நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
முடி உதிர்வதால் தலையில் வழுக்கை தோன்றுவது என்பது ஆண்களில் நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 40% ஆண்களில் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு செயற்கையான காரணங்களும் உண்டு மரபணு சார்ந்த காரணங்களும் உண்டு. செயற்கைக் காரணங்களில் கதிரியக்க சிகிச்சை அளித்தல் (radiotherapy) அல்லது எரிதலுக்கு இலக்காதல் என்பனவும் முடி உதிர்வைத் தூண்டுகின்றன. இவ்வாறு தோன்றும் வழுக்கைக்கு தீர்வாக இன்று நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை என்பது, வழுக்கை உள்ள இடத்தில் பிறிதொரு இடத்தில் இருந்து சத்திர சிகிச்சை முறைகளின் கீழ் பத்திரமாக அகற்றிய மயிர்களை நாட்டுதல் என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இரு…
-
- 14 replies
- 2.7k views
-
-
வாய் துர்நாற்றம் அகல வேண்டுமா...? நன்றாக பல் துலக்காததும், அடிக்கடி காபி, டீ என எதையாவது குடித்துக் கொண்டும், தின்று கொண்டும் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். மேலும் வயிற்றில் புண் இருந்தாலும் இதற்கு வாய்ப்பிருக்கிறது. வாய் துர்நாற்றம் காரணமாக, பிறரிடம் அருகில் சென்று பேசக் கூட தயக்கம் காட்டுகிறோம். வாய்நாற்றத்தை குறைப்பது எப்படி ? வாய்துர்நாற்றம் உள்ளவர்கள், தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குறைந்தது நாலு ட்ம்ளர் தண்ணீர் குடித்து வர வேண்டும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்றை சுத்தப்படுத்தும். மேலும் எலுமிச்சம் பழச் சாற்றை தண்ணீரில் கலந்து அதில் தினமும் வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும். முடிந்தவரை…
-
- 16 replies
- 9.1k views
-
-
தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! வெள்ளிக்கிழமை, மே 9, 2008 சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியா…
-
- 13 replies
- 3.1k views
-
-
ஹாய் நலமா? [06 - May - 2008] [Font Size - A - A - A] ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா? `நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன். `ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை' என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்' எண்டு ஈ.சி.ஜி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கையிலேயே இருக்கு மருந்து! - ஆர்.கே.தெரசா 1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும். 2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம். 3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும். 4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும். 5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியு…
-
- 11 replies
- 2.6k views
-
-
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். 1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். 3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் …
-
- 2 replies
- 1.7k views
-
-
தலை முடியுதிர்வு தலை முடியுதிர்வு பெரும்பாலான ஆண், பெண்களிடம் இருந்து தலைமுடி உதிரல் பற்றியே அதிகமான கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. தலை முடி உதிர்தலும் வழுக்கை விழுதலும் வேறுபாடானவை. முடி உதிரும் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கின்றமை ஒரு பிரச்சினை தான். இங்கு என்ன நடக்கின்றது என்றால் காலம் செல்லச் செல்ல தலைமயிர் மெல்லியதாவதோடு மயிர்க்கணுக்கள் காலப்போக்கில் சிறிதாகின்றன. இதனால் புதிய மயிர் வளர்வதற்கான வாய்ப்பு குறைவதோடு மயிர்க்கணுக்களின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் குன்றி ஒட்டுமொத்தமாக மயிர் ஐதாகி தொடர்ந்து அது உதிர்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனவழுத்தம், தூக்கமின்மை, உணவுப்பழக்கம், சாப்பாட்டில் விருப்பமின்மை, தைரொயிட் குறைபாடு மற்றும் ஓமோன்களில் மாற்றங…
-
- 0 replies
- 3.5k views
-
-
