Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஏன் வணக்கம் சொல்கின்றோம்? வணக்கம் என்றால் என்ன? (What is Vanakam in Tamil?) “வணக்கம்” என்ற சொல் தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் இனக்காட்டுகின்ற அரிய கருவூலமாய் உள்ளது. வணக்கம் என்ற சொல் நம் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சுட்டுகின்ற; காக்கின்றதோடு மட்டுமல்லாமல் உயரிய ஆன்மீகச் சிந்தனையையும் தன்னிடத்தே அடக்கியுள்ளதென்பதை இனி சிந்திப்போம். வணக்கம் என்பதைச் சிலர் ஆங்கிலத்தில் “குட் மோர்னிங்” அல்லது தேசிய மொழியில் “சிலாமாட் பாகி” என்று சுட்டுவது போன்று எண்ணுகிறார்கள். இது தவறு. “குட் மோர்னிங்” என்றால் நல்ல காலைப்பொழுதாகட்டும் என்று விளிப்பது. “சிலாமாட் பாகி” என்றால் நல்ல பாதுகாப்பான நலமான பொழுதாக அமையட்டும் என்று பொருள்படும். ஆனால் வணக்கம் என்கின்றபோது. உங்கள் உயிரில்…

    • 8 replies
    • 8.9k views
  2. யுவால் நோவா ஹராரி: கொரோனா வைரஸ் மரணம் குறித்த நமது அணுகுமுறையினை மாற்றுமா? April 23, 2020 - கோகுல கிருஷ்ணன் கந்தசாமி · மருத்துவம் வரலாறு கொரோனோ கொரோனா வைரஸ் மரணம் குறித்தபாரம்பரியமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளுக்கு நம்மைத் திருப்புமா, – அல்லது ஆயுளை நீட்டிப்பதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துமா? மனிதர்களால் மரணத்தை முறியடிக்கவும் தோற்கடிக்கவும் முடியும் என்ற நவீன கால நம்பிக்கைகளால் இந்த உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான அணுகுமுறை. நீண்டகால வரலாற்றின் பெரும்பகுதிவரை, மனிதர்கள் மரணத்திற்கு அமைதியாக அடிபணிந்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான மதங்களும் சித்தாந்தங்களும் நவீன யுகத்தின் பிற்பகுதி வரை, மரணத்தை தவிர்க்க ம…

  3. பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் ஆண்கள் அல்ல, சாதி மதப் பண்பாடுதான்! ஹைதராபாத் மருத்துவர் பிரியாங்காவின் வன்புணர்வுக் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் என்கவுண்ட்டரில் கொன்றிருக்கிறது காவல்துறை. பெண்ணைக் கலாச்சாரத்தின் குறியீடாகக் கருதுவதால் வன்புணர்வை அக்கலாச்சாரத்திற்கு உண்டாக்கப்பட்ட களங்கமாக மட்டுமே இச்சமூகம் கருதுகிறது. ஆனால் வன்புணர்வு என்பது கலாச்சாரக் களங்கமல்ல, அதுவும் வன்முறைதான். என்கவுண்ட்டர் என்பது நீதியல்ல, அதுவும் வன்முறைதான். ஏதோவொரு வகையில் எல்லோருமே வன்முறையின் ஆதரவாளர்களாக இருக்கும்போது, யாரோ ஒருசிலர் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறையையே தீர்வாக்கி, அப்படியான தீர்வுகளைக் கொண்டாடித் தீர்க்க…

  4. தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி March 5, 2020 - யாழி · சமூகம் செய்திகள் கட்டுரை இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும். கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில க…

  5. கொரோனா வைரஸ்: உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது எமிலி கஸ்ரியெல் பிபிசி Getty Images கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்? எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள். காதுகளால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களை நம்மால் பார்க்க முடியாதபோது, நிறைய விடியோ கால்கள் செய்யும்சூழ்நிலைகள் ஏற்படலாம். ஆனால் காட்சிக் குறிப்புகள் இல்லாமல் உரையாடும்போத…

  6. கொரோனா வைரஸ்: சுய இன்ப பழக்கம் கோவிட் 19 வராமல் தடுக்குமா? - விரிவான தகவல்கள் வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர். அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் ‘அறிவுரைகள்’ செய்யப்பட்டிருந்தது. விக்ஸ் மட்டுமல்ல, விக்சுக்குப் போட்டியாக பல ‘அற்புத சுகமளிக்கும்’ மருந்துகள் சந்தையில் தோன்றி வியாபாரம் செய்யத் தொடங்கின. மில்லர்ஸ் ஆன்டிசெப்ட…

    • 6 replies
    • 1.1k views
  7. கொரோனா உருவாக்கும் குடும்ப முரண்பாடுகள் இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கும் கொரோனா வைரஸினால் எல்லோரும் போலவே நாங்களும் அச்சத்திலும் பயத்திலும் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்த கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினை, அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான பிரச்சினை. அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை புத்தஜீவிகள், மருத்துவர்கள், துறைசார்ந்தவர்கள் மிக அருமையான வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் மற்றொரு மறைவான பிரச்சினை. இது வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு பிரச்சினை. அதுதான இன்றைய இக்கட்டான சூழலில் குடும்பங்களில் புதிதாகத் தோன்றியுள்ள பிரச்சினை அல்லது முரண்பாடு. …

