Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர். பதிவு: ஏப்ரல் 02, 2020 17:15 PM புதுடெல்லி 800 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் ஏப்ரல் 1 ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டனர், கொரோனா தொற்றுநோயின் முக்கிய அம்சங்கள் குறித்து கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. அதில் கையொப்பமிட்டவர்களில் டிஐஎஃப்ஆர், மும்பை, என்சிபிஎஸ், பெங்களூரு, ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்சி, பெங்களூரு, மற்றும் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் அதில் அ…

  2. டுவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ வை மிரட்டிய இந்திய அரசு? டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ ஜக் டோர்சி( Jack Dorsey) அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய அரசினால் தான் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறித்த செவ்வியில் ”இந்தியாவில் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை இந்திய அரசு மிரட்டியது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,ஜக் டோர்சியின் கருத்தை மறுத்துள்ளதோடு அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் ”டோர்சி திடீரென விழித்து கொண்டு ஏதேதோ உள…

  3. அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் 20 ஜூன் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROBIN ROWLAND படக்குறிப்பு, ஜப்பானின் தோல்விக்கு பிறகு பஞ்சாப் ரெஜிமென்டின் உறுப்பினர்களுடன் ராபின் ரௌலாண்ட் வடகிழக்கு இந்தியாவில் உள்ள நகரமான கோஹிமாவில் தமது ரெஜிமென்ட் நிலை நிறுத்தப்பட்ட போது கேப்டன் ராபின் ரௌலேண்டுக்கு வயது 22 மட்டுமே. 1944ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தினரின் ஒரு சிறு குழுவினர் ஜப்பானிய படைப்பிரிவு ஒன்றின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது முன்கள வீரர்களுக்கு உண்டான கடுமையான சேதங்களு…

  4. உலகிலேயே... அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக, இந்தியா மாறி இருக்கிறது – மோடி. உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் இன்று நடந்த பால் வளர்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். ”இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 70 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக அவர்கள் தான் இருக்கிறார்கள். சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தி துறையில் இருந்து வேலை வாய்ப்பினை பெறுகின்றனர். இந்தியாவில் அதிக…

  5. நீங்கள் பாவம் செய்கிறீர்கள்” இரத்தத்தால் கையெழுத்திட்டு மோடிக்கு கடிதம் அனுப்பிய விவசாயிகள்! 12 Views டெல்லியில் 27 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இரத்தத்தை மையாக மாற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கக்கூடிய புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று இரத்தத்தால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது எங்களுடைய இரத்தம். எங்கள் உரிமைகளைப் பறித்து மற்றவர்களுக்கு வழங்குவது மிகப் பெரிய பாவம். விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் பிரதமராகிய நீங்கள் பாவம் செய்கிறீர்கள். ஒருவருடைய உரிமையை மற்றவர்கள் பறி…

  6. ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு! அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாறைகள், 6 கோடி ஆண்டுகள் பழமையானவையாகும். ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை. நேற்று (வியாழக்கிழமை) இந்த பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர். நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்த…

  7. கேரள மக்கள் - எப்படி? பட மூலாதாரம்,INDIA TODAY படக்குறிப்பு,அப்துல் ரஹீமின் பழைய படம். இப்போது அவருக்கு 41 வயதாகிறது 15 ஏப்ரல் 2024, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் `தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவி…

    • 1 reply
    • 300 views
  8. டெல்லி குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு! டெல்லியில் 26-ந் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் 50 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டில் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நிலையில் தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி கலந்து கொள்கிறார்.கடமை பாதை என்று இப்போது பெயர் சூட்டப்பட்டுள்ள ராஜபாதையில் கண்க…

  9. அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! அமெரிக்காவிடம் இருந்து தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் 72 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் சிக்சாவார் நிறுவனத்திடம் இருந்து 500 மீட்டர் ரேஞ்ச் திறன்கொண்ட 647 கோடி ரூபாய் மதிப்பிலான 72 ஆயிரம் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை எல்லையில் சீனா – இந்தியாவிற்கு இடையிலான பதற்றம் …

  10. டெல்லியில் கடுங்குளிர்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லியில் நிலவும் கடுமையான குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 2.4 டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை சென்றது. டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும். இந்த ஆண்டும் வரலாறு காணாத பனிப்பொழிவு உள்ளது. கடந்த சில வாரங்களாகக் குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காலையில் நீண்ட நேரமாகியும் மக்க…

  11. டெசா வாங் ஆசியா டிஜிட்டல் செய்தியாளர், பிபிசி ஆண்களுக்கு இடையேயான தன்பாலின உறவை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. தன்பாலின உறவு தொடர்பான தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இதனை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சிங்கப்பூரில் உள்ள தன்பாலின (எல்ஜிபிடி) செயற்பாட்டாளர்கள், "இது மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி" என தெரிவித்துள்ளனர். பழமைவாத நடைமுறைகளுக்காக அறியப்படும் நாடு சிங்கப்பூர். ஆனால், காலணியாதிக்க சட்டம் 377ஏ-ஐ நீக்க வேண்டும் என, சமீப ஆண்டுகளாக பலரும் வலியுறுத்தி வந்தனர். …

  12. இந்திய பொருளாதாரச் சரிவும், அந்நிய கார்ப்பரேட்களின் வரவும் – இதயச்சந்திரன் கொரோனாவால் மோசமாகப் பாதிப்புற்றுள்ள இந்தியாவிற்கு, 750 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளது ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி. சீன தேசத்தால் உருவாக்கப்பட்ட இவ் வங்கியில் (AIIB), இந்தியா உட்பட, அமெரிக்கா-ஜப்பான் தவிர்ந்த, பல மேற்கு நாடுகள் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய-சீன மோதல் குறித்த அதிகளவில் கொம்பு சீவி விடும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் யாவும் இந்தக் கடன் விவகாரத்தை ஏன் மறைக்கின்றன?. புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய மசோதாக்கள், வெளிநாட்டு கார்ப்பரேட் வணிகர்களுக்கு புதிய வாசல்களை அகலத் திறந்துள்ளது. இது குறித்தும் இந்த ஊடகங்கள் பேசுவதில்லை. …

