அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
ஐரோப்பிய நாடுகளுக்கு... சுற்றுப்பயணம், மேற்கொள்ளும் மோடி! இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டென்மார்கில் நடைபெறும் இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மாசு ஏற்படுத்தாக தொழிநுட்பம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 217 views
-
-
இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை... இராணுவ அதிகாரிகள், கசியவிட்டதாக தகவல்! இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் சிலர் அண்டை நாட்டுக்கு கசியவிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அண்டை நாட்டின் உளவு பார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீது உறுதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1277526
-
- 0 replies
- 108 views
-
-
இந்தியாவில்... மீண்டும் அதிகரிக்கும், கொரோனா தொற்று! இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. தொற்றுநோய் பரவுவதைக் தொடந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும், திறமையாகவும், நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி …
-
- 0 replies
- 172 views
-
-
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்... இந்தியா வருகை! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை முக்கியதுவம் மிக்க விடயமாக பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1277438
-
- 0 replies
- 169 views
-
-
போரிஸ் ஜான்சன் - நரேந்திர மோதி சந்திப்பு: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை உலகத்துக்கு ஏன் முக்கியம்? ககன் சபர்வால் தெற்காசிய செய்தியாளர், பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த இரு நாள் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த இரு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரிட்டன் எடுத்துள்ள நிலையில் பிரிட்டன் பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. யுக்ரேன் போர் தொடங்கியதி…
-
- 3 replies
- 242 views
- 1 follower
-
-
கர்கோன் வன்முறை: மாற்றுத்திறனாளி வாசிமின் கேள்வி- 'நான் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்?' ஷூரையா நியாஸி பிபிசி ஹிந்திக்காக, போபாலில் இருந்து.. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER@SALMANNIZAMI_ படக்குறிப்பு, வாசிம் ரிஸ்வியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடந்த வன்முறைக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் பெரும் எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் கடைகளை இடித்தது. யாருடைய வீடு, கடைகள் இடிக்கப்பட்டதோ அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில்... பயங்கரவாத பயிற்சி முகாம்கள், இயங்கி வருகின்றன – காவல்துறை காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த முகாம்களில் 60-80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் ஆரம்பித்துள்ளதாகவும், அங்கு 60 முதல் 80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பயிற்சி பெறுபவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் பங்கேற்று திரும்பியவர்களாக இருக்கலாம் எனத் தெ…
-
- 0 replies
- 180 views
-
-
இந்தியாவில்... வாகன ஏற்றுமதி, அதிகரிப்பு! இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்வது 43 விழுக்காடுகள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021-2022 நிதியாண்டில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் மாருதி, சுசுகி ஆகியவை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏற்றுமதி வாகனங்களின் எண்ணிக்கையில் மாருதிக்கு அடுத்த இடத்தில் ஹுண்டாய், கியா நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277163
-
- 0 replies
- 140 views
-
-
கொரோனா தொற்றின் காரணமாக... 40 இலட்சம், இந்தியர்கள்... உயிரிழப்பு! கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனை மத்திய அரசு மறைப்பதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் உயிரிழக்கவில்லை எனவும், இன்னமும் பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்தது 5 இலட்சம் பேர் கிடையாது எனத் தெரிவித்த அவர், 40 இலட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 134 views
-
-
ஹொங்கொங்கிற்கான.. ஏயார் இந்தியா, விமான சேவை இரத்து! ஹொங்கொங்கிற்கான ஏயார் இந்தியா விமான சேவையை அந்நிறுவனம் இரத்து செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹொங்கொங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு அந்நாட்டிற்கான ஏர் இந்தியா விமான சேவை இரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று வருகிற 19 ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதி ஹொங்கொங்கில் இருந்து நாடு திரும்பும் ஏயார் இந்தியா விமான சேவையும் இரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளது. https://athavannews.com/2022/1277068
-
- 0 replies
- 163 views
-
-
உத்தியோகப்பூர்வ விஜயமாக... அமெரிக்கா சென்றார், நிர்மலா சீதாராமன்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர், பன்னாட்டு நிதியத்தின் ஆலோசனைக் கூட்டம், உலக வங்கியின் உயர் நிலைக் கூட்டம், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் நிலையிலான கூட்டம், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தென்கொரியா, இலங்கை, மற்றும் தென்னாப்பிரிக்கா, உட்பட பல்வேறு நாடுகளுடன் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277014
-
- 0 replies
- 513 views
-
-
இந்திய குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனியுரிமைக்கு எதிரானதா? ஓர் அலசல் ஜோயா மடீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்டோரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்ய காவல்துறைக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது இந்தியாவில் கொண்டு வரப்படும் ஒரு புதிய சட்டம், பயோமெட்ரிக் தரவைச் சேகரிக்க, சட்ட அமலாக்க துறைகளுக்கு பெரும் அதிகாரங்களை வழங்குகிறது - இது தனியுரிமை குறித்த கவலையை எழுப்பியுள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அ…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை, அமைதியான உறவுகளை விரும்பும் பாக்; மோடிக்கு ஷேபாஸ் ஷெரீப் ட்வீட் சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு சனிக்கிழமை வந்த ஒரு கடிதத்தில், ‘பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு’ பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாக ஷேபாஸ் ஷெரீப் கூறியதாக தெரியவந்துள்ளது. are on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) இந்தியாவுடன் அமைதியான மற்றும் ஒத்துழைப்பு உறவுகளைக் நாடுவதாகவும் அதை ‘அர்த்தமுள்ள உரையாடல்’ மூலம் இதை அடைய முடியும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபா…
