அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3310 topics in this forum
-
காஷ்மீரில் ஒரே நாளில் நடந்த மூன்று கொலைகள் - அச்சத்தில் மக்கள் ரியாஸ் மஸ்ரூர் பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர் 39 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, 68 வயதான பிரபல மருந்தக உரிமையாளர் மாக்கன் லால் பிந்த்ரு , காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் உள்ளூரைச் சேராத வர்த்தகர் ஒருவரும் அடங்குவார். கடந்த வார தொடக்கத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பிரபல மருந்தக உரிமையாளரான 68 வயதான மாக்கன் லால் பிந்த்ரு, செவ்வாய்க்…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
இந்தியாவில்... மத சுதந்திரம் பற்றிய, அமெரிக்காவின் விமர்சனத்துக்கு... மத்திய அரசு பதில்! இந்தியாவில் மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்திய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கண்டனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அமெரிக்காவின் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அத்தோடு இது போன்ற பாரபட்சமான பார்வைகளை... அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் மத சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்ப…
-
- 0 replies
- 140 views
-
-
கடன் செயலி மோசடி: கடன் வாங்கி விட்டு உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எளிதாகவும் விரைவாகவும் கடன் கிடைக்கும் என்று கூறி கடன் செயலிகள் மக்களைக் கவருகின்றன கடந்த மார்ச் மாதம் ராஜ், ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியபோது, அது தமது நிதிப் பிரச்னைகளை விரைவில் தீர்க்கும் என்று நினைத்தார். ஆனால் அது அவரது வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி விட்டது. புனேவைச் சேர்ந்த இவர் இந்தியாவின் பல டிஜிட்டல் கடன் மோசடிகளில் சிக்கியவர். பலரைப் போலவே, ராஜ் (உண்மையான பெயர் அல்ல) விரைவான, எளிதான கடன் வழங்கும் முறையால் கவரப்பட்டார். அவர் செய்ய வேண்…
-
- 2 replies
- 458 views
- 1 follower
-
-
விக்ராந்த் போர் கப்பலில் பிபிசி: பிரமிப்பூட்டும் திறன்கள் - முழு விவரம் ஜுகல் ஆர் புரோஹித் பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து 31 ஆகஸ்ட் 2022 படக்குறிப்பு, விக்ராந்த் கடற்படை கப்பல் "இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?" - கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். "இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன" என்று அந்த அதிகாரி புன்னகையுடன் கூறினார். இந்திய கடற்படை சேவைக…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல: சட்டப்பிரிவு 377 குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு #LGBTRights பகிர்க இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் 150 ஆண்டுகளுக்கும் மே…
-
- 2 replies
- 1.5k views
-
-
'இஸ்லாமியர்கள் வேண்டாமென கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போகும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மோகன் பகவத் பேச்சு படத்தின் காப்புரிமைGETTY IMAGES "நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது," எ…
-
- 0 replies
- 404 views
-
-
29 SEP, 2024 | 09:57 AM பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக இந்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் …
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு! திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 0 replies
- 181 views
-
-
Jharkhand: Budhia’s eyes glowed with joy as she held her catch of the day, a big fat rat, close to herself. Dressed in a pink shimmery gown that she was gifted for performing at a wedding, the seven-year-old didn’t leave her catch for a moment while she continued to blow smoke and fire into the freshly dug ground. She would not be sleeping hungry today. For Musahrs, besides the lack of shelter and respect, hunger has always been a constant companion. Budhia’s fragile frame and undernourished limbs could make anyone believe that she would not be more than three years old. Her best friend has been the long standing Mahua tree next to her home. If only the Mah…
-
- 0 replies
- 762 views
-
-
திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்த…
-
- 0 replies
- 265 views
-
-
தெற்கு சூடானில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், 850 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியதற்காக, ஐ.நா., பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடான தெற்கு சூடான், உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, அமைதி காக்கும் பணியில், ஐ.நா., படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் ஒரு பகுதியாக, இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.தெற்கு சூடானில் உள்ள ஐ.நா., அமைதிப் படையில், 2,342 இந்திய ராணுவ வீரர்களும், 25 போலீஸ் அதிகாரிகளும் தற்போது இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதில் ஆற்றிய சேவையை பாராட்டி, ஐ.நா., பதக்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, இந்தியப் படையைச் சேர்ந்த, 850 வீரர்களுக்கு, நேற்று முன்தினம்…
