உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
'குர்தீஸ்தான் மீதான துருக்கியின் ஆக்கிரமிப்பு" -ஜெயசிறி விஸ்ணுசிங்கம்- வட ஈராக் மீது படையெடுப்பை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை அண்மையில் துருக்கிய பாராளுமன்றம் வழங்கியிருக்கின்றது. வட ஈராக் மீது இராணுவ ஆக்கிரமிப்;பை மேற்கொள்வதன் மூலம் குர்தீஸ் போராளிளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என துருக்கி நாட்டு பாராளுமன்ற பிரநிதிகள் ஆலோசித்து வருகின்றனர். பெரும்பான்மையான துருக்கி நாட்டு சுதேசிகளின் ஆதரவைப் பெற ஆட்சியாளர்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, வட ஈராக் மீது போர் தொடுப்பிற்கு தயார்படுத்தல்கள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பிகேகே எனப்படும் குர்தீஸ் போராளிகள் அமைப்புக்கும் துருக்கிநாட்டுக்கும் இடையேயான முரண்பாடுகளின் பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாட்டின் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
சிவாஜி கணேசன் மனைவி கமலா காலமானார்! வெள்ளி, 2 நவம்பர் 2007( 12:56 IST ) Webdunia திரைப்பட உலகின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா அம்மாள் கடந்த 31ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. அவரது உடலுக்கு உறவினர்களும், தமிழ் திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
- 0 replies
- 2.3k views
-
-
கூட்டணி?: சரத்குமார்-கார்த்திக் திடீர் சந்திப்பு! புதன்கிழமை, அக்டோபர் 31, 2007 மதுரை: மதுரையில் நடிகர் கார்த்திக்கும், நடிகர் சரத்குமாரும் தனியே சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கருதப்படுகிறது. தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் மற்றும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் வந்திருந்தனர். இந் நிலையில் மதுரையில் ஹோட்டலில் கார்த்திக்கை, நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் சந்தேகத்தின் பெயரில் கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களை விட 7 மடங்கு அதிகமாக பொலிஸால் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனராம். ஆசியர்கள், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சந்தேகத்தோடு நோக்கப்படுகின்றனர். இது மேற்குலகின் போக்கில் எதனை உணர்த்துகிறது..????! இது இனவாதம் இல்லையா..??! அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது. http://news.bbc.co.uk/1/hi/uk/7069791.stm
-
- 12 replies
- 2.7k views
-
-
: உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ள ஐரோப்பாவின் ஏர்பஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து அதிக ஆர்டரை எதிர்பார்க்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜான் லேகி, ஏர் இந்தியா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ - 380 ரக விமானங்களை 10 முதல் 12 வரை இந்தியா வாங்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் ஏர் இந்தியா ஏ - 380 ரக விமானங்களில் சிலவற்றிற்கு ஆர்டர் கொடுத்தால் கூட நாங்கள் அவைகளை 2010 அல்லது 2012 க்குள் டெலிவரி செய்து விடுவோம் என்று டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் லேகி தெரிவித்தார். ஏர்பஸ் ஏ - 380 ஜம்போ ஜெட் விமானம் 850 பயணிகளை ஏற்றி செல்லக்கூடியத…
-
- 0 replies
- 2k views
-
-
பதிவு பெற்ற கட்சியானது சரத்குமாரின் அ.இ.ச.ம.க. சனிக்கிழமை, அக்டோபர் 27, 2007 டெல்லி: நடிகர் சரத்குமார் தொடங்கியுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. சமீபத்தில் அரசியலில் குதித்த சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். இந்தக் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்ேபாது சரத்குமாரின் கட்சியை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அனுமதித்துள்ளது. பதிவு பெற்ற அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் சரத்குமார் கட்சிக்கு சுயேச்சை சின்னமே தேர்தல்களில் ஒதுக்கப்படும். தேர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட் அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது. விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். மும்பை நடிகை நவ்னீத் கெளர் ஜோடியாக நடிக்கிறார். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக கனடாவில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னைக்குத் திரும்பினர். கனடாவில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக…
