நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
-
- 0 replies
- 668 views
-
-
போர்னோகிராபியும் இலக்கியமும் யமுனா ராஜேந்திரன பீடபைல்கள் இன்று எல்லாச் சமூகங்களிலும் பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இவர்கள் குழந்தைகளோடு பாலுறவு கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். குழந்தைகளை நைச்சியம் செய்து உறவு கொள்வார்கள். முடியாது போனால் தந்திரமான முறையில் கடத்திச் செல்வார்கள். இங்கிலாந்தில் இந்த மனநிலை கொண்டவர்கள் பல பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திப் பின் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கீத்தா ஸெரனி எனும் எழுத்தாளர், இரண்டு சிறுவர்களைக் கொன்ற ஒரு சிறுமி பற்றி நூலை எழுதியிருக்கிறார். மிகவும் சிறுவயதில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்பட்டி…
-
- 0 replies
- 2.6k views
-
-
கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்று தமிழர்களுக்கு எங்கோ அடிப்படையில் ஒரு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை விடுதலைப் பாடலுக்கான தன் எழுச்சியையும் இச் சந்தேகத்துடனேயே கடந்து போகிறான். அல்லது, தனக்குத்தானே இறுமாப்புடன் கவிஞன் என்று கூறிக் கொள்கிறான்.இரண்டிலும் நிரம்பிய சிக்கல்கள் தாம் விடுதலைக்கான வேகத்தை மட்டுப்படுத்துகின்றன என்று கொள்ளலாம் . கவிதையெங்கும் அர்த்தம் சலித்த வார்த்தைகளை நிறைத்து வைக்கும் காலகட்டம் இது போல. அதாவது முன்னமே பலர் எழுதியதை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்த்து தாகத்தை ஆற்றிக் கொள்ளுதல்,அதே வார்த்தைகளை அடுக்கு மாற்றி கவிதை என எழுதிப் பார்த்தல், பிரச்சார நெடியுடன் முழக்கங்களுடன் …
-
- 0 replies
- 2.2k views
-
-
பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை' -எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவேபிள்ளையானாகிய சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும்எம் எல்லோரையும் போல ஒரு வெளி இருக்கின்றது. எமக்கும்எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், அதை நிதானமாகக்காழ்ப்பின்றி கேட்பதற்கும் நிதானம் வேண்டும். -சந்திரகாந்தன், குழந்தைப் போராளியாக தனது பதினாறாவது வயதில்புலிகள் இயக்கத்தில் 90களில் சேர்ந்தவர். கருணாவின் பிளவு உருவாகிய2004 வரை, 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின்முதலமைச்சரும் ஆகியிருக்கின்றார். -சிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்துகைவிலங்கிடப்பட்டு திருக…
-
- 0 replies
- 787 views
-
-
December 01, 2023 டாக்டர் மு. நீலகண்டன் எழுதியுள்ள சோழ மண்டலத்தில் பௌத்தம் என்னும் நூல் சோழ மண்டலம் வரலாற்றுப்பின்னணி (பக்.13-33), சோழ மண்டலத்தில் பௌத்த தாக்கம் (பக்.34-44), சோழ மண்டலத்தில் பௌத்தப் பெரியோர்கள் (பக்.45-50), சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு (பக்.51-63), சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் (பக்.64-122), சோழ மண்டலத்தில் பௌத்தம் வீழ்ச்சி (பக்.123-125) என்னும் ஆறு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் இயலில் சோழ மண்டலம் என்ற வரையறையான பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், தென்னாற்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிளைக் கொண்ட நிலப்பரப்பு, வரலாற்றுப்பின்னணியில் தமிழ்நாட்டின் எல்லைகள்…
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
தொட்டாற்சிணுங்கிகள் அபிலாஷ் சந்திரன் உங்கள் படைப்பை யாராவது கிண்டலடித்தால் தாங்கிக் கொள்வீர்களா? ஜென்ம விரோதியாக பாவிப்பீர்களா அல்லது புறக்கணித்து கூலாக கடந்து விடுவீர்களா? சமீபத்தில் நவீன கவிதை பற்றின நீயா நானாவில் இ.எம்.எஸ் கலைவாணனிடம் கோபிநாத் கேட்டார்: “உங்கள் புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் நான் இவை வெறும் காகிதங்கள் தானே, வேறு என்ன இருக்கிறது என கேட்டால் என்ன சொல்வீர்கள்?”. அதாவது கோபிநாத் அப்படி கருதி கேட்கவில்லை. ஒரு சாத்தியத்தை பரிசீலிக்கும் நோக்கில் கேட்டார். அதற்கு கலைவாணன் “எனக்கு வலிக்கும்” என தன் கரகர தழுதழுத்த குரலில் சொன்னார். இது ஒரு அணுகுமுறை. இன்னொரு அணுகுமுறை இருக்கிறது. ஒரு படைப்பு வாசகன் வசம் போனபின் அது அவனது பார்வை, புரிதல், கவனம், அக்கற…
