Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் வீடு முன் போராட்டம்- டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு சனிக்கிழமை, அக்டோபர் 20, 2007 சென்னை: இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறார்கள். எனினும் இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழக அரசியல் கட்சிகள் அவ்வப்போது ஓங்கி குரல் கொடுப்பதும், அனுகூலம் ஏற்படாது என்று கருதும்போது ஆதரவு குரலை கைவிடுவதும் என இரட்டை போக்கை கடைபிடித்து …

  2. ளுரனெயலஇ ழுஉவழடிநச 21இ 2007 'ரமணா' பாணியில் இறந்த சிறுமிக்கு சிகிச்சை!! புதுச்சேரி: ரமணா படத்தில் வருவது போலஇ இறந்து போன சிறுமிக்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை செய்து பணம் கறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்இ வீரபோகம் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மகள் சிந்துஜா (7). இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரிஇ காலாப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சேர்த்தார் கொளஞ்சியப்பன். சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு அருகில் உறவினர்கள் இருந்துள்ளனர். இரவு அவர்கள் வெளியே சென்றிருந்தபோதுஇ மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியை பிணவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் திடீரென்று உற…

  3. மாறுங்கள், இல்லை மடிந்து போவீர்கள் ( Change else Perish) மாற்றங்கள்தான் ஒரு மனிதனை, சமுதாயத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. மாற்றங்கள் இல்லையெனில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருப்போம். பல நேரங்களில், மாற்றங்கள் நம்மீது திணிக்கப்படுகின்றன. இது காலத்தின் கட்டாயம். நாம்தான் சுதேசி இயக்கம் என்று கூறி வெளிநாட்டுத் துணிகளை ஒதுக்கினோம். ஆனால் இன்று எத்தனை பேர் கதராடை அணிகிறார்கள்? இன்று உள்நாட்டில் வெளி நாட்டு தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட செயற்கை நூலிழை ஆடகளைத்தான் அணிகிறோம். நாம் இப்போது சுதேசி ஆடையை அணிகிறோமா? இல்லை வெளிநாட்டு ஆடையை அணிகிறோமா? விடை சொல்வது கடினம். மாட்டு வண்டிகளில் இருந்து டொயோட்டோவுக்கும், ஷெவெர்லேக்கும், போர்சேவுக்கும், பிம்டபில்யுவுக்…

    • 4 replies
    • 1.9k views
  4. தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  5. சேதுத் திடல்கள் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் சேற்றுக் கரைசலாக, கலக்கல் நீராக, வளைந்து வளைந்து பாய்ந்து, கடலை நோக்கி ஓடுகிறது ஆறு. ஓடும் வழியில் வளைவுகளில் மணல் திட்டுகள் உருவாகின்றன. வெளிவளைவுகளில் நீர் ஓடும். உள் வளைவுகளில் மணல் சேரும், திடலாகும். கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத்திலும் சேற்றுக் கலக்கல் நீரின் மணல் குவிந்து திடல்களாகும், தீவுகளுமாகும், அக்கரைசலைக் கொணர்ந்த ஆற்று நீரோ கடலுடன் கலந்துவிடும். வெள்ளப் பெருக்குக் காலத்தில் இந்த மணல் திடல்களையும் தன்னுடன் இழுத்துச் சென்று கடலுக்குள்ளே ஆற்று நீர் புகும். முகத்துவாரத் திடல்களும் கரைந்துவிடும். உள்வளைவுத் திடல்களும் கரைந்துபோகும். வைகாசி ஆனியில் பெய்யும் பெரு மழையால் பெருகி ஓடும் ஆறுகளே …

  6. இலங்கைத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி! மதுரை- செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007 : இலங்கையில் உணவு, மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு உதவக்கோரி புதிய தமிழகம் சார்பில் கோட்டை நோக்கி அக் 6ம் தேதி பேரணி நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மதுரையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் 9 தென் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு டிசம்பர் 15ல் மதுரையில் மண்டல மாநாடு நடத்தப்படும். அடுத்த ஆண்டு சென்னையில் மாநில மாநாடு நடத்தப்படும். இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்று…

  7. http://www.puthinam.com/full.php?2eZPtX00b...d430XG3b02qNO2e இது தவறான செய்தி.

