சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
"Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம். நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும் எட்டுத்துக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும் உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழத வேண்டும் சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி வாழ்த்துக்கிறோம் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்தநாள் வாழ்த்துகள் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் …
-
- 0 replies
- 681 views
-
-
'கசக்கும்' காதலை பிரித்து வைக்க கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். "உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவிப்பதற்கு பதிலாக இன்னொருவர் அனுபவிப்பது எளிமையாக இருக்கும் என்று நினைத்தேன்," என்கிறார், ட்ரெவர் மெயர்ஸ் என்ற அந்த இளைஞர். அது எப்படி? உறவுகளை முறிப்பதற்கென்றே ஒரு நிறுவனம் இருக்கிறது. ஆங்கிலத்தில், `The Breakup Shop' என்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லைய…
-
- 0 replies
- 622 views
-
-
உணவுப் பற்றாக்குறை என்பது இந்தியத் துணைக்கண்டத்திற்கு பழகிப்போன ஒன்று. சுதந்திர இந்தியாவில் கடந்த 63 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு முழக்கம் கேட்டுக் கொண்டு-தானிருக்கிறது. அரசுகள் முயன்று-கொண்டிருப்-பதாகச் சொல்கின்றன.உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.உணவுப் பொருள் களை இறக்குமதி செய்கின்றன.மானியங்கள் அளிக்கின்றன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க,மக்கள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்? உணவுத் தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? _ எனபன பற்றியெல்லாம் சிந்தித்தால் அது பூச்சியம்தான். தனிமனிதருக்கே சிக்கனம் பற்றிய சிந்தனை இல்லை.எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணமும், அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையில் தான் இருக்-கிறார்கள…
-
- 0 replies
- 887 views
-
-
சிலாபம் திண்ணனூரான் இவரின் வயது பத்தொன்பது தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வசிக்கும் ஜே.எம். ரிகாஸ் ஒரு மாற்றுத் திறனாளி. இவரின் பேச்சு மழலைபேச்சாக இருக்கும் பளிச்சென பிரகாசிக்கும் கொண்ட முகம். எந்தநேரமும் கள்ளம்கபடமற்ற சிரிப்பு அவரின் முகத்தை கௌவிக்கொண்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏனைய குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாடியவர் இவர். ஆனால், தனது ஐந்து வயதில் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற தருணத்தில் இவரின் உடலினுள் செலுத்தப்பட்ட ஊசிமருந்த ஒவ்வாமையினால் இவரின் உடலின் சில தாக்கங்களுக்குள்ளானது. அதன் பாதிப்பு இவரின் உடல் வளர்ச்சியை தடை செய்தது இன்று இவரின் முழு உயரம் மூன்று அடிகளும் இரண்டு அங்குலமேயாகும். நடக்க இயலாது. முள்ளந்தண்டு முற்று முழுதாக பழுதாகிவிட்ட நி…
-
- 0 replies
- 986 views
-
-
காதலையும் காமத்தையும் ஆண் மனம் குழப்பிக் கொள்வது ஏன்? ஆதி உண்மை இது. எப்போதும் ஆண் வேறு, பெண் வேறு. அவர்களின் உடல், மனம் எல்லாம் வேறு. ஒரே ஒற்றுமை... இருவரும் மனித இனம் அவ்வளவுதான். ஆண்களுக்கு வேட்டை குணம் உண்டு. இரை கிடைக்கும் வரை அந்த இரையைத் துரத்திப் பிடிப்பது இயற்கை. சில சமயம் அந்த இரையாக பெண்களைக் கருதிவிடுவதும் நடக்கும். சுவாரசியமான இந்த விளையாட்டில் ஆண், பெண்ணை வீழ்த்தியவுடன் அவளைத் தன்னுடையவள் என்று கருத ஆரம்பிக்கிறான். எனவே அவள் மீது ஓர் அலட்சியம் ஏற்படுகிறது. சொந்தம் கொண்டாடும் ஒரு வேட்கையில் அதிகாரமும் வரலாம். பெண், தான் வேட்டையாடப்படும்வரை மிக அதிகாரம் மிக்கவளாக, உறவைத் தன் கையில் வைத்திருப்பவளாக, தான் சொல்லும் செயலை தன…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பெரிய தோல்விகளை சந்தித்தவர்கள்
-
- 0 replies
- 406 views
-
-
மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்காக மட்டுமே சூர்யா பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்கச் செவேள் என ஜொலிக்கிறார்கள். அவர்களை புதிதாக பார்க்கும் யாரும், “இவர்கள் இந்தப்பகுதி மக்கள் இல்லை போல” என்று கேட்கும் அளவுக்கு தனித்துக் காணப்படுகிறார்கள். வெயில் படாத அந்த வெள்ளைத் தோல் வேந்தர்களைப் பற்றி சற…
-
- 0 replies
- 914 views
-
-
பொறுமை கடலினும் பெரிது. பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின். ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்ற…
-
- 0 replies
- 742 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் யாஸ்மின் ரூஃபோ பிபிசி நியூஸ் 18 நவம்பர் 2025 நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை. இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் - உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது. இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது மற்றும் வளர்ந்த குழங்தைகளின் சுய மரியாதையை குறைப்பது எனப் பல வழிகளில் குழந்தைகளையும் பாதிக்கலாம். சுயக்கட…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
மன அழுத்தத்தை வெற்றி கொள்வோம் 38 Views நவீன உலகில் அனைவரும் வேகமான வாழ்வைத்தான் வாழ்ந்து வருகின்றோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. இதன் விளைவாக மன அழுத்தத்திற்கு உட்படுகின்றோம். மன அழுத்தம் ஒரு நோய். இன்றைய காலகட்டத்தில் நாளிதழ்களில்அதைப் பற்றிய செய்திகளை நாம் பார்க்கின்றோம். உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம் தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் போன்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய் ஆகும். நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மன ரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல் மற்றும் இரசாயன அல்லது மனவியல் காரணகளை …
-
- 0 replies
- 623 views
-
-
படித்ததும் பகிர்ந்ததும் -வீணா -32 பிராங்கிளின் ரூஸ்வெல்ட் - வரலாற்று நாயகர்! 1933-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் நாள் ஒரு தேசமே விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காலகட்டம், எந்த திசை நோக்கினாலும் அங்கு அச்சம் ஆட்கொண்டிருந்தது. உலக வரலாறு 'Great Depression' எனப்படும் மாபெரும் பொருளியல் மந்தத்தின் அடிமட்டத்தை தொட்டிருந்த நேரம் அது. அமெரிக்காவில் பதின்மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்தனர். தொழிற்துறை உற்பத்தி பாதியாக குறைந்திருந்தது. பண்ணைகளும், வியாபாரங்களும் நொடித்துப் போயிருந்தன. மில்லியன் கணக்காணோர் வறுமைகோட்டைத் தாண்டி பசிகொடுமைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டு மில்லியன் பேர் தங்க வீடின்றி…
-
- 0 replies
- 641 views
-
-
சிறப்புக் கட்டுரை: ஹேப்பி பொங்கல்... யாருக்கு ஃபிரெண்ட்ஸ்? மின்னம்பலம் கப்பிகுளம் ஜெ.பிரபாகர் தை பிறந்தால் வழி பிறக்கும், பொங்கலோ பொங்கல் என்பதெல்லாம் சற்றே வளர்ந்து இன்று, ஹேப்பி பொங்கல் ஃபிரெண்ட்ஸ் என்ற நிலையை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாள். ஆடிப் பட்டம் தேடி விதைச்ச உழவர் குடிகள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்று ஆறு மாத காலம் வேளாண் நிலங்களில் உழைத்து, அறுவடை செய்து, தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி செலுத்துகின்ற திருநாள். அதுதான் தமிழர் திருவிழா. மழையோடு ஒன்று கலந்த வாழ்க்கைதான் தமிழர்களின் வாழ்வியல். கோடையில் பொன்னேர் பூட்டுதல், பங்குனி உத்திரத்தில் சாஸ்தா எனும் குலதெய்வ…
-
- 0 replies
- 972 views
-
-
கொரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த மூட நம்பிக்கைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள்? டேவிட் ரொப்சன் பிபிசி செய்தியாளர் Getty Images எந்தவொரு நோய்த் தொற்று பரவினாலும் அதுபற்றிய தவறான தகவல்களும் பரவுகின்றன என்பது வருத்தமான உண்மை. 1980கள், 90கள், 2000வது ஆண்டுகளில் எய்ட்ஸ் பற்றி அபாயகரமான பொய்களை நாம் பார்த்திருக்கிறோம். எச்.ஐ.வி. வைரஸ் என்பது அரசு மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, எச்.ஐ.வி. பரிசோதனைகள் நம்பகத்தன்மை அற்றவை என்பது வரை தகவல்கள் பரவின. வெள்ளாட்டுப் பாலின் மூலம் அதைக் குணப்படுத்த முடியும் என்று ஆதாரமற்ற தகவலும்கூட பரவியது. இதுபோன்ற தகவல்கள், மக்களிடம் ஆபத்தான போக்குகள் அதிகரித்து, நெருக்கடியை தீவிரப்படுத்தின. …
-
- 0 replies
- 464 views
-
-
அறிவியல் வளர்சசியின் ஒரு பரிணாமே தகவல் தொழில்நுட்ப வளர்சசியாகும். அதன் மூலம் உண்டான வசதியான சமூகவலைத்தளங்களைப் பாவித்து போலி அறிவியலை பேசி மக்களை ஏமாற்றுவோரும், அதை அப்படியே ஆராயாமல் நம்பிவிடும் பேதைகளும் தற்போதைய காலத்தில் அதிகரித்து வருகிறனர். சமூக வலைத்தளங்கள் உருவாக முன்பே கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன்பு தேசபக்தி என்ற பெயரால் முப்பாட்டன் அறிவியல் என்று போலி அறிவியலை அறிமுகப்படுத்தியதால் சோவியத் மக்கள் அடைந்த இன்னலகளை இந்த காணொலி விளக்குகிறது
-
- 0 replies
- 838 views
-
-
"முதுமையில் தனிமை" / பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்பு கின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ?மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்…
-
- 0 replies
- 560 views
-
-
எதற்கெடுத்தாலும் செல்பிதான். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரின் பழக்க தோஷம் ஆகிவிட்டது இது. அதிலும் புது பைக் வாங்கினால், புது கார் வாங்கினால் உடனே பேஸ்புக்கில் செல்பி எடுத்து போட்டு லைக் அள்ளுகின்றனர். டூர் போனால் அலப்பறை தாங்க முடியாது. அதிலும் பாரின் டூர் என்றால் கேட்கவே வேண்டாம். தொடர்ச்சியாக செல்பி எடுத்து பேஸ்புக், இன்ட்ராகிராம், ட்விட்டர் என தங்கள் வலை தள பக்கங்களில் பதிவேற்றம் செய்து மொத்தமாக போட்டாவால் நிரப்பி விடுவார்கள். இப்படி, சமூக வலைதளங்களில் செல்பி எடுத்து போடுவதை வருமான வரித்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்ற தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வகையாக தகவல் திரட்டி, வ…
-
- 0 replies
- 644 views
-
-
கிளாரிந்தா என்கிற கோகிலா. தமிழின் முன்னோடி எழுத்தாளர் அ.மாதவையா நினைவு தினம்.... 22..அக்டோபர்...🌷💐🌷 மீள்பதிவு : 1915 ல் மாதவையா ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று நாவல் ‘ கிளாரிந்தா’.... . பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணைப் பற்றியது. அதை மையமாக வைத்து 2002- ல் ’பெண்ணே நீ” இதழில் தோழர் பா.ஜீவசுந்தரி அவர்கள் எழுதிய கட்டுரை. எந்த ஒரு தனி நபரின் சாதனையும் அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல் , பொருளாதாரப் பின்னணிகளோடு கலந்தே உருவாகியுள்ளது. அந்த சாதனைக்குரியவர் ஒரு பெண்ணாக இருந்தால் சிலுவையில் அறையப்படுவதை விட கொடுமையான துன்பங்களை அவள் அனுபவித்தாக வேண்டும். வெகுவாக முன்னேறி விட்டதாகக் கூறும் 21-ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் படும் பாடு சொல்லிக் கொள்ளும…
-
- 0 replies
- 2.3k views
-
-
குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன? ஷிரோமா சில்வா, தாலியா பிராங்கோ 20 அக்டோபர் 2020 இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்…
-
- 0 replies
- 570 views
-
-
இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா? அதிகாரப் பரவலாக்கமில்லாத, மிகவும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் ஒரு சமுதாயத்திலேயே, நாம் வாழ்கின்றோம். இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கும் அதிகாரப் பரவலாக்கமில்லாத ஒரு சமுதாயத்துக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக, பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது என்றால் அது மிகையாகாது. பாலின சமத்துவம், மனித உரிமைகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. “எங்களுடைய பாடசாலையில், ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் இணைந்தே கல்வி கற்கின்றனர். ஆனால், கூடவே படிக்கும் மாணவிகள் நேருக்கு நேர் வந்தால் கூட, எம்முடைய மாணவர்கள் அவர்களைப் பார்க்கவோ, பேசவோ மாட்டார்கள், அவ்வளவு நல்ல பிள்ளைகள்” என்று, சில ஆ…
