நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர். இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும். இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்தப்படுத்த உதவலாம். ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெ…
-
- 0 replies
- 167 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களுக்கு கடைசியாக எப்போது விக்கல் ஏற்பட்டது என்பது நினைவில் இருக்கிறதா? சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும், சிலருக்கு எப்போதாவது ஒருமுறை விக்கல் வரும். ஆனால் இந்த விக்கல் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? விக்கல் என்றால் என்ன? டையபிராம் (diaphragm) என்ற தசையில் ஏற்படும் தன்னியல்பான சுருக்கங்களே மருத்துவ ரீதியாக 'விக்கல்' என்று குறிப்பிடப்படுகிறது. டையபிராம் என்ற இந்த தசை மார்பையும், வயிறையும் பிரிக்கும் இடத்தில் அமைந்திருக்கும். மனிதர்கள் சுவாசிப்பதில் இந்த தசையின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. …
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
மலைவேம்பு பூ ஆண்டு முழுவதும் பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால், பல்வேறு நோய்கள் தலைதூக்கி மக்களை அச்சுறுத்துகின்றன. மழைக்காலத்தில் அபரிமிதமாகப் பெருகும் கொசுக்களால் உண்டாகும் `டெங்கு’ காய்ச்சல், இப்போது பரபரத்துக் கிடக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முறைகளையும், நோய் ஏற்பட்டால் அதைப் போக்கும் வழிமுறைகளையும் பார்ப்போம். தற்காப்பு முறைகள் "பகல் நேரத்துல கொசு கடிச்சா, கண்டிப்பா அது டெங்குதான்" என அலறுவதும், உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்தாலே, "டெங்கு ஜுரமா இருக்குமோ?" என்று சிலர் பீதியைக் கிளப்பிவிடுவதும், அதிக அசதி காரணமாகக் கை, கால்களில் வலி ஏற்பட்டாலும்கூட, "டெங்கு காய்ச்சலின் அறிகுறியோ?" என மக்கள் மனதுக்குள் புலம்புவதையும் அநேக இடங்களில் பார்க்க முடிகி…
-
- 0 replies
- 334 views
-
-
உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள். மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராள…
-
- 0 replies
- 600 views
- 1 follower
-
-
நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சோஃபி மாக்ஃபி பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் 19 ஜனவரி 2026, 01:52 GMT ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன். நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது. இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூ…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ் ! உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர். சர்வ ரோக நிவாரணி ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவ…
-
- 0 replies
- 555 views
-
-
கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளது. மனிதர்களது உடல் உள வளர்ச்சியில் கீரை பெரிதும் முக்கியத்துவம் வகிக்கின்றது. கீரையானது நாட்டுக்கு நாடு காலநிலைகளின் மாறுதல்களிற்கு ஏற்ப்ப பலவகையாக விழைவிக்கப்படுகின்றது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி தன்மைகளைக் கொண்டுள்ளன. வெந்தயக்கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்றுப் புண்கள், பேதியை குறைக்கும். அதிகமாக இரும்புச்சத்து கொண்டது. முருங்கை கீரை: உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிலக்கின் போது ஏற்படும் வ…
-
- 0 replies
- 650 views
-
-
AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப…
-
- 0 replies
- 1.3k views
-
-
உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை…. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. *மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். *கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள். *ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள். …
-
- 0 replies
- 437 views
-
-
நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்-அது என்ன?"இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிய இதப் படிங்க! கிராமங்களில் சில புதிர்களை அடிக்கடி சொல்லி, சிறுவர்களிடம் அதன் பதிலைக் கேட்பார்கள், புதிர்களின் காரணம், புதிர்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை, அவர்கள் மனதில் நன்கு இருத்திக்கொள்ளவே. அது போல ஒரு புதிரை, இங்கே நாம் பார்க்கலாமா!? "நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்" அது என்ன? பந்தலுக்கு எப்படி ஒரே கால் என்று நிறைய யோசித்து, இருக்கும் பல்வேறு சிந்தனைகளில், இதையும் சேர்த்துக்கொண்டு சிரமப்பட வேண்டாம். மேலே இருக்கும் படத்திலேயே, இதற்கான விடை இருக்கிறது. கண்டுபிடித்து விட்டீர்களா? நீராரைக்கீரை, ஆலக்கீரை எனும் ஆரைக்கீரை தான், புதிருக்கான பதில். நான்கு கால்வட்ட இலைகளைத்…
-
- 0 replies
- 386 views
-
-
பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் உள்ளது. வெளிநாடுகளில் இக்கர்ப்பப்பை வாசல்புற்று நோயின் தீவிரம் ஒழுங்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்புமுறைகளால் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் இந் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதற்குப் பிரதான காரணம் மக்கள் மத்தியில் இப்புற்றுநோய் தொடர்பான பொது அறிவும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளமையே ஆகும். எனவே இப்புற்றுநோய்…
-
- 0 replies
- 529 views
-
-
மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது அகால மரணத்துக்கு இட்டுச்செல்லக் கூடும் என்பதைக் காட்டும் கூடுதல் ஆதாரம் வெளிவந்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் ஐந்து லட்சம் மக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வொன்று, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதால், 30 பேரில் ஒருவர் அகால மரணமடைய நேரிடுகிறது என்று கூறியது. பி.எம்.சி மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், தினசரி 20 கிராம்கள் இறைச்சி என்ற அளவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் கட்டுப்படுத்துவது ( இது ஒரு துண்டு பன்றி இறைச்சிக்கு சமம்),ஓராண்டில் பல ஆயிரம் மரணங்களைத் தடுக்கக் கூடும் என்று கூறியிருக்கின்றனர். பதப்படுத்தபட்ட இறைச்சிகளை பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் ரசாயனப் பொ…
-
- 0 replies
- 516 views
-
-
'லாங் கோவிட்' - நீண்டகாலம் குணமாகாத கொரோனா தொற்றின் அறிகுறிகள் , பாதிப்புகள் என்ன? ரேச்சல் ஷ்ரேர் சுகாதார செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கொரோனாவால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் கடுமையாக நோய்வாய்ப்பட மாட்டார்கள். அவர்கள் ஒப்பீட்டளவில் விரைவாக குணமடைந்துவிடுவார்கள். ஆனால் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டபின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நீண்டகால சிக்கல்களைச் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படாவிட்டாலும் கூட இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சமூகம் மீண்டும்…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போதெல்லாம் இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றது. தலைமுடி சீராக வளர எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும், மேலும் மசாஜ் செய்வதும் தலையின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். தலைமுடியை பொதுவாக இவ்வாறு பிரிக்கலாம் - வறண்ட - எண்ணெய் பதமுள்ள - இயல்பான உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் பராமரிப்பு பொருட்களை தெரிவு செய்வது அவசியம். இதனை தெரிவு செய்வதில் குழப்பம் இருந்தால் சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பு போட்டு குளிப்பது அவசியம், ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்திய பிறகு அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத பக்க வி…
-
- 0 replies
- 818 views
-
-
சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும். ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பான்ங்களை அருந்துவது போன்றவியும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு. தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள…
-
- 0 replies
- 515 views
-
-
சவால்விட்ட வாழ்க்கை - சாதித்துக்காட்டிய ஜெகதீஷ் 25 பிப்ரவரி 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …
-
- 0 replies
- 453 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024, 04:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார். ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்…
-
- 0 replies
- 565 views
- 1 follower
-
-
யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள் கடலூர் வாசு ஜூலை 23, 2019 இந்துக்களின் ஆறு முக்கியமான சாத்திரங்கள், மீமாம்சம், நியாயம், வைசேஷிகம், சாங்கியம் , யோகம், வேதாந்தம் ஆகியவையாகும். இச்சாத்திரங்களை இவ்வுலகிற்கு அளித்தது முறையே ஜைமினி,,கௌதமர்,, கணாதர், கபிலர், பதஞ்சலி, வியாசர் என்ற ஆறு முனிவர்கள். யோகம் என்றால் உடல் மனம் ஆன்மா ஆகிய மூன்றையும் அணைத்தல் ,கட்டுதல் ,அல்லது ஓருமுகப்படுத்துதல் என்பதாம். யோகத்தின் கடைசி அங்கமான ஹயோகத்தை முதன் முதலாக உபதேசித்தவர் ஆதி நாதர் என்றழைக்கப்படும் சிவா பெருமானேயாகும் என்று இந்து மதம் கருதுகிறது. Hatha yoga pradipika ஸ்ரீ ஆதிநாதாய நமோஸ்து தஸ்மை யேனோபதிஷ்டா ஹடயோகவித்யா விப்ரஜாதே பரோன்னதராஜயோகம் ஆரோடு…
-
- 0 replies
- 1.3k views
-
-
எலுமிச்சையின் நன்மைகள்!!! அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால், உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் தான். ஆனால் இந்த நன்மைகளைத் தவிர, இந்த சிட்ரஸ் பழத்தில் வேறு என்ன நன்மைகள் உள்ளன, என்பதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்களேன். எலுமிச்சையின் நன்மைகள்: * எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் …
-
- 0 replies
- 560 views
-
-
இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க 10 வழிகள் #HealthTips இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கம், தங்களது அன்றாட வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்தஅழுத்தத்தைக் கட்டு…
-
- 0 replies
- 835 views
-
-
இரத்தத்தில் உள்ள.. சீனியின் அளவைக் குறைக்கும், புதிய மருந்து... "கோவக்காய் செடி"யில் இருந்து கண்டுபிடிப்பு! இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கோவக்காய் இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்ட கால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வின் முடிவுகளின்படி, கோவக்காய் செடியின் இலைகளில் …
-
- 0 replies
- 186 views
-
-
Dr. பி. விஸ்வநாதன் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான் நீரிழிவு விழித்திரை நோய் (டயபடிக் ரெட்டினோபதி). இது, நீரிழிவு உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்து கிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய ரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது. இந்தக் கசிவுகள் ‘ரெட்டினல் இடிமா’ மற்றும் கடின கசிவு எனப்படும் ‘லைப்போ புரோட்டீன்’ வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித் திரையின் முக்கிய பகுதியான …
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, எம்ஆர்ஐ பரிசோதனையை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவர் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2025, 05:39 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது. ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர். மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பக…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 748 views
-