அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
வாயில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை - நடந்தே உயிரை மாய்த்து கொண்ட சோகம்; யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள மக்களால் புல்டோசர் என அழைக்கப்பட்ட மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மக்னா யானை, தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் மாறி மாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மக்னா யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, யானை நாக்கு சேதமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் மக்னா வந்ததை அடுத்து, 3 குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை வனத்துறையினர…
-
- 0 replies
- 448 views
-
-
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ; வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கும் அச்சம் காணப்படுவதாக தகவல்! சீனாவுடனான எல்லைப் பிரச்சினை அணுவாயுதம் உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் அச்சம் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போது சீனாவுடனான எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானதாக உள்ளது. பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளது. அணு ஆயுதம் உட்பட வழக்கத்துக்கு மாறான போர் வாய்ப்புகளை உருவாக…
-
- 5 replies
- 618 views
-
-
மக்களின் பாதுகாப்பிற்காக எல்லைப் பகுதியில் பதுங்குக் குழிகளை அமைத்தது இந்தியா! இந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் எல்லைப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைத்து சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பிற்காக பதுங்குக் கு…
-
- 1 reply
- 475 views
-
-
-
- 2 replies
- 396 views
-
-
மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோ கரன்சியை தாராளமாக நன்கொடை வழங்குமாறு போலிச் செய்தியொன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த ருவிட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் ருவிட்டர் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருவிட்டர் செய்தித் தொடர்பாளர், ‘நாங்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம…
-
- 0 replies
- 276 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விசா பெற்றிருப்பவர்களுக்கும் இந்த தடை பொருந்தும். இம்மூன்று நாடுகளிலும் அண்மைக் காலத்தில் 'கோவிட்-19' நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மலேசிய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்த தடை அறிவிப்பு அமலுக்கு வருவதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார். இதையடுத்து மலேசியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான விசா வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்த…
-
- 0 replies
- 318 views
-
-
குற்றவாளி என்றுமே குற்றவாளிதான் நீண்டநேர – பலத்த யோசனைக்குப் பிறகே இப்பதிவினை இடுகிறேன். முதலில் எங்கள் தமிழ் மரபுப்படி உயிரிழந்த ஒருவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2008-9 காலக்கட்டங்களில் தாய்த் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழினம் ஓலமிட்டு ஒப்பாரி வைத்து கதறி துடித்துக்கொண்டிருந்தது முள்ளிவாய்க்காலில் நடந்துகொண்டிருந்த இனப்படுகொலையை செரிக்க முடியாமல். …
-
- 1 reply
- 498 views
-
-
லடாக்கில் மீண்டும் பதற்றம்: சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் – இந்தியா லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் சீன வீரர்கள் கடந்த 29ஆம் திகதி இரவு மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புலனாய்வு செய்யும் …
-
- 9 replies
- 853 views
-
-
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் பிடிஐ குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிசிச்ைச பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி(வயது86) மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது பிரணாப் முகர்ஜியின் மூளையில் இரு…
-
- 6 replies
- 1.2k views
-
-
நாங்கள் டெல்லிக்கோ.. பாகிஸ்தானுக்கோ கைப்பாவை கிடையாது.. பாக்கிற்கு பரூக் அப்துல்லா கடும் பதிலடி.! ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆறு அரசியல் கட்சிகள் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிராக கூட்டாகப் போராடுவதாக அறிவித்ததற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா "நாங்கள் யாருடைய கைப்பாவைகளும் இல்லை" என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப…
-
- 0 replies
- 339 views
-
-
சீன ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நடத்தும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: பெரிய வலைப்பின்னல் அம்பலம்- அமலாக்கத்துறை அதிரடி புதுடெல்லி சீன ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் செயலியை நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் ரூ.46.96 கோடி பெறுமான வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆன்லைன் சீன சூதாட்டச் செயலிகள் 90க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது, இந்நிலையில் அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமையன்று இந்த நிறுவனங்களின் அலுலவகங்களில் ரெய்டு நடத்தியது. இதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் வீடுகளிலும் டெல்லி, குருகிராம், மும்பை, புனே…
-
- 0 replies
- 265 views
-
-
தேச விரோத மற்றும் ஏழை விரோத சக்திகள் இந்தியாவில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், இந்திய ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியையோ அவரது அரசையோ நேரடியாகக் குறிப்பிடாத அவர், "இந்திய மக்கள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் தங்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். கருத்துரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் அழி…
-
- 0 replies
- 283 views
-
-
அந்தமான் தீவுகள்: அருகிவரும் பழங்குடியினரை தாக்கியது கொரோனா வைரஸ் - விரிவான தகவல்கள் Getty Images கொரோனா வைரஸ் இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொலைதூரத்தில் வசிக்கும் பழங்குடியினரைத் தாக்கியுள்ளது. அருகி வரும் பழங்குடி இனமான கிரேட்டர் அந்தமானீஸை சேர்ந்த பத்து பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பிபிசியிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொலைதூர தீவில் வசிக்கும் அவர்களில் நான்கு பேருக்கு கடந்த வாரம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முன்னதாக, நகர்ப்புற பகுதியில் வசித்த மேலும் 6 பேருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 372 views