-
- 5 replies
- 2.5k views
-
-
நில நடுக்கம் மீண்டும் சுமத்திராவில் சுனாமி வரவும் வாய்ப்பு இருக்காம்
-
- 1 reply
- 1.2k views
-
-
பி கே கே போராளிகள். ஈராக்கின் வடக்கு எல்லையில் துருக்கியோடும் ஈரானோடும் ஈராக்கோடும் உள்ள தங்கள் பூர்வீக நிலப்பரப்பில் குர்திஸ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்திஸ் தொழிலாளர் கட்சி (PKK) கடந்த 1970 களின் பிற்பகுதியில் இருந்து துருக்கி மற்றும் ஈராக்குடன் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பத்தில் தனிநாடு வேண்டி ஆரம்பித்து பின்னர் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி வேண்டுதலோடு குறுக ஆரம்பிக்க.. அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்ட துருக்கிய மற்றும் ஈராக் அரசுகளும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக தேசங்களும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக பட்டியலிட்டு பி கே கே யையும் சர்வதேச பயங்கரவாதப்பட்டியலில் இட்டு …
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் வீடு முன் போராட்டம்- டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு சனிக்கிழமை, அக்டோபர் 20, 2007 சென்னை: இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறார்கள். எனினும் இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழக அரசியல் கட்சிகள் அவ்வப்போது ஓங்கி குரல் கொடுப்பதும், அனுகூலம் ஏற்படாது என்று கருதும்போது ஆதரவு குரலை கைவிடுவதும் என இரட்டை போக்கை கடைபிடித்து …
-
- 0 replies
- 801 views
-
-
ளுரனெயலஇ ழுஉவழடிநச 21இ 2007 'ரமணா' பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை!! புதுச்சேரி: ரமணா படத்தில் வருவது போலஇ இறந்து போன சிறுமிக்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை செய்து பணம் கறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்இ வீரபோகம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மகள் சிந்துஜா (7). இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரிஇ காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சேர்த்தார் கொளஞ்சியப்பன். சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அருகில் உறவினர்கள் இருந்துள்ளனர். இரவு அவர்கள் வெளியே சென்றிருந்தபோதுஇ மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியை பிணவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் திடீரென்று உற…
-
- 0 replies
- 1k views
-
-
மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish) மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம். பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்…
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.1k views
-
-
சேதுத் திடல்கள் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் சேற்றுக் கரைசலாக, கலக்கல் நீராக, வளைந்து வளைந்து பாய்ந்து, கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. ஓடும் வழியில் வளைவுகளில் மணல் திட்டுகள் உருவாகின்றன. வெளிவளைவுகளில் நீர் ஓடும். உள் வளைவுகளில் மணல் சேரும், திடலாகும். கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திலும் சேற்றுக் கலக்கல் நீரின் மணல் குவிந்து திடல்களாகும், தீவுகளுமாகும், அக்கரைசலைக் கொணர்ந்த ஆற்று நீரோ கடலுடன் கலந்துவிடும். வெள்ளப் பெருக்குக் காலத்தில் இந்த மணல் திடல்களையும் தன்னுடன் இழுத்துச் சென்று கடலுக்குள்ளே ஆற்று நீர் புகும். முகத்துவாரத் திடல்களும் கரைந்துவிடும். உள்வளைவுத் திடல்களும் கரைந்துபோகும். வைகாசி ஆனியில் பெய்யும் பெரு மழையால் பெருகி ஓடும் ஆறுகளே …
-
- 0 replies
- 727 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி! மதுரை- செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007 : இலங்கையில் உணவு, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு உதவக்கோரி புதிய தமிழகம் சார்பில் கோட்டை நோக்கி அக் 6ம் தேதி பேரணி நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 9 தென் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு டிசம்பர் 15ல் மதுரையில் மண்டல மாநாடு நடத்தப்படும். அடுத்த ஆண்டு சென்னையில் மாநில மாநாடு நடத்தப்படும். இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்று…
-
- 4 replies
- 1.7k views
-
-
http://www.puthinam.com/full.php?2eZPtX00b...d430XG3b02qNO2e இது தவறான செய்தி.
