அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
பாகிஸ்தானுக்கான... ஆப்கானிஸ்தானின், தூதுவரின் மகள் கடத்தல் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார் என்றும் அவரது உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீண்ட காலமாக சிதைந்து போயுள்ள நிலையில் 20 வயதான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டுள்ளார். விடுதலையின் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கு…
-
- 0 replies
- 325 views
-
-
இந்தியா ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல – ராகுல் காந்தி இந்தியா ஹிந்துக்களின் நாடு, ஹிந்துத்வவாதிகளின் நாடு அல்ல என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்ப்பூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்திய அரசியலில் இன்று ஹிந்து மற்றும் ஹிந்துத்வவாதி என்ற இரண்டு உலகங்களுக்கு இடையே போட்டி உள்ளது. நான் ஹிந்து. ஆனால் ஹிந்துத்வவாதி இல்லை. மஹாத்மா காந்தி ஹிந்து. ஆனால் கோட்சே ஹிந்துத்வவாதி. இந்தியா ஹிந்துக்களின் நாடு. ஹிந்துத்வவாதிகளின் நாடல்ல எனத் தெரிவித்துள்ளார். https://atha…
-
- 0 replies
- 218 views
-
-
ரஷ்யா – உக்ரைன் போர்... இந்தியாவிற்கு, ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது – நிர்மலா சீதாராமன் ரஷ்யா – உக்ரைன் போர் இந்தியாவிற்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆகவே இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஏற்றுமதியாளர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், தோல் பொருட்கள் மட்டுமில்லாமல் துணி மற்றும் சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த முறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கவ…
-
- 3 replies
- 274 views
-
-
இந்திய கடற்படையின் ட்ரோபெக்ஸ் பயிற்சியில் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள், 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு Published By: VISHNU 13 MAR, 2023 | 12:41 PM இந்தியக் கடற்படையின் மிகப் பெரிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சியான 'ட்ரோபெக்ஸில்' சுமார் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்கின்றன. மேலும் இந்த பயிற்சிக்கு 21 மில்லியன் சதுர கடல் மைல்களை உள்ளடக்கியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். கடற்படையின் கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கிய சிக்கலான பயிற்சிகள் மற்றும் சூழ்ச்சிகளின் தொடர் 'தியேட்டர் லெவல் ஆப்பரேஷனல் ரெட…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
2006-ல் சிறுமிகள் உட்பட 19 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை, மேல்முறையீட்டில் வழக்கிலிருந்து விடுத்திருக்கிறது அகமதாபாத் உயர் நீதிமன்றம். இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று 2006-ம் ஆண்டு நடந்த நிதாரி கொடூரம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சிறு கிராமம் நிதாரி. இந்த கிராமத்தில் இருந்த ஓர் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில், மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், டிசம்பர் 29, 2006 அன்று, அந்தச் சாக்கடையிலிருந்து எட்டு சிறுமிகளின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர். …
-
- 1 reply
- 346 views
-
-
படக்குறிப்பு, மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 102. என். சங்கரய்யா 102 வயதைத் தொட்டபோதிலும் ஆரோக்கியமாகவே இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திங்கட்கிழமையன்று ச…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ். ஆந்திர மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின…
-
- 2 replies
- 560 views
-
-
கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? மொஹர் சிங் மீனா பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை Getty Images மார்ச் 8 ஆம்தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு (கிரீன்விச்நேரப்படி 23.30 மணி) ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு 52 வயதானஆண்ஒருவர் நிமோனியா பாதிப்புடன் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது. பில்வாராவில் உள்ள பிரிஜேஷ் பங்கார் நினைவு மருத்துவமனையில், இந்தப் புதிய நோயாளியை 58 வயதான டாக்டர் அலோக் மிட்டல் பரிசோதனை செய்திருக்கிறார். நோயாளி வெளிநாடு சென்று வந்தாரா என்பது பற்றி யாரும் கேட்கவும் இல்லை, அவராகவும் சொல்லவும் இல்லை. தீவிர சிகிச்சைப்பிரிவில்…
-
- 2 replies
- 324 views
-
-
தமிழர்களின் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி தமிழக வரைபடத்துக்குள் அடைபடவில்லை என்றாலும்கூட, தாராவியும் ஒரு தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருக்கிற சாதிச் சங்கங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் வரையில் அத்தனைக்கும் அங்கேயும் கிளை உண்டு. வாழ்வதுதான் மஹாராஷ்டிரமே தவிர, இன்னமும் தங்களைத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே பாவிப்பவர்கள் இவர்கள். இன்னும் ஊரோடு வேர்களை அறுத்துக்கொள்ளாதவர்கள். முக்கியமான காரணம், அங்கேயே நிலைத்திட கனவு காண தாராவி ஒன்றும் சொர்க்கம் அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய சேரி மட்டும் அல்ல அது; மிக நெரிசலான, நெருக்கடியான பகுதி. எனது தந்தை ஓராண்டு அங்கே இருந்தவர். என் அண்ணன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அங்கே வசிக்கிறார் என்பதால், நானு…
-
- 1 reply
- 768 views
-
-
கொரோனாவை தொடர்ந்து இந்தியாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவில் மீண்டும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலுள்ள விவசாயப் பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு படையெடுத்து விவசாயத்திற்கு "கடுமையான ஆபத்தை" ஏற்படுத்தும் என, ஐ.நா., உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் …
-
- 2 replies
- 770 views
-
-
இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். …
-
- 2 replies
- 632 views
-