About This Club
தமிழ், தமிழகம், ஈழம் பற்றியவை, ரசித்தவை !
What's new in this club
-
பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்..
பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது. அங்கே கள நிலவரம் என்ன? சென்னையிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள பரந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் புதிய விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த நிலையில்தான் திங்கட்கிழமையன்று (ஜன. 20) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இந்தப் பகுதிக்கு வருகை தந்து, தங்களைச் சந்தித்து ஆதரவளித்தது புதிய உத்வேகத்தைத் தந்திருப்பதாக போராட்டக்காரர்கள் கருதுகிறார்கள். "இந்தப் போராட்டத்துக்கு உறுதியாக துணை நிற்பேன் என்று சொல்லிச் சென்றிருக்கிறார் விஜய். அவர் இங்கே வந்திருப்பது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் இங்கே வருவதாக தகவல் வெளியானதிலிருந்து இந்த விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. விவாதங்கள் நடைபெற்றன. ஆகவே, அவருடைய வருகையும் ஆதரவும் இந்தப் போராட்டத்துக்கு நிச்சயம் வலு சேர்க்கும்" என நம்பிக்கையுடன் பேசுகிறார், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பின் செயலாளரான க. சுப்பிரமணியன். 'ஏதோ ஒரு லாபம் இருக்கிறது' - பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் பேசியது என்ன? புதுக்கோட்டை: கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி கொலையா? என்ன நடந்தது? பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையா? சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சை ஒரே ஆண்டில் 8 மடங்கு அதிகம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு அரசு தடுப்பூசி வழங்காதது ஏன்? தங்கள் பகுதியில் நிலமெடுப்பதை எதிர்த்து, 2022ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்திவருகின்றனர். ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது 910 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில்தான் விஜய் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சென்னைக்கு என இன்னொரு விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் என்பது சுமார் முப்பது ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம்தான். 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னைக்கு என புதிதாக ஒரு விமான நிலையத்தைக் கட்டுவது குறித்து ஆலோசித்து வருவதாக, அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்தார். ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மேற்கே பத்து கி.மீ. தூரத்தில் போரூருக்கு அருகில் திட்டமிடப்பட்டது. ஆனால், முன்னேற்றமேதும் இல்லை. பிறகு, 2007ஆம் ஆண்டில் சென்னைக்கென புதியதொரு விமான நிலையத்தை ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகில் சுமார் 4,820 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். 2011வாக்கில் இது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்குள் ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலைகள் பெருக ஆரம்பிக்க, புதிய விமான நிலையம் தொடர்பாக பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது விமான நிலையம் தொடர்பான பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன. திருப்போரூர், பண்ணூர், பரந்தூர், படாளம் ஆகிய பகுதிகள் ஆராயப்பட்டு, புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என இறுதிசெய்யப்பட்டது. இந்தப் புதிய விமான நிலையம் 4,970 ஏக்கர் நிலத்தில் அமையும் என அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் ரயில் விபத்து- குறைந்தது 7 பேர் பலி22 ஜனவரி 2025 இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?22 ஜனவரி 2025 படக்குறிப்பு, ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் இந்த நிலம், பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், தொடூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்ப் பிறகுதான், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அருகில் சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளன இந்த கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள். ஏரி, ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றின் மூலமும் மழையை ஆதாரமாக வைத்தும் இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. "எனக்கு இந்த ஊரில் 27 சென்ட் நிலம்தான் இருக்கிறது. அதில் விவசாயம் செய்தும் ஆடு, மாடுகளை வைத்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் இந்த இடத்தை கொடுப்பதாக இல்லை. இந்த நிலத்தை எடுப்பதற்கு பதிலாக எங்களுக்கு விஷத்தைக் கொடுத்து சாகடித்துவிடலாம். அல்லது ராணுவத்தை வைத்து சுட்டுவிடலாம். எங்களுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த இடம். அதைவிட்டுப் போக முடியாது. எங்களுக்கு இந்த மண்தான் வேண்டும்" என