-
- 0 replies
- 765 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையிலான போரில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டு, பிறகு மீட்கப்பட்டு மறுவாழ்வு முகாம்களில் உள்ள சிறார்கள் பலரின் கவிதைகள், ஓவியங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார் இலங்கையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ். சிறார்களின் எதிர்கால நம்பிக்கை இந்தக் கவிதைகளையும் ஓவியங்களையும் பார்க்கும் போது எல்லா சோகங்களையும் இழப்புகளையும் மீறி அந்தச் சிறார்களின் நம்பிக்கை துலக்கமாகத் தெரிகிறது. அந்த முகாம்களில் வாழும் சிறார்களில் அனைவரும் தங்கள் குடும்பத்தினரில் ஒருவரையாவது இழந்தவர்கள்; வீடிழந்து, உறவிழந்து, வாழ்விழந்து தங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பில்லாத பெரும் தவறுக்கு பலியாகி இன்று நிற…
-
- 0 replies
- 473 views
-
-
செம்மணி மனித புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்; அது மனிதபடுகொலை, யுத்த குற்றம் இடம்பெற்ற இடம், இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் Published By: Rajeeban 03 Aug, 2025 | 12:33 PM நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள் - இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம் - இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் கடந்தகால அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற 'வன்மம்" கிருஷாந்தி கு…
-
- 0 replies
- 176 views
- 1 follower
-
-
நூல் அறிமுகம்: விடியலைத் தேடி’ ஊடாக, செங்கை ஆழியானை நினைவுகூர்தல் ‘‘போரில் நீ வென்றால், அதை நீ விபரிக்க வேண்டியதில்லை; தோற்றால், அதை விபரிக்க நீ அங்கிருக்கக்கூடாது!’ இரண்டாம் உலகப் போருக்குத் தீ மூட்டியவரும், ஜேர்மன் சர்வாதிகாரியுமான அடொல்ஃப் ஹிற்லர்தான் இதைச் சொன்னவர். ‘2009 மே 18இல் முடிவுக்கு வந்த தமிழீழப் போரில் விடுதலைப் புலிகள் எப்படித் தோற்றுப் போயினர்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கக்கூடாது என்பதற்காகவே அவ்வமைப்பின் மூலவர்கள் பலரும் கூட்டாக உயிரிழந்தார்களோ என இக்கூற்று எண்ணத் தூண்டுகின்றதல்லவா? இதேவேளை, விடுதலைப் புலிகளின் தோல்வி குறித்து, போரியல் வல்லுனர்களும் அரசியல் ஆய்வாளர்களும் புதிய புதிய எடுகோள்களையும் அனுமானங்களையும் ஊகங்…
-
- 0 replies
- 822 views
-
-
Posted inBook Review கவிஞர் வாலி எழுதிய “நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)” – நூல் அறிமுகம் Posted byBookday02/07/2025No CommentsPosted inBook Review நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum) – நூல் அறிமுகம் என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி செய்தவருமான வாலி அவர்கள் எழுதிய தன்வரலாறு நூல் இது. “”நேர்க்கோடுகள் என்றும் ஓவியமாகா. குறுக்கும் நெடுக்குமாக மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது. வாழ்க்கையும் அப்படித்தான். ஏற்ற இறக்கங்களோடு எழுதப்பட்ட வரைபடமாக இருக்குமாயின் விமர்சனங்களுக்கு உள்ளாகும் அளவு அதற்கு ஒரு விலாசம் கிடைக்கிறது. தேங்…
-
- 0 replies
- 258 views
-
-
திசையறிந்து பயணித்த தூரிகை – அன்பாதவன் 113 Views நானும் எனது நிறமும் – ஓவியர் புகழேந்தியின் தன்வரலாறு நூல் குறித்து. தோழர்! தொடக்கத்திலே உங்கள் கரங்குலுக்கி தோளணைத்து வாழ்த்துகிறேன். வாழ்வின் கறுப்பு பிரதேசங்களையும் ஒளிர்ந்த காலங்களையும் மறைக்காமல் பதிவிட்டதற்காக வாழ்த்துக்கள் புகழேந்தி! ஒரு சாமான்யனின் தன் வரலாறு எவ்விதத்தில் வாசகனுக்கு உதவும்…? சுயசரிதையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்ற பல கேள்விகளோடு தான் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூலை வாசிக்கத்தொடங்கினேன். வாசித்து முடிக்கையில் தெளிந்தேன். இது கதையல்ல வரலாறு; சாதாரணன் ஒருவன் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் வாழ்வின் ஏற்ற …
