Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சுஹைல் ஷாஹீன், தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவில் உள்ள சுஹைல் ஷாஹீல் ஜூம் செயலி மூலம் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது, கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோதே, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை …

  2. '1965' போர்: சிறப்பு ஆபரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி? ரெஹான் ஃபைசல் பிபிசி செய்தியாளர், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFENCE.PK படக்குறிப்பு, விமானத்திலிருந்து குதிக்கும் வீரர்கள் 1965 செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தானின் பி -57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, மூன்று சி - 130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின. ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர். இரவ…

  3. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? - நீதித்துறை தலையீடும் வழக்குகளும் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை …

  4. ஃபிரோஸ் காந்தி நினைவு தினம்: இந்திரா காந்தியின் விதவை கோலத்துக்கு என்ன காரணம்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEHRU MEMORIAL MUSEUM AND LIBRARY அது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி. இந்திரா காந்தி அப்போதுதான் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி பாலம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார். அவரிடம் உடனடியாக ஃபிரோஸ் காந்திக்கு மற்றொரு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஃபிரோஸ் சேர்க்கப்பட்டிருந்த வெல்லிங்டன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஃபிரோஸின் உதவியாளர் உஷா பகத் இருந்தார். "இரவு முழுவதும் …

  5. தலிபான் - பாகிஸ்தான் - சீனா: மோடி அவசர ஆலோசனை! மின்னம்பலம்2021-09-07 ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் குறித்து பிரதமர் மோடி முக்கிய அமைச்சர்களுடன் நேற்று (செப்டம்பர் 6) மாலை ஆலோசனை நடத்தினார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அப்ஷ்ரப் கனி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார். ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று அமெரிக்காவின் கடைசி விமானமும் ஆப்கன் மண்ணில் இருந்து பறந்த நிலையில், தலிபான்கள் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் வடகிழக்கு மாகாணமான பஞ்ச்ஷீர் பகுதியில் தலிபான்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அங்குள்ள தலிபான் எதிர்ப்புப் படையினர் சுமார் 600 தலிபான…

  6. விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் எனப்படும் விபிஎன் சேவைகள் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. உள்துறைக்கான இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, சமீபத்தில் விபிஎன் சேவைகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. வி.பி.என் சேவை என்றால் என்ன, அதனால் என்ன பயன், இந்திய அரசு அதை ஏன் தடை செய்ய விரும்புகிறது என சில தகவல்களை இங்கே பார்ப்போம். வி.பி.என் சேவை என்றால் என்ன? விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் என்பது ஒரு பொது இணையதள இணைப்புக்குள் இருக்கும் தனிப்பட்ட வலையமைப்பு ஆகும். இணையத்துக்குள் ஒரு சிறிய இணைய அமைப்பு போன்றது இது. இந்த தனி அமைப்புக்குள் இருக்கும் அனைத்தும் மறையாக்கம் செய்யப்படும். வேறு ச…

  7. காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலிஷா கிலானி காலமானார்! காஷ்மீரைப் பிரித்து தனி நாடாக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்திய காஷ்மீர் ஹூரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானி காலமானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியலில் இருந்து விலகிய கிலானி, ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து இந்தியாவுடனான அனைத்து உரையாடலையும் அவர் நீண்ட காலமாக நிராகரித்து வந்தார். காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் 370 ஆவது பிரிவு, 2019 ஓகஸ்ட் 5 ஆம் திகதி இரத்து செய்யப்பட்ட பின்னர் கிலானி உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது மரணம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், ஸ்…

  8. உத்தரப் பிரதேசத்தில்... மர்மக் காய்ச்சலால், 33 குழந்தைகள் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர் பார்வையிட்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட சிகிச்சை நிலையங்கள் குறித்த மர்ம காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதே மருத்துவமனையில் ஏறக்குறைய 30 குழந்தைகள் இந்த காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2021…

  9. பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - மருத்துவமனையில் இறந்தார் சுரை நியாஜி பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காவல் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது. இது…

  10. இந்தியாவை... எச்சரிக்கும், தலிபான்கள்! ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது என தலிபான்களின் முக்கிய தலைவரான Shahabuddin Dilwar எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நிரூபர் ஒருவரிடம் பேசிய அவர் தலிபான்கள் அரசாங்க விவகாரங்களை சுமூகமாக நடத்த முடியும் என்பதை இந்தியா விரைவில் அறிந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது எனத் தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானின் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தமைக்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தலிபான்கள் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவை விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்ப…

  11. இந்தியாவிற்குள்... பயங்கரவாதம் ஊடுருவினால், ஒடுக்கப்படும்: முப்படை தளபதி ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் அதனை ஒடுக்குவதற்கு தயார் என இந்திய முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் அந்நாட்டினை முழுமையாக கைப்பற்ற இரண்டு மாதங்களாகும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக குறுகிய காலத்துக்குள் அவர்கள் நாட்டை கைப்பற்றியமை ஆச்சரியமளிப்பதாகவும் கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்குள் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் ஊடுருவக் கூடும் என்பதில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது என்றும் இந்திய முப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். தெற்காசியாவில் பயங்கரவாதம் இல்லாத சூழல் இருக்க வேண்ட…

  12. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ` கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதிலிருந்தே `கேரள மாடல் முன்னுதாரணமானது' என்பது தெரியவரும்' என்கிறார் மலப்புரம் மாவட்ட ஆட்சியர். என்ன நடக்கிறது கேரளாவில்? மூன்று மடங்காக உயர்ந்த பாதிப்பு இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நிலவரப்படி 37,593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 46,164 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழு…

