வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5822 topics in this forum
-
ஜேர்மனியில் தமிழ் இளைஞன் பரிதாப பலி ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட வித்தின் தன்மை இவ் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணமாக கூறப்பட்டாலும் வேகக் கட்டுப் பாட்டை இழக்கக் காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அன்மைக் காலங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் பலர் இப்படி விபத்துக்களில் மரணமடைவதாக கூறப்படுகிறது. …
-
- 7 replies
- 1.2k views
-
-
மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு By காவியன் on March 28, 2016Comments Off on மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு …
-
- 7 replies
- 954 views
-
-
"சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் (ஜெர்மனி, டுசில்டோர் ஃப், Düsseldorf) நேர்காணல் ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப், (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும் ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய,…
-
- 1 reply
- 1.4k views
-
-
அன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி அன்று சிந்திய ரத்தம் தளவாய் சுந்தரம் தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்! சாத்திரி பரபரப்பு பேட்டி ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி… தம…
-
- 2 replies
- 2.1k views
-
-
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! [Saturday 2016-04-09 18:00] தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினரா…
-
- 0 replies
- 741 views
-
-
கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த \"இலண்டன் தமிழர் சந்தை\" நிகழ்வு இவ்வாண்டும்எதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) Harrow Leisure Centre இல் சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன. கடந்த வருடம்போலவே இம்முறையும் பிரித்தானிய வர்த்தக சம்மேளனமானது \'நாச்சியார்\' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு மாலை 8 மணி வரை நடைபெறும். சுமார் 150 வரையிலான வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல்…
-
- 0 replies
- 542 views
-
-
ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட…
-
- 5 replies
- 841 views
-
-
சுவிஸ் நாட்டில் பரவலாக சீட்டு மற்றும் கடன் பற்றியே பேச்சு. இருப்பினும் சில சுவாரசியங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அதில் ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக. பெயர் மல்லிகா என்று வைப்போம். மல்லிகா அக்கா ஒரு அவசர தேவைக்கு சிலரிடம் கடனாக பணம் வாங்கினார். ஒருவரிடம் 20,000, மற்றவரிடம் 10,000, வேறு ஒருவரிடம் 15‘000 என கிட்டத்தட்ட 60‘000 சேர்த்து விட்டார். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவில்லை, பணத்தை திரும்ப கேட்க இல்லை என்று கூறிவிட்டார். கடன்காரர் மிரட்ட அவர் தனக்கு 5,000 சம்பளம், அதில் எல்லா செலவும் போக மிஞ்சுவது 1,000. இந்த 1,000 கழித்து எடுக்க விரும்பினால் எடுக்கலாம், உங்களில் யார் அதியம் கழிக்கிறாரோ அவருக்கு தரப்படும். இதன் அர்த்தம்: மல்லிகா அக்கா செலுத்த வேண்டிய கடனில் யார் அ…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது. 1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும். 2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக்…
-
- 0 replies
- 619 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பிறந்த பிரசாந்த் பேரின்பராஜா(20) என்ற வாலிபர் பிரித்தானியாவில் குடியேறி Worcester என்ற நகரில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரருடன் வசித்து வந்துள்ளார். Birmingham நகரில் கல்லூரி படிப்பதை தொடர்ந்து வந்த இவருக்கு நண்பர்கள் ஏராளம். இந்நிலையில், 2016ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாட நண்பர்களுடன் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நண்பர்கள் விதவிதமான போதை பொருட்களை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
கட்டுரை: 'முஸ்லிம் அகதிகள்' | காலச்சுவடு | புலம்பெயர் மக்கள் மத்தியில் தங்கள் தாய்மொழி, சடங்குகள், கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டு அடையாளங்களைப் பேணவேண்டியது முக்கியமான சவாலாகவே உள்ளது. இதற்காக அவர்கள் தாய்மொழிவழிப் பள்ளிகள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்து அந்நாட்டுக் குடி மக்களாகிவிட்ட இளைய தலைமுறையினரின் புழங்கு தளம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எல்லாமே பெரும்பான்மைச் சமூகத்துடனான தொடர்பால் தங்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதைப் பெரும் சுமையாக உணர்கிறார்கள். என்னதான் தமிழ் வழிப் பள்ளி நடத்தினாலும், வீட்டு உரையாடலுக்கு மட்டுமே அக்கல்வி உதவுகிறது. ஆனால், இந்தத் தலைமுறையினரும் கடந்த …
-
- 0 replies
- 1.8k views
-
-
இம் மாதம் கனடா ஸ்காபரோவில் 21 வயதுடையவரான துஷாந்த் அரியநாயகம் என்பரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. கனடா ஸ்காபுரேவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை! மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் இளைஞரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதுடைய ரவிசங்கர் வல்லிபுரம் என்னும் இளைஞனும் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டவர்கள் தகவல் தருமாறு பொலிஸார் வேண்டுதல் விடுத்து செய்திவெளியிட்டுள்ளனர். http://torontopolice.on.ca/newsreleases/34270 http://www.seithy.com/breifNews.php?newsID=154308&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 819 views
