உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலுக்கு அல்- ஹைதா உரிமைகோரியது [06 - February - 2008] மொரிடோனியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல்- ஹைதா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. மொரிடோனியாவிலுள்ள இஸ்ரேலின் தூதரகம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயமடைந்திருந்ததுடன் தூதரகமும் சேதங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முதலில் செய்தி வெளியிட்ட அல்- ஜஸீரா தொலைக்காட்சிச் சேவை இஸ்ரேல் தூதரகம் மீது அல்-ஹைதா தாக்குதல் என்ற செய்தியை மட்டும் ஒளிபரப்பியது. இதனைத் தொடர்ந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில நாட்களின் பின்னர் அல்-ஹைதா அமைப்பு உரிமை கோரியுள்ளது thinakural.com
-
- 0 replies
- 671 views
-
-
தன் நண்பனை ஏமாற்றி அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்த கொடூர சம்பவம் மேற்கு டில்லியில் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் மங்கேல்புரியைச் சேர்ந்தவர். அம்பேத்கர் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். திருமணமாகாதவர். அவருடைய நண்பர் பன்டி. இவர் ஒரு ரிக்ஷாக்காரர். ஜனவரி 12ம் தேதி சோனுவிற்கு பன்டி சாராயம் வாங்கி கொடுத்தார். அதனால் மயக்கமடைந்த சோனுவை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்களிடம், விருப்பப் பட்டே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்புவதாகவும் பன்டி கூறியிருக்கிறார். டாக்டர்களும் அவ்வாறே செய்தனர்.குடும்பக் கட்டுப் பாட்டிற்காக ஊக்கத்தொகையாகக் கொடுத்த ரூபாய் 1,100ம், அழைத்துக் கொண்டு வந்ததற்கான தொகை ரூ.200ம் பெற்ற…
-
- 14 replies
- 3.5k views
-
-
மனைவியின் உடலை இருபதாண்டுகளாக கொள்கலனில் வைத்திருந்தவர் கைது [02 - February - 2008] மனைவியைக் கொலை செய்து உடலை இருபது ஆண்டுகளாக கொள்கலன் ஒன்றில் அடைத்து வைத்திருந்த நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைச் சேர்ந்த பிரடிரிக் வில்லியம் என்பவரின் மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனபோது, மனைவி லொறிச் சாரதி ஒருவருடன் சென்றுவிட்டாரென வில்லியம் தெரிவித்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த கொள்கலனை வில்லியமின் மருமகன் திறந்து பார்த்தார். அதில் ஒரு மண்டை ஓடும், கால் எலும்புகளும் கிடந்தன. இதுபற்றி பொலிஸார் விசாரணை செய்தபோது, 20 ஆண்டுகளுக்கு முன்பு எட்வினாவை அவரது கணவனே …
-
- 5 replies
- 2.4k views
-
-
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சென்னை விமான நிலையம் அருகே இதற்கான இடத்தை வாங்கியுள்ளார் ரஹ்மான். சென்னையில் இளம் இசைப் பிரியர்களுக்கென தனியாக இசைப் பள்ளி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான். இதற்காக சென்னை விமான நிலையம் அருகே இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் இசைப் பள்ளிக்கான கட்டடங்கள் எழிலுற விரைவில் எழும்பவுள்ளன. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், சென்னை விமான நிலையத்திற்கு அருகே இடம் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இசைப் பள்ளியைத் தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனது கனவு நனவாகப் போகிறது. இதில் சந்தோஷம். நமது நாட்டில் இளம் திறமையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். ம…
-
- 1 reply
- 1k views
-
-
வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு, பாழும் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை, நடுங்கும் குளிரில் 30 மணி நேரம் போராடி உயிர் பிழைத்த அதிசய சம்பவம் டில்லி அருகே நடந்தது. டில்லியை அடுத்த அலிபூர் அருகே டீகரீகுர்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி சஞ்சனா. இவள், தன் அம்மாவில் கால் கொலுசுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற இரண்டு பேர், கொலுசைத் திருட, குழந்தையை அழைத்துச் சென்றனர். கொலுசுகளைப் பிடுங்கிக் கொண்டு, குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசித் தப்பினர். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து அலிபூர் போலீசில் புகார் கொடுத்தனர்.இதற்கிடையே குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு அந்தப் பகுதி கிராம மக்கள், கிணற்றில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார். மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்ப…
-
- 0 replies
- 867 views
-
-
சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியைக் கற்பழித்த இரு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம் பேட்டையை சேர்ந்தவர் ரபியா. கணவர் இறந்து விட்டதால் மகள்கள் கைரூன் (14), பர்வீன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த பெயிண்ட் வேலை செய்யும் செல்வம், வெங்கடேசன் ஆகிய இரு வாலிபர்கள் குடியோதையில் வீட்டுக்குள் நுழைந்து சிறுமி கைரூனை கற்பழித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் கண்டுகொள்ள…
-
- 0 replies
- 884 views
-
-
பிரிட்டனுக்கு கடத்தப்படும் நூற்றுக்கணக்கான ஆபிரிக்க குழந்தைகள் கொத்தடிமைகளாக வாழும் அவலம் [04 - February - 2008] லண்டன் : ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் ஆபிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு கடத்திச் செல்லப்பட்டு அடிமைகளாக பயன்படுத்தப்படுவது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது. நைஜீரியா போன்ற நாடுகளில் குழந்தைகளை கடத்துவதற்கென்றே கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன. மூன்று அல்லது நான்கு வயதுச் சிறுவர்களின் விலை 8 இலட்சம் ரூபாவென புலனாய்வு விசாரணையொன்றில் தெரிய வந்துள்ளது. பணம் கிடைக்கும் என்பதற்காக கர்ப்பமாகவுள்ள இளம் வயது பெண்கள் கூட தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை விற்பனை செய்யத் தயாராகவுள்ளனர். ஆட்கடத்தல்களில் ஈடுபடும் கும்பல்களால் இக் குழந்தைகள…
-
- 0 replies
- 588 views
-
-
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்ப்பதுடன் பிரிட்டனையும் அழிப்போம் [04 - February - 2008] *தலிபான்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்த்தளிப்போம் என பாகிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர் பையத்துல்லா மசூத் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பிரிட்டனையும் அழிப்போமெனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் வசீரிஸ்தான் பகுதியில் வசிக்கும் மதகுரு பையத்துல்லா மசூத். இவர் தான் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஆவார். இவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பெனாசிர் கொலைக்கு இவர்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் குற்றச்சாட்டியது. இதை அவர் மறுத்த போதிலும் பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்கள்…
-
- 0 replies
- 884 views
-
-
9 கிலோ தேனீக்களை நான்கு மணிநேரம் சுமந்து சாதனை 2/4/2008 6:49:12 PM வீரகேசரி இணையம் - கோவையில் முன்தினம் நடைபெற்ற லிம்கா உலக சாதனை நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் 9 கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உடலில் மோய்க்கச் செய்து பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (27) என்பவரே இச்சாதனையை புரிந்துள்ளார். இவர் தேனிவளர்ப்பு பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். நேச்சுரல் ஹனி என்ற தேன் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான இவர் 2005 ஆம் ஆண்டில் 80 ஆயிரம் தேனீக்களை உடலில் மொய்க்கச்செய்து சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து முன்தினம் ஒன்பது கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உ…
-
- 0 replies
- 1k views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 2.2k views
-
-
ரூபாண்டா-காங்கோ நாடுகளில் கடும் நிலநடுக்கம்: 39 பேர் பலி திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 கிகாலி: ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் காங்கோ நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில் நேற்று காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காங்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நடந்த அடுத்த மூன்றரை மணி ந…
-
- 0 replies
- 657 views
-
-
புலிகளை ஆதரிப்பதாக வீண்பழி ஆட்சி மாற்றத்துக்கும் தயார் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்பு 2/3/2008 9:24:42 PM வீரகேசரி நாளேடு - சென்னை, விடுதலைப் புலிகளை தமிழக அரசாங்கம் ஆதரிப்பதாக வீண் பழி சுமத்தப்படுகிறது. எங்கள் மீது இப்படி ஒரு பழியை போட் டுத்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்கத் தயார் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் இல்லத்திருமணம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலமைச்சர் கருணாநிதி மேலும் கூறியதாவது: சட்டமன்றத்தில் இப்போது நடந்துள்ள சிலவிஷயங்களை தமிழக மக…
-
- 0 replies
- 810 views
-
-