ஆவேசமாகப் பேசுகிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த குமார். படக்குறிப்பு, இந்த போராட்டம் 1,000 நாட்களை நெருங்கிவருகிறது ஏகனாபுரத்தில்தான் தொடர் போராட்டம் நடக்கிறது என்றாலும், பாதிக்கப்படக்கூடிய மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஏகனாபுரத்திற்கு அருகில் உள்ள நாகப்பட்டைச் சேர்ந்த கே. முருகன், இதுவரை யாரையும் சாராமல் வாழ்ந்துவிட்ட தங்களை வேறொரு இடத்திற்கு மாற்றினால், இதே போன்ற வாழ்க்கை கிடைக்குமா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், இவரைப் போன்ற நிலமற்ற விவசாயிகளுக்கு வேறு பிரச்னைகள் இருக்கின்றன. "இந்த ஊரில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எங்களுக்குத் தெரியாது. தலைமுறை தலைமுறையாக இதே ஊரில் வாழ்கிறோம். எனக்குச் சொந்தமாக மிகக் குறைவான நிலமே இருந்தாலும், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மூன்று போகம் பயிர் செய்து வாழ்கிறேன். இழப்பீடு தருவதாகச் சொல்பவர்கள், என்னைப் போல நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களின் நிலையை யோசித்துப் பார்த்தார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் கே. முருகன். குஜராத்: வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அரசு - 'சட்டவிரோத வீடுகள் என்றால் ஏன் மின்சார, தண்ணீர் இணைப்பு கொடுத்தீர்கள்?' என கேட்கும் மக்கள்22 ஜனவரி 2025 'திரும்பிச் செல்வதை தவிர வேறு வழியில்லை' – டிரம்பின் எல்லைக் கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் வேதனை22 ஜனவரி 2025 படக்குறிப்பு, கடந்த திங்கட்கிழமை தவெக தலைவர் விஜய் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பொதுவாக இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்காக நிலம் எடுக்கப்படும்போது, நிலத்தின் மதிப்பைப் போல மூன்று மடங்குவரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என்கிறார் சுப்பிரமணியன். "எவ்வளவு கூடுதல் இழப்பீடு வழங்கிவிட முடியும்? பத்திரப் பதிவு ஏதும் செய்ய முடியாது என்பதால் ஒரு அவசரத்துக்கு நிலத்தை விற்கக்கூட முடியவில்லை. இதனால், 2019ல் இருந்து பொருளாதார நெருக்கடியிலும் மன உளைச்சலில் இருக்கிறோம். இப்போது இங்கே (ஏகனாபுரத்தில்) ஒரு சென்ட் நிலம் சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரசு நாற்பதாயிரம் ரூபாய் தருவதாக வைத்துக்கொள்வோம். சற்று தள்ளியிருக்கும் பரந்தூர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்கிறது. நாங்கள் இங்கே ஒரு ஏக்கரை அரசுக்குக் கொடுத்துவிட்டு, அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்? இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சதுர அடி நிலம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய். அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்?" என கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு, எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என, இங்குள்ள மக்கள் கூறுகின்றனர் பரந்தூர் பகுதி கற்கால கிராமங்கள் இருந்த பகுதியாக தொல்லியல் துறை சொல்கிறது எனக்கூறும் சுப்பிரமணியன், இப்படிப்பட்ட இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் தங்களை இங்கிருந்து அகற்றி, தங்களின் அடையாளங்களை அழிப்பது சரியா எனக் கேள்வி எழுப்புகிறார். கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்துக்கு என எந்தெந்த நிலங்கள் கையகப்படுத்தப்படவிருக்கின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு. அதற்குப் பிறகு, ஆகஸட் மாத வாக்கில் அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டது. போராட்டக் குழுவினர் திரண்டு சென்று தங்கள் ஆட்சேபங்களைப் பதிவு செய்தனர். நிலமெடுப்பு முயற்சிகள் அதற்குப் பிறகு நகரவில்லை. அமெரிக்காவில் டிரம்ப் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியுமா? கட்டுப்படுத்தும் 6 வழிகள்22 ஜனவரி 2025 எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்த போது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை22 ஜனவரி 2025 இப்போது விஜய் இப்பகுதிக்கு வந்துசென்ற பிறகு, இந்தத் திட்டம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. பண்ணூருக்குப் பதிலாக பரந்தூர் ஏன் தேர்வு செய்ப்பட்டது என்பது குறித்தும், சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையத்திற்கான தேவை குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. "பண்ணூரில் உள்ள உத்தேசப் பகுதியில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது இப்பகுதியில் விமானச் செயல்பாடுகளுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைவாகவே உள்ளன" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரந்தூரில் உள்ள உத்தேசத் தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லை என்றும் பண்ணூர் அருகே உள்ள நிலங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. "பரந்தூரைச் சுற்றி