Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்? – வள்ளி நிலவன் June 15, 2020 - வள்ளி நிலவன் · சமூகம் செய்திகள் நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிவிட்டார் எனச் சொல்லி ஓராண்டுக்கு முன் அவர் பேசிய பேச்சு தொடர்பாக இப்போது அவர் மீது புகார் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம். பல மாதங்களுக்கு முன் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ( சன்.டி.வி ) சாமி குளிக்கும்போது காட்டுறாங்க ஆனால், உடை மாற்றும்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று சொல்லி தற்போது அவருக்கு எதிராக திடீரென்று கொந்தளிக்கிறது ஒரு கூட்டம். சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோ…

  2. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?, அறிகுறிகளைக் கண்டறிவது, சிறுவர்கள், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எவ்வாறு செய்வது என்பதை அறிய முயற்சிப்போம். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது வெறும் கண்களைசுற்றியுள்ள காயத்தை மட்டும் பற்றியது அல்ல. உடல் ரீதியான துஷ்பிரயோகமும் அது விட்டுச்செல்லும் காயங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், அனைத்து சிறுவர் துஷ்பிரயோக அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவதில்லை. குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிப்பது, மேற்பார்வை செய்யப்படாத, ஆபத்தான சூழ்நிலைகளில் வைப்பது, பாலியல் சூழ்நிலைகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துவது அல்லது பயனற…

  3. அறம் போற்றுவது அவசியம் தொகுப்பு: என். கௌரி அறம் 2020' என்ற ஐந்து நாள் இணையவழிப் பயிற்சி வகுப்புகளை 'இந்து தமிழ் திசை' நாளிதழ், கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி, கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து தமிழ் திசை வாசகர்கள் என முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் கலந்துகொண்டார்கள். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பேச்சாளர்களுடைய உரையின் சுருக்கமான தொகுப்பு. மனிதம் போற்றுவோம் முனைவர். சொ. சுப்பையா, முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம் …

  4. முன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை நாம் நம்மை தாழ்வாக நினைக்கத்தொடங்கினால் அந்த எண்ணமானது நம் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் தொடர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன.ஆண், பெண் என்ற பேதம், முதலாளி, தொழிலாளி …

  5. முதியவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? மதுரை மாநகராட்சிப் பூங்கா. ஒரு மூதாட்டியும் அவருடைய நடுத்தர வயது இளைய மகனும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சோகம். இருவரும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மனைவி சொல்கேட்டு அம்மாவை மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டில் விடுவதற்காக அவன் வந்திருந்தான். வந்த இடத்தில்தான், அண்ணன் கொடைக்கானலுக்குக் குடிபோய்விட்டது தெரிகிறது. பழைய வீட்டிலிருந்தவர் அண்ணனின் தொலைபேசி எண்ணைத் தருகிறார்.தம்பி மொபைல் போனில் பேச, அண்ணன்காரன், “இங்கேயெல்லாம் அம்மாவைக் கொண்டு வந்து விட்டுவிடாதே...” என்கிறான். அம்மா, போனை வாங்கி அவனிடம் பேச, “இந்தப் பக்கம் வரவே வராதே” என்கிறான். இப்போது இருவரு…

  6. கொரோனா தனிமையில் பழைய காதலை நினைத்து உருகும் பெண்கள் தனிமை என்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த கொரோனா சொல்லி தந்து வாழ்க்கையின் பல கடினமான உண்மைகளை எதிர்கொள்ளச் செய்துள்ளது. இதனால் நிறைய மக்கள் நிறைய விஷயங்களை நினைத்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் சிலர் அவர்கள் வாழ்வில் கடந்து போன விஷயங்கள் குறித்து கனவும் கண்டு வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது சிலர் தங்கள் கடந்த கால காதலரை நினைத்து கனவு காண்பதாக ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது. அது எப்படி என்பதை இங்கே காண்போம். நீங்கள் தனிமைப்படுத்தலின் போது உங்கள் முன்னாள் காதலனைப் பற்றி கனவு காண்கிறீர்களா, காலையில் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு மனதிற்கு கஷ்டமாக தோன்றலாம். கடந்த காலம் உங்களுக்கு …

  7. கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ் கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை. இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில்…

