின் கூட்டத்திற்கு சீன அரசு தயாராகி வரும் நிலையில் சீனாவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லாத சூழல் தற்போது உருவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக லி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உபகரணங்கள் வாங்கியது மற்றும் மேம்பாடு தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாக கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி பெய்ஜிங்கில் நடந்த ஆப்ரிக்க நாடுகள் உடனான பாதுகாப்பு மாநாட்டில்தான் அவர் கடைசியாக பொதுவெளியில் தோன்றினார்.

சீனாவின் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுதள நிலையத்தில் வான்வெளி பொறியாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜெனரல் லி, எந்த பிரச்சனையும் இன்றி சீன ராணுவ மற்றும் அரசியலின் அதிகார வட்டத்திற்குள் நுழைந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு, சீன ராணுவத்தின் உபகரணங்கள் மேம்பாட்டுத் துறையின் தலைவராக இருந்தார். அப்போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக அமெரிக்க அரசு லி ஷங்ஃபூ மீது தடை விதித்தது. அமெரிக்க அரசு அவர் மீது விதித்த தடை அவரது வளர்ச்சிக்கான ஒரு தடையாக பார்க்கப்பட்டது.

கடந்த வருட ஆரம்பத்தில் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்புத்துறை மாநாட்டில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை சந்திக்க லி மறுத்தார்.

 
சீனாவில் களை எடுக்கிறாரா ஜின்பிங்?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

குவென் கேங்க்

அரசியல் எதிரிகளை களை எடுக்கிறாரா ஜின்பிங்?

பதவி பறிக்கப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் குவென் கேங்க் போலவே லி ஷங்ஃபூவும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்ன் விருப்பத்திற்குரிய அமைச்சராக இருந்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு ஏழு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் குவென் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

குவென் பதவி நீக்கத்திற்கு எந்த காரணமும் சொல்லப்படாத நிலையில் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெளியிட்ட செய்தியில் அவர் அமெரிக்காவிற்கான சீன தூதராக இருந்தபோது திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில காலத்திற்கு பிறகு, சீனாவின் அணுஆயுதக் கிடங்கை நிர்வகித்து வந்த குழுவின் இரண்டு தலைவர்கள் மாற்றப்பட்டனர். இது ஒரு களையெடுக்கும் நடவடிக்கையா என்ற கேள்வியையும் இந்த சம்பவம் எழுப்பியது.

அந்த இரண்டு தலைவர்களான, சீன ராணுவத்தின் ராக்கெட் பிரிவின் தலைவரான ஜெனரல் லி யுச்சாவ் மற்றும் அவருக்கு அடுத்தக்கட்ட தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பல மாதங்கள் “காணாமல்” போயிருந்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c0v7yjd0e74o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.