  8. சாமியார்களுக்கு ரஜினி அறிவுரை சொல்ல வேண்டும்: கருணாநிதி புதன்கிழமை, அக்டோபர் 17, 2007 சென்னை: ராமருக்கும், எனக்கும் எந்த விரோதமும் இல்லை, எனவே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதீர்கள் என்று வட இந்திய சாமியார்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை கூற வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை சரி செய்து அது நிறைவேற முதல்வர் கருணாநிதி உதவ வேண்டும் என்று பேசினார். இதற்கு தனது பேச்சில் முதல்வர் கருணாநிதி பதிலளித்தார். முதல்வர் கருணாநிதி பேசுகையில், ராமர் குறித்து எனக்கு எந்தவித காழ்ப்புண…

  9. தாங்களாகவே பல்லைப் பிடுங்கும் பரிதாபம் : பிரிட்டன் மருத்துவ வசதி இப்படி... லண்டன் : பல் டாக்டர்களுக்கு பிரிட்டனில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல் வலியால் அவதிப்படும் நோயாளிகள் தங்களுடைய பற்களை தாங்களே பிடுங்கும் விசித்திரம் அரங்கேறி வருகிறது. பிரிட்டனில் மருத்துவ வசதி தேசிய சுகாதார சேவை என்ற திட்டத்தில் அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பில் பெயர்களை பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே உடல் நல பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியும். அதுவும் குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையில் சிறந்த டாக்டர் பற்றாக்குறை இன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிகிச்சைக் கட்டணம் கட்டி மாளாது. பல் சிகிச்சைக்கும் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது. இங்கு பல் டாக்டர்களுக்கு கடும் பற்…

    • 8 replies
    • 2.4k views
  10. பெண்கள் மட்டுமே உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி உதயம் புதுடில்லி : இந்தியாவில் முதல் முறையாக பெண்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய பெண்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த கட்சியில் 100 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் மனைவியும், சமூக சேவகியுமான சுமன் கிருஷ்ணகாந்த் இக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சுமன் கிருஷ்ணகாந்த் கூறியதாவது:நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்…

  11. இலண்டன் Heatrow விமானநிலைய ஓடுபாதையில் சீறிலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சிறு விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.alertnet.org/thenews/newsdesk/L15236143.htm

    • 9 replies
    • 2.9k views
  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. இராமர் பாலப் பிரச்சினையும் உண்மையும் பேராசிரியர் பீம. தனஞ்செயன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே கடலில் மணல் திட்டுக்கல் உள்ளன. இப்பகுதி ஆதம் பாலம் (Adam's Bridge) என்று அழைக்கப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டம் என்பது, இந்த மணல் திட்டுகளின் நடுவே ஊடறுத்து கடலின் ஆழத்தை அதிகப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வதுதான். இத்திட்டம் நிறைவேறினால் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டியது இல்லை. இது நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்துக்கான தொலைவு குறையும்; பயணம் செய்வதற்கான செலவும் குறை யும். வாணிபம் செய்வதற்கு ஏற்ற நல்ல திட்டம். நமது பொருட்கள் வெளிநாடு களுக்குச் செல்லவும் வெளிநாட்டுப் பொருட்கள் நம் நாட்டிற்கு வரவும் ஆன வாணிபத் தொடர்பு நன்கு இருக்கும். …

  14. பெண்களிடம் சில்மிஷம் - ஜெயங்கொண்டம் கத்தோலிக்க பாதிரியாருக்கு 'சிறை' ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 14, 2007 தஞ்சாவூர்: நன்றி தட்ஸ்டமில் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொதுமக்கள் சர்ச்சுக்குள் சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன் பேட்டையில் வின்சென்ட் செபாஸ்டின் (51) என்ற பாதிரியார் அங்குள்ள பேராலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டையில் இருக்கும் லூர்து சகாய அன்னை பேராலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார். லூர்து சகாய அன்னை பேராலயத்திற்குட்பட்டு காவிரி தொண்…