  13. இந்தியாவில்... பயன்பாட்டிற்கு வந்தது, புதிய கையெறி குண்டுகள்! இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையெறிக் குண்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்தியாவில் முதன்முதலாக தனியார் நிறுவனம் வெடிகுண்டுகளை இராணுவத்திற்காக தயாரித்துள்ளதாக கூறினார். இதுவரை இந்த நிறுவனம் ஒரு இலட்சம் கையெறிக்குண்டுகளை இராணுவத்திற்கு வழங்கி உள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இராணுவம் மற்றும் விமானப்படைக்கு 10 இலட்சம் கையெறிக் குண்டுகளை வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்ட…

  14. இந்தியர்களுக்கான... விசாவை, நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சின் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 14 நாட்களாக இந்தியாவில் தங்கியிருந்த பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவோருக்கு வழக்கமாக விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம். நேபாளம், பாகிஸ்தான், ஆப்கான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, உகாண்டா, நமிபியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கும் தற்காலிகமாக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய …

  15. ஆப்கானில் இருந்து... இந்தியாவிற்கு, வந்தவர்களுக்கு கொரோனா! ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் சாவ்லா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு கொரோனா பாரிசோதனை செய்யப்பட்டது. இதன்போதே 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த 10 பேரும் இந்தோ திபெத்திய பொலிஸ் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1235975

  16. ஆப்கான் விவகாரம் குறித்து, ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு! ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது அங்குள்ள கள நிலைவரம் மற்றும் அதனால் பிராந்தியம் மற்றும் உலகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். தலிபான்களால் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியா -ஜெர்மனி தந்திரோபாய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தி…

  17. ரஷ்யாவிடம் இருந்து... போர் துப்பாக்கிகளை, கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்தவற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசு மட்டத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் துப்பாக்கிகளை தயாரிக்க இந்தோரஷ்யன் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக 70 ஆயிரம் AK 203 ரக துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…

  18. இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கந்தகார் மற்றும் ஹெராட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களைத் தலிபான்கள் சூறையாடியுள்ளதாக, இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூடப்பட்டிருந்த தூதரகங்களுக்குள் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்று தெரிவித்துள்ள இது இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி தலிபான்கள் செயற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது எனவும், குறிப்பிட்டுள்ளார். இந்திய தூதரகம் மூடப்படுவதை விரும்பவில்லை என்றும், அங்கு பணியாற்றுவோருக்கு உரிய பா…

  19. இரட்டை வேடம் போடும்... நாடுகளுக்கு, ஜெய்சங்கர் கண்டனம்! தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை ஒடுக்க எட்டு அம்ச திட்டங்களையும் அறிவத்துள்ளார். அதேநேரம் தீவிரவாதத்தை உயர்த்தி பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், நியாயப்படுத்தக் கூடாது எனவும் கூறினார். நிதி ஆதாரங்களைவ வழங்கக் கூடாது உள்ளிட் பல்வேவேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். https://athav…

    • 2 replies
    • 569 views
  20. இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு! இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை எழுந்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார். தலிபான்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2021/1235248

  21. பாகிஸ்தானில்... குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு : 30 பேர் காயம் மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பகிறது. அத்தோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தெரிவித்துள்ள ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் , கூட்டம் நடைபெற்றபோது திடீரென வெடித்த வெடிகுண்டால் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், மீட்புக் குழுக்கள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை வைத்திசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கி…

  22. இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை பிாித்தானியா தளர்த்தியுள்ளது August 19, 2021 இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை பிாித்தானியா தளர்த்தியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பிாித்தானியா செல்லும் விமான சேவையை பிரிட்டிஷ் எயா்வேஸ் விமான நிறுவனம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் கடந்த மே மாதத்தில் பிாித்தானியா இந்தியாவுக்குப் பயணம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவதரனயடுத்து இவ்வாறு பிாித்தானியா பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. எனினும் இந்தியாவில் இருந்து திரு…

  23. புற்றுநோயின்... தலைநகராகும் வடக்கு, கிழக்கு மாநிலங்கள்! இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் புற்றுநோயின் தலைநகரமாக மாறி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், நோய் தொடர்பான தேசிய தகவல் மற்றும் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்படி கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் கலிங் ஜிராங், கடந்த 2020 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் புற்றுநோயால் 50 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் 27 ஆயிரத்து 503 ஆண்களும், 22 ஆயிரத்து 814 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதிப்பு 2025 ஆம் ஆண்டுவரை அங்கு தொடரும் எனக் கருதப்படுவதாக தெரிவ…

  24. காபூலில் இருந்து... இந்திய தூதர்களை மீட்டது, சவாலாக இருந்தது – ஜெய்சங்கர் காபூலில் இருந்து இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை பத்திரமாக மீட்டது சவாலான பணியாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக நிவ்யோர்க் சென்றுள்ள அவர் அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், ‘ஆப்கான் நிலைவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், காபூல் விமான நிலையத்தில் சேவைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா …

  25. தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் : கேள்விக்குறியாகும் இந்திய அரசின் முதலீடுகள்! ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா அந்நாட்டில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வந்தது. அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஆகியவையும் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்படன. அதேநேரம் ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடர்பு கொள்ளும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.