சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் தில்லைராஜன்: வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள் தான். ஒரு நாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளை கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம், சம நிலையில் அமையும். ஒரு வேலையை செய்து முடிக்க, அதிக நேரம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் திட்டமிட்ட நேரத்துக்குள் அந்த வேலையை முடிக்க முடியவில்லை எனில், உங்களுக்கு சோர்வு தான் ஏற்படும். இவ்வாறான சூழ்நிலையில், அந்த வேலைக்கு சிறிது அவகாசம் தந்து, நீங்கள் புத்துணர்ச்சி அடைந்தவுடன் அதே வேலையை செய்தால், எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்கலாம். வேலையே கதி என்று இருந்து விடாமல், ஊரில் நடக்கும் திருவிழா …
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான ICANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது. அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும். இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என…
-
- 0 replies
- 1.3k views
-
-
"அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள்" ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு மாம்பழங்கள் வைத்திருந்தாள் ..... அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு மாம்பழங்கள் வைத்திருக்கிறாய், அதில் ஒன்றை உன் அம்மாவிற்கு, எனக்கு கொடுக்கலாமே என்றாள் ....... தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, ...... பின் உடனே ஒரு மாம்பழத்தை நறுக்கென்று கடித்து விட்டாள் ..... அதைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மாம்பழத்தையும் கடிக்கத் தொடங்கினாள் ..... தாயின் முகத்தில் முதலில் இருந்த சிரிப்பு உறைந்து போனது ..... கோபமும் ஏமாற்றமும் தலை தூக்கியது ..... என்றாலும், தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள் ...... …
-
- 0 replies
- 663 views
-
-
காதலிப்பவர்கள் எல்லாம் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? Abilash Chandran இந்த வார குமுதம் லைபில் ப்ரியா தம்பி தனது “மாயநதி” பத்தியில் இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் (ஆண்களின் நிலையும் இவ்விசயத்தில் அவலம் தான் என்றும் சொல்கிறார்.). அவர் தன் ஊரில் இவ்வாறு இளம்வயதில் ஓடிப் போகும் பெண்கள் பற்றி தற்போது அதிகம் கேள்விப்படுவதாய் சொல்கிறார். அவர் சொல்வது குமரி மாவட்ட நாகர்கோயில் பகுதி என நினைக்கிறேன். என் ஊர் பத்மநாபபுரம். எங்கள் ஊரின் மண்ணின் குணமோ நீரின் சுவையோ அங்குள்ள இளம் பெண்கள் முணுக்கென்றால் காதல் வயப்படுவார்கள். சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள் இதை அறிந்து எங்கள் ஊரில் வட்டமடிப்பார்கள். இதற்கு ஒரு காரணம் இப்பெண…
-
- 0 replies
- 1.1k views
-
-
''சும்மா இருக்கோமேனு தோணுன உணர்வுதான், இப்போ 60 ஆயிரம் சம்பாதிக்க வைக்குது!'' - 'சேலை ஸ்டார்ச்' இந்திரலட்சுமி! ''இந்த, 'ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’ கடையை ஆரம்பிச்சு பதினேழு வருஷம் ஆகுது. நூறு கஸ்டமர்கள் என்ற அளவில் இருந்த தொழில், என்னைப் பற்றி முதல் கட்டுரை புத்தகத்துல வெளி வந்ததும் வேகமெடுக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்தில் 'புடவை பாலிஷ் பண்ணித் தர்றேன்'னு தேடிப்போய் ஆர்டர் கேட்கும்போது, பட்டுப்புடவைகளை நம்பி யாரும் என்கிட்ட கொடுக்கமாட்டாங்க. பாழாகிடுமோனு பயம். ஆனா, இப்போ தேடிவந்து நம்பிக்கையோடு கொடுக்கிறாங்க. இந்த நம்பிக்கையதான் என்னுடைய உண்மையான வெற்றியா நினைக்கிறேன்'' என்கிறார் இந்திரலட்சுமி. சென்னை, மின்ட் பகுதியைச் சேர்ந்த இந்திரலட்சுமி,…
-
- 0 replies
- 460 views
-
-