-
- 2 replies
- 464 views
-
-
பட மூலாதாரம், SANSADTV படக்குறிப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் 20 ஆகஸ்ட் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார் மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் …
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
கொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு…. March 27, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளனர். மூன்றாண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற 11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான டெல்லி திகார் சிறையில் இருக்கும் 3,000 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் பரோலில் வெளியில் வருபவர்களும், வழக்கு விசாரணையில் இருக்கும்போது பி…
-
- 0 replies
- 264 views
-
-
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா! இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே சுயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். http://athavannews.com/துணைக்-குடியரசு-தலைவர்-வ/
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அதிமுக ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநா…
-
- 0 replies
- 192 views
-
-
யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டால் அரசியல் சர்ச்சை: ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’ 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர் (இன்று 13.09.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான். கடவுள் ராமர் மீது நம்பிக்கையுள்ளவர்களை அவமதித்ததும் அந்தக் கட்சிதான் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வள…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து…
-
- 0 replies
- 520 views
- 1 follower
-
-
சுற்றிவளைத்த தாலிபான்கள்.. வெறும் 2 நிமிடமே இருந்தது: அன்று என்ன நடந்தது? மனம் திறக்கும் அஸ்ரப் கானி தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய போது என்ன நடந்தது என்றும் ஏன் தான் காபூலை விட்டு வெளியேறினேன் என்பது குறித்தும் ஆப்கன் முன்னாள் அதிபர் அஸ்ரப் கானி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பிபிசி-இன் ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த ஆகஸ்ட் 15இல் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய அன்று காலை வரை, அது தான் ஆப்கனில் எனக்குக் கடைசி நாளாக இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பிற்பகல் நேரத்தில் தான் அதிபர் மாளிகை பாதுகாப்பு வீழ்ந்தது. நான் அங்கேயே இருந்திருந்தால் பாதுகாப்பில் இருந்தவர்கள் கொல்லப்படும் நிலை உருவாகி…
-
- 0 replies
- 262 views
-
-
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய... மருத்துவ மாணவர்கள், உச்சநீதிமன்றில் பொதுநல மனுத்தாக்கல்! உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு மருத்துவம் படித்துவந்த ஏராளமான இந்திய மாணவா்கள் படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் தனிமனித சுதந்திரம் மற்றும் வாழ்வுக்கான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை அளிக்கிறது. அதனடிப்படையில் இந்த மாணவா்கள்…
-
- 0 replies
- 201 views
-
-
செயற்கை கருத்தரிப்பு மூலம் திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2022, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியச் சமூகத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. ஆனால் இயற்கையாக எல்லோருக்கும் இது அமையாத சூழலில் செயற்கையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது. திருமணம் செய்து கொள்பவர்கள் உடல் நலக் காரணங்களுக்காக குழந்தை பெறுவதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது போல, கணவரைப் பிரிந்த, திருமணமாகாத பெண்களும், ம…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 10:51 AM இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. பேசவில்லை அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய …
-
- 1 reply
- 805 views
-
-
காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் December 19, 2018 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த கடந்த 2015 மே; ஆண்டு ஆட்சி அமைத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சயீத் முதலமைச்சராகவும் , பா.ஜ.க.வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இந்தநிலையில் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட…
-
- 0 replies
- 361 views
-
-
ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவன் உயிருடன் இருக்கிறார்! – பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தீவிரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. அதேநேரம் உளவுத்துறையின் தகவல்படி சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள இராணுவ மருத்துவமனை ஒன்றில் மசூத் அசார் இரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மசூத் அசார் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானோர் தெரிவித்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தற்போது தகவல்…
-
- 0 replies
- 393 views
-
-
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/…
-
-
- 9 replies
- 815 views
-