Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீ…

  2. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…

    • 2 replies
    • 2.6k views
  3. பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கைதுசெய்யப்பட்ட, அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 4 பேரை பிரிட்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் வெள்ளியன்று பிணையில் விடுவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்தபடியே, வீடியோ தொடர்பு மூலம் நீதிமன்ற விசாரணைகளை அவதானித்தார்கள். அவர்களில் ஒருவரான அருணாசலம் கிருஷாந்தக்குமார் என்ற சாந்தன் மீது, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு திரட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புப் பிரிவின் தலைவர் சாந்தன் என்று வர்ணித்து, ஆயுதங்கள் மற்றும் குண்டு தயாரித்தல் ஆகியவற்றுக்கு வேண்டிய பயங்கரவாத த…

  4. உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக 1934இல் இருந்து 1945 வரை ஆட்சி புரிந்த ஹிட்லர் நடத்திய அழிவுகள் எண்ணில் அடங்காதவை. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலக யுத்தத்தில் ஐரோப்பாவில் மட்டும் 39 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஹிட்லரின் நாசிப் படைகள் செய்த படுகொலைகள் மனிதகுலத்தை இன்று வரை நடுங்கச் செய்பவை. எக் குற்றமும் செய்யாத 6 மில்லயனுக்கும் அதிகமான யூத மக்கள் ஹிட்லரின் படைகளால் கொல்லப்பட்டார்கள். யூதர்களை கொல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட பிரத்தியேக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூத மக்கள் அங்கு பல விதமான சித்திரவதைகளின் ஊடாக கொல்லப்பட்டார்கள். சுட்டும், விச வாயு செலுத்தியும் கொல்லப்பட்ட யூத…

  5. லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார். உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது. பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது. 32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முல…

  6. [23 - May - 2008] [Font Size - A - A - A] மாலைதீவில் சொசம்வில்லா பகுதியில் வீடு ஒன்றில் விபசாரத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர் உட்பட பத்துப் பேரை மாலை தீவு பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர். அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பொலிஸார் இந்த வீட்டைக் கண்காணித்த பின்னர் வீட்டின் ஐந்து அறைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த போது சந்தேக நபர்கள் கூரையின் மீது ஏறித்தப்பிக்க முயன்றனர். ஆனால் பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவர்கள் கைவிலங்கிடப்பட்டு பொலிஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அந்த வீட்டுக்கு வெளியே நின்று பலர் பார்த்தனர். விருந்தினர் விடுதி என்ற பெயரில் இந்த வீட்டில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக விபசாரத்தொழில் இட…

    • 0 replies
    • 938 views
  7. சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஆசன வாயில் வைத்துக் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 2 பேரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் தொண்டியைச் சேர்ந்த இஸ்மாயில் ஆரி (30), திருவாடானையைச் சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பது தெரியவந்தது. இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்ததது. இதையடுத்து, அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருவரும் ஆசனவாயில் தலா 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக…

    • 12 replies
    • 2.5k views
  8. கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள். தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இந்த முதுமக்கள் தாழிகளின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்தும், இதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், இந்த ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் துறையின் நிபுணர் குழுவில் ஒருவரான அகழாய…

  9. ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் மியன்மார் சென்றடைந்தார் 22.05.2008 / நிருபர் எல்லாளன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மியன்மாருக்கு விஜயம் செய்துள்ளார். சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முழு அளவிலான உதவிகளை முன்னெடுப்பதற்கு மியன்மார் இணங்கிய நிலையிலேயே பான்கீமூன் அங்கு சென்றுள்ளார். 1964ஆம் ஆண்டின் பின்னர் மியன்மாருக்கு முதன்முதலாகச் செல்லும் ஐக்கிய நாடுகள் தலைவர் பான்கீமூனே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமை மியன்மார் சென்றடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம், சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இராவாடி கழிமுகத்துக்கும் செல்லவுள்ளார். வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு …

