- Open Club
- 57 members
- Rules
விநோதம்

26 topics in this forum
-
செயற்கை கருப்பை மூலம் 'ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம்' என்று சொல்லும் நிறுவனம்! பெர்லின்: 'பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும்' என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை பெட்டிகள் மூலம…
-
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
மனைவிக்கு பயந்து பனைமரத்தில் வாழ்க்கை.. உத்தரபிரதேசத்தின் 'மவு' மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பிரவேஷ். இவருக்கும் இவரது மனைவிகும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. பலமுறை பொறுத்துப்பார்த்த அவர், பின்னர் பொறுக்கமுடியாமல் விபரீத முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அதன்படி ஒருநாள் மனைவியோடு சண்டை ஏற்பட்டதும், வீட்டின் அருகே இருக்கும் பனை மரத்தில் ஏறியவர், அங்கேயே தங்கியுள்ளார். 'எப்படி என்றாலும் அவர் இறங்கத்தானே வேண்டும்' என்று காத்திருந்த மனைவி, அவர் இறங்காமல் போகமே கடும் வருத்தமடைந்துள்ளார். இயற்கை உபாதை கழிக்க மட்டும் கீழே இறங்கும் ராம் பிரவேஷ், மற்ற நேரங்களில் பனைமரத்திலேயே இருந்து வருகிறார். அவருக்கான …
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
சிறு கிராமத்திலிருந்து மதுரையில் வாழ்ந்து, பின் சென்னையிலும் வேலை நிமித்தம் காலத்தை ஓட்டவேண்டிய நிலை இருந்தது. கிராமத்தில் வாழும்போது தெருவில் யார் எதிரே வந்தாலும் "என்னப்பு சுகமா இருக்கிறீர்களா? படிப்பு வேலை எப்படி..?" என சகலத்தையும் நம்மிடம் நேசத்துடன் விசாரிப்பார்கள். அண்டை கிராமங்களுக்கு போனாலும் நட்புடன் பேசும் கிராமத்திய வாழ்வும், வழக்கமும் இன்றும் உள்ளது. மதுரை வந்தபோது, இம்மாதிரியான அக்கறையான விசாரிப்புகள் குறைந்து, தெரியாத முகமென்றாலும், ஓரளவு சிநேகத்துடன் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் அல்லது வழி காட்டுவார்கள். ஆனால் 70களின் இறுதியில் சென்னைக்கு வந்தபோது, அப்பெரிய நகரத்தை முதன் முதலில் பார்த்து பிரமித்துப்போனேன்.. பலதரப்பட்ட கலவை மு…
-
- 3 replies
- 592 views
- 1 follower
-
-
அருவியை பார்க்கப்போன அர்னால்டு..😪 இது தேவையா..? 😱
-
-
- 13 replies
- 1.3k views
-
-
சென்னை : பிரபல நடிகை, தனது கணவருக்கு பாத பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். 🤭 "கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருசன்...(?😛)" என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர். ஆனால் இன்றும் கணவனுக்குப் பயப்படும் மனைவியையும், மனைவிக்குப் பயப்படும் கணவனையும் பார்க்க முடிகிறது. கணவனுக்குப் பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும், மனைவிக்குப் பயப்படும் கணவனை அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஆனால், மார்டன் பெண்கள் என்று சொல்லிக் கொள்ளும் பிரபல நடிகையே கணவனுக்கு பாத பூஜை செய்ததை பார்த்து பல பெண்களே வாய்பிளந்து நிற்கிறார்கள். கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் ந…
-
- 8 replies
- 1k views
- 2 followers
-
-
குழியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையின் இதயம் நின்றுவிட, கூச்சலிட்டே அக்கம்பக்கத்தினரை அழைத்த குட்டி யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குட்டி யானைகளின் விளையாட்டுகளையும், குறும்புகளையும் பார்ப்பதற்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் குறும்புத்தனத்தையும் தாண்டி குட்டி யானை ஒன்றின் செயல் நெகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. தாய்லாந்தில் சில நாட்களாவே கனமழை பொழிந்து வரும் நிலையில், கனமழையில் வழிதவறிய குட்டியானை ஒன்று சுமார் 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்தது. அப்பொழுது குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானை பள்ளத்திற்குள் தலையை செலுத்தியது. அப்பொழுது தாய் யானையின் இதயம் நின்றுவிட்…