-
- 1 reply
- 1.1k views
-
-
சாமியார்களுக்கு ரஜினி அறிவுரை சொல்ல வேண்டும்: கருணாநிதி புதன்கிழமை, அக்டோபர் 17, 2007 சென்னை: ராமருக்கும், எனக்கும் எந்த விரோதமும் இல்லை, எனவே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதீர்கள் என்று வட இந்திய சாமியார்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை கூற வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை சரி செய்து அது நிறைவேற முதல்வர் கருணாநிதி உதவ வேண்டும் என்று பேசினார். இதற்கு தனது பேச்சில் முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். முதல்வர் கருணாநிதி பேசுகையில், ராமர் குறித்து எனக்கு எந்தவித காழ்ப்புண…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாங்களாகவே பல்லைப் பிடுங்கும் பரிதாபம் : பிரிட்டன் மருத்துவ வசதி இப்படி... லண்டன் : பல் டாக்டர்களுக்கு பிரிட்டனில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல் வலியால் அவதிப்படும் நோயாளிகள் தங்களுடைய பற்களை தாங்களே பிடுங்கும் விசித்திரம் அரங்கேறி வருகிறது. பிரிட்டனில் மருத்துவ வசதி தேசிய சுகாதார சேவை என்ற திட்டத்தில் அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பில் பெயர்களை பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே உடல் நல பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியும். அதுவும் குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையில் சிறந்த டாக்டர் பற்றாக்குறை இன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிகிச்சைக் கட்டணம் கட்டி மாளாது. பல் சிகிச்சைக்கும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. இங்கு பல் டாக்டர்களுக்கு கடும் பற்…
-
- 8 replies
- 2.4k views
-
-
பெண்கள் மட்டுமே உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி உதயம் புதுடில்லி : இந்தியாவில் முதல் முறையாக பெண்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய பெண்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த கட்சியில் 100 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும், சமூக சேவகியுமான சுமன் கிருஷ்ணகாந்த் இக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சுமன் கிருஷ்ணகாந்த் கூறியதாவது:நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்…
-
- 1 reply
- 785 views
-
-
இலண்டன் Heatrow விமானநிலைய ஓடுபாதையில் சீறிலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சிறு விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.alertnet.org/thenews/newsdesk/L15236143.htm
-
- 9 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 936 views
-
-
இராமர் பாலப் பிரச்சினையும் உண்மையும் பேராசிரியர் பீம. தனஞ்செயன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே கடலில் மணல் திட்டுக்கல் உள்ளன. இப்பகுதி ஆதம் பாலம் (Adam's Bridge) என்று அழைக்கப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டம் என்பது, இந்த மணல் திட்டுகளின் நடுவே ஊடறுத்து கடலின் ஆழத்தை அதிகப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வதுதான். இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டியது இல்லை. இது நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்துக்கான தொலைவு குறையும்; பயணம் செய்வதற்கான செலவும் குறை யும். வாணிபம் செய்வதற்கு ஏற்ற நல்ல திட்டம். நமது பொருட்கள் வெளிநாடு களுக்குச் செல்லவும் வெளிநாட்டுப் பொருட்கள் நம் நாட்டிற்கு வரவும் ஆன வாணிபத் தொடர்பு நன்கு இருக்கும். …
-
- 1 reply
- 1.5k views
-
-
பெண்களிடம் சில்மிஷம் - ஜெயங்கொண்டம் கத்தோலிக்க பாதிரியாருக்கு 'சிறை' ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 14, 2007 தஞ்சாவூர்: நன்றி தட்ஸ்டமில் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொதுமக்கள் சர்ச்சுக்குள் சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன் பேட்டையில் வின்சென்ட் செபாஸ்டின் (51) என்ற பாதிரியார் அங்குள்ள பேராலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டையில் இருக்கும் லூர்து சகாய அன்னை பேராலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார். லூர்து சகாய அன்னை பேராலயத்திற்குட்பட்டு காவிரி தொண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அறுவைசிகிச்சை இல்லாமல் ``பின்கோல்'' என்று அழைக்கப்படும் நவீன இருதய அறுவை சிகிச்சை பற்றிய தேசிய மாநாடு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று (சனிக்கிழமை,) தொடங்குகிறது. நவீன இருதய அறுவை சிகிச்சை இருதய அறுவைசிகிச்சை 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை நடைபெறுவது உண்டு. இருதயத்தில் உள்ள கோளாறைப்பொருத்து அறுவை சிகிச்சை அமையும். மயக்க இருதய அறுவைசிகிச்சையில் பெரும்பாலும் இருதயத்தை நிறுத்தி விட்டு அறுவை சிகிச்சை செய்வது உண்டு. மயக்க மருந்து கொடுக்காமல் திறந்த நிலையில் (ஓப்பன் ஹார்ட் சர்ஜரி) இருதய அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன முறையில் பின்கோல் சர்ஜரி சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மேமாதம் முதல் செய்யப்பட்டுவருகிறது. விளக்கம் பின்கோல் சர்ஜரி என்பது தொடையில் ஊசி போ…
-
- 0 replies
- 1.1k views
-