காலி இடங்கள் உள்ளதால், எதிர்கால மேம்பாடுகளுக்குத் திட்டமிட முடியும். பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப்பகுதி, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. பண்ணூர் திட்டப் பகுதியின் வளர்ச்சியடைந்த தன்மை, கையகப்படுத்தும் செலவை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் 2020ஆம் ஆண்டிலேயே தேர்வுசெய்யப்பட்டுவிட்டது என்றும் டெல்லி விமான நிலையம் 5,106 ஏக்கரிலும் மும்பை விமான நிலையம் 1,105 ஏக்கரிலும் ஹைதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கரிலும் பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கரிலும் அமைந்துள்ளன என்றும் சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளது, அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது எந்த அறிக்கை. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் 8 கோடி பேர் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. "அரசியல் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டுவரும் பட்சத்தில் தமிழக அரசு அந்தக் குறைகளை பரிவுடன் ஆராயும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அறவழிப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjv7ylenk2o
-
SIVASANKAR R joined the club
-
"மா.. பிலக வெங்கடேசு.."
இந்த ஆட்டத்தையும் பாருங்கோ
-
"மா.. பிலக வெங்கடேசு.."
- "மா.. பிலக வெங்கடேசு.."
மிக்க நன்றி சிறீ..👍- "மா.. பிலக வெங்கடேசு.."
பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடலை கேட்க இனிமையாக உள்ளது. அவர்களின் நடிப்பும் சிறப்பு. 👍🏽 இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன்.- "மா.. பிலக வெங்கடேசு.."
இந்த தெலுகு நாட்டுப்புற பாடல், இணையத்தில் பிரபலமாகி வருகிறது.. இந்த பாடலை காப்பியடித்து பலர் ரீல்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். நேரமிருக்கும்போது கேட்டுப் பாருங்கள்..- சென்னையின் முகம்..
- சென்னையின் முகம்..
- சென்னையின் முகம்..
- தமிழீழ நாடு இப்போது எப்படி இருக்கிறது..?
நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌Poornima joined the club- தொடாதே..! மாமா..மாமா..
வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍- “ஒரு ஆலயம்” ஆகும்..
“ஒரு ஆலயம்” ஆகும்.. 41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க.. கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார். முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..! “என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு. “எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க.. அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு.. அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்.. அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க.. ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை.. இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க.. “என்ன கண்டக்டர் தம்பி, செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையே..?”ன்னு கேட்டாங்க.. அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே “உங்க செயின் 1 நிமிஷத்துல கிடைக்க போகுது..”ன்னு புதிர் போட்டார்.. அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் ‘டபுள் விசில்’ கொடுத்தார்.. பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு... அந்த சமயம் பார்த்து ஒரு குரல்..! “யோவ் கண்டக்டர்..! பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுதுய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்..! பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யா..”ன்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..! கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு.. “அம்மா உங்க செயின் கிடைச்சாச்சி..”ன்னு சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு. அவன்கிட்ட தான் செயின் இருந்தது..! அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு, அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர். இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..! “அதெப்படி அவன் திருடன்னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்க..?”ன்னு கேட்டாங்க.. அதுக்கு அந்த கண்டக்டர் “அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்தது..!”ன்னு சொன்னாரு. “அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேரு..?”ன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க. கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு. " ****** " (அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலக பேருந்து நிறுத்தம் 😷😎) படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்..! - டிவிட்டரில் ரசித்தது- வழி நெடுக காட்டு மல்லி.. யாரும் அதை பார்க்கலியே..!