    • 0 replies
    • 514 views
  10. ஊட்டி: கொடநாட்டில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நேற்று படுகர் சமூகத்தினரின் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் படுகர் இனப் பெண்களுடன் ேசர்ந்து அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 9ம் தேதி முதல் கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கொடநாடு அருகே உள்ள ஹாலமலை என்ற இடத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோவிலில் படுகர் இனத்தவர் கூடி வழிபட்டனர். இந்த விழாவில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். இதற்காக அவர் காரில் வந்தபோது படுகர் இனத்தவர், தங்களது பாரம்பரிய முறைப்படி ஜெயலலிதாவை வரவேற்றனர். அவருக்கு தங்களது பாரம்பரிய உடையையும் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு…

    • 7 replies
    • 2.6k views
  11. லக்னோ : உ.பி., மாநிலத்தில், லெஸ்பியன் உறவு வைத்திருந்த பெண்களை பிரிக்க நடந்த முயற்சியில், கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்தார், பிரிவை தாங்க முடியாத நர்ஸ். உ.பி., மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஹைவாட்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (24); நர்சாக வேலை பார்க்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் அலிகாரில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்த போது, அதே கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவரும் சுமனுடன் படித்தார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்பட்டனர். லெஸ்பியன்களாக கூடித்திரிந்தனர். மொரதாபாத்தில் உள்ள ஒரு கோவிலில், 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், பெற்றோரின் சம்மதத்தைப் பெறவில்லை. இதற்கு பின், குடும்பத்தாரின் நிர்பந்தத…

    • 4 replies
    • 3.6k views
  12. செங்கோட்டை: திருமணமாகி தாயைவிட்டு தனிக்குடித்தனம் செல்ல மனமில்லாமல் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து இறந்தார். செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மாரியப்பன். டீக்கடை தொழிலாளி. இவரது தாய் திருமலை. மாரியப்பனுக்கும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மாரியப்பனை தனிக்குடித்தனம் போகுமாறு திருமலை கூறினார். ஆனால் அதற்கு மாரியப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. தனது தாயை விட்டுப் பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் இருந்தார். ஆனால் தனிக்குடித்தனம் பற்றி தொடர்ந்து திருமலை வலியுறுத்தியதால் மனமுடைந்த மாரியப்பன் நேற்று விஷம் குடித்தார். ஆபத்த…

    • 2 replies
    • 2k views
  13. சாராய சாவு 53 ஆக உயர்வு . Monday, 19 May, 2008 12:46 PM . பெங்களூர்/ஓசூர்,மே 19: கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குறித்து இறந்தவர் களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 22 பேரும், கோலார் மாவட்டத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. . கள்ளச்சாராயத்தை காய்ச்சியவர்கள், விற்றவர்கள் என இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். கர்நாடகத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் 13 பேர் இறந்துள்ளதை அடுத்து மொத்தம் 53 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கோலார்…

  14. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வெளியே படுத்துத் தூங்கினர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று இரவு 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு 10.07 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. வீடுகளில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டன, கட்டில்கள் ஆடின, சில பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வேகம் வேகமாக வெளியேறி தெருக்களில் கூடி நின்றனர். சுனாமி வருமோ என்ற அச்சமும் மக்களிடையே காணப்பட்டது. நில அதிர்வு சில விநாடிகளே நீடித்த…

  15. தமிழில் வழிபாடு சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே நீதியரசர் சந்துருவின் தெளிவான தீர்ப்பு -பூங்குழலி தமிழில் வழிபாடு நடத்துவது சட்டப்படியும் ஆகமப்படியும் சரியானதே” என பல வித மேற்கோள்களின் அடிப்படையில் அண்மையில் நீதியரசர் சந்துரு தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளார். தமிழக கோயில்களில், சமஸ்கிருதத்தில் அல்லாமல் தமிழில் அர்ச்சனை செய்வது, இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 25லிஇன் கீழ் வழங்கப்படும் இந்து மத உரிமைகளை மீறுவதாகும் என இந்துக் கோயில்கள் பாதுகாப்புக் குழு என்னும் அமைப்பின் தலைவர் என கூறிக் கொள்ளும் சிவக்குமார், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை கோயிலில் பரம்பரை அர்ச்சகராக இருக்கும் பிச்சை பட்டர் எனும் இருவர் இரு தனித் தனி வழக்குகள…

