உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
பப்புவா நாடாளுமன்றம் தீக்கிரை – இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! இந்தோனேசிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வந்த போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நிலையில், தன்னாட்சி பிராந்தியமான பப்புவாவின் தலைநகரான மனோக்வாரியில் (Manokwari) அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான பப்புவாவில் மாணவர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. டச்சு கொலனி மேலாதிக்கத்தின் கீழ் இருந்த குறித்த பிராந்தியம் கடந்த 1963 ஆம் ஆண்டு விடுதலை …
-
- 0 replies
- 341 views
-
-
ஐ.எஸ்.க்கு 60 மில்லியன் முஸ்லிம்கள் ஆதரவு இஸ்லாமிய ஆயுத அமைப்பு என தன்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு, உலகிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்தது 56 மில்லியன் முஸ்லிம்களின் ஆதரவு, அவ்வமைப்புக்கு உண்டு என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கருத்துக்கணிப்பு நிறுவனமான பி.ஈ.டபிள்யூ கருத்துக்கணிப்பு நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. லெபனான், இஸ்ரேல், பலஸ்தீனம், பேர்க்கினோ பாஸோ, நைஜீரியா, மலேஷியா, பாகிஸ்தான், துருக்கி, ஜோர்தான், இந்தோனேஷியா, செனகல் ஆகிய 11 நாடுகளிலேயே, இந்தக் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின…
-
- 0 replies
- 637 views
-
-
பிரித்தானிய மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம் : இந்திய அரசியல் தலைவர் மகனா? பிரித்தானிய மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞரின் சடலம் தெலுங்கானா மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவரின் மகனுடையதா என்ற ரீதியில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைகழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில் காணாமல் போன உஜ்வால் ஸ்ரீஹர்ஷா சன்னி (வயது 24) என்ற இளைஞருடையதா என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. இவர் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்ட பா.ஜ.க தலைவராக உள்ள ஹனி உதய் பிரதாப்பின் மகன் என தகவல்கள் வௌியாகியுள்ளன. இதனிடையே, கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இந்தியாவில் உள்ள பெற்றோரிடம் ஸ்ரீ ஹர்ஷா தொலைபேசி மூலம் உரையாடியுள்ள…
-
- 0 replies
- 370 views
-
-
ஹிட்லரின் கொலைப்பட்டியலில் சாப்ளின ஹிட்லரின் நாஜிப்படைகளிம் கொலை பட்டியலில் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இடம் பெற்றிருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1930ம் ஆண்டில் வெளியான ஜூடென் செஹன் டிக் ஆன் (ஜூவீஸ் ஆர் வாச்சிங் யு) என்ற நூல், அடுத்த மாதம் 6ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. இதில் இத்தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்ட டாக்டர் ஜோகன்வோன் லியர்ஸ் இதன் ஆசிரியர். நாஜிக்களின் ஆதரவு நூலாக கருதப்பட்ட இதில், யூத இன முக்கிய புள்ளிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில், கொல்லப்பட வேண்டிய கலைஞர்களின் பட்டியல் பிரிவில் சார்லி சாப்ளினையும் நாஜி அரசு சேர்த்திருந்ததாக, நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் ஒரு பிர…
-
- 0 replies
- 841 views
-
-
`உலகம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொள்கிறது' உலகம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொள்கிறது ரஷ்யா, மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையேயான முறன்பாடுகள், உலகை ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது என, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார். நேட்டோ, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக, ரஷ்யா அனேகமாக ஒவ்வொரு நாளும் புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதாக, மியுனிக்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் அவர் தெரிவித்தார். ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே வழமையான ஒத்துழைப்பு ஒன்றின் மூலமே, சிரியாவில் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார். http://www.bbc.com/tamil/glo…
-
- 0 replies
- 650 views
-
-
இறுதிப்போரில் சிறீலங்கா அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார். இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் …
-
- 0 replies
- 494 views
-
-
பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும் Posted on June 3, 2025 by தென்னவள் காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை வ…
-
- 0 replies
- 228 views
-
-
ஐக்கிய அமெரிக்க 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது போட்டியாளாரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் பிரசார முகாமின் மின்னஞ்சல்களை ரஷ்யா கசிய விடவில்லை என விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே மறுத்தால் அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்தார் என பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரான டனா றொஹ்ரபச்சர் மூலம் இவ்விடயத்தை ஜனாதிபதி ட்ரம்ப் வெளிப்படுத்தியதாக ஜூலியன் அசாஞ்சேயின் வழக்கறிஞர் ஜெனிஃபர் றொபின்ஸன் ஆவணமொன்றில் தெரிவித்ததாக பிரித்தானியாவின் உள்ளூர் ஊடகச் சங்க செய்தி முகவரகம் செய்தி வெளி…