-
-
http://www.kuriyeedu.com/archives/33891
-
- 0 replies
- 697 views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை 26.03.2016) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்றாரியோவில் நீதிபதியாக பதவி பிரமானம் செய்து கொண்டார் என அறியப்படுகிறது. திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்த மண்ணில் வரலாறு படைக்கும் தமிழர்களை தமிழன் வழிகாட்டி வாழ்த்துகின்றது. http://www.tamilsguide.com/details.php?nid=6&catid=149143#sthash.adnflYVj.dpuf
-
- 0 replies
- 710 views
-
-
பிரான்ஸில் வைத்து ஈழத்தமிழர் இருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது, பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்தன. இந்நிலையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இ…
-
- 5 replies
- 635 views
-
-
இரண்டாம் தலைமுறையின் வெற்றியில் முதலாம் தலைமுறையின் பங்கு என்ன? - கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்களின் சமூகவெளியை இரண்டாவது தலைமுறையினர் கூடுதலாக நிரப்ப ஆரம்பித்துள்ளனர். இங்கு இரண்டாவது தலைமுறை என்பது 1983 க்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களின் பிள்ளைகளையே கூடுதலாகக் குறிக்கிறது. 1980 க்கு முன்னர் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் மூன்றாம் நான்காம் தலைமுறையினரும் உருவாகி விட்டனர். இருந்தபோதும் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலப்பெயர்வுக்கு உள்ளானவர்களே புலம்பெயர் தமிழர் சமூகத்தின் பெரும்பான்மையினராக உள்ளனர். தமது பிள்ளைகளை முன்னேற்றுவது குறித்து பெற்றோர்களாகிய முதலாவது தலைமுறையினர் செலுத்திய, செலுத்தி வரும் அக்கறை மிகுந்த கவனத்துக்குரியது…
-
- 2 replies
- 671 views
-
-
SISYPHUS OR FATE OF A MAN (re eddited) சிசிபஸ் என்கிற மனிதனின் விதி * தங்கள் எதிர்கால சந்ததி சரி பிழைகளை உனர்ந்து வெற்றிகரமாக தொடர்ந்து செல்ல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதிவைப்பது அவசியமானதாகும், உலகில் இறுதியில் வெற்றி பெற்ற எல்லா போராட்டத்திலும் எதிரிபற்றிய விமர்சனமும் அதைவிட அதிகமாக தங்கள் தரப்பு மூல உபாயம் தந்திரோபாயம் (Strategy and tactics) பற்றிய சுயவிமர்சனமுமே பின்னர் வந்த தலைமுறை போராட்டங்களுக்கு அதிக வழிகாட்டியாக உதவியாக இருந்தது, * இராணுவ உத்திகள் தொடர்பாக எனக்கும் வன்னிக்கும் நடந்த விவாதங்களையும் என் அணுகுமுறைகளோடு கஸ்றோ அணி அழித்துவிடும் முனைப்புடன் முரண்பட்டது பற்றியும் இருந்தும் வன்னியில் என…
-
- 2 replies
- 1.5k views
-
-
லண்டன்- மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தி என்ற பெண் நடுத்தர வயதுடையவர் எனவும், அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியனார் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றியுள்ளார். லண்டனில் இன்று காலை வீதியில் செல்வோரை தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்புகார் சூழ்ந்த காலநிலை காணப்பட்டது. குறித்த பெண் பாதசாரிகளின் நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் எ…
-
- 33 replies
- 6k views
- 1 follower
-
-
ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன் தம்மிடமே புலிகள் போராட்டத்தை ஒப்படைத்ததாக, புலிகளைத் தடை செய்த மேற்கு நாடுகளில் அலரித் திரிந்து, தங்களுக்குள்ளேயே சுட்டுத்தள்ளும் உலகத் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவானது (TCC), புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய நாடுகளின் ஜெனிவாக் கிளையின் வெளிவாயில் நிலத்தில் முடக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை என்ற நிறுவனம் அமெரிக்க ஏகாதிபத்திய அணியின் கொலை வெறிக்கு சட்டரீதியாக வழிசெய்துகொடுக்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று BTF . இந்த அடிப்படையான விடையத்தைக் கூடத் தெரிந்துகொள்ளாத அமைப்பின் போட்டியாளர்களான TCC தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்குத் தொழிற்பட்ட மற்றொரு பினாமி அமைப்புக்களில் ஒன்று. ஜெனீவாவின் உள்ளே BTF 2009 ஆம் ஆண்டிலிருந்…
-
- 0 replies
- 765 views
-
-
நேர்காணல் = நிவேதா உதயராஜன் = கோமகன் ( பெரிய பிரிட்டானியா ) / “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” நிவேதா உதயராஜன்,மெசொப்பொத்தேமியா சுமேரியர் (பெரிய பிருத்தானியா) ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகராவும் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாள…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள பெண் ஒருவர் தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ். இலங்கையை சேர்ந்த இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார். காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது இரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர் லூக்கிமியா என்னும் இரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய் இரத்த அணுக்கள் உருவா…
-
- 1 reply
- 921 views
-
-
என்னால் முடியவில்லை... ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடும் வித்யாவின் நெகிழவைக்கும் நிமிடங்கள்! (வீடியோ) தனக்கான உறுப்பு தானம் செய்யும் நண்பர்கள் விரைவில் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, ரத்த புற்று நோயால் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இலங்கை பெண் வித்யா அல்போன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்ரோ (Walthamstow) பகுதியைச் சேர்ந்த 24 வயதான வித்யா அல்போன்ஸ், லூக்கேமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்யாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். இதுவரை வழங்கியவர்களின் ஸ்டெம் …
-
- 0 replies
- 740 views
-