வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 10 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். மூதூரில் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பலரும் தமது ஆதங்கங்களை அங்கு வெளிப்படுத்தியிருந்தனர். …
-
- 0 replies
- 812 views
-
-
இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்: இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன. மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…
-
- 0 replies
- 912 views
-
-
ஆலயங்களின் பெயரால்…..! கடந்த வருடம் நாம் வாழும் நகருக்கு அண்மையாக உள்ள ஒரு கோவிலுக்குத் தேர்த் திருவிழாச்செய்ய ஆட்களில்லை சரியில்லை என்ன செய்யலாமெண்டும் கிட்டத்தட்ட ஒரு ஆயிரத்திஐம்பதிலை இருந்து ஆயிரத்து இருநூறெண்டாலும் தேவையெண்டு மன்றக் கூட்டத்திலை கதைவர, இருந்தவ அப்ப சரி, நாம ஐம்பதம்பதாப்போட்டாலே ஒருதொகை சேரும் மிச்சத்தை ஊருக்கை சேர்த்துக்கொடுக்கலாம் என்று கதைச்சு,…. இதுக்குள்ள இன்னுமொரு விடயத்தையும் நீங்கள் அறியவேணும், சிலநேரம் நாட்டுக்கேதும் செய்வமெண்டா முதன்மையானவை உட்பட எல்லாரும் பம்முவினம். சரி ஊருக்கை ஒரு வயதிலை பெரியவர் இருக்கிறார் எண்டு மன்றக்காறர் போய்கதைத்துப் பொறுப்பைக் குடுத்தவை. அப்ப கொடுக்கேக்கை சொன்னதென்னென்றால், பூசைச் செலவுக்கு போக மீதிக்காச…
-
- 0 replies
- 1.2k views
-
-
டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் …
-
- 13 replies
- 1.7k views
-
-
படைநீக்கமும் பொறுப்புக் -கூறலும் இனச்சிக்கலின் தீர்வுக்கான முன்தேவை! உருத்திரகுமாரன் அறிக்கை!! தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983 கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார். 1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது…
-
- 0 replies
- 827 views
-
-
சுவிஸ் UBS வங்கியினர் தமது வாடிக்கையாளர்களுக்கு , சுவிசிலுள்ள குறிப்பிட்ட 35 மலைகளுக்கு செல்லுவதற்குரிய ஒரு விசேட விலைக்கழிவினை வழங்கியுள்ளனர். இதன் பிரகாரம் சுவிஸ் UBS வங்கியில் வங்கிக்கணக்கினை வைத்திருக்கும் ஒருவர் , அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கு ஒருவருக்கு தலா 10 பிராங்குகளுக்கு இரு வழிப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பயணச்சீட்டானது அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கும் அதன் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்று வர பாவிக்கலாம் [zahnradbahn (rack railway), standseilbahn (cable car), luftseilbahn (aerial cableway), sesselbahn] கணவனும் மனைவியும் செல்வதானல் இருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் .வங்கி அட்டை மற்றும் அடையாள அட்டை முக்கிய…
-
- 12 replies
- 2.1k views
-
-
இலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து வந்து புலம்பெயர் தேசங்களில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வரிசையிலே டின்சன் வன்னியசிங்கம் என்பவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கப்பலில் 4 மாதங்களாக பயணித்து கனடா வந்தடைந்தார். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து Sunsea இசைப்பள்ளியையும் இசைக்குழுவையும் நடத்த இருக்கிறார். Keyboard, piano, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற இவர் இக்கலைத்துறையில் சாதிக்க மிகவும் கடின உழைப்பையும் நேர்த்தியான ஆசிரியர்களின் வழிநடத்தலில் வாத்தியங்களையும் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Sunsea என்ற பெயரை எதற்காக வைத்திருக்கிறார் என்று கேட்ட போது "நான் வந்த கப்பலின் பெயர் Sunsea, நான் இந்த கனடா …
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது, ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Go to Videos Sri Vishnu Thurkkai Amman Temple - Swit…
-
- 6 replies
- 1.3k views
-
-
காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக வி…
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோடைகால விடுமுறை இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து கோடைகால விடுமுறைக்காக தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கோடைக்கால விடுமுறைக்காக தாம் பிறந்த நாட்டிற்கு செல்வதும் தமது…
-
- 6 replies
- 1.5k views
-
-
லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான். காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவிப்பிர…
-
- 0 replies
- 709 views
-
-
13 புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை: 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். குறுங்கடன் திட்டமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிச் சலவை, குற்றச் செயல்களில் ஈடுபடுதல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியா- மெல்போர்ண், டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். மல்லாவியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர். ஞாயிற்றுக்கிழமை இரவுச்சாப்பாட்டை முடித்த பின்னரர் நித்திரைக்குச் சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உறங்கிய கட்டிலில் இரத்த கறை காணப்பட்டதுடன் சிறுநீர் கழிக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த அவர், குடும்பத்துடன் இணைய முடியாத நிலையில் தனது குழந்தை ஒன்றை அண்மையில் இழந்திருந்தார். இவ்வாறான நிலை மிகவும் மனம் குழம்பிய நிலையில் காணப்பட்டார் என…
-
- 0 replies
- 887 views
-
-
இலங்கை மருத்துவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழக்கப்பட்டுள்ளது இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானிய அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த வெதிசிங்கவிற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வழங்கப்படும் Edgar Gentilli Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. டொக்டர் லிலந்த முதுமாணி பட்டத்திற்காக மேற்கொண்ட ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134129/language/ta-IN/ar…