  8. சிறப்புக் கட்டுரை: மனிதரிடம் கையேந்துகிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மின்னம்பலம் அ. குமரேசன் மனதைத் தொடும் மனிதநேயச் செயல்பாடுகள் தொடர்பான பல செய்திகள் கொரோனா காலத்தில் வருகின்றன. அத்தகைய ஒரு செய்தி மனதைத் தொட்டதுடன், சம்பந்தப்பட்டவரின் செயல்பாடு குறித்த விரிவான சிந்தனைக்கு இட்டுச் சென்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (66) என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கொரோனா தடுப்புப் பணிகளுக்காகப் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார். பலரும் நிதியுதவி செய்கிறார்கள், இதைவிடப் பெரிய தொகை வழங்குகிறார்கள் என்றாலும் இந்தச் செய்தி ஏன் மனதைத் தொடுகிறது என்றால், பாண்டி அந்தத் தொகையைப் பிச்சை எடுத்துத் திரட்டி வழங்கியிரு…

  9. நிறமிழக்கும் வண்ணங்கள் சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும். ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லா…

  10. அன்னையர் தினம் 2020: கொரோனாலாம் மறந்து அம்மாவை சந்தோஷப்படுத்தணுமா?... இப்படி செய்ங்க. இந்த உலகத்தில் அன்னையின் அன்புக்கு நிகர் யாருமே கிடையாது. அப்படிப்பட்ட அன்னையை போற்றும் வகையில் கொண்டாடுவது தான் அன்னையர் தினம். ஆனால் இந்த லாக்டவுன் சமயத்தில் வருகின்ற அன்னையர் தினத்தை எப்படி கொண்டாடுவது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் கவலைய விடுங்க. வீட்டுக்குள்ளேயே உங்க அன்னையை ஸ்பெஷலாக உணர வைக்க நாங்கள் சில ஐடியாக்களை தருகிறோம். நாம் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அம்மா என்ற உறவு தான் பக்கபலமாக இருந்திருப்பார். நமக்கு நல்ல குணநலன்களை கற்பிப்பதில் இருந்து நம்முடைய துயரங்களை துடைத்து நம் வாழ்க்கையை முன்னேற்றிய பெருமை அன்னையையே சாரும். அப்படிப்பட்ட…

  11. ஒரு அழகிய பெண், பேராசையினால் சொன்ன பொய்கள்... பாலியல் குற்றசாட்டு.. எப்படி ஒரு அப்பாவிக் குடும்பத்தினை பாதித்தது என்பது இந்த கதை. பார்க்கும் போதே, போலீசாரின் கவனயீனம்... அல்லது போலீஸ் அதிகாரிக்கும் அந்த பெண்ணுக்கும் வேறு தொடர்போ என்று நினைக்க வைக்கும். இறுதியில், ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் விசாரணையில், உண்மை வெளிவருகிறது.

    • 0 replies
    • 555 views
  12. பாலியல் ஆபாசப்படம் ஊரடங்கு காலத்தில் அதிகமாக பார்க்கப்படுவது ஏன்? இது ஆரோக்கியமானதா? விளக்கும் உளவியல் நிபுணர் அறவாழி இளம்பரிதி பிபிசி தமிழ் Getty Images இந்தியாவில் பொதுமுடக்கத்தின் நீட்சி பெரும்பான்மை மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதன் விளைவால் உண்டாகும் தனிமை, வீட்டிலே முடங்கி இருப்பதால் எழும் மனஅழுத்தம், மது கிடைக்காமால் அதனால் வெளிப்படும் ஆக்ரோஷம், அதிகரித்துவரும் சிறார் பாலியல் காணொளி நுகர்வு கலாசாரம், லூடோ பப்ஜி போன்ற இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் என மனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்திருக்கிறது கொரோனா வைரஸின் ஊரடங்கு காலம். ஒரு சராசரி மனிதன் இந்த பொதுமுடக்கத்தை வெற்றிகரமாக கடப்பது எப்படி என்பது க…

  13. யுவால் நோவா ஹராரி: கொரோனா வைரஸ் மரணம் குறித்த நமது அணுகுமுறையினை மாற்றுமா? April 23, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · மருத்துவம் வரலாறு கொரோனோ கொரோனா வைரஸ் மரணம் குறித்தபாரம்பரியமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளுக்கு நம்மைத் திருப்புமா, – அல்லது ஆயுளை நீட்டிப்பதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துமா? மனிதர்களால் மரணத்தை முறியடிக்கவும் தோற்கடிக்கவும் முடியும் என்ற நவீன கால நம்பிக்கைகளால் இந்த உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான அணுகுமுறை. நீண்டகால வரலாற்றின் பெரும்பகுதிவரை, மனிதர்கள் மரணத்திற்கு அமைதியாக அடிபணிந்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான மதங்களும் சித்தாந்தங்களும் நவீன யுகத்தின் பிற்பகுதி வரை, மரணத்தை தவிர்க்க ம…