-
- 0 replies
- 795 views
-
-
இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANTஎனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது. சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது. பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகை தரஇருப்ப…
-
- 0 replies
- 478 views
-
-
சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள். கதைசொல்லி இத்திரள் மத்தியில் இருந்து வருகிறவன். அவன் தப்பித்து வெளிநாட்டுக்கு செல்ல முயல்கிறவன். அங்கும் கடும் அரசியல் மற்றும் உளநெருக்கடியை சந்திக்கிறவன். சயந்தனின் நாயகன் வெளிநாட்டு மண்ணை அடைகிற போராட்டத்திலேயே உயிர்விட்டு விடுகிறான். ஷோபாசக்தியின் …
-
- 0 replies
- 773 views
-
-
வாசிப்பெனும் பாய்மரக்கப்பலில்.. 1. ஜீ.முருகனின் கதைகளை (’ஜீ.முருகன் சிறுகதைகள்') அண்மையில் வாசித்து முடித்திருந்தேன். இத்தொகுப்பில் 50 கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் ஜீ.முருகனின் ‘மரம்’ குறுநாவலைத் தற்செயலாகக் கண்டெடுத்து வாசித்ததுபோது வியப்பேற்பட்டது போலவே இப்போது முழுத்தொகுப்பாய் அவரின் கதைகளை வாசிக்கும்போதும் வசீகரிக்கின்றது. பெருந்தொகுப்புக்களின் முக்கிய சிக்கலென்பது வாசிப்பில் நம்மை ஏதோ ஒருவகையில் அலுப்படையச் செய்துவிடும். ஆகவேதான் எனக்குப் பிடித்த படைப்பாளிகளாயினும், அவர்களின் பெருந்தொகுப்புக்களை வாங்கிவிடவோ வாசிக்கவோ தயங்கிக்கொண்டிருப்பேன். ஆனால் ஜீ.முருகனின் இந்தத் தொகுப்பு அலுப்பே வராமல் என்னை வாசிக்கச் செய்திருந்தது. நமது சூழலில் …
-
- 0 replies
- 555 views
-
-
தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயு…
-
- 0 replies
- 547 views
-
-
ஊடகக் கறையான்கள் ஜெயமோகன் தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும்வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில்சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாமநோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையேஎழுதியிருக்கிறேன். சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாகஇருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும்அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறியவட்டத்திற்குள் புழங்கியவை. அவை வாசக அளவால் சிற்றிதழ்கள். அன்றையஅச்சுமுறையும், வினியோக அமைப்புகள் விரிவாக இ…
-
- 0 replies
- 853 views
-
-
இலக்கியவாதிகள், கவிஞர்களைப் பார்த்தால் எப்போதுமே பிரமிப்பு உண்டு. உடலை வில் போல வளைத்து ஜிம்னாசியம் செய்யும் வீராங்கனைகளைப் பார்ப்பது போல, நம்மால் இது முடியாது என்ற பிரமிப்பு எப்போதும் உண்டு. நாம் அன்றாடம் சாதாரணமாக பார்க்கும் காட்சிகளை இவர்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படும். நாளடைவில், இந்த இலக்கியவாதிகளின் உட்சண்டைகளும், அவர்களின் நடவடிக்கைகளும் முகம் சுளிக்க வைத்து, கவிதைகளை விட்டே காத தூரம் ஓட வைத்தன. யார்தான் இலக்கியவாதி, எதுதான் நல்ல கவிதை என்ற சந்தேகங்கள் படிப்பவனுக்கு, வாசகனுக்கு வரவேண்டும். ஆனால் எழுதுபவர்களுக்குளேயே அந்த சந்தேகமும் சண்டைகளும் வந்தால் ? வாசகன் எப்போதும் பரிதாபத்துக்கு உரியவன். 12 வயதில் தமிழ்வாணன் கதைகளும…
-
- 0 replies
- 1.2k views
-
-
“பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு 22 Views வரலாற்றாய்வாளர் அருணா செல்லத்துரையின் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையை தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூ…
-
- 0 replies
- 596 views
-
-
இரண்டாவது ஆப்பிள் டிஜிட்டல் கடவுள் ஸ்டிவ் யாப்ஸ் நின்று, வென்ற கதை "ஃபாதர்! ஏன் ஆண்டவன் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்யவில்லை? " "ஸ்டிவ் இது உனக்கு புரியாத விடயம்" "எனக்கு புரியாத விடயம் இனி வேண்டவே வேண்டாம்" இது தான் தத்துப்பிள்ளையான ஸ்டிவ் யாப்ஸ்! சீவாத தலைமுடி, ஒரு வாரமாக குளியல் பார்க்காத அழுக்கு உடல், ஆனால் பார்வையில் கூர்மை, வியப்பளிக்கும் அறிவு, மனதில் திமிர்! கஞ்சா, எல்.எஸ்.டி, ஹிப்பி வாழ்க்கை.இது தான் இளவயது ஸ்டிவ் யாப்ஸ். கல்லூரிபடிப்பை இடையில் நிறுத்தி பல ஆண்டுகள் ஆண்மீகத்தை தேடியவர். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கி முதலாவது வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து மூன்று தோல்விகள். திமிர் பிடித்த ஸ்டிவ் ஆப்பிள் நிறுவனத்திலிருந…