-
- 0 replies
- 513 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு! ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்தநிலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா மற்றும் வட ஆபிரிக்காவுக்குச் சென்று நாடு திரும்பிய ஆஸ்த…
-
- 0 replies
- 284 views
-
-
காணாமல் போன ஜப்பான் சிறுவன் கண்டுபிடிப்பு தண்டனை என்ற பெயரில் பெற்றோரால் வனப்பகுதிக்குள் விடப்பட்டு, காணாமல் போன ஜப்பான் சிறுவன் 6 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டான். யமடோ டனூகா (கோப்புப்படம்) யமடோ டனூகா என்ற அந்த 7 வயது சிறுவன், வனப்பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சி முகாமில் இருந்தான். கற்களை வீசியதாகக் கூறி, அதற்கு தண்டனை வழங்க வனப்பகுதியில் சாலையோரம் அந்தச் சிறுவனை விட்டுச் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவனைக் காணவில்லை. பெற்றோரால் தனியாக விடப்பட்ட தான், வனப்பகுதிக்குள் தொடர்ந்து நடந்து சென்றதாகவும், வனப்பகுதிக்குள் ஒரு குடில் இருந்ததைப் பார்த்து அங்கு சென்றுவிட்டதாகவும் அச் ச…
-
- 0 replies
- 319 views
-
-
கொவிட் - 19 வைரஸ் மனிதனால் உருவாக்கப்படமுடியாதது : வூஹான் ஆய்வுகூட பணிப்பாளர் கூறுவது இதுதான் ! புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று கூறப்படுவதால் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் மத்திய சீன நகரான வூஹானில் அமைந்திருக்கும் முக்கியமான நோய்நுண்மவியல் ஆய்வுகூடம் (Chinese Virology Laboratory) இந்த ஆட்கொல்லி வைரஸ் அங்கிருந்து தோன்றி உலகம்பூராவும் பரவி பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை முதற்தடவையாக மறுத்திருக்கிறது. புதிய கொரோனாவைரஸின் தோற்றுவாய் என்று இந்த ஆய்வுகூடத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட பலர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவைரஸ் தொற்றுநோயை கையாண்ட முறையில் ஔிவுமறைவின்றி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக ச…
-
- 0 replies
- 349 views
-
-
மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் மரணதண்டனையை ஒழிப்போம்: நடிகை ரோகிணி உரை இராசீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூன்று தமிழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் அனைவரது தூக்குத்தண்டனையையும் இரத்து செய்யக்கோரியும் மரண தண்டனையை ஒழிக்கக்கோரியும் போராடி வரும் மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதியரசர் கிருஷ்ணய்யர் 98 அகவை பிறந்த நாள்" நிகழ்வில் பிரபல வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி, பேராயர் சின்னப்பா, நடிகை ரோகிணி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் பல மனிதநேய ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாடகர…
-
- 0 replies
- 514 views
-
-
சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்! சுவிஸில் நாளொன்றுக்கு சுமார் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சுவிஸில் மாத்திரம் தினமும் 3.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுவதாக பெடரல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவ துறையில் மட்டும் 1.5 முதல் 2 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளுக்கு செல்லும் மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்துகின…
-
- 0 replies
- 213 views
-
-
இரண்டாம் உலகப் போரில் பெரும் திருப்பு முனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் சண்டை முடிவுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதற்கான நினைவு தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் தலைமையில் அனுட்டிக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த இந்தச் சண்டையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்டாலின் இறந்த பிறகு இந்த நகருக்கு ''வொல்கோகிராட்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், உள்ளூர் கவுன்ஸில் மீண்டும் இதனை ஸ்டாலின்கிராட் என்று இந்தப் போரின் நினைவு தினங்களின் போது அழைப்பதற்கான அனுமதியை அங்கீகரித்தது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன்னாள் இராணுவ தளபதிகள் மாத்திரமல்லாமல், சில ஜேர்மனிய இராணுவ மூத்த அதிகாரிகளும் …
-
- 0 replies
- 511 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * போரால் பாதிக்கப்படும் பிஞ்சுகள்; யெமெனில் பட்டினிக்கு பலியாகும் குழந்தைகள்; பதினைந்துலட்ச குழந்தைகள் உணவின்றி பரிதவிப்பு; பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * அரைமணிக்கு ஒரு புதிய காற்றாலை மின்கோபுரம் கட்டி சீனா சாதனை; ஆனால் நிலக்கரி சார்பிலிருந்து மீள சீனாவால் முடியுமா?