நானும்.... ரயில் ஸ்டேசன்/ கக்கூஸ் சத்த பாடல் காலத்திலும் இளையராஜா பாடல் நிமிர்ந்து நிற்கின்றது.- வழி நெடுக காட்டு மல்லி.. யாரும் அதை பார்க்கலியே..!
பணம் கொடுத்து பார்க்கணும் என்று நினைத்த படம் ஐய்யா .- வழி நெடுக காட்டு மல்லி.. யாரும் அதை பார்க்கலியே..!
இன்று(02-04-2023) "விடுதலை - பாகம் 1" படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் காதில் ரீங்காரமிடும் பாடல்கள்.. பல நாட்கள் கழித்து இளையராசாவின் இசையில் பிடித்த பாடல்கள்..- இந்த இசையை கேட்டுள்ளீர்களா?
இணைப்புக்கு நன்றி. அமைதியான இசை.island joined the club- இந்த இசையை கேட்டுள்ளீர்களா?
- இந்த இசையை கேட்டுள்ளீர்களா?
SHAZAM ஆப்ஸ் இந்த இசையை WEED என்கிறது அங்கு போனால் குழப்பு கின்றது .- இந்த இசையை கேட்டுள்ளீர்களா?
இந்த இசையை கேட்டுள்ளீர்களா? ஆறு வருடங்களுக்கு முன் நாள் முழுவதும் ஒலித்தது..! 😔 கேட்கும்போது ஏதோ ஒரு ஈர்ப்பு..- சோடா ஊத்தலையா..?
நீங்கள் சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை. இப்ப மாப்பிளை தண்ணியடிக்கேல்லை எண்டால் தான் சந்தேகப்படுறாங்கள்....ஆள் நோஞ்சான் குஞ்சோ எண்டு ஆயிரத்தெட்டு கேள்வி வேறை.....😎- சோடா ஊத்தலையா..?
வில்லன்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறாங்கள் எண்டு சொன்னால் ஆர் கேக்கிறாங்கள்?- சோடா ஊத்தலையா..?
ஊரில் ஒரு டாக்டர் ( என கூறுகிறார்) . அவரின் குடியால் வேலை இழந்து ஊரில் குடித்து கும்மளாமடித்து கொண்டு திரிந்தார். தீடீரென அவருக்கு கலியாண ஆசை வந்து விட்டது. இதனால் திடீரென குடியை விட்டு விட்டு கோட் சூட் எல்லாம் அடித்து ஊரை சுற்றி வருவார். ஊரில் உள்ளவர்களின் ஆச்சரியத்துக்கு குறைவில்லை. அடுத்த ஊரில் இருந்து வந்தவர்கள் இவரை மாப்பிளை பார்க்க வந்து இவரின் வீட்டில் வந்து தேநீர் ,பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்கள். வந்தவர்களில் ஒருவர் கோவிலடியில் இருக்கும் ஒருவரிடம் மாப்பிளை பற்றி விசாரிப்போம் என அவரை அணுகினார். மாப்பிளை எப்படி ஆள் குடி கிடி என கேட்க கோவிலில் இருந்தவர் " மாப்பிளை குடிக்கிறவர் ஆனால் வெறிப்பதில்லை என்றார்". 🤣🤣 கலியாணம் வாழ்க்கையில் அவருக்கு நடக்கவில்லை.- சோடா ஊத்தலையா..?
இப்பவெல்லாம் இதனை கேட்காமல் விட்டால் தான் திருமணங்கள் தட்டுப்படுகுது 😂- சோடா ஊத்தலையா..?
அன்றொரு நாள்..! பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.. ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..! இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!! 'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க.. எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "ஐ லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல... 'டீ' யும் வந்துச்சு...! எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக, பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து.. 'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..! என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ.. திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க.. *..Rest is history.....!* 😛 - ட்விட்டரில் ரசித்தது.- 80 ரூபாய்க்கு மாமா வாரார்..!
- "மா.. பிலக வெங்கடேசு.."
Important Information
By using this site, you agree to our Terms of Use.