Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு! தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கானின் மோசமான ஆட்சிதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில…

    • 0 replies
    • 345 views
  2. “ஓகஸ்ட் 23” இந்தியாவின் தேசிய விண்வெளி தினம் என பிரகடனம்! August 27, 2023 “ஓகஸ்ட் 23” இந்தியாவின் “தேசிய விண்வெளி தினம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ அறிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகத்திற்கு சென்று உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார். BRICS மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கிரேக்கத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, இன்று இந்தியா திரும்பியுள்ளார். சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான குழுவினரை சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். இதேவேளை, நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு Shiv Shakti Point என பெயர் சூட்டப்படுவதா…

  3. ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் வளர்சிதை மாற்ற ஆபத்து என்ன? மாரடைப்பு அதிகம் வருவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐடி துறையில் பணிபுவர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆய்வு கூறுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்ரலகடா பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தகவல் தொழில்நுட்ப துறையில் ( ஐடி) பணிபுரிபவர்கள் என்றால், குளிர்சாதன அறையில் வேலை, ஐந்து இலக்க சம்பளம் என்று சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற எண்ணம்தான் பரவலாக உள்ளது. ஆனால் பணி ரீதியான…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் இந்தியாவில் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும் இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பரமேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை சிசிபி அதிகாரிகள் விசாரணையின் போது கண்டுபிடித்துள்ளனர். https://athavannews.com/2023/1346648

    • 17 replies
    • 1.4k views
  5. விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகின்றார் பிரதமர் மோடி! ”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வ…

    • 4 replies
    • 279 views
  6. படக்குறிப்பு, ஜஞ்ஜிரா கோட்டை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஆகஸ்ட் 2023 22 ஏக்கர் பரப்பளவில், 22 பாதுகாப்பு நிலைகளோடு பரந்து விரிந்திருக்கும் ஜஞ்ஜிரா கோட்டையை கட்ட 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது. சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி மன்னர், போர்த்துகீசியர்கள், ஃபிரஞ்ச், பிரிட்டீஷ் என பலரும் இந்த கோட்டையை கைப்பற்ற முயன்றனர். ஆனால், யாராலும் ஜஞ்ஜிரா கோட்டையை வசப்படுத்த முடியவில்லை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் வெல்ல முடியாததாக இக்கோட்டை திகழ்ந்தது. சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை வெல்வதற்காகவே அதன் அருகில் ஒரு கோட்டையை கட்டினார். ஆனாலும் அவரால் ஜஞ்ஜிராவை கைப்பற…

  7. 19 AUG, 2023 | 10:46 AM இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வகையில் சீலிங் மின்விசிறிகளில் தற்கொலை தடுப்பு சாதனத்தை பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு. இந்நிலையில் நேற்றிரவு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டுவ…

  8. 19 AUG, 2023 | 10:50 AM மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்கு சீன தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆய்வுக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆய்வு கப்பல் கடந்த 16-ம்தேதி நள்ளிரவு மும்பையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பலில் இருந்த சீன விஞ்ஞானியின் வெய்க்யாங் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக மும்பையில் உள்ள கடல்சார் மீட்…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 18 ஆகஸ்ட் 2023, 10:09 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அமெரிக்க டாலருக்கு பதிலாக பரஸ்பர நாணயத்தில் இருதரப்பு வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மத்திய கிழக்குப்பகுதியில் எண்ணெய் உற்பத்தி நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந…

  10. 15 AUG, 2023 | 10:02 AM புதுடெல்லி: தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் (ஐஐடிஇ) பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2010-ல் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, காந்திநகரில் சிறப்பு பல்கலைகழகமாக ஐஐடிஇயை நிறுவினார். இதன் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கலந்து கொண்டார்.மொத்தம் 2,927 மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் பேசியது: நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையிலான…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கராச்சியில் டக்ளஸ் டகோட்டா விமானத்தில் இருந்து சரக்குகளை இறக்கும் உள்ளூர் தொழிலாளர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 14 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா-பாகிஸ்தானின் ரத்தக்களரி பிரிவினை குறித்து 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ’தமஸ்’ (இருள்) என்ற நாவலில் எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு விமானம் இந்த கிராமத்தின் மேலே மூன்று முறை வட்டமடித்தது. “மக்கள் வெளியே வ…