-
- 0 replies
- 246 views
-
-
ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில் மூழ்கிப் பலி ஐரோப்பாவிற்கு செல்லும் வழியில் குடியேறிகள் சென்ற படகு ஒன்று சிக்கலுக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் நூறு பேர் காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளது. கோப்புப்படம் பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த வெறும் 20 குடியேறிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இந்த ரப்பர் படகு புறப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து படகு புதன் கிழமையன்று மூழ்கிப் போனது. மத்திய தரைக்கடலிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆ…
-
- 0 replies
- 346 views
-
-
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன்பு, மோடி ஒழிக்க வேண்டியது எதை...? ( வீடியோ) காதலில், எப்படி நல்ல காதல்... கள்ளக்காதல் கிடையாதோ, அப்படிப் பணத்திலும் நல்ல பணம்... கறுப்புப் பணம் என்பது கிடையாது... பிறகு, நம் நாட்டில் கறுப்புப் பணம் தோன்றியது எதனால்... யாரால்? 1,000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தால் மோடியால், கறுப்புப் பணத்தை உருவாக்கும் கறுப்பு உயிர்களைத் தடுக்க முடியுமா? நம் அருகிலே இருக்கும் அந்தக் கறுப்பு உயிர்கள் இப்போது எப்படி எல்லாம் தப்பிக்க முயல்வார்கள்? மோடியின் இந்த நடவடிக்கையைக் கறுப்புப் பணம் வைத்திருக்கும் சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் ஆதரிப்பது ஏன்? மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தற்போது நட்டாற்றில் ந…
-
- 0 replies
- 468 views
-
-
பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.கராச்சி தொகுதியில் போட்டியிட, பிந்தியா ராணா என்பவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய பிந்தியா ராணா, பாகிஸ்தான் அரசியல் பற்றி நான் இதுவரை கவலைப்பட்டதில்லை. ஆனால், தேர்தலில் மாபியா, மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மட்டும் போட்டியிடும் போது பொது மக்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருதியே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாகிஸ்தானில் திருநங்கைகள் அனுபவிக்கும் கஷ்டங்களை எடுத்துரைப்பேன் என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=80526&category=WorldNews&language=tami…
-
- 0 replies
- 308 views
-
-
70 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட Jpeg புகைப்படம் - அதில் அப்படி என்ன இருக்கிறது? #NFTCrypto ஜெனிஃபர்.ம.ஆ Everydays: The First 5000 Days கிரிப்டோகரன்சி கொடுத்து ஒரு விர்ச்சுவல் சொத்தை வாங்குவது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. ஆயிரம் இரண்டாயிரம் என்றில்லாமல் மில்லியன்களில் இந்த என்.எஃப்.டி-க்களின் விற்பனை நடக்கிறது. #Everydays: The First 5000 Days நெருப்பு, சக்கரம், மின்சாரம்... இந்த வரிசையில் மனித குலத்தின் வளர்ச்சியில் அசுர பாய்ச்சல் ஏற்படுத்திய விஷயம் இணையம். சில நூறாண்டுகளுக்கு முன்புவரை, மின்சார ஆற்றலை பற்றி யாரேனும் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்காது. ஐம்பதாண்டுகளுக்கு முன்வரை வயர்லெஸ் செல்போன் ப…
-
- 0 replies
- 474 views
-
-
அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் – தமிழில் ஜெயந்திரன் 154 Views ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் ஐக்கிய இராச்சியம் 1951 இல் ஒப்பமிட்டதிலிருந்து, போரிலிருந்தும், பல்வேறு துன்புறுத்தல்களிலிருந்தும், பயங்கரவாத தாக்குதல்களிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகத் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறி, எமது நாட்டைத்தேடி வந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இங்கு குடியிருப்பதற்கான ஒரு வாய்ப்பை எமது நாடு வழங்கியிருக்கிறது. தாம் செலுத்த வேண்டிய வரிகளை ஒழுங்காகச் செலுத்தி, எமது சமூகத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கி, மாண்புமிக்க குடிமக்களாக அவர்கள் தற்போத…