தமிழக அரசியலைக் கலக்கும் ஜெ. - விஜயகாந்த் மோதல் வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடியில் அடிக்கடி நடப்பதுதான். அதுபோல தமிழக அரசியலில் தலைவர்களுக்குள்ளும் எப்போதாவது அப்படியோர் வம்படிக் காமெடி நடப்பதுண்டு. இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும் அப்படியோர் சீரியஸான உரசலே ஆரம்பமாகிவிட்டது. `குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு! என்று ஒருமுறை விஜயகாந்துக்கு எதிராக அஸ்திரம் தொடுத்தார் ஜெ. `இவங்கதான் கூட இருந்து எனக்கு ஊற்றிக்கொடுத்தது போல...!' என்று பதிலடி கொடுத்து அரசியல்வானில் ஒரு புதிய பரபரப்பை ஆரம்பித்து வைத்தார் விஜயகாந்த். இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் மாதக்கணக்கில் விமர்சனங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தடையை மீறி ஈராக் செல்லும் இந்தியர்கள் [03 - February - 2008] [Font Size - A - A - A] டுபாய்: ஈராக்குக்கு வேலைக்குச் செல்ல இந்திய அரசு விதித்துள்ள தடையையும் மீறி அங்கு ஏராளமான இந்தியர்கள் ஆர்வமாக வேலைக்குச் செல்கின்றனர். ஈராக்குக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள் முதலில் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கின்றனர். அங்கு சில மாதங்கள் தற்காலிகமாக மறைந்திருந்து பணியாற்றுகின்றனர். பின்னர், அங்கிருந்து ஈராக்குக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் மூலம் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். இவ்வாறு ஈராக்கில் வேலை வாங்கித் தரும் முகவர்களுக்கு இந்தியர்கள் ரூபா 1-1/2 இலட்சம் வரை பணம் கொடுப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிய…
-
- 0 replies
- 640 views
-
-
1300 கி.மீ.வரை சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி [03 - February - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் பெருமிதம் இஸ்லாமாபாத் : ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கும் `காவ்ரி' ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. பாகிஸ்தான் கடந்த வாரம் 700 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் `ஷாஹீன்' ஏவுகணையை சோதித்து பார்த்தது. இதன் பின்னர் ரகசியமான இடத்தில் ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய `காவ்ரி' ஏவுகணையை சோதனை செய்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி முஷாரப்பும் இராணுவத் தளபதி அஷ்பக் கயானியும் கலந்து கொண்டனர். இது குறித்து முஷாரப் குறிப்பிடுகையில், `பாகிஸ்தான் இராணுவத்தினர் நன்கு பயிற்சி பெற்…
-
- 0 replies
- 765 views
-
-
பாலஸ்தீனர்களை கட்டுப்படுத்தும் முயற்சி [03 - February - 2008] கெய்ரோ : பாலஸ்தீனத்தின் காஸாப் பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்குமிடையிலான எல்லைச் சுவர் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து தனது நாட்டுக்குள் நுழையும் பாலஸ்தீனியர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளை எகிப்து ஆரம்பித்துள்ளது. இவ் எல்லையினூடாக எகிப்துக்குள் நுழையும் பாலஸ்தீன வாகனங்களை எகிப்திய படைகள் தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் எல்லைப் பிரச்சினை குறித்துப் எகிப்திய அதிகாரிகளும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களும் கெய்ரோவில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமது நடவடிக்கைகளை எகிப்து அங்கீகரிக்ககாவிட்டால் இவ் எல்லையை மூடும் எகிப்தின் நடவடிக்கைகளை தாம் தடுக்கக் கூடுமென ஹமால் …
-
- 0 replies
- 624 views
-
-
(மாலை மலர்) செல்போனுக்கு சார்ஜ் செய்ய தினமும் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை செல்போனை சார்ஜரில் போட வேண்டி உள்ளது. அவசர வேலையாக செல்பவர்களும் அதிக வேலைப்பளு கொண்டவர்களும் செல்போன் சார்ஜ் போட மறந்து விடுவதால் அன்றைய நாள் முழுவதும் செல்போன் உபயோகிக்க முடியாத நிலைக்கு ஆளாவார்கள். அவர்களின் வசதிக்காக ரூபாய் நோட்டிலேயே செல்போன் சார்ஜ் செய்யும் வசதியை சென்னையை சேர்ந்த மாணவர் கண்டு பிடித்துள்ளார். அவரது பெயர் முருகன் வியாசர்பாடி சர்மாநகர், பாரதிநகரை சேர்ந்தவர். பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ரூபாய் நோட்டில் செல்போன் சார்ஜ் ஏற்றுவது பற்றி மாணவர் முருகன் கூறியதாவது:- நான் ஒரு நாள் செல்போனை கழற்றி சுத்தம் செய…
-
- 15 replies
- 4.3k views
-
-
புதுடில்லி : இந்திய கப்பற் படையின் 2வது மிகப்பெரிய கப்பலான ஜலஸ்வாவில் ஏற்பட்ட விபத்தில் ஐந்த மாலுமிகள் பலியானார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கப்பல் அமெரிக்காவில் இருந்து இந்திய கப்பல் படைக்காக வாங்கப்பட்டது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மீட்பு பணிகளில் ஈடுபட மருத்துவ கப்பல் விரைந்துள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ராணுவ அமைச்சர் அந்தோணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
- 21 replies
- 4.5k views
-
-