-
- 0 replies
- 902 views
-
-
நீங்கள் உடனே பார்த்திருக்க வேண்டும்! அனுபவம் இன்று(16.07.16) காலை மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுகொண்டிருந்தேன். போவதற்கான பெற்றோல் இருந்ததால் அப்படியே புறப்பட்டுவிட்டேன். மைதானமிருக்கும் இடம் அண்மித்தபோது நிகழ்வு ஆரம்பிக்க ஏறக்குறைய அரைமணிநேரம் இருந்தது. போவதற்கு ஆறுநிமிடங்கள் தேவை. சரி எரிபொருளை நிரப்பிவிட்டால் புறப்படும்போது நேராக வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற சிந்தனை. மகிழுந்தை பெற்றோல் நிலையம் நோக்கித் திருப்பினேன். பெற்றோலை நிரப்பிவிட்டு வங்கிஅட்டையூடாகப் பணத்தைச் செலுத்திவிட்டு விரைந்து வெளியேறி உரிய இடத்துக்குச் சென்றேன். மாலையில் புறம்படும்போது எதேச்சையாக எரிபொருள் நிரப்பிய பற்றுச்சீட்டை எடுத்துப் பார்த்தேன். எரிபொருளோடு ஆறு யூரோக…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான Suganthan Somasundaram என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த Suganthan Somasundaram, Pascal Mancini., Amaru Schenkel மற்றும் Alex Wilson ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதியில் சுவிட்சர்லாந்து 7வது இடத்தை கைப்பற்றியுள்ளது, சுவிட்சர்லாந்தின் சிறந்த Sprinters category வீரர்களில் முதல் 5 இடத்திற்குள் இலங்கை தமிழரான Suganthan Somasundaram இடம்பிடித்துள்ளார். Suganthan Somasundaram தனது திறமையின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந…
-
- 0 replies
- 737 views
-
-
பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை பார்த்தல் பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித …
-
- 0 replies
- 872 views
-
-
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார். கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கை…
-
- 0 replies
- 536 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பிக்கவுள்ளனர். இன்று மாலை 4.00 மணியவளில் கேப்பாபுலவு மாதிரிக் கிராம சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்வரும் 19ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்தம் காரணமாக இடம்பெ…
-
- 0 replies
- 358 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐக்கிய நாடுகள் பேரவையில் வெளியிட்ட அறிக்கையை மையமாகக்கொண்டே இந்த நிராகரிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாக உருத்திரகுமாரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். http://w…
-
- 0 replies
- 485 views
-
-
மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம ! பத்து விடயங்களை முன்வைத்து சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஐ.நா உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மறுபறிக்கை விடுத்தள்ளது. நடந்த முடிந்த ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி அறிக்கையளித்திருந்தார். இந்நிலையில், மங்களவின் அறிக்கைக்கு பதிலறிக்கையாக, பத்து விடயங்களை பிரதானமாக சுட்டிக்காட்டி, சிறிலங்காவின் முன்னுக்குபின் முரணான நிலைப்பாடுகளையும், பொறுப்பற்றை போக்கினையும் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ள…
-
- 0 replies
- 774 views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படும் - சுவிட்சர்லாந்து: இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் கடுiமாயன நிபந்தனைகள் பின்பற்றப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும் போது கடுமையான நியதிகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டின் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 659 views
-
-
கனடாவில் 27 வருடங்கள் வாழ்ந்தவர் குடியுரிமைக்காக போராட்டம் ஜொனத்தன் குய்பெர் (Jonathan “Yoani” Kuiper) என்பவரின் குடியுரிமை தொடர்பான நிலைமை, இரு வாரங்களிற்கு முன் தெரியவந்தமையை அடுத்து அது கனடா எங்கும் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. அவர் அரசியல்வாதிகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்றிருந்தாலும், அவரது நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 33 வயது நிரம்பிய குய்பெர் (Kuiper) ,14 மாதங்களேயான குழந்தையாய் இருந்தபோது தமது பெற்றோருடன் கனடாவிற்குக் குடிபெயர்ந்து London, Ont இற்கு அருகாமையில் உள்ள Aylmer என்ற நகரிற்கு வந்துள்ளார். இந்த 33 வருட காலப்பகுதியில் 27 வருடங்கள் கனடாவில் வாழ்ந்து, கல்வியும் கற்றவருக்கு தனது குடியுரிமை பற…
-
- 1 reply
- 1.2k views
-
-
இல்லை எண்டால் இல்லைத்தான் - ஜேர்மனி புதிய சட்டம். பாலியல் விவகாரங்களில், பழமைவாதத்தைக் கொண்டிருந்த ஜேர்மனியில் புதிய சட்டம் இன்று பராளுமன்றில் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதன் பிரகாரம் ஆண் அத்துமீறும் போது 'இல்லை, வேண்டாம், நிறுத்து' என சொல்லியும் நிறுத்தாமல் தொடர்ந்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும். இதிலே சில பெண், உணர்வு மிகுதியில், பிதறும் 'நோ, நோ' என்பது சேராது. பார்த்து ஜேர்மன்காரரே, கட்டின மனிசி எண்டாலும், இல்லை எண்டால், இல்லைத்தான். நிப்பாட்டு எண்டால், நிப்பாட்டுத்தான்.... மெல்ல திரும்பி படுக்க வேண்டியதுதான். அகதிகளாக வந்தவர்கள், பெண்கள் மீது பாலியல் சேட்டைகள் விட்டால், உடனே அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப் பட சட்டம் அனுமதிக்கிறது. …
-
- 39 replies
- 4.1k views
- 1 follower
-
-
ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார். அதேவேளை ஈழம் …
-
- 1 reply
- 897 views
-