    • 0 replies
    • 1.1k views
  15. அறுவைசிகிச்சை இல்லாமல் ``பின்கோல்'' என்று அழைக்கப்படும் நவீன இருதய அறுவை சிகிச்சை பற்றிய தேசிய மாநாடு மியாட் ஆஸ்பத்திரியில் இன்று (சனிக்கிழமை,) தொடங்குகிறது. நவீன இருதய அறுவை சிகிச்சை இருதய அறுவைசிகிச்சை 4 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை நடைபெறுவது உண்டு. இருதயத்தில் உள்ள கோளாறைப்பொருத்து அறுவை சிகிச்சை அமையும். மயக்க இருதய அறுவைசிகிச்சையில் பெரும்பாலும் இருதயத்தை நிறுத்தி விட்டு அறுவை சிகிச்சை செய்வது உண்டு. மயக்க மருந்து கொடுக்காமல் திறந்த நிலையில் (ஓப்பன் ஹார்ட் சர்ஜரி) இருதய அறுவை சிகிச்சை செய்யாமல் நவீன முறையில் பின்கோல் சர்ஜரி சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த மேமாதம் முதல் செய்யப்பட்டுவருகிறது. விளக்கம் பின்கோல் சர்ஜரி என்பது தொடையில் ஊசி போ…

    • 0 replies
    • 1.1k views
  16. அல்கோர், பச்சோரிக்கு நோபல் பரிசுFriday, 12 October, 2007 03:02 PM . ஓஸ்லோ,அக்.12: 2007ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல்கோருக்கு வழங்கப்படுகிறது. பருவ நிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழு (ஐபிசிசி) என்னும் சர்வதேச அமைப்போடு இந்த பரிசை அவர் பகிர்ந்துகொள்கிறார். ஐபிசிசி அமைப்பின் தலைவராக இந்தியாவை சேர்ந்த டாக்டர் ராஜேந்திர குமார் பச்சோரி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு ஸ்வீடனில் உள்ள நோபல் பவுண்டேஷனால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அமைதி விருது மட்டும் நார்வே நாட்டால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இதுவரை மருத்துவம், வேதியியல் மற்றும் பௌதீகம் மற்…

  17. மூலம்: http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7037890.stm சிட்டுவே எனும் துறைமுகத்தை புனரமைக்கும் ஒப்பந்தம் ஒன்றில் பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களுடன் இந்தியா விரைவில் கைச்சாத்திடவுள்ளது. இதன் முலம் இந்தியாவின் பின்தங்கிய வடகிழக்கு மாநிலங்களுக்கான பொருட் போக்குவரத்திற்கு மலிவான மார்க்கம் கிடைக்கவுள்ளது. இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக இந்தத் திட்டத்தில் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா இத்திட்டத்தில் முதலீடு செய்கின்றது. இப் பிரதேசத்தில் தன் நலன் கருதியே டெல்லி அரசாங்கம் பர்மாவின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கருத்துத்தெதனையும் தெரிவிக்க பின்னடித்து வருகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு நாட…

  18. புலிகளுக்காக நார்வேயிலிருந்து சென்னைக்கு வந்த கருவிகள்: வி.சி. பிரமுகர் கைது வியாழக்கிழமை, அக்டோபர் 11, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த உதவி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டுள்ளார். க்யூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து கடல் வழியாக ஆயுதங்களும் உதிரிப் பாகங்களும் கடத்தப்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறையான ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து வன்னியரசுவின் பெயருக்கு நார்வே நாட்டில் இருந்து இரண்…