  14. பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் ஆண்கள் அல்ல, சாதி மதப் பண்பாடுதான்! ஹைதராபாத் மருத்துவர் பிரியாங்காவின் வன்புணர்வுக் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் என்கவுண்ட்டரில் கொன்றிருக்கிறது காவல்துறை. பெண்ணைக் கலாச்சாரத்தின் குறியீடாகக் கருதுவதால் வன்புணர்வை அக்கலாச்சாரத்திற்கு உண்டாக்கப்பட்ட களங்கமாக மட்டுமே இச்சமூகம் கருதுகிறது. ஆனால் வன்புணர்வு என்பது கலாச்சாரக் களங்கமல்ல, அதுவும் வன்முறைதான். என்கவுண்ட்டர் என்பது நீதியல்ல, அதுவும் வன்முறைதான். ஏதோவொரு வகையில் எல்லோருமே வன்முறையின் ஆதரவாளர்களாக இருக்கும்போது, யாரோ ஒருசிலர் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறையையே தீர்வாக்கி, அப்படியான தீர்வுகளைக் கொண்டாடித் தீர்க்க…

  15. ஏன் வணக்கம் சொல்கின்றோம்? வணக்கம் என்றால் என்ன? (What is Vanakam in Tamil?) “வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம். வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில்…

    • 8 replies
    • 8.2k views
  16. கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது எமிலி கஸ்ரியெல் பிபிசி Getty Images கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்? எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள். காதுகளால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களை நம்மால் பார்க்க முடியாதபோது, நிறைய விடியோ கால்கள் செய்யும்சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் காட்சிக் குறிப்புகள் இல்லாமல் உரையாடும்போத…

  17. கொரோனா வைரஸ்: சுய இன்ப பழக்கம் கோவிட் 19 வராமல் தடுக்குமா? - விரிவான தகவல்கள் வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர். அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் ‘அறிவுரைகள்’ செய்யப்பட்டிருந்தது. விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல ‘அற்புத சுகமளிக்கும்’ மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்ட…

    • 6 replies
    • 1.1k views
  18. கொரோனா உருவாக்கும் குடும்ப முரண்பாடுகள் இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கும் கொரோனா வைரஸினால் எல்லோரும் போலவே நாங்களும் அச்சத்திலும் பயத்திலும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்த கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினை, அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான பிரச்சினை. அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை புத்தஜீவிகள், மருத்துவர்கள், துறைசார்ந்தவர்கள் மிக அருமையான வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் மற்றொரு மறைவான பிரச்சினை. இது வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு பிரச்சினை. அதுதான இன்றைய இக்கட்டான சூழலில் குடும்பங்களில் புதிதாகத் தோன்றியுள்ள பிரச்சினை அல்லது முரண்பாடு. …

  19. கொரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த மூட நம்பிக்கைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்? டேவிட் ரொப்சன் பிபிசி செய்தியாளர் Getty Images எந்தவொரு நோய்த் தொற்று பரவினாலும் அதுபற்றிய தவறான தகவல்களும் பரவுகின்றன என்பது வருத்தமான உண்மை. 1980கள், 90கள், 2000வது ஆண்டுகளில் எய்ட்ஸ் பற்றி அபாயகரமான பொய்களை நாம் பார்த்திருக்கிறோம். எச்.ஐ.வி. வைரஸ் என்பது அரசு மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, எச்.ஐ.வி. பரிசோதனைகள் நம்பகத்தன்மை அற்றவை என்பது வரை தகவல்கள் பரவின. வெள்ளாட்டுப் பாலின் மூலம் அதைக் குணப்படுத்த முடியும் என்று ஆதாரமற்ற தகவலும்கூட பரவியது. இதுபோன்ற தகவல்கள், மக்களிடம் ஆபத்தான போக்குகள் அதிகரித்து, நெருக்கடியை தீவிரப்படுத்தின. …

  20. கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்" மேகா மோகன் பிபிசி உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் …

  21. கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா `லாக் டவுணி'ல் இருக்கும் இந்த நேரத்தில் கிடைத்திருக்கும் ஒரு தரவு, அதிர்ச்சியளிக்கிறது. ஊரடங்கு அமலில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, ``நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் இந்த ஊரடங்குத் தடைக்காலத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவாக நாங்கள் பெண்களிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலமாகத்தான் புகார்களைப் பெறுகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். மார்ச் மாதத்தின்…

    • 15 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.