-
- 0 replies
- 310 views
-
-
"முதுமையில் தனிமை" / பகுதி: 02 முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் நேரத்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கிறது. தனிமையில் வாழ்வது, அவர் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப் பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். மற்றது எவ்வளவு அடிக்கடி முதியோர்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடு படுகிறார்கள் என்பதும் ஆகும். பொதுவாக, வயது போகப் போக சமூக தொடர்புகள் குறைய தொடங்கு கின்றன. உதாரணமாக வேலையில் இருந்து ஓய்வு பெறுதல், நெருங்…
-
- 0 replies
- 643 views
-
-
திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள். Image captionதிருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல். விளம்பரம் திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்திய…
-
- 0 replies
- 1.8k views
-
-
"முதுமையில் தனிமை" / பகுதி: 03 பகுதி 02 இல் நாம் முக்கியமான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 , பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படியென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பத…
-
- 0 replies
- 608 views
-
-
மதத்தில் இருந்து கற்பு, ஆடை என்று தன்னை தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கவைப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று சானியா மிர்சா அறிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் அவர் முடிவு சரியானதே என்று நிச்சயம் கூறுவார்கள். முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளனர். லியாண்டர் பயஸ் கூட சானியா மிர்சா புகழினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் அமிர்தராஜ் "எங்களது காலத்தில் இந்தியாவில் விளையாடுவது என்பது ஒரு பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார். முன்னாள் டேவிஸ் கோப்பை இந்திய டென்னிஸ் அணித் தலைவர் அக்தர் அலி மட்டுமே ச…
-
- 0 replies
- 1k views
-
-
இப்போது சாதனைகள் என்று கூறப்படும் எல்லாமும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நகைச்சுவையாகவே தெரிகின்றன. சிலர் கிலோ கணக்கில் பச்சை மிளகாய் உண்கிறார்கள். ஏன் உண்ண வேண்டும்? அதனால் என்ன பயன்? கண்கள் எரிய எரிய, ஆனால், பார்வையாளர்களிடம் சிரித்துக் கொண்டே… அடடா. ஏனப்பா இந்த வேலை? அப்புறம், முகத்தில் ஓர் இடம் பாக்கியில்லாமல் ”கிளிப்பை’ மாட்டிக் கொள்கிறார்கள். அதிக ”கிளிப்’ மாட்டிக் கொண்டவர் சாதனை படைத்தவராம். முந்தைய உலக சாதனையை முறியடிக்கிறார்களாம். ஏதாவதொரு பொருளை விழாமல் இறுகப் பற்றி வைக்கப் பயன்படும் ”கிளிப்’பை முகம் முழுவதும் மாட்டிக் கொள்வதால் பயன் என்னவோ? குடிக்கப் பயன்படும் உறிஞ்சியை (ஸ்டிரா) நூற்றுக்கணக்கில் ஒட்டுமொத்தமாக வாயில் திணித்துக் கொள்கிறார்கள். கிட…
-
- 0 replies
- 601 views
-
-
சென்னையில் வசிக்கின்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையிருந்தும், சொந்தமாக வீடு இல்லாததால், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகின்றது. 30 வயதை எட்டிப்பிடிக்க இருக்கும் நிலையில் பெண் வீட்டாரின் நிபந்தனைகளால் விழிபிதுங்கி நிற்கும் "நைண்டீஸ் கிட்ஸ்"களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி... திருமணம்.. பெற்றோர் ஆசியுடன் இருமனம் இணையும் மகிழ்ச்சி மிக்க வைபவம்..! உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் நேரடி வாழ்த்துக்களுடன் கெட்டிமேளச்சத்தை மண மேடையில் அமர்ந்து கேட்பது என்பதே சென்னையில் நடுத்தர வர்க்க பட்டதாரி இளைஞர்களுக்கு சவாலான நிகழ்வாக மாறி வருகின்றது. மதுபழக்கம் இல்லாமல், நல்ல வேலைக்கு சென்று வந்தாலும் ஜாதியில் தொடங்கி சென்னையில…
-
- 0 replies
- 768 views
-