அம்பேத்கர் அவர்கள் பற்றி அவரின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதிய நூலில் உள்ள சில விடயங்களை ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார் ஷங்கர்ராமசுப்ரமணியன். நல்ல ஒரு கட்டுரை. இது 'அகழ்' இதழில் வந்துள்ளது. கட்டுரையில் உள்ள ஒரு பந்தி: “26 ஜனவரி 1950-லிருந்து நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழையப்போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். சமூக, பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை இருக்கும். இந்த முரண்பாட்டை நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அகற்ற வேண்டும். இல்லையென்றால், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்களெல்லாம், இந்த அவை மிக கடினமான உழைப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பைத் தகர்த்துவிடுவார்கள்.” *******************…
-
- 0 replies
- 543 views
-
-
இன்று காலை கைபேசிக்கு ஒரு பகடி வந்தது, அது ஒரு கணவன் மனைவிக்கு இடையேயான ஒரு உரையாடல் ! கணவன் : இந்த பற்பசை எங்க வாங்கின ? எல்லா நிறுவனமும் உப்பு, மிளகு இருக்குனு தான் சொல்வாங்க!, இதுல புளிப்பு, காரம்லாம் இருக்கே?. மனைவி : மூதேவி! தூக்க கலக்கத்துல புளி குழம்பு பேஸ்ட் எடுத்து பல்லு விளக்கிட்டு இருகிங்க!. இந்த பகடிய படுச்சுட்டு வெறுமன சிரிச்சிட்டு மட்டும் என்னால நகர்ந்து போக முடியவில்லை, காரணம் இந்த பற்பசை நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது நமது இயற்கை முறையான, வேம்பு, கரி, உப்பு இவற்றை கொண்டு பல் தேய்த்த முறையை ஆரோக்கியமின்மை என்று விளம்பரப் படுத்தியே அவர்களின் பற்பசையை விற்பனை செய்தனர், இன்று அதே நிறுவனங்கள் உப்பு, கரி, வேம்பு உள்ளதாக விளம்பரம் செய்கின்றன!,…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் தொழில் புரட்சிக்குப் பிறகு சந்திக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றம் 90-களுக்குப் பிறகு நடைபெற்று இணையத்தின், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டு வருகிற புரட்சி. தொழில் புரட்சி நடைபெற மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் இணையப் புரட்சி இரு பத்தாண்டுகளிலே மிகவும் பரவலாக அனைவரையும் சென்றடைந்துவிட்டது. தொழில்நுட்பங்கள், இணையத்தின் வளர்ச்சி தடுக்க முடியாதது, தவிர்க்க முடியாதது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஒரு சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளவில்லை என்றால் உலக அரங்கில் பின்தங்கிவிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. உலகமே ஒரு நகரத்தைப்போல ஆகிவிட்டது எனக் கூறுகிற அளவுக்கு இன்று இணையத்தின் வளர்ச்சி அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆனால், அதன் சாதகங்களோடு, சரி நி…
-
- 0 replies
- 338 views
-
-
அதிகரிக்கும் ஆயுட் காலத்தால் வீதிக்கு துரத்தப்படும் முதியவர்கள் அண்மையில் கொழும்பு வீதியொன்றை கிறிஸ்மஸ் வீதியாக சில நாட்களுக்கு முன்பு மாற்றியிருந்தார்கள். கொழும்பில் உள்ள வர்கள் நத்தார் கொண்டாட்டத்தில் முழுமையாகப் பங்குபற்றட்டும் என்ற உயர்ந்த நோக்ககோடு இவ்வாறு மாற்றப்பட்டது. இது ஒரு செய்தியென்றால் இப்பொழுது சொல்லப்போகும் செய்தி சொந்த வீடின்றி வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ள ஒரு சாராருக்கு இந்தக் கிறிஸ்மஸ் மட்டுமல்ல எல்லாமே வீதியில்தான் என்ற அவலநிலை வந்து சேர்ந்திருக்கின்றது. இந்த நத்தார் மட்டுமல்ல வரப்போகும் பொங்கல், ஈஸ்டர், வெசாக், தீபாவளி என்று எல்லாப் பண்டிகைகளுமே இவர்களுக்குத் தெருவில்தான்... …
-
- 0 replies
- 491 views
-
-
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
மூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பொதுவாக ஒருவரின் வாழ்வின் துயரமான சம்பவங்களோ அல்லது கடினமான தருணங்களோதான் அவர்களது வாழ்வை பெரும்பாலும் மாற்றியமைக்கும். ஆனால் தாங்கள் பொழுபோக்காக நினைத்த ஒன்று தங்கள் வாழ்வையே புரட்டி போட்டிருப்பதாக கூறுகின்றனர் இந்த பெண்கள். Image captionஉடற்பயிற்சியின் ஒரு பகுதியாக சைக்ளிங் செய்யும் …
-
- 0 replies
- 891 views
-
-
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதிய…