  16. சைவ - வைணவ சண்டை ஓயவில்லை சிதம்பரத்தில் இருக்கும் கோயில் சைவமா? வைணவமா? குடுமிப்பிடிச் சண்டைக்குத் தீர்வுகாண அறநிலையத் துறை முயற்சி கூடலூர், மே 20- சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ் மொழியில் உள்ள தேவாரம் பாடுவதற்கு மறுத்து வந்த தீட்சதர்கள் ஒருவாறு பணிந்து அந்தப் பிரச்சினை முடிந்த நிலையில் அதே கோயிலில் வேறொரு பிரச்சினை கிளம்பி யுள்ளது. கோயிலில் நடைபெற விருக்கும் பிரம்மோற்சவத்தை நடத்துவது பற்றிய பிரச்சினை வெடித்துள்ளது. இது சைவ, வைணவப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. சைவ, வைண வப் பிரச்சினை என்றோ ஓய்ந்துவிட்டது என்று ராம கோபாலன் பேசுவது பொய் என்று சிதம்பரம் சம்பவம் கூறுகிறது. சிதம்பரம் கோயிலில் நடராசன் பொம்மைக்குப் பக்கத்தில் கோவிந்தராஜனின் பொம்மை படுக்க வைக்…

    • 2 replies
    • 4.7k views
  17. பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மிஸ் பிரிட்டன் ஜெம்மா கரேட் போட்டி 19.05.2008 / நிருபர் குளக்கோட்டன் பிரிட்டனில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் `மிஸ் பிரிட்டன்' பட்டத்தினை வென்ற அந்நாட்டு அழகி ஜெம்மா கரேட் போட்டியிடுகின்றார். இதனால் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுணுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சி அரசில் பிரதமராக கோர்டன் பிறவுண் இருந்து வருவதுடன் அண்மையில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளதால் கோர்டன் பிறவுண் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றில் பிரதிநிதிகள் சபையில் தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கைனித் டன்வூடி மரணமடைந்…

    • 0 replies
    • 754 views
  18. குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது. 50 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதன் முதலாக பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து 2 பெண்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதில் 246 ஆண்களும் அவர்களை எதிர்த்து 27 பெண்களும் போட்டியிடுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ரோலா தஷ்டி குறிப்பிடத்தக்கவர். இவர் 40களின் மத்தியில் இருக்கிறார். ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களிலேயே அதிக எண்ணிக்கையில் ஓட்டுக்கள் பெற்றார். http://www.tamilnews.dk/article/worldnews/2181/

    • 0 replies
    • 777 views
  19. பீபீசீ வானோலி சேவையாளர் குறைப்பு : சொந்த நாடுகளில் இருந்து ஒலிபரப்பு Saturday, 17 May 2008 பீபீசீ வானோலி சேவையின் செலவுகளை குறைப்பதற்காக பீபீசீ வானோலி சேவைகளில் பணிபுரியும் தமிழ் , கிந்தி , சிங்களம், உர்து மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஒலிபரப்பாகும் சேவையாளர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும், அங்கிருந்தே அந்தந்த ஒலிபரப்புகளை செய்யவும் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. தவிரவும் தற்போது பணிபுரியும் மேற் கூறுப்பட்ட மொழி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை லண்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் பீபீசீ முடிவு எடுத்துள்ளது. இந் நடைமுறை மூன்று ஆண்டுகளுக்கு முன் கிந்தி ஒலிபரப்பு தில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஆரம்பமா…

  20. சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர். சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப…