  8. கொரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த மூட நம்பிக்கைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்? டேவிட் ரொப்சன் பிபிசி செய்தியாளர் Getty Images எந்தவொரு நோய்த் தொற்று பரவினாலும் அதுபற்றிய தவறான தகவல்களும் பரவுகின்றன என்பது வருத்தமான உண்மை. 1980கள், 90கள், 2000வது ஆண்டுகளில் எய்ட்ஸ் பற்றி அபாயகரமான பொய்களை நாம் பார்த்திருக்கிறோம். எச்.ஐ.வி. வைரஸ் என்பது அரசு மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, எச்.ஐ.வி. பரிசோதனைகள் நம்பகத்தன்மை அற்றவை என்பது வரை தகவல்கள் பரவின. வெள்ளாட்டுப் பாலின் மூலம் அதைக் குணப்படுத்த முடியும் என்று ஆதாரமற்ற தகவலும்கூட பரவியது. இதுபோன்ற தகவல்கள், மக்களிடம் ஆபத்தான போக்குகள் அதிகரித்து, நெருக்கடியை தீவிரப்படுத்தின. …

  9. கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்" மேகா மோகன் பிபிசி உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் …

  10. கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா `லாக் டவுணி'ல் இருக்கும் இந்த நேரத்தில் கிடைத்திருக்கும் ஒரு தரவு, அதிர்ச்சியளிக்கிறது. ஊரடங்கு அமலில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, ``நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் இந்த ஊரடங்குத் தடைக்காலத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவாக நாங்கள் பெண்களிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலமாகத்தான் புகார்களைப் பெறுகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். மார்ச் மாதத்தின்…

    • 15 replies
    • 1.5k views
  11. எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்…

  12. கோவிட் 19 : யாரின் உயிரை காப்பாற்றுவது ? சில நாடுகள், குறிப்பாக இன்னும் மோசமாக பாதிக்கப்படாத, ஆனால் பாதிக்கப்படுவோம் என எண்ணும் நாடுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி. வேகமாகாப்பரவி கோவிட் 19 தொற்று பரவி வரும்பொழுது பல நாடுகளில் உயிர்கள் காவு கொல்லப்படுகின்றன. அவ்வாறு நடந்த நாடுகளில், வைத்தியர்கள் அறிந்து கொண்ட ஒன்று : எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவரை சுவாசிக்க உதவவும் இயந்திரத்துடன் ( வெண்டிலேட்டர் ) இணைக்கின்றோமோ அவ்வளவிற்கு அவர் உயிர் தப்பாது சாத்தியங்கள் அதிகம் என்பதே. ஆனால், சுவாசிக்க உதவவும் இயந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைகளில் உள்ளன. பொதுவாக இவை அவசர சிகிச்சை பிரிவுகளில் இருக்கும். நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடையே, ம…

  13. தேனி மாவட்டம் முழுவதும் 16 மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்க் மற்றும் ஹேண்ட் வாஸ் லிக்விட் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக அவற்றைத் தயாரிக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் முழுவதும் 16 மகளிர் சுய உதவி குழுக்கள், மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி வளாகத்தில், செயல்பட்டுவரும் சர்வோதீப் மகளிர் சுய உதவி குழுவினரைச் சந்திக்க நாம் சென்றிருந்தோம். 22 பெண்கள் மாஸ்க் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்குழுவி…

    • 0 replies
    • 530 views
  14. தற்கொலை அல்ல விடை Depressed minds ! Difficult to handle failure !"Suicide" - Not the Answer !Depression is a serious disease !Let's openly talk about Mental HealthThank you Young friends of Kopay College of Education, Jaffna Sri Lanka March 6, 2020 by Dr V.

    • 0 replies
    • 379 views
  15. எச்.எம்.எம்.பர்ஸான் வெளியில் சென்று வந்த கணவன், வீட்டுக்குள் வரும் போது கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியிலுள்ள நபரொருவர், வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் கைகளைக் கழுவுமாறும் அறிவுறுத்துதல்கள் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு…

    • 0 replies
    • 734 views
  16. தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள் கடலூர் வாசு மார்ச் 9, 2020 Dr. கடலூர் வாசு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்: என் மனைவியின் பெரியன்னை, 70 வயதானவர், எங்களுடன் சந்தோஷமாக சில வாரங்கள் தங்கியிருந்த சமயம். ஒரு நாள் காலை, அவரது மகன், தன் மனைவி வேலைக்குச் சென்ற பின், பிள்ளையை பள்ளியில் கொண்டுவிட்ட பின், வீட்டு உத்தரத்தில் கயிற்றைக் கட்டி கழுத்தில் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சி மிக்க செய்தி வந்தது. பெரியன்னையிடம் அதை சொல்லாமல் உடனே ஊருக்கு அனுப்பி வைத்தோம். சில நாட்கள் கழித்து துக்கம் விசாரிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, “சந்தோஷமா இருந்த என்னை இந்த கண்றாவியை பார்க்கணும் என்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் அனுப்பி வைத்தாயா?” என்ற…