-
- 0 replies
- 324 views
-
-
உலகளவில், ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள்: ஆய்வு மது அருந்தும் விஷயத்தில், உலகில் ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துவதாக உலக அளவில் மது அருந்தும் பழக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது. கடந்த 1891ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுக்கிடையேயான கால கட்டத்தில் பிறந்த 40 லட்சம் நபர்களை ஆராய்ந்த இந்த ஆய்வு , ஆண்கள்தான் அதிகம் குடித்து, அதன் காரணமாக உடல் நலப் பிரச்சனைகளில் சிக்கிய சாத்தியக்கூறு இருந்ததாகக் காட்டியது. ஆனால் தற்போதைய தலைமுறை இந்த இடைவெளியை ஏறக்குறையக் குறைத்துவிட்டதாக பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் அறிக்கை கூறுகிறது. சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்றும் பங்கு மாறிவருவது , மது அ…
-
- 0 replies
- 491 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுமார் ஒவ்வொரு 40 வினாடிக்கும் உலகில் ஏதாவது ஓரிடத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். பெரும்பாலும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோர் ஆண்கள். தங்களின் பிரச்சனைகள் பற்றி பேசாத அல்லது உதவி தேடாத ஆண்களே இந்த முடிவுக்கு வருகின்றனர். எனவே, எந்த தலைப்புகளை பற்றி ஆண்கள் அதிகமாக பேச வேண்டும்? சமூக ஊடகங்களும், எதார்த்தமும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. …
-
- 0 replies
- 901 views
-
-
இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை - ஐநா எச்சரிக்கை மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது. இளம் பிரிட்டிஷ் நடிகை, எம்மா வாட்சன் , ஐநா மன்ற கூட்டம் ஒன்றில், பாலின சமத்துவம் குறித்துப் பேசியபோது, அவர் தன்னை உலகளாவிய கும்பல் ஒன்றின்…
-
- 0 replies
- 1k views
-
-
முகத்துக்கு அல்ல, அகத்துக்கு தேவை 'ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன்' - டாக்டர் செல்வ சீத்தாராமன் Sponsored content ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் உடலில் எந்த உபாதை வந்தாலும் மருத்துவரை அணுகும் நாம், தலைமுடி மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு அழகு நிலையங்கள் நோக்கிச் செல்கிறோம். ஹேர் டிரான்ஸ்பிளான்டேஷன் போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது தேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜியன்கள் செய்வதே சிறந்தது. 'ஏய் சொட்டை, ஹெல்மெட் மண்டை, வழுக்கப்போது பாத்து!' - தலைமுடி கொட்ட ஆரம்பித்தவுடன் நண்பர்கள் இப்படியெல்லாம் கேலி செய்யும்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் அந்த நொடி ரொம்ப கேஷுவலாக அதை எடுத்துக்கொள்ளலாம், ஏன் அவரே அதுகுறித்து சிரிக்கவும் செய்யலாம். 'வயசு ஆயிருச்ச…
-
- 0 replies
- 523 views
-
-
பவுணா………………………? மஞ்சள் கயிறா……………………..? 2010-12-31 14:02:46 [views = 8]திருமணத்தின் போது தாலி கட்டுவது எல்லோருடைய வழக்கம். ஆனால் இன்று தாலி கட்டும் போது அதனை கட்டுவதற்கான கொடியினை 15 பவுண் 17 பவுண் என்று தம்வசதியினை காட்டுவதற்காக கட்டுகிறார்கள். மறு நாளே அதனை கழற்றி வைக்கிறார்கள். ஏனெனில் அதனை கழுத்தில் அணிந்து போக முடியாது திருடர் பயம் ஒருபுறம். தாலி போட்டு தாம் திருமணம் ஆனவர்கள் என்று மற்றவர்களுக்கு தெரியக்கூடாது எனபதற்காக மறுபுறம். திருமணத்தின் போது மணமகன் மணகமள் கழுத்திலே 3 முடிச்சு போடுவார் என்று கூறுவர். மூன்று முடிச்சு எதற்காக என்று பிறிதொரு பகுதியில் விளக்கமாக தரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இன்று மூன்று முடிச்சு போடுதல் என்பதை காண முடியாது. மணமகன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா? என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில் சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக் கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத…