-
- 0 replies
- 705 views
-
-
நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன் காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி. வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்…
-
- 0 replies
- 786 views
-
-
மார்க்சியப் பார்வையில் அத்வைதம் விமர்சனம்.! இடதுசாரிகளிடையே தத்துவ விவாதங்கள் மிகமிகக் குறைவாக நடக்கின்ற இக்காலத்தில் தோழர் பி.இளங்கோ சுப்பிரமணியன் எழுதிய “மார்க்சியப் பார்வையில் அத்வைதம்” என்ற நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடங்கினால் தான் நிறைகுறையை அறிந்து நீக்கிக் கொள்ள முடியும். தோழர் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதத்தை இந்நூலில் விமர்சித்துள்ளார். அத்வைதம் ஒரு முன்னாள் தத்துவம். அது நவீன உலகின் தத்துவம் அல்ல (பக்கம் -47), என்பதே தோழரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்க நவீன உலகில் காணப்படும் தத்துவத்தை விடுத்து இந்த அத்வைதத்தை ஏன் எடுத்து விமர்சித்துள்ளார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. “பிரம்மம் ஒன்ற…
-
- 0 replies
- 910 views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல் [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:39 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது. இந்நூல் பற்றியதான அறிமுகம் Links International Journal of Socialist Renewal என்னும் தளத்தில் Chris Slee எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. « ஒரு நாடானது பௌதீக ரீதியான அழிவுகள், ஆட்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட அழிவுகள், மக்கள் ஒ…
-
- 0 replies
- 614 views
-
-
“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “இலங்கை மண்ணின் தோற்றோர்” எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. யேர்மன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசு, பொலிஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள குறித்த நூல் உலகின் பிரபல்யமான இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிரபல சிங்கள எழுத்தாளரான புண்ணியகாந்தி விஜயநாயக்கவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “காத்திருக்கும் பூமி” எனும் நூலினை விமர்சித்து எழுதப்பட்ட இந் நூல் சமூக முன்னேற்றத்திற்காக இலங்கை மக்கள் எதிர் கொண்ட தனிமனித மற்றும் சமூக பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இலங…
-
- 0 replies
- 444 views
-
-
ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா நிறைவை ஒட்டி, கொரிய அரசாங்கம், சாகித்ய அகாடமியின் பரிந்துரைகள் வழியாக இந்தியாவில் உள்ள எட்டு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு 'தாகூர் விருது’ வழங்கியது. அந்த எட்டு எழுத்தாளர்களில், நம் எஸ்.ராமகிருஷ் ணனும் ஒருவர். 'யாமம்’ நூலுக்காக விருது பெற்றுள்ள எஸ்.ரா, தென்னிந்திய மொழிகளில் தாகூர் விருது பெற்றுள்ள ஒரே எழுத்தாளர்! ''விருது பெற்ற மனநிலை குறித்தும் விருதுகளோடு எழும் சர்ச்சைகள் குறித்தும் சொல்லுங்களேன்?'' ''ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப் பவனுக்கு குளூகோஸ் தருவதைப்போலத் தான் இந்த விருதுகள். மேலும் ஓடத் தூண்டும் என்பதற்கான குளூகோஸே தவிர, 'ஓடியது போதும், ஓய்வெடுங்கள்’ என்பதற்கான சமிக்ஞை அல்ல விருதுகள். நூற்றாண்டுகளைக…
-
- 0 replies
- 1.1k views
-
-
தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’ ஜிஃப்ரி ஹாசன் July 1, 2023 முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் விற்பனையான நாவல்களின் பட்டியலில் பர்தாவுக்கும் ஓர் இடம் உருவாகி இருக்கிறது. இது தமிழ்ச் சூழலில் இந்நாவலின் பேசுப…
-
- 0 replies
- 338 views
-