Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி உறுப்பினர்களே இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜி - 8 மாநாடு தொடர்பில் இன்று நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, போர் தொடர்பான சுய விசாரணைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது.இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பங்களாதேஷ் வாக்களித்தமைக்குப் பல நியாயப்படுத்தல்கள் உள்ளன. அயல் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, அரசியல் ரீதியான தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருக்கும் வெளியுறவுக் கொள்கையையே பங்களாதே…

  2. 15 வருடங்களுக்கு மேல் பழமையான... மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும். குறித்த வாக்கு…

  3. அசாம், மேற்குவங்க தேர்தல்: ஒரு பருந்துப் பார்வை! மின்னம்பலம் ஐந்து சட்டப்பேரவைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதலில் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால், சட்டப்பேரவைத் தலைவர் ஹிதேந்திர கோஸ்வாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா மற்றும் பல அமைச்சர்கள் இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் ஆளும் பாஜக- அசாம் கண பரிசத் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான 10 கட்சி கூட்டணி, புதிய அசாம் ஜாதிய பரிசத் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையேதான் முதன்மைப் போட்டி ஏற்பட்டுள்ள…

  4. டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள் 29 நவம்பர் 2020, 07:07 GMT பட மூலாதாரம், GETTY IMAGES சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாயம் தொடர்பான சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது உத்தரப்பிரதேச விவசாயிகளும் மாநில எல்லையில் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியாகத் தொடங்கிய இந்த விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு போலீசார் ஆரம்பத்தில் கடுமையான முயற்சிகளை எடுத்தார்கள். சாலைகளில் உறுதியான தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களி…

  5. இந்தியா அதிரடி: தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன. இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார். …

  6. பெங்களூர் சம்பவம் - சமூக வலைத்தள பயன்பாட்டின் மறுபக்கம். சமூக வலைத்தளங்களில் என்ன விடயங்களை பகிர்கின்றோம் என்பதில் கவனமா இருக்காவிடில், முதலுக்கே மோசமாகிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஹிதேசா என்பவர், வட இந்திய பெண். ஒரு மாடல் அழகியான இவர், பெங்களூரில் வசிக்கிறார். இன்ஸ்டாகிராம் மூலம், மேக்கப் சம்பந்தமான விடயங்களை சொல்லி, யாவாரம் செய்பவர். ஒரு 12,000 பேர் வாடிக்கையாக தொடர்பவர்கள். இவர் அண்மையில் ஒரு நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தார். அதனை கொண்டு வந்தவர் சோமாட்டோ எனும் நிறுவனத்தின், ஊழியர் காமராஜ், ஒரு தமிழர். உணவை கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை, உணவு கொண்டு வந்தவர் தன்னை தாக்கியதால், மூக்கில் ரத்தம் ஓடுகிறது. எனத…

  7. சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை”- புரட்சி நாயகன் பகத் சிங் 3 Views “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டியவரும் அவரே. இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை…. இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளையர்களுக்கு அச்சத்தை தந்தது அகிம்சை போராட்டத்தைக் கண்டு அல்ல, ஆயுதப் போராட்டத்தைக் கண்டு தான். அந்தளவிற்கு இந்த…

  8. கும்பமேளாவால் கொரோனா தொற்று அதிகரிக்கும் – மத்திய அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் ”ஹரித்வாரில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பமேளா திருவிழாவிற்கு 15 ஆயிரம் கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த விழாவிற்கு …

  9. மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக.... நடிகை, நக்மா நியமனம்! மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள்அமைச்சர் பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ.மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா…

    • 5 replies
    • 574 views
  10. மனித மிருகம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை நிகழ்ந்து, ஒக்சியன் வழக்கப்பட்ட நிலையில் icu ல் இருந்த நிலையில், கணவர், இரவு தங்க முடியாது என்று சொல்லப்பட்டதால் வீடு சென்ற நிலையில், அங்கிருந்த வார்டு பாய் அந்த பெண் மீது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். யாருக்காவது சொன்னால், அனைத்தையுமே பிடுங்கி எறிந்து, கொலை செய்து விடுவேன் என்று வேறு சொல்லி இருக்கிறான். இரவு முழுவதும் அழுத படியே இருந்த பெண், காலையில் வந்த கணவருக்கு, தனக்கு நிகழ்ந்ததை சொல்ல, அந்த கயவன், கைதாகி உள்ளான். Source: thatstamil.com

  11. தனியார் மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்! இந்தியாவில் ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களின் மீதமுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. 2021-2022 நிதி ஆண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கலுக்கு அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த நான்கு விமான நிலையங்களின் பங்குகளையும் இந்திய விமான நிலைய ஒழுங்காற்று ஆணையம் விற்கவுள்ளது. இதேவேளை மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்திருக்கும் நிலையில் மீதம் 26 பங்குகளை ஏஏஐ வைத்திருக்கிற…

  12. மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்! கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/மூக்கு-வழியே-செலுத்தும்/