  12. இந்தியாவின் இமாச்சலா சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பால் இதுவரை 257 பேர் பலி – 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு! adminAugust 14, 2023 இந்தியாவின் இமாச்சலா சோலன் மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி எனப்படும் மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்கு பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகளும், ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேக வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல் இமைச்சர் சுக்விந்தர் சிங் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்த…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெகஜீவன் ராம் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 13 ஆகஸ்ட் 2023, 04:24 GMT இந்திரா காந்தி, 1977 தேர்தலில் தோல்வியடைந்த நான்கு மாதங்களுக்குள் அவரது தோல்வியிலிருந்து மீண்டும் வந்தார். ஜனதா கட்சியின் அரசுக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்தாலும், அதை அவர்கள் எல்லா வகையிலும் வீணடித்தனர். மொரார்ஜி தேசாய், ஜக்ஜீவன் ராம், சரண் சிங் மூவரும் அரசை பல திசைகளில் தாறுமாறாகப் பயணிக்க வைத்து, இந்திரா காந்திக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தட்டில் இட்டுக் கொடுத்தனர். மே 1977இல் பிகாரில் உள்ள பெல்ச்சி கிர…

  14. Published By: SETHU 10 AUG, 2023 | 09:21 AM பாகிஸ்தான் பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பரிந்துரையின்படி, அரசியலமைப்பின் 58(1) ஆவது பிரிவின்படி ஜனாதிபதி ஆரிவ் அல்வி, பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என நேற்று நள்ளிரவு ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் 2022 ஏப்ரலில் கவிழ்க்கப்பட்டதையடுத்து, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமயிலான அரசாங்கம் ஆட்சியிலிருந்தது. பாராளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமர் தெரிவாகும் வரை இடைக்கால பிரதமர் ஒருவரை தெரிவுசெய்வதற்காக எதிர்க்கட்சியினருடன் பேச்ச…

  15. 08 AUG, 2023 | 04:43 PM இலங்கையில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி இந்திய மத்திய அரசாங்கம் தவறவிட்டது என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றுவரும் நிலையில் அதில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதில் இந்திய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர்…

  16. ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல்கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். adminAugust 11, 2023 இந்திய நாடாளுமன்றத்தில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 3 நாட்களாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்குமுன்பு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது வடஇந்தியா என்று கூறுகிறார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நே…

    • 2 replies
    • 579 views
  17. 11 AUG, 2023 | 02:58 PM ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி, ‘ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை. இணைப்பின் போது அதன் இறையாண்மை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா்இணைப்பு அப்போதே முற்றிலும் முழுமையாகிவிட்டது. பிரிவு 370-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட விவக…

  18. படக்குறிப்பு, குருகிராமில் தீ வைத்து எரிக்கப்பட்ட மசூதி மற்றும் கொல்லப்பட்ட இமாம் முகமது சாத். கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். "இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார். குருகிராமின் டிசி…

  19. 10 AUG, 2023 | 12:32 PM கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை தெரியுமா உங்களுக்கு? என மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பினார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்பி கனிமொழி பேசசியதாவது: மணிப்பூரில் நூற்றுக்கணகான நிவாரண முகாம்கள் உள்ளன. ஆனால் அங்கு உணவில்லை, நீரில்லை ஆனால் அளவுக்கு அதிகமான மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உள்பட அனைவரும் பசியுடனும் பயத்துடனும் உள்ளனர். முகாமில் தங்கியுள்ள தாய் ஒருவர், தன் மகன் இறந்துவிட்டதாக அனைவரும்…

  20. பதவி,குவஹாத்தியிலிருந்து பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில காவல்துறையுடன் இணைந்து பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது. மாநிலம் முழுவதும் புதன…

  21. 7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு; தூதருக்கு இந்திய அரசு சம்மன் ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வேலை விசாவில் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த பாவேஷ் மற்றும் அவரது மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதன் பிறகு அரிஹாவை ஜெர்மன் நிர்வாகம் வ…

  22. Published By: DIGITAL DESK 3 07 AUG, 2023 | 04:45 PM மாலைதீவு தலைநகர் மாலேயில் சனிக்கிழமை (5) கடலில் இராட்சத அலை உருவாகிய நிலையில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மாலேயிலுள்ள சினமலை பாலத்தை கடப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். தெற்மேற்கு பருவ மழை காரணமாக உருவாகிய இராட்சத அலைகளால் மாலேயில் ஹென்வெயிறு வார்ட் மற்றும் மஜீதி வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் மற்றும் மக்கள் இராட்சத அலைகளால் அடித்துச் செல்லப்படுவதை காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவியுள்ளன. இராட்சத அலைகளால் உயிரிழப்புகள் இடம்பெறவில்லை. வாகனங்…

  23. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்ததுடன் 126 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் போது தூக்கத்தில் இருந்த மக்கள் கண்விழித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. வீடுகள் உட்பட மொத்தம் 126 கட்டிடங்கள் இடிந்து சேதமான நிலையில் 21 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ம…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2023, 09:02 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பையடுத்து லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்…

  25. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை 04 AUG, 2023 | 03:40 PM மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.