  21. வடிவமைத்த ஜெட் இயந்திரப் பொறிமுறையோடு இயங்கவல்ல hang-glider மூலம் சுவிஸ்லாந்தின் பனி படர்ந்த அல்ப்ஸ் மலைத் தொடர்களின் மேல் பறந்தார் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 48 வயதான Yves Rossy என்பவர். இவர் ஒரு படைத்துறை வீரராவார். விமானம் ஒன்றின் உதவியோடு குறித்த உயரத்தை அடைந்ததும் வான் வெளியில் குதித்து அதில் மிதந்தபடி தனது ஜெட் இயந்திரம் பூட்டிய hang-glider ஐ இயக்கிய Yves Rossy, அதி வேகமாக வான் வெளியில் பறந்து வான வேடிக்கை காட்டிவிட்டு, பரசூட்டின் உதவியுடன் மீண்டும் தரையைத் தொட்டார். இச்சாதனை மிகு பறப்பினை உலகு வியந்து பார்க்கின்ற அதேவேளை ஆதிகாலத்தில் இப்படி இறக்கைகளைக் கட்டி மனிதன் பறக்க முயன்று மனிதன் தோற்றுப் போயிருப்பினும் பின்னர் விமானப் பொறிமுறை, விண்ணோடப் பொறிமுறைகளைக் …

    • 0 replies
    • 760 views
  22. இந்தியர்கள் சாப்பாட்டு ராமன்களா? உருவாக்கிய சர்ச்சை புஷ்ஷின் கருத்து இந்தியா என்ற வார்த்தைக்கு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் அகராதியில் கசப்புமிக்க வேப்பங்காய் என்று அர்த்தம் போடப்பட்டிருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மனிதர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவையும் இந்தியர்களையும் வார்த்தைகளால் வறுத்தெடுப்பார். செயல்பாடுகளால் சீண்டிவிடுவார். அதற்கான பதிலடியை வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ளவும் தவறுவதில்லை. ஒருமுறை தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு `இந்தியா' என்று பெயர்சூட்டி அழைத்தது இந்தியர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது இந்தியர்களை `சாப்பாட்டு ராமன்கள்' என்பது போல வர்ணித்துக் குற்றம் சாட்டியிருப்பது …

  23. டான்டி டவுன் : ஆர்கன்சாசை சேர்ந்த பெண், இதுவரை 17 குழந்தைகள் பெற்று, தற்போது 18வது முறையாக கர்ப்பம் தரித் துள்ளார். ஆர்கன்சாசின் வடமேற்கு பகுதியில் உள்ளது டான்டிடவுன். இங்கு வசிப்பர் மிச்லே; வயது 41. இவரது கணவர் டுகார். இந்த தம்பதி, இனப் பெருக்கத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மிச்லேவுக்கு 17 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது, மீண்டும்கர்ப்பம்தரித்துள்ள

    • 0 replies
    • 1.1k views
  24. இரண்டு ரூபாய் குறைந்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட தந்தை, மகள் சாவு ஜார்சுகுடா(ஒரிசா): டிக்கெட் கட்டணத்தைவிட இரண்டு ரூபாய் குறைவாக கொடுத்ததால் பேருந்திலிருந்து நடத்துநரால் தள்ளிவிடப்பட்ட பழங்குடியினர் ஒருவரும், அவரது நான்கு வயது மகளும் பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழந்தனர். ஒரிசா மாநிலம் ஜார்சுகுடாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தால்பட்டியாவில் இச்சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: முப்பந்தைந்து வயதான பழங்குடியின நபர் சனிச்சார் தோப்போ செவ்வாய்க்கிழமை தனது மகளுடன் பேருந்தில் ஏறினார். தன்னிடம் பணம் இல்லாததால் சரியான டிக்கெட் கட்டணத்தை அவரால் கொடுக்க இயலவில்லை. டிக்கெட் கட்டணத்தில் குறைவாக இருந்த இரண்டு ரூபாயை ந…

  25. பெய்ஜிங்: சீனாவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்ற இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 12000 பேருக்கு மேல் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது. கடந்த முறையைவிட இந்த பூகம்பம் கடுமையாக இருந்தது. 12ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியிருந்தது. பயங்கர பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது வழக்கம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது மு…

    • 1 reply
    • 934 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.