-
-
- 3 replies
- 494 views
- 1 follower
-
-
"விவாகரத்துக்கு முன்பாக கணவரை பிரிந்த மனைவி, தாலிச் சங்கிலியை கழற்றுவது என்பது கணவருக்கு அளிக்கும் மனரீதியான துன்புறுத்தல்" எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர், வேறொரு பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அரசு ஆசிரியரான தனது மனைவி, மனரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி, மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும் கணவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் சவுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு…
-
-
- 5 replies
- 678 views
- 1 follower
-
-
தமிழ் மீது உள்ள அதீத பற்றால் விவசாயி இளங்கோவன், சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்திலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார். இதை கழுகு பார்வையில் பார்க்கும்போது திருவள்ளுவரின் உருவமைப்பு தெரிவது சிறப்பம்சமாகும். இது பற்றி தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா, வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, மலையப்பநல்லூர் உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு ஆகியோர் மற்றும் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவசாயி இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து மேலு…
-
-
- 4 replies
- 778 views
- 1 follower
-
-
இன்றைய செய்தியில் இக்காணொளியை காண நேர்ந்தது. உயிரை பணையம் வைத்து 6000கி.மீ செல்வது எவ்வளவு ஆபத்தானது? அதற்கு தமிழகம் வந்து சிலகாலம் தங்கிவிட்டு நிலைமை சரியானதும் நாடு திரும்பலாமே? இங்கே வளம் இல்லைதான், ஆனால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லைதானே? 🤔
-
- 3 replies
- 557 views
-
-
அது ஒன்னுமில்லீங்க..! 😎 "கோத்த கோத்தா..(Gotta)" ன்னு "வீட்டுக்கு போக" (Go home) சொல்லி தெற்கே (SriLanka) கேட்குதே, மேற்கு என்ன சொல்லுதுன்னு 'உங்கள் குழாயில்' (You Tube) தேடுனேனுங்க..🧐 உடனே இந்த சிட்சுவேசன் சாங் (Situation Song) மாட்டுப்பட்டு போச்சுதுங்க..🤗 நீங்களும் ஒருக்கா கேளுங்க..பொருந்தி வருதா..?🤔 ஒரு சின்ன குறிப்புங்க.. இந்த 'சாங்' நான் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் மிகப் பிரபலமா இருந்துச்சிங்க..!
-
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
நல்ல பாடல்..! மேடையில் பாடிய பாடகரும் (சந்திரசேகர்) நன்றாகவே பாடுகிறார்..!! ஆனால் கீழே ஆடியவர்கள் நடனம்(????) என்ற பெயரில் அவர்களின் கொடுமையை (அட்ராசிடீஸை) சகிக்க முடியவில்லை.😡 'தண்ணி கேஸ்' போலிருக்கு..! 🤔
-
- 0 replies
- 539 views
- 1 follower
-
-
-
ஓ போடு..! ஓ போடு..!! திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் வீடு தேடி வரும் பரிசுகளும், வாழ்த்துக்களும்..! 😍 இப்படியும் ஒரு வியாபார முயற்சியா? தமிழகத்தில் இல்லாத யுக்தி.. ரொம்பவும் ரசித்தேன்..! 😇 டிஸ்கி: இது விளம்பரமல்ல, ரசித்த காணொளி அவ்வளவே..!
-
- 1 reply
- 784 views
-
-
மணப்பெண் நடனமாடி மேடைக்கு வந்த காலம் போய், இப்பொழுது மணமக்கள் மேடையில் ஆடும் கலாச்சாரம்.. நல்ல முன்னேற்றம்..!