  17. கோவையில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, சர்வதேச நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய பட்டதாரி ஒருவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார். கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியாளர் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பி.இ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் நடத்தப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சமீபத்தில் 321 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகளில், எம்.பி.ஏ. படித்த சையத் முக்தார் அகமது என்பவரும் ஒருவர். கோவையை சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் எம…

    • 0 replies
    • 598 views
  18. முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. ‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்! இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவு…

    • 4 replies
    • 1.2k views
  19. Started by கிருபன்,

    மரண பீதி வா. மணிகண்டன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பீதி பெரும்பீதியாக இருக்கிறது. யாருக்கும் ஃபோன் கூட செய்ய முடிவதில்லை. காதுக்குள்ளேயே இருமுகிறார்கள். திரைப்படம் பார்க்கும் போது ‘புற்றுநோய் விளம்பரம்’ வந்தால் காதுகளைப் பொத்திக் கொள்வேன். ஏதேனும் மருத்துவமனை அந்நோய்க்கு விளம்பர பதாகை வைத்திருந்தால் முடிந்தவரை கவனத்தை திசை மாற்றிக் கொள்வேன். அந்தச் சொல்லே ஒருவிதமான அச்ச உணர்வை உருவாக்கிவிடுகிறது. பொதுவாகவே எந்த நோய் குறித்தும் விழிப்புணர்வு இருந்தால் போதும்; பயம் அவசியமில்லை என்ற எண்ணம் உண்டு. ஆனால் நாம் வாழ்கிற கால, இடச் சூழல்கள் பயத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கின்றன. கொரானோவும் அதை இம்மிபிசகாமல் செ…

    • 1 reply
    • 781 views
  20. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தி ஆகியவற்றின் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்களின் குரலுக்கு வலுவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியும் புத்தாக்கமான சமூக அபிவிருத்தி மய்யத்துடன் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்ரீ லங்கா இணைந்து ‘Transforming communities: Voices and Choices of Women and Girls’ எனும் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. புத்தாக்கமான சமூக அபிவிருத்தி மய்யத்தின் சமிதா சுகதிமாலாவால் ‘Transforming communities: Voices and Choices of Women and Girls’ எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் இந்தப் பிரசுரம் அமைந்துள்ளது. தமது சமூக அங்கத்தவர்களுடன் தலைவர்களாகப் பெண்கள், மகளிருக்குத் தமது அனுபவங்களைப் பகிர்ந…

    • 0 replies
    • 353 views
  21. சமோசா விக்கிறவன் வருஷ வருமானம் 80 லட்ச ரூபாய். எந்த வேலையும் கொறஞ்சது இல்ல.வழக்கறிஞர் சுமதி அவர்கள் மாணவர்கள் மத்தியில் அரங்கம் அதிரும் அட்டகாசமான பேச்சு.

    • 0 replies
    • 586 views
  22. நண்பன் சொன்ன காதல் கதைகளை நம்பி, ஒரு தலையாக காதலித்த பெண்ணை கடத்திவர சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சேர் ஆட்டோவில் சென்ற நாடக காதல் கும்பலை சேர்ந்த கூட்டாளியை பிடித்து பொதுமக்கள் நையப்புடைத்தனர். மனம் கொத்திப்பறவை சினிமாவில் நாயகனின் ஒரு தலை காதலுக்கு உதவி செய்ய போன கூட்டாளிகளை பெண்ணின் உறவினர்கள் நையப்புடைப்பார்கள்..! இதே பாணியிலான ஒரு சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறி உள்ளது. நாமக்கல் அடுத்த தூசூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்துவருகிறார். இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மா பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுனர் அந்த …

    • 0 replies
    • 417 views
  23. பெண்ணிற் பெருந்தக்க யாவுள ! - சுப. சோமசுந்தரம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எத்துணையோ நல்ல விடயங்கள் அமைவதுண்டு. பொதுவாக நாம் அமையாதவற்றை நினைந்து ஏங்குவதும், அவற்றின் தேடலுக்கான முயற்சிகளில் இறங்குவதுமாக எப்போதும் எதையாவது விரட்டிக் கொண்டே வாழ்வைத் தொலைப்போம். இந்த விரட்டுதலை நியாயப்படுத்த ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை என்று நம்மில் சிலர் வள்ளுவனை வேறு துணைக்கு அழைப்பதுண்டு. இவ்வாறெல்லாம் இவற்றைப் பயன்படுத்துவோம் என்று தெரிந்திருந்தால் வள்ளுவன் இவ்வதிகாரங்களை அமைத்தே இருக்க மாட்டானோ, என்னவோ ! எனது இந்த பீடிகையைப் பார்த்து நான் ஏதோ பெட்ரன்ட் ரஸலைப் பின்பற்றி ‘சோம்பலுக்குப் புகழ்மாலை’ (‘In Praise of Idleness’ by Bertrand Russell) பாடப்…

  24. இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர். பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய இரண்டு காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியில் இருந்து விலகினார். இதனை …

    • 4 replies
    • 615 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.