  13. பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்துபோவதை ஏற்கமுடியவில்லை – சுப்ரமணியன் சுவாமி அகில இந்திய கட்சியான பாரதிய ஜனதா கட்சி அடிமை போல் பணிந்து கூட்டணி கட்சியிடம் சீட்டுக்காக மன்றாடுவதை ஏற்க முடியவில்லை என பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார். திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வருடம் தமிழக தேர்தல் குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நான் இம்முறை தமிழக தேர்தலில் அதிக முனைப்பு காட்டவில்லை. அதனால் தமிழ்நாட்டு பக்கம் செல்லவில்லை. கூட்டணிகள் குறித்தும் கவலை கொள்ளவில்லை. பாஜக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தன்னந்தனியாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் போட்டியிடும் போது பல இடங்களில் டிபாசிட் இழந்தாலும் 2 அல்லது …

  14. உட்கட்சி குழப்பம்: பதவி விலகிய பாஜக முதல்வர்! மின்னம்பலம் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சரான பாஜகவின் திரிவேந்திரசிங் ராவத் பதவிவிலகினார். பொதுவெளிக்கு புதிதாக இருந்தாலும் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாள்களாகவே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்! ஆளுநர் பேபி ராணி மௌர்யாவிடம் நேற்று (மார்ச் 9) மாலை 4 மணிக்கு ராவத் தன் விலகல்கடிதத்தை அளித்துவிட்டார். கடந்த ஞாயிறன்று தொடங்கிய உத்தராகண்ட் பாஜக பஞ்சாயத்து, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆளுநரைச் சந்தித்த கையோடு, செய்தியாளர் சந்திப்புக்கும் ராவத் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி மேலிடம் சொன்னதால் பதவியிலிருந்து விலகியதாக அவர் கூறினார். உண்மைதான்..! உள்…

  15. கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (பிப்ரவரி 06, சனிக்கிழமை) இம்ரான் கான் பிரதமராக தொடர்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 178 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இம்ரான் கான். இதில் தாங்கள் பங்கு பெறப் போவதில்லை என நேற்றே (பிப்ரவரி 05, வெள்ளிக்கிழமை) எதிர்கட்சியினர் இந்த வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகக் கூறினார்கள். பாகிஸ்தானின் செனட் அவையில், ஒரு முக்கியமான இடத்துக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்ற பின், இம்ரான் கானே முன் வந்து நாடாளுமன்றத்தின் …

  16. இந்திய படையினர் தயாராக இருக்க வேண்டும் – பிபின் ராவத் அறிவுறுத்தல்! சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் படையினர் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அறிவுறுத்தியுள்ளார். எல்லைப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாடு சுதந்திரம் பெற்ற பின் அளவான போர் திறன்களை உடைய சிறிய படையாக இருந்த நம் இராணுவம் இன்றைக்கு நவீன போர் கருவிகளை உடைய மிக வலுவான படையாக மாறியுள்ளது. போர்களின் தன்மைகளில் 20ம் நுாற்றாண்டில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளோம். பாதுகாப்பு விவகாரங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம். உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த இராணுவம்…

  17. டிஷா ரவி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகளை எதிர்த்த இளைய காலநிலைச் செயற்பாட்டாளர் – தமிழில் ஜெயந்திரன் 2 Views பெங்களூரின் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள். மாணவர்களுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அந்த நகரத்தில் வாழும் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். “விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது கிளர்ச்சியாகாது” “அநீதி சட்டபூர்வமாக்கப்படும் போது அதனை எதிர்ப்பது எமது கடமை” போன்ற சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளை அவர்கள் வைத்திருந்தார்கள். முகத்தில் புன்சிரிப்புடன் காணப்பட்ட 22 வயது நிரம்பிய டிஷா ரவியின் (Disha Ravi) படத்தை அவர்களில் பெரும்பாலானோர் தூக்கி வைத்திருந்தார்கள். …

  18. ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு! அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது. ராமர் கோயில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு 1100 கோடி ரூபாயும், அதில் கோவிலுக்கு மட்டும் 3…

    • 1 reply
    • 343 views
  19. கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் மோடி! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்…

  20. அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி 74-வது முறையாக இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன…

  21. சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் அகமதாபாத், குஜராத் மாநிலம் அகமதாபாத் மொட்டோராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி 'பூமி பூஜை' செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் க…

  22. பா.ஜ.க படுதோல்வி... பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் புகட்டிய பாடம் என்ன? அழகுசுப்பையா ச பஞ்சாப் தேர்தல் ``பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் வேளாண் சட்டங்களும் அதை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் மத்திய பா.ஜ.க அரசு அடம்பிடிப்பதுதான்.” பாஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், பஞ்சாபில் பா.ஜ.க-வினருக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் நடக்கும் தேர்தல் என்பதால் தேசிய அளவில் அதிக கவனம் பெற்றது. ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பா.ஜ.க ஆகியவை…

  23. அரியானா, பீகார், காஷ்மீரில் தீவிரமடைந்த விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தி நாடு முழுவதும் கவனம் ஈர்த்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்ற பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் சேவையை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் …

  24. Fascinating Chinese document surfaces, with insights into how PLA reads Indian strategic mind

  25. இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா? 5 Views 1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.