  13. மும்பை ஐ.ஐ.டி கேன்டீனில் சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட மாணவருக்கு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மும்பை ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கேன்டீனில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சைவ உணவு சாப்பிடுபவர்கள் அமரும் இடத்தில், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த இடத்தில் `இது சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடம்' என்று பேப்பரில் எழுதி ஒட்டி வைத்தனர். இதனால் ஐ.ஐ.டி கேன்டீனில் உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து கேன்டீன் நிர்வாகம் `பாரபட்சம் எதுவும் காட்டப்படவில்லை. சைவ உணவு, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியாக இடம் ஒ…

  14. 09 FEB, 2024 | 12:10 PM உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிப்பு தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும் கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி: உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில் கட்டப்பட்டு இருந்த மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸாருக்கும் உள்…

  15. இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு! இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்தப் பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா கூறிவருகிறது. அதேபோல் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அந்நாட்டு அரசும் கூறி வருகிறது. இதனிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் லிப…

  16. அசாம், மேற்குவங்க தேர்தல்: ஒரு பருந்துப் பார்வை! மின்னம்பலம் ஐந்து சட்டப்பேரவைகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், முதலில் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் இன்று முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 47 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால், சட்டப்பேரவைத் தலைவர் ஹிதேந்திர கோஸ்வாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா மற்றும் பல அமைச்சர்கள் இன்றைய போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதிகளில் பெரும்பாலும் ஆளும் பாஜக- அசாம் கண பரிசத் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான 10 கட்சி கூட்டணி, புதிய அசாம் ஜாதிய பரிசத் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையேதான் முதன்மைப் போட்டி ஏற்பட்டுள்ள…

  17. சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி வெளியுலக தொடர்பை விரும்பாத ஆதிவாசிகள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம் என்றும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் டிஜிபி தீபேந்திர பதாக் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ் (26). இவர் கிறிஸ்துவ மத போதகர். இவர் வெளியாட்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு பிரசாரம் செய்ய சென்றார். இதற்காக 7 மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து படகில் சென்று இறங்கினார். அப்போது அவரை திரும்பி செல்லுமாறு ஆதிவாசிகள் சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் அதை மதி…

  18. வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் – நரேந்திர சிங் தோமர் by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D--720x450.jpg வேளாண் பொருள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்குவது என்பது அரசின் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. அதை அரசு தொடர்ந்து வழங்கும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லி தெற்காசிய வெளிநாட்டு நிருபர்கள் மன்ற உறுப்பினர்களு…

  19. இந்தியாவிற்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல்.! காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசிற்கும், ராணுவத்திற்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “Mujahideen in Kashmir” என்று தலைப்பிலான இந்த வீடியோவில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்-ஸவாகிரி தோன்றி பேசியுள்ளார். காஷ்மீர் அரசு மற்றும் இந்திய ராணுவத்தினர் மீது இடைவிடாத தாக்குதல்களை அரங்கேற்றுமாறு தீவிரவாதிகளுக்கு அதில் அவர் கட்டளையிட்டுள்ளார். வீடியோவில் அல்-ஸவாகிரி பேசுகையில், “காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முதலில் ஒரே எண்ணத்துடன் இந்திய ராணுவம் மீதும் அரசின் மீதும் தொடர் தாக்குதல்களை அரங்கேற்ற வேண்டும், அப்போது தான் இந்திய பொருளாத…

  20. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து: சட்டசபை தேர்தல் முடிவுகள் 2023 - நேரலை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய வட கிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் இந்த மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகிறது. திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியிலோ அல்லது ஆட்சிக் கூட்டணியிலோ உள்ளது. …

  21. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 வீத வரி இன்று முதல் அமுல் ! 27 Aug, 2025 | 09:57 AM அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாக nடானால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஏனைய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்ததுடன் அந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் மசகு எண்ணெய், இராணுவ தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூட…

  22. இந்தியா - சீனா எல்லை பிரச்னை: 22,000 கி.மீ நில எல்லையைப் பாதுகாக்க சீனா புதிய சட்டம்: இந்தியாவை பாதிக்குமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 14 நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் தனது 22,000 கி.மீ நீளம் கொண்ட நில எல்லையில் பாதுகாப்பை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை விவரிக்கும் தனது முதல் தேசிய அளவிலான சட்டத்துக்கு சீனாவின் நாடாளுமன்றமாகச் செயல்படும் தேசிய மக்கள் மன்றத்தின் (NPC) நிலைக்குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. "எல்லையில் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தவும், வலுப்படுத்தவும், உறுதிப்படுத்தவும்" வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நில எல்லைச் சட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. …

  23. இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் – இந்திய அமைச்சரவை அனுமதி இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 ஜனவரியில் கையெழுத்திடப்பட்டு அதே ஆண்டு ஒக்டோபரில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருமான வரி மீதான நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் நெறிமுறையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். …

  24. தேர்தலில் வெற்றிப்பெற்றால் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் ; பா.ஜ.க உறுதி! பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார். குறித்த அறிக்கையில் கொரோனா தடுப்பூசி சோதனைகள் பல கட்டத்தில் இருப்பதாகவும், பெருமளவிலான உற்பத்தி நிலையை எட்டியவுடன் பீகார் மக்கள் இலவசமாக போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் …

  25. டெல்லியில் நடைபெறுகிறது காவிரி ஒழுக்காற்று குழு கூட்டம்! காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.