-
- 0 replies
- 217 views
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை.. இந்தியாவுக்கும் வரலாம்.. ப.சிதம்பரம் கடும் எச்சரிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் எம்பி ப. சிதம்பரம் கலந்து கொண்டார். மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல் குறித்து ஆராயும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ப.சிதம்பரம் இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார …
-
- 0 replies
- 162 views
-
-
இந்தியாவின், உணவு தானியங்கள் ஏற்றுமதியை... உலகமே எதிர்பார்த்து இருப்பதாக... பியூஷ் கோயல் தெரிவிப்பு இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இதனை பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 இலட்சம் தொன்கள்…
-
- 0 replies
- 171 views
-
-
இந்திய – அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு! இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உக்ரைன் விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியம் ஜெய்சங்கருடன் இடம்பெற்ற சந்திப்பில், பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளின்கன் வினவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், அது தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பாவை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, ரஷ்யாவிடம…
-
- 0 replies
- 105 views
-
-
ராணுவத்தில் ஆள் பலத்தைக் குறைக்கத் திட்டமிடுகிறதா இந்தியா? இதனால் என்ன ஆகும்? சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆயுதப்படையில் ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள, வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டிலிருந்து தலைநகர் டெல்லி வரை ஓடியிருக்கிறார், 23 வயதான இளைஞர் சுரேஷ் பிச்சார். இந்த 350 கி.மீ. தூர ஓட்டத்தின்போது அவர் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். ராணுவத்தில் சேர்வது தான் தன்னுடைய "விருப்பம்" எனக் கூறும் அவர், ஆனால், ராணுவத்தில் ஆட்சேர்ப்பு கடந்த இரண்ட…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த, இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல் விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ,…
-
- 4 replies
- 438 views
-
-
பாகிஸ்தானின்... புதிய பிரதமராக, ஷாபாஸ் ஷெரீப் தெரிவு! பாகிஸ்தானின் புதிய பிரதமராக, மூன்று முறை முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் 70 வயது இளைய சகோதரரும், எதிர்க்கட்சி தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் ஷா மஹ்மூத் குரேஷியும் ஞாயிற்றுக்கிழமை அவரது வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தார். எனினும், பாகிஸ்தானுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, இம்ரான் கான் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டத்தை தொடர்ந்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீ…
-
- 0 replies
- 168 views
-
-
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது : பிரதமர் அலுவலக இல்லத்தை விட்டு வெளியேறினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அதற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறினார் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றம் …
-
- 5 replies
- 428 views
-
-
கேரளாவில் ஸ்டாலின் உரை: "தலையாட்டி பொம்மையாக இருக்க வேண்டுமா? தென் மாநில முதல்வர்கள் குழு அவசியம்" 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,M K STALIN TWITTER படக்குறிப்பு, கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆம் மாநாட்டில் பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசு போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும், மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கேரள மாநிலம் கண்ண…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
ஆங்கில மொழிக்கு, பதிலாக.... ஹிந்தி மொழியை, பயன்படுத்த வேண்டும் – அமித்ஷா ஆங்கில மொழியை பயன்படுத்துவதற்கு மாற்றாகவே ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் 37 ஆவது நாடாளுமன்ற அலுவல்கள் மொழிகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டு ஒருமைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது உள்நாட்டு பொது மொழிகளில் தான் பேச வேண்டும் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இதேவேளை மத்திய அமைச்சரவையின் 70 சதவீத க…
-
- 2 replies
- 265 views
-
-
ஆட்சியைத் தக்க வைக்க கடைசிவரை போராடுவேன்! ஆட்சியைத் தக்க வைக்க கடைசிவரை போராடுவேன் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை கூறினாா். பாகிஸ்தான் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இந்த கருத்தை அவா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்னா், சனிக்கிழமை (ஏப்.9) அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். கடைசி ‘பந்துவரை’ அடித்து விளையாடி போராடுவேன்’ என்று குறி…
-
- 1 reply
- 503 views
-
-
வெளிநாட்டு ஆயுத இறக்குமதிக்கு... தடை விதிக்கும், மற்றுமோர் பட்டியல் வெளியீடு! இராணுவ ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியலை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை சார்த்திருப்பதை தவிர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 1.75 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இராணுவத் துறையில் தற்சார்ப்பு நிலையை எட்டுவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவையே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். உள்நாட்டில் தனியார்…
-
- 0 replies
- 156 views
-
-
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் வெடித்துள்ளன. இருப்பினும் இந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடையாததால் புதன்கிழமையும் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில…
-
- 36 replies
- 2.7k views
-