'Super Tuesday' may not settle it all Sheldon Alberts, Washington Correspondent, Canwest News Service Brian Snyder/ReutersThe race between Hillary Clinton and Barack Obama might not be over after Super Tuesday. WASHINGTON -- Advantage, John McCain. Hillary Clinton? Maybe not so much. In a presidential primary season that has repeatedly turned conventional wisdom on its head, American voters find themselves confronting another big surprise as the campaign sprints towards Super Tuesday, the biggest day so far on the 2008 election calendar. The Republican party -- divided by competing factions and searching for a post-Bush era identity, suddenly i…
-
- 0 replies
- 765 views
-
-
பூமியை நோக்கி வேகமாக வரும் அமெரிக்க உளவு செயற்கைகோள் [29 - January - 2008] [Font Size - A - A - A] * உலக நாடுகள் அச்சம் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகிய அமெரிக்க உளவு செயற்கைக்கோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறது. பெப்ரவரி மாத இறுதியிலோ மார்ச் தொடக்கத்திலோ அந்த செயற்கைக்கோள் பூமியில் விழலாம். தற்போது அந்த செயற்கைக்கோள் எங்கு உள்ளது, பூமியில் எந்தப் பகுதியில் அது விழும் என்பது இப்போது தெரியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு உள்ளிட்ட பல பணிகளுக்காக செயற்கைக்கோள்களை ஏவுகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு செயற்கைக்கோளும் குறிப்பிட்ட காலம் வரையே இயங்கும். அதன…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை கிரிக்கட் வாரியத்தலைவர் அருச்சுனா ரணதுங்காவினால் இந்திய கிரிக்கட் வாரியத்திடம் கடனடிப்படியில் பண உதவி கோரப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷவினால் நியமணாம் பெற்ற தற்போதய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபபைத்தலைவர் அருச்சுனா ரணதுங்கவின் கருத்துப்படி இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை 60 லட்சம் அமரிக்க டொலர் வங்கிக்கடனில் உள்ளதாகவும் அதனில் இருந்து மீழுவதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் லலித் மோடியிடம் கடன் கோரியுள்ளாராம். மேலும் வாசிக்க: http://content-www.cricinfo.com/srilanka/c...ory/334489.html
-
- 0 replies
- 820 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு தமிழக அரசாங்கம் தடை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு, தமிழக மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இந்தியாவில் தடை செய்யப்பட்ட சகல அமைபப்புக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கருத்து வெளியிடுவதற்கு, 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் இன்று முதல் தமது அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். மாநில முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையில், இன்று இடம்பெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது, இதற்கான தீர்மா…
-
- 12 replies
- 2k views
-
-
உலகின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி [01 - February - 2008] இவ்வாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆறு மாதகாலமாக நிதிச்சந்தையில் நிலவும் நெருக்கடி நிலைமை உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் எச்சரித்துள்ளது. கடன் வழங்கும் முறைமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதனால் உப முக்கிய துறைகளில் இறுக்கமான நிலைமை தோன்றியதற்குக் காரணமாக அமைந்ததுடன் அமெரிக்கா நுகர்வுச் செலவீனத்தைக் கட்டுப்படுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தமை ஏற்றுமதியில் தங்கியிருக்கும் ஆசிய பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையே 2003 இலிருந்து பொருளாதாரத்தை …
-
- 0 replies
- 775 views
-
-
அடுத்த பத்து நாட்களில் கொசோவோ தனி நாடாகப் பிரகடனம்? [01 - February - 2008] [Font Size - A - A - A] சேர்பியாவின் அங்கமாக இருக்கும் கொசோவோ அடுத்த பத்து நாட்களில் தனிநாடாகப் பிரகடனப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள சேர்பிய ஜனாதிபதித் தேர்தலில் சேர்பிய இனவாத வேட்பாளர் டொமிஸ்வேல் நிகொலிக் வெற்றிபெற்றால் 9 அல்லது 10 ஆம் திகதிகளில் தனி நாடு பிரகடனம் செய்யப்படும். இதேவேளை, போரிஸ் வெற்றி பெற்றால் எதிர்வரும் 18 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு மந்திரிகள் கூட்டம் நடக்கும் வரை பிரகடனம் தொடர்பான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படும். சேர்பியாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை கடந்த டிசம்பரில் தோல்வ…
-
- 0 replies
- 840 views
-