-
-
- 1 reply
- 758 views
-
-
நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர், பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கவுண்டமணி பட காமெடி போல நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 'நினைவுச்சின்னம்' படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு "இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு..." என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர…
-
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
-
"தாடி வளர்த்தது போதும்; ஷேவ் பண்ணிட்டு நாட்டை முன்னேற்றுங்க..!” 😜 மோடிக்கு 'மணியார்டர்' அனுப்பிய டீ கடைக்காரர்! பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி, தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், டீக்கடைக்காரர் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் அனில் மோர். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாய் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி, தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. …
-
-
- 3 replies
- 559 views
- 1 follower
-
-
கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நடந்த திருமணம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் – மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனா திருமணம் தான் இப்படி விமரிசையாக விமானத்தில் நடந்தேறியது. விமானத்தில் பறந்தபடி திருமணத்தை கண்டுகளித்த உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளினர். ஆனால் இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிற…
-
-
- 16 replies
- 1.5k views
-
-
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த 'சிதம்பரம் நடராஜர்' கோயில்..! தொடர் கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வலுவிழந்த 'புரெவி' புயல் நீண்டநேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் சிதம்பரம் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் தாலுகாவில் மட்டும் 34 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து பெய்யும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை பணியும் நடந்து வருவதால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கும் வெள்ள நீர் …
-
- 1 reply
- 672 views
- 1 follower
-
-
என்னத்தை சொல்ல..! இந்த மாதிரி 'மெண்டல்கள்' இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..! 😡
-
-
- 11 replies
- 1.9k views
-
-
“டைட்டானிக்” பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி. காவிரி ஆற்றில் படகில் அமர்ந்து திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் (Photo Shoot) செய்த போது படகு கவிழ்ந்ததால் மணமகனும், மணமகளும் நீரில் மூழ்கி பலியாயினர். "வெட்டிங் போட்டோ சூட்" என்ற பெயரில் போட்டோ கிராபர்கள் நடத்தும் விபரீத விளையாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. முன்பெல்லாம் திருமணம் முடிந்த பின்னர் தான் மணமகனும், மணமகளும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று போட்டோ சூட் எடுத்துக் கொள்வார்கள். தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தாலே தங்களை ஒளி ஓவியர்களாக காட்டிக் கொள்ளும் போட்டோ கிராபர்களிடம் சிக்கி அந்த மணமகனும் மணமகளும் படும் பாடு…
-
-
- 2 replies
- 1.3k views
-
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும் மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..! தனக்கு மற்றோருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள். படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை …
-
-
- 11 replies
- 2.5k views
- 1 follower
-
-
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரி..! கை கொடுத்த சகோதரி..! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி கிராமத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், அவனது 6 வயது சகோதரியின் கைகளை பற்றிக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், தெருவில் சென்ற வியாபாரி ஒருவரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தோப்புப்பட்டியில் தாய் தந்தை வேலைக்கு சென்று விட வீட்டின் மாடியில் 3 வயது சிறுவன் தனது 6 வயது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மாடியின் கைப்பிடி சுற்று சுவரில் அமர்ந்திருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக இடறி விழ அவனை அருகில் நின்ற சகோதரி கை கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளாள், ஆனால் தவறிவிழுந்த சிறு…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
30 அடி உயரத்தில் வீடுகள்..! மதுரை - போடிநாயக்கனூர் செல்லும் 'மீட்டர் கேஜ்' இரயில் பாதையை அகல இரயில் பாதையாக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அவ்வழித்தடத்தில் இரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆண்டுகள் காலமாக ஆக்கிரமித்து வாழ்ந்து வரும் குடும்பங்களின் தற்போதைய நிலை.. ? 30 அடி உயரத்தில் அவர்களை வாழ வைத்துள்ளது..!
-
- 0 replies
- 566 views
- 1 follower
-
-
மிதவை சைக்கிள்..! முச்சக்கர வாகனத்தில் காலியான தண்ணீர் கேன்களை மிதவையாக பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மிதவை சைக்கிள் முயற்சி, எந்தளவிற்கு பயன்படுமென தெரியாது, ஆனால் பாராட்டுக்குரியவர்கள்..! 👍
-
- 0 replies
- 903 views
- 1 follower
-