Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் இறந்ததற்கு இரங்கல் கவிதை எழுதிய முதல்வர் கருணாநிதியை முதலில் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருத்து, தடையை மீறி இரங்கல் பேரணியில் பங்கேற்கச் சென்று கைதாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் இரங்கல் கவிதை எழுதிய கருணாநிதி கைது செய்யப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் மற்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.…

  2. பிரிட்டனை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2007 லண்டன்: தனது நாட்டில் குடியேற வரும் வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இங்கிலாந்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறும் அந் நாட்டு மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 600 பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வருவதாக பிரிட்டனின் புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளனது. கடந்த ஆண்டில் மட்டும் 2,07,000 பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்குவது வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், நல்ல வேலைய…

  3.  காதலியால் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் காதல்...!!! தூத்துக்குடி: தன்னைக் காதலித்த பெண் ஏமாற்றிவிட்டதால், காதலிக்கு செலவழித்த பணத்தைக் கேட்டு காதலன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் தபால்-தந்தி காலனியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று ஜெபக்குமாரை ஒதுக்க ஆரம்பித்துள்ளார் டாக்டர் காதலி. காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இதுநாள் வரை மனக்கோட்டை கட்டிய ஜெபக்குமாருக்கு தன் காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தன் காதல…

    • 14 replies
    • 2.4k views
  4. சாப்பாடு..... உங்களின் மூளைப்பசிக்கும், அவர்களின் ஏழ்மைப்பசிக்கும் http://www.freerice.com/ நம்பவில்லையென்றால்.... http://news.bbc.co.uk/2/hi/europe/7088447.stm

  5. ஆரம்பம் அடுத்த சர்ச்சை... ராமர் போய் இராவணன் வந்தார்...! ராமர் கோயில் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி யிருக்க, இப்போது இராவணன் கோயில் விவகாரம் புதிதாக முளைத்து, வடஇந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி -& சாந்த் போல். இங்குள்ள முக்கிய சாலை ஓரம் புதிதாக கட்டப்பட்டு வரும் நவ்ரத்தன் கோயில் வளாகம் சில ஆண்டுகளாக பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. காரணம், இதன் உள்ளே இருக்கும் சிவன், அனுமன், விநாயகர் உட்பட 13 வகையான கோயில்கள் மட்டுமல்ல, புதிதாக இராவணனுக்கு இரண்டு சிலைகள் அமைத்து தனியாக ஒரு கோயில் கட்டப்படுவதால்தான்! ‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி’ என்ற பெயர…

  6. தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார்மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி தேவர். இவரது மகன் பிரபு(வயது 22). இவரது தலைமையில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று மாலை ஒரு படகில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் சல்லிதீவு பகுதியில் மீன் பிடித்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் மீன்களை பிடித்து கொண்டு வேம்பார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை வெளியே கொட்டினர். அப்போது அதில் ராக்கெட் லாஞ்சரில் இருந்து வெளியே வரும் ஒரு குண்டு இருந்தது. அந்த குண்டை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரபு அந்த குண்டை சூரங்குடி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து சூரங்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் ஜேக…

  7. குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!'' குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர். இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது. கோத்ரா தொக…

    • 14 replies
    • 8.1k views
  8. தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. 9.11.2007 பின்லாந்து பள்ளியில் மாணவன் வெறித்தனம் : சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பரிதாப பலி ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டின் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 18 வயது மாணவர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் எட்டு பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் பின்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய துக்க நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சொந்தமாக துப்பாக்கி வைத்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால், துப்பாக்கி சூடு சம்பவங்கள் மிகவும் அரிதானது. துசூலா என்ற இடத்தில் உள்ள ஜோகிலா உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த 18 வயது மாணவன் நேற்று முன்தினம் கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதில் எட்டு பேர் இறந்தனர். இதன் பிறகு…

  10. கடவுச் சீட்டை பெற்றுக்கொண்டார் வைகோ! புதன், 7 நவம்பர் 2007( 16:45 IST ) Webdunia பூ‌‌விரு‌ந்தவல்‌லி பொடா ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ம.தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ஆஜரா‌கி தனது கடவுச் சீட்டை பெ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் கட‌ந்த 2002ஆம் ஆண்டு நடந்த ம.திமு.க. பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பே‌சியதாக வைகோ உ‌ள்பட 9 பேர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். இந்த வழக்கு பூவிருந்தவல்லி பொடா சிறப்பு ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இந்த வழக்கில் பிணைய விடுதலை கே‌‌ட்டு வைகோ தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, வைகோவின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிப‌ந்தனையின் பேரில் அவரு‌க்கு பிணை…

    • 2 replies
    • 1.7k views
  11. 16ம் தேதி சுனாமி வருமாம்-சொல்கிறார் 'நிபுணர்'! மார்த்தாண்டம்: ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் வருகிற 16ம் தேதி சுனாமி அலைகள் தாக்கலாம், பூகம்பம் ஏற்படலாம் என கேரளாவைச் சேர்ந்த 'நிபுணர்' பாபுகலாயில் என்பவர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு பி.கே. ஆய்வு கழகம் மற்றும் ஈ.எஸ்.பி என்ற அமைப்பின் இயக்குனர் பாபுகலாயில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகத்தையே உலுக்கிய சுனாமியின் வடு இன்னும் மறையவில்லை. ஆயிரக்கனக்கான உயிர்களை பலி வாங்கி மக்களின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்த இந்த கோர சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் மீண்டும் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களில் பூகம்பம் மற்றும்…