-
-
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 25 வயதான பெண் ஒருவர் கடந்த 9 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஹைதராபாதின் புஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட் பவர் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நல்கொண்டா பகுதியை சேர்ந்த அந்த பெண் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண் மற்றும் காட் பவர் பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகர ரெட்டியுடன் பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் தீப்தி பத்தினி தொலைபேசியில் பேசினார். புகார் அளித்த பெண்ணிற்கு 15 வயதில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அவர…
-
- 0 replies
- 329 views
-
-
நீட், ஜே.இ.இ. தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது- பிரதமரிடம் கல்வியலாளர்கள் கோரிக்கை நீட் மற்றும் ஜே.இ.இ. ஆகிய நுழைவுத் தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது என 150 கல்வியலாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியலாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியலாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த மேலும் தாமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை விட்டுக்கொடுப்பதாக அமையும் என்பதுடன் சொந்த அரசியல் நோக்கத்துக்காக சிலர் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயல்கின்றனர் என கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காகவே அரசை எதிர்ப்பதாகவு…
-
- 0 replies
- 217 views
-
-
தற்கொலைத் தாக்குதல் திட்டம்: கைதான ஐ.எஸ். பயங்கரவாதி வீட்டில் கிடைத்த வெடிபொருட்களால் அதிர்ச்சி ! டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதியின் வீட்டிலிருந்து தற்கொலைப்படை அங்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, இரண்டு தற்கொலைப் படை அங்கிகள், ஒரு பெல்ட், 9 கிலோ வெடிபொருட்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். கொடி உட்பட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் நோக்கில் தற்கொலைப் படை அங்கிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பயங்கரவாதி ச…
-
- 0 replies
- 292 views
-
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா கடும் எச்சரிக்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முகமது குரேஷி, பீஜிங் சென்று சீன வெளிவிவகார அமைச்சர் யாங்-யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவும் பாகிஸ்தானும் விடுத்த கூட்டறிக்கையில், இந்தியா ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அறிக்கையை கண்டித்துள்ள மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒ…
-
- 0 replies
- 359 views
-
-
1000 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் இராமர் கோவில் நிர்மாணிக்கப்படுவதாக தகவல்! அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் கட்டப்பட்டு வருவதாக கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் “சென்னை ஐ.ஐ.டி மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய நிபுணர்கள் இராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் அயோத்தி கோவில் நிலத்தின் மண்வளம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமை போன்றவற்றை சென்னை ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள…
-
- 1 reply
- 387 views
-
-
காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை இராணுவ படையினரை திரும்பப் பெற்றது மத்திய அரசு! ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் 10 ஆயிரம் துணை இராணுவப் படையினரை உடனடியாக திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்யும் வகையில் இடம்பெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை மீளப் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 338 views
-
-
கேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 36 பேர் பலியாகி உள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட…
-
- 25 replies
- 3.1k views
-
-
4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு – ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், “முடக்கம் காரணமாக ஏப்ரல் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 இலட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 இலட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 இலட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 இலட்சம் பேருக்கும் ஜூலையில் 50 இலட்சம் பேருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 312 views
-
-
மத்திய பிரதேச மக்களுக்கு மட்டுமே மாநில அரசுப் பணிகள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள சிவராஜ் செளஹான், "மத்திய பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய பிரதேச அரசு பணிகள் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்யும் ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வர உள்ளோம். மத்திய பிரதேச வளம், மத்திய பிரதேச குழந்தைகளுக்கே," என அவர் கூறி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் தொழிற்சாலை அல்லது நிறுவனங்கள் உள்பட அனைத்து வகை தொழிற்துறை வேலைவாய்ப்பிலும் 75%, உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மசோதா ஆந்திர பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட…
-
- 4 replies
- 541 views
-
-
இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் அங்கு ஏரி ஒன்றை கண்டு பிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில விஷயங்களை அவர் பார்த்தார். அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் நிரம்பியிருந்தது. தற்போது ரூப்குந்த் ஏரி அல்லது "எலும்புகூடு ஏரி" என்று அது கூறப்படுகிறது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜப்பானிய ராணுவ வீரர்களின் எலும்பு கூடுகளாக அவை இருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சினர். ஆனால் அந்த எலும்புக்கூடுகள் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருந்தன. அதனால் அதற்கு வாய்ப்பில்லை. …
-
- 0 replies
- 377 views
-
-
இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம். விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம் இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை. கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது. கொரோனாவுக…
-
- 3 replies
- 467 views
-
-
https://www.youtube.com/watch?v=-2b1sXPncoM
-
- 1 reply
- 770 views
-