-
- 0 replies
- 337 views
-
-
இஸ்ரேல்... எதிர் காலத்தில், அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும்: ஈரானிய உயர் தளபதி எச்சரிக்கை! சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் இஸ்ரேலிய அணு உலைக்கு அருகே தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் எதிர்காலத்தில் அதன் வளங்களுக்கு அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என்று ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்தார். இஸ்ரேல் தொடர்ந்து தனது வளங்களைத் தாக்கினால் ஈரான் எவ்வாறு பதிலளிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி முகமது பாகேரி, ஈரானிய பதிலின் தன்மை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ‘சியோனிச ஆட்சி எளிதில் ஓய்வெடுக்காது’ என கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரிய மண்ணில் இலக்…
-
- 0 replies
- 305 views
-
-
டெல்லி: 1 ரூபாய் செலவிலேயே ஒருவரால் வயிறார சாப்பிட முடியும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு மக்களின் கோப தீயினை தூண்டிவிட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த மத்திய திட்டக்குழு, கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் எனக் கூறியது. மத்திய திட்டக்குழுவின் இந்த அறிவிப்புக்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில், திட்டக்குழுவ…
-
- 0 replies
- 572 views
-
-
விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து அவரது ஆதரவாளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள்,இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25).இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயில் உள்ள நோபல் பரிசு அறக்…
-
- 0 replies
- 334 views
-
-
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகும் வரை தமிழகத்தில் நடைபெறும் எந்த பாஜக கூட்டத்திலும், மாநாட்டிலும் தலை காட்ட வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாம். இந்த உத்தரவின் காரணமாகவே திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்துக்குக் கூட சாமியைக் கூப்பிடவில்லையாம். இதனால் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம் சுப்பிரமணியம் சாமி. பாஜகவில் சாமி ஜனதாக் கட்சிக்காரரான சாமி, சமீபத்தில்தான் பாஜக கூட்டணியில் இணைந்தார். இணைந்தது முதலே அவருக்கு சோதனை அதிகமாகவே இருக்கிறதாம். வாஸ்து ஓ.கே.. ஆனால் வாய் சரியில்லையே...! சுப்பிரமணியம் சாமி கட்சிக்கு வந்ததெல்லாம் சரிதான்... ஆனால் அவரது வாய் சரியில்லையே என்று தமிழக பா…
-
- 0 replies
- 815 views
-
-
மூணாறு: தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற நிர்பந்தித்து வருவதாக கேரளா மாநில அரசு மீது தமிழக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். ஆதிவாசிகளின் நிலம் என்று பொய்யான சாயம் பூசி விரப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது அட்டப்பாடி மலைப்பகுதி. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு இருந்தே, அட்டப் பாடி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். அட்டப்பாடியில் இப்போது 15 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். 200-க்கும் அதிகமான ஆதிவாசி மலைக் கிராமங்களை உள்ளடக்கிய அட்டப்பாடியில் ஆதிவாசிகளின் இடங்களை விலைக்கு வாங்கி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னை, வாழை,…
-
- 0 replies
- 874 views
-