-
- 0 replies
- 930 views
-
-
`உண்மையான போராளி அவர்!' - ஐ.ஏ.எஸ் கனவுக்காக ஆக்ஸிஜன் உதவியுடன் போராடிய லத்தீஷா மரணம் குருபிரசாத் லத்தீஷா ``எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற உந்துதல் தான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்” - இது லத்தீஷா உதிர்த்த வார்த்தைகள். ``ஒரு விஷயத்தைதான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நெருக்கடி சூழ்நிலைகளை தகர்த்து வெளியில் வருவதற்கு நாம் தயாராக வேண்டும். எதற்காகவும் பின்வாங்காமல், எப்போதும் பாசிட்டிவ்வாக சிந்திக்க வேண்டும். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பிறகு, எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்க வேண்டும். மனச்சோர்வு…
-
- 0 replies
- 403 views
-
-
சொத்தை உருவாக்குவதில், பெண்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார், நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்: இன்றைய சூழ்நிலையில், சேமிப்புப் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏனெனில், இருந்த இடத்தில், தேவையான பொருட்களை வாங்கும் வசதிகள் வந்து விட்டன. அதோடு, வாங்க நினைத்த பொருட்களை, உடனே வாங்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும் இருக்கின்றனர். செலவு அதிகமாக இருந்தாலும், சேமிப்பு என்பது, பெண்களிடம் கட்டாயம் இருக்கும். அந்தச் சேமிப்பை, எப்படி முதலீடாக மாற்றி, சொத்தை பெருக்குவது என்று தெரியாமலேயே, பல பெண்கள் இருக்கின்றனர்.பெண்களுக்கு அதிகம் தெரிந்த முதலீடு, சீட்டு தான். அதேபோல், சிறந்த முதலீடாக நினைப்பது, தங்கத்தைத் தான். இந்த இரண்டுமே தவறு. சீட்டு திட்…
-
- 0 replies
- 825 views
-
-
இப்பொழுதெல்லம் தமிழரின் கலாச்ச்cஆரத்தில் இல்லாத ஆபரணக்கள், ஆடைகளை அணிவதிலேயே எம்மவர் குறியாக உள்ளனர், நான் அவதானித்தவை சில 1. மணமகள் இப்போது எல்லம் வழக்கமாக அணியும் அட்டியல், பதக்கம் சங்கிலி போன்றவற்றை அணிவதில்லை ஆனால் அதில் இருக்கும் அழகே தனி, ஆனால் அதை விட்டுப் போட்டு ஏதோ வட இந்திய பாணியில் முழுவதும் தங்கத்தில் ஆன அழகில்லத நகைகளையே உபயோகிக்கின்றனர், அண்மையில் நான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் விசாரித்துப் பாத்த போது அவர் கூறினார் பதக்கம் சங்கிலி, அட்டியலுக்கு மொத்தம் £ 2500ள் தான் செலவாகுமாம், ஆனால் இந்த வட இந்திய பாணியிலான நகைகள் 2 செய்வதுக்கு கிட்டத்தட்ட £ 8000ம் செலவாகுமாம், ஏன் இந்த வீண் செலவு அதுவு பார்க்க வடிவில்லாத நகைகளுக்கு 2.மணமகன்மார் வழக்கமாக வெள்ளை…
-
- 0 replies
- 1k views
-
-
கட்டெறும்பு கடித்த இடத்தில் வெட்டிரும்பு விழுந்த கதை!!
-
- 0 replies
- 467 views
-
-
“ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு முழு கிராமம் தேவை” என்ற புகழ்பெற்ற ஆங்கில முதுமொழியானது இன்றைய காலகட்டத்திற்கும் சிறந்தமுறையில் பொருந்துகின்றது. எனினும் கிராமங்களுக்கே உரிய பிணைப்புமிக்க வாழ்க்கை முறையானது தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னைய காலத்தில் புதிதாய் பெற்றோராக மாறிய தம்பதியினருக்கு குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் குழந்தை பராமரிப்பில் உதவியாகவிருந்து ஊக்கமளித்தனர். என பேபி ஷெரமிக்கின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தனுஷ்கா சில்வா உடனான நேர்காணலில் இதனைத் தெரிவித்தார். அவருடானன கேள்வி பதில் நேர்காணலின் முழு வடிவம் வருமாறு, 1. நிறைவான குழந்தை வளர்ப்பு ((Inclusive Parenting) ) என்றால் என்ன? மற்றும் தற்போதைய சூழ்நி…
-
- 0 replies
- 622 views
-
-
ஒருவருடைய உடல் அமைப்பைப்பற்றி பேசாதீர்கள். மனசு ரொம்ப கஷ்டப்படும். ஒரு காலத்தில் அவர்களும் ஒல்லியாக அழகாக இருந்தவர்கள் தான்.
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்! உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன. அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன. …
-
- 0 replies
- 2k views
-