தீய கொலஸ்ரோல் டெச்ட்தீய கொலஸ்ரோல் - குறைக்க முடியுமா? கொலஸ்ரோல் என்றால் என்ன? கொலஸ்ரோல் என்பது ஒரு மெழுகுத் தன்மை கொண்ட கொழுப்புப் போன்ற பொருளாகும். சாதாரண உடலியக்கங்களுக்கு இது சிறிய அளவில் இருந்தால் போதுமானதாகும். கொலஸ்ரோல் இயற்கையாகவே எமது எல்லா உடற்கலசுவர்களில் காணப்படுகின்றது. மூளை, நரம்பு, தசை, ஈரல், குடல், இதயம் ஆகிய எல்லாக கலங்களின் சுவர்களிலும் காணப்படுகின்றது. தினந்தோறும் சாதாரண உடலியக்கத்திற்கு தேவையான 100மிகி கொலஸ்ரோல் எமதுடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. எமதுடல் பல ஓமோன்களையும், விற்றமின் டி, கொழுப்பைச் சமிபாடடையச் செய்யும் பித்தநீர் போன்றவற்றை உற்பத்தி செய்ய கொலஸ்ரோலைப் பயன்படுத்துகின்றது. இதற்கு குருதியிலுள்ள மிகவும் சிறிய அளவான கொலஸ்ரோல் போது…
-
- 0 replies
- 2.7k views
-
-
தோல் சம்மந்தமான > முகப்பரு (அக்னி) முகப்பரு (அக்னி).. முகப்பரு (அக்னி): வழகைமைக்கு மாறான தோலில் ஏற்படும் பரு, முகப்பரு எனப்படும். தோல் அழற்சியானது முகப்பருக்களாக, கறுப்பு அல்லது வெள்ளை முனைகளைக் கொண்ட தோல் முனைப்புக்களால் அறியப்பட்டுள்ளது. இது பன்னிரண்டு தொடக்கம் நாற்பத்து நான்கு வயதிற்கு இடைப்பட்ட, இருபாலினருக்கும் ஏற்ப்படக்கூடும். முகத்தில் தோன்றும் பருக்களின் வடுக்கள் அழகைக் கெடுப்பதோடு, அழகற்ற நிலைக்கு தள்ளப்படும் நிலையை எட்டுவதால், ஏற்படும் மன அழுத்தம், ஒருவர் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படும் நிலை ஏற்ப்படுகிள்றது. பூப்பெய்தல் காலத்தில்தான் பெண்களுக்கு முகப்பரு தொடங்குகின்றது. ஆண்களுக்கு, அன்ரஜென் எனப்படும் ஆண் பாலுக்குரிய ஓர்மோன் இதேகால…
-
- 7 replies
- 4.2k views
-
-
முயலிறைச்சியை மட்டும் வேறு எதையும் உண்ணாமல் தொடர்ந்து தின்றால் மரணம் சம்பவிக்குமாம். இன்று பிபிசி 2 - கியூ ஐ புரோக்கிராமில் சொன்னார்கள். நமது பிள்ளைகள் காடுகளில் அலைகிறார்கள். அவர்களுக்கு இந்தச்செய்தி பிரயோசனமாயிருக்குமென்று கருத்துக்களத்துக்கு எழுதுகிறேன். உணவில்லாமல் காடுகளில் நெடுநாள் இறைச்சிகளையே உண்பவர்கள் முயலிறைச்சியைத் தனியே தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும். வேறு உணவுகளோடு உண்டால் பிரச்சனையில்லையாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
எய்ட்ஸுக்கே உதவியா"? [1] அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு முத்தமிழ்ல ஒரு நூறு இழையில அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... ! நானும் ஒரு சில இழைகளில் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும்[!!##**] படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்! 'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?' 'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்! 'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வரல்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த இஸ்லாமிய இழை திசை திரும்பி ஹோமோஸெக்ஷுவாலிடி.. ஓ…
-
- 2 replies
- 1.8k views
-
-
வெங்காயம் உங்கள் காதலி! பசுமையான காய்கறிகள், பழங்கள், பருப்புகள் ஆகியவை புற்றுநோயை தடுப்பது மட்டுமல்ல, குணப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வெங்காயத்தை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். அவ்வப்போது வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புற்றுநோய் வருவதற்கு காரணமான Carcinogen என்கிற மூலப் பொருளை எதிர்த்துப் போராடும் சக்தி வெங்காயத்திற்கு அபரிமிதமாக உண்டு. அதே போல பூண்டுக்கு கேன்சரை விரட்டும் சக்தி உண்டு. சோயா பீன்ஸ், சோயா மில்க், சோயா மாவு இவை எல்லாவற்றிலுமே கார்ஸினோஜினை நுழையாமல் தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளது. மார்பகப் புற்று நோயுள்ளவர்களுக்கு முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் ஆகிய காய்கறிகளைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் கவன…
-
- 3 replies
- 1.9k views
-
-
தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! அலுவலக நேரங்களில், இரவுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் பாதிக்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 10 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள நியமித்தது. இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரவுப்பணி, அலுவலக நேரங்களில் அதிகநேரம் கடினமாக பணியாற்றுபவர்களுக்கு புற்றுநோய் வரும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆயுளைக் குறைக்கும் உடல் பருமன்! நீங்கள் தின்பண்டங்களுக்கு அடிமையானவரா? உங்களின் உடல் எடை அதிகரித்தால் ஆயுளும் 10 ஆண்டுகளுக்கு மேல் குறையும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிக உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதில், உடல் பருமன் என்பது புகைபிடித்தலை விட அதிக பாதிப்பைத் தருகிறது. அதாவது ஆயுளில் சுமார் 13 ஆண்டுகளைக் குறைத்து விடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். ''நமது சோம்பேறித் தனத்தினாலும், அவசரத்தினாலும் துரித உணவுகளைத் தேடுகிறோம். பற்றாக்குறைக்கு தின்பண்டங்களைச் ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறுவர்களுக்கும் சர்க்கரை வியாதி Webdunia சிறுவர்களுக்குள் போட்டியும், முதன்மை இடத்தைப் பெறப் பெற்றோர்கள் செய்யும் கெடுபிடியும் அவர்களுக்குள் மன அழுத்தத்தைத் தற்போது உருவாக்கி வருகிறது. குறிப்பிட்ட நோய்களால் தோன்றும் தொற்று, மன உளைச்சல் - இவையும் சிறுவர்களிடம் சர்க்கரை வியாதி தோன்றும் சாத்தியக் கூறை அதிகரித்து வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுகிறது என்று புகார் செய்வார்கள். இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க ஓரிரு முறை எழுந்து செல்வார்கள். அடுத்து சோம்பல், பலவீனம், களைப்பு என்று அவர்கள் போக்கு மாறும். சிறுகச் சிறுக எடை குறையும், ஆனால் உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கும். தோல் சம்பந்தமான சொரி, சிரங்கு, கட்டி ஆகியன தோன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
அடிக்கடி பாப்கான் சாப்பிடுகிறீர்களா? : நுரையீரல் பாதிப்பு வரலாம் உஷார்! "பாப்கானுக்கு சுவை தர பயன்படுத்தப்படும் ரசாயனத்தால், நுரையீரல் பாதிக்கப்படலாம்' என, அமெரிக்க நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளதாவது: பாப்கானுக்கு வெண்ணெய்யின் சுவையை தர, "டையாசெடில்' என்ற செயற்கையான நறுமணப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனத்தால், "லிம்போசைடிக் பிரான்கியோலிட்டீஸ்' என்ற நுரையீரல் நோய் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மைக்ரோவேவ் பாப்கான் பேக்கேஜிங் யூனிட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், "டையாசெடில்' ரசாயனம் கலக்கப்பட்ட பாப்கானை அடிக்கடி சாப்பிட்டவர்களும், நுரையீரல் பாதிப…
-
- 1 reply
- 1.3k views
-
-
குருட்டுத்தன்மையை குணப்படுத்தும் புரதம் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு வீரகேசரி இணையம் - குருட்டுத் தன்மை ஏற்படக் காரணமான இரு பிரச்சினைகளை சீர் செய்யும் மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி மருந்தானது, பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் கண்ணிலான இரத்தக் குழாய் சிதைவைத் தடுக்கக் கூடிய புரதத்தை செயலூக்கம் பெறச்செய்வதாக உதாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்ப கட்டமாக இம்மருந்தை எலிகளில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்களிலுள்ள இரத்தக் குழாய்களிலுள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் நீரிழிவின் தாக்கம் என்பனவற்றால் குருதிக் குழாய்கள் சிதைவடைவது வயதானவர்களில் காணப்படும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
நுரையீரல் புற்றுநோய் - anatomy & Risk factors புற்றுநோய் வகைகளை அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல் படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம். நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 9000 cubic feet காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம். மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக்குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் (lobes)இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது. இரண்டாக பிரியும் பிரான்கி…
-
- 0 replies
- 3k views
-
-