    • 2 replies
    • 1.6k views
  12. ஆறு கால்களுடன் லக்சுமி என்ற குழந்தை http://www.thisislondon.co.uk/news/article...tion/article.do

  13. நன்றி : தினக்குரல்

    • 4 replies
    • 2k views
  14. பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி... பின்வரும் அவரின் அறிக்கை சினம்ழூட்டுவதாக இருக்கின்றது...ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான் சென்னை, நவ. 6- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பத விப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூல மாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரி வித்து இருந்த…

  15. சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் இராணுவ உதவிகள் வழங்குவதனை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 745 views
  16. சென்னையில் எதிர்வரும் 12 ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இரங்கல் ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 764 views
  17. 'குர்தீஸ்தான் மீதான துருக்கியின் ஆக்கிரமிப்பு" -ஜெயசிறி விஸ்ணுசிங்கம்- வட ஈராக் மீது படையெடுப்பை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை அண்மையில் துருக்கிய பாராளுமன்றம் வழங்கியிருக்கின்றது. வட ஈராக் மீது இராணுவ ஆக்கிரமிப்;பை மேற்கொள்வதன் மூலம் குர்தீஸ் போராளிளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என துருக்கி நாட்டு பாராளுமன்ற பிரநிதிகள் ஆலோசித்து வருகின்றனர். பெரும்பான்மையான துருக்கி நாட்டு சுதேசிகளின் ஆதரவைப் பெற ஆட்சியாளர்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, வட ஈராக் மீது போர் தொடுப்பிற்கு தயார்படுத்தல்கள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பிகேகே எனப்படும் குர்தீஸ் போராளிகள் அமைப்புக்கும் துருக்கிநாட்டுக்கும் இடையேயான முரண்பாடுகளின் பி…

  18. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

  19. சிவா‌ஜி கணேச‌ன் மனை‌வி கமலா காலமானா‌‌ர்! வெள்ளி, 2 நவம்பர் 2007( 12:56 IST ) Webdunia திரைப்பட உலகின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அமரர் நடிக‌ர் திலகம் ‌சிவா‌ஜி கணேச‌னின் மனை‌வி கமலா அ‌ம்மா‌ள் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிரு‌ந்த கமலா அம்மாள் கட‌ந்த 31ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தா‌ர். மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் இன்று காலை காலமானார். அவரு‌க்கு வயது 68. அவரது உடலுக்கு உறவினர்களும், தமிழ் திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

  20. கூட்டணி?: சரத்குமார்-கார்த்திக் திடீர் சந்திப்பு! புதன்கிழமை, அக்டோபர் 31, 2007 மதுரை: மதுரையில் நடிகர் கார்த்திக்கும், நடிகர் சரத்குமாரும் தனியே சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கருதப்படுகிறது. தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தனர். இந் நிலையில் மதுரையில் ஹோட்டலில் கார்த்திக்கை, நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்ப…

  21. பிரித்தானியாவில் சந்தேகத்தின் பெயரில் கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களை விட 7 மடங்கு அதிகமாக பொலிஸால் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனராம். ஆசியர்கள், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சந்தேகத்தோடு நோக்கப்படுகின்றனர். இது மேற்குலகின் போக்கில் எதனை உணர்த்துகிறது..????! இது இனவாதம் இல்லையா..??! அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது. http://news.bbc.co.uk/1/hi/uk/7069791.stm

    • 12 replies
    • 2.7k views
  22. : உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ள ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அதிக ஆர்டரை எதிர்பார்க்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜான் லேகி, ஏர் இந்தியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ - 380 ரக விமானங்களை 10 முதல் 12 வரை இந்தியா வாங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா ஏ - 380 ரக விமானங்களில் சிலவற்றிற்கு ஆர்டர் கொடுத்தால் கூட நாங்கள் அவைகளை 2010 அல்லது 2012 க்குள் டெலிவரி செய்து விடுவோம் என்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேகி தெரிவித்தார். ஏர்பஸ் ஏ - 380 ஜம்போ ஜெட் விமானம் 850 பயணிகளை ஏற்றி செல்லக்கூடியத…

    • 0 replies
    • 2k views
  23. பதிவு பெற்ற கட்சியானது சரத்குமாரின் அ.இ.ச.ம.க. சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007 டெல்லி: நடிகர் சரத்குமார் தொடங்கியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. சமீபத்தில் அரசியலில் குதித்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். இந்தக் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்ேபாது சரத்குமாரின் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அனுமதித்துள்ளது. பதிவு பெற்ற அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் சரத்குமார் கட்சிக்கு சுயேச்சை சின்னமே தேர்தல்களில் ஒதுக்கப்படும். தேர்…

  24. திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட் அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது. விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். மும்பை நடிகை நவ்னீத் கெளர் ஜோடியாக நடிக்கிறார். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக கனடாவில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னைக்குத் திரும்பினர். கனடாவில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக…

    • 5 replies
    • 2.5k views
  25. நில நடுக்கம் மீண்டும் சுமத்திராவில் சுனாமி வரவும் வாய்ப்பு இருக்காம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.