  19. ஒட்டோமன் துருக்கிய அரசாங்கத்தால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் (1915-1917களில்) ஆர்மீனிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டமையை "இனப் படுகொலையாக" அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. சேது சமுத்திரத் திட்டம், மதப் பிரச்னையாகி பந்த், போராட்டம் என்று பூதாகரமாகியுள்ள நிலையில், துக்ளக் ஆசிரியர் சோவைச் சந்தித்தோம். தனக்கேயுரிய பாணியில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்துவைத்தார் அவர். பாரதிய ஜனதாவின் வேதாந்தி ‘தலையைக் கொண்டு வா’ என்கிறார். பதிலுக்கு தி.மு.க. வன்முறையில் இறங்குகிறது. இரண்டு தரப்பினரையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ‘‘இரண்டுமே இரண்டு காட்டுமிராண்டித்தனம். வேதாந்தி கொடுத்த மறுப்பு இன்னமும் மோசம். கடவுள் இல்லை என்று பேசுகிறவர்கள் கழுத்தையாவது, நாக்கையாவது வெட்டவேண்டுமென்று பகவத் கீதையில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார். அந்த மாதிரி கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. பகவத்கீதையில் இல்லாத ஒரு வக்ரமான விஷயத்தை இப்படி அவர் சொல்வதே கூட இந்த…

  21. Started by mathanarasa,

    கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர் பாலத்தை நம்பாதது ஏன்? - விஜயகாந்த் கேள்வி சென்னை, செப்.22: கண்ணகி மதுரையை எரித்ததை நம்புவீர்கள், ராமர் பாலம் கட்டியதை நம்ப மாட்டீர்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பி.எஸ்.சேகர் தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3,000 பேர் தே.மு.தி.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதால்தான் இங்கு வந்துள் ளீர்கள். வேலையில்லா திண்டாட்டம், ஊழலை அவர்கள் ஒழிக்கவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று நான் தைர…

    • 59 replies
    • 10.1k views
  22. சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது. இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது. திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். * ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது! இது எத்தனை சத …

  23. சேதுக் கால்வாய் தமிழரின் வளர்ச்சிக்கு வாய்க்கால் இலங்கைத் தீவைச் சுற்றிய நெடிய, கால நீட்டமான கப்பல் தடத்துக்கு மாற்றுத் தடம் இந்தியக் கரையோரமாக உள்ளதா என்ற தேடல் கடந்த 200 ஆண்டு வரலாறுடையது. ஆங்கிலேயர் காலத்தில் 9, விடுதலைக்குப் பின் 7 ஆக, 16 வல்லுநர் குழுக்கள் தந்துவந்த பரிந்துரைகளின் திரண்ட தெளிவே இன்றைய சேதுக் கால்வாய்த் திட்டம். வங்காள விரிகுடாவுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிட்ட கடல் தரையானது, 1000 மீ. ஆழத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது. தமிழத்துக்கும் இலங்கைக்கும் இடையே 916 மீ. சராசரி ஆழமுள்ள, 10,000 சதுர கிமீ. பரப்புள்ள மேடையாகிப் பாக்கு நீரிணையைத் தாங்கி நிற்கிறது. பாக்கு நீரிணையின் அயல்கடல் நீரோட்டங்கள், அதன் வட தென் விளிம்புகளை நீள் திடல்களாக்கின. கப்…

  24. நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது வீரகேசரி இணையத்தளம் ஆசிய பசுபிக் வலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிநாவீன வேவு பார்க்கும் விமானத் தொழினுட்பத்தை இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளுடன் பகிரவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளிடையே உத்தியார்பூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குளோபல் ஹெவாக் எனும் இவ் அதி நவீன வேவு விமானம் 2001 செப்டம்பர் 11ம் திகதிக்கு பின் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விமானம் துல்லியமாக இலக்குகளை 65,000 அடி உயரத்திலிருந்து 35 மணித்தியாலங்கள் வரை வேவு பார்க்கவுள்ளது. அத்துடன் சேகரித்த தரவுகளை விரைவாக தரைப்படைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.