யோகா--சுப்த - வஜ்ராசனம் வியாழன், 6 மார்ச் 2008( 17:02 IST ) வஜ்ராசன நிலையில் அமரவும் . முதலில் இடது முழங்கை முட்டியையும், பிறகு வலது முழங்கை முட்டியையும் ஒன்றன் பின் ஒன்றாக மிக மெதுவாக பின் பக்கத் தரையில் வைக்கவும். 2. மெதுவாக உடலை பின் பக்கமாகச் சாய்த்து - முதுகையும், பிறகு தலையையும் தரையில் வைக்கவும். கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் நேராக வைக்கவும். 3. தோள்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையிலும், முழங்கால் முட்டிகள் இரண்டும் அருகருகே சேர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். புதிதாகத் துவக்குபவர்கள் கைகள் இரண்டையும் தொடையின் மீது வைத்துக் கொள்ளலாம். 4. இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்றதும், இரண்டு கைகளையும் மேல் நோக்கி மடக…
-
- 0 replies
- 5.6k views
-
-
வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள் 1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள் 2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள். 4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள். 5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். 6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். 8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிக…
-
- 13 replies
- 3.7k views
-
-
Diabetes (சலரோகம்) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3.5k views
-
-
நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும் நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது, புரோட்டீன் உடலை வளர்க்கிறது, கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35% கலோரி உணவை எடுத்துக் கொள்ள வெண்டும். எடை கூட இன்னும் நிரைய உணவு உட்கொள்ள வெண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மிலி தண்ணீர் பருக வேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும். வாதம் உ…
-
- 1 reply
- 7.4k views
-
-
மன அழுத்தம் குறைக்க ஐந்து வழிகள்... ஒரு அழுத்தம் மிகுந்த, பணிப்பளு மிகுந்த நாளுக்குப் பின் நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சி பார்ப்பீர்களா? தியானம் செய்வீர்களா? நண்பரை அழைத்துப் பேசுவீர்களா? மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தும் ஐந்து வழிகளைப் பற்றியத் துணுக்கு இது. தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் மிக்க உதவியாக இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தியானத்திற்கு நிறைய நேரமும் செலவழிக்க வேண்டாம். 15 முதல் 20 நிமிடங்களே போதும். ஏற்றி வைத்த தீபத்தையோ ஏதாவது ஒரு சொல்லையோ தியானக் குறிக்கோளாக வைத்துக் கொண்டால் போதும். உடற்பயிற்சி: அளவான உடற்பயிற்சி என்டோர்பின் (Endorphin) என்னும் மூளை வேதியியற் பொருளின் தோற்றத்தை ஊக்குவிக்கிறது. என்டோர்பின் நல…
-
- 9 replies
- 16.2k views
-
-
கிருமிகளை அழிக்கும் பலா! முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன்-படுத்தப்-பட்டு வருகிறது. பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன. தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது. பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (Artocarpus he…
-
- 9 replies
- 7.4k views
-
-
மொபைல் போன்களால் ஆபத்து: மூளைப்புற்று நோய், ஆண்மை குறைவு, இதயநோய் அபாயம் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, அதனால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என ஒவ்வொரு நாளும்,புதுப்புது தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. மொபைல் போன்களால், அதை பயன்படுத்தாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியுமா? உண்மை தான் என்கிறார் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர், டாக்டர் ஹாவர்டு பிஷர். மொபைல் போன் மற்றும் கதிர்வீச்சு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "கண்ணுக்கு புலப்படாத அபாயம்' என்ற தலைப்பில் எலக்டோரமேக்னடிக் கதிர்வீச்சு மற்றும் மொபைல் போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் அபாயத்தை விவரித்துள்ளார்.மொபைல் போன் இல்லாத ஒருவர், அருகில் உள்ள இன்னொருவர் மொபைல் போன் பயன்படுத்தும் போ…
-
- 0 replies
- 1.6k views
-