Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2023 | 09:22 AM அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சியாட்டில் தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான வைத்தியர் ஜேம்ஸ் குல்லி தெரிவிக்கையில், "புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும். பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெ…

  2. Published By: SETHU 26 JUN, 2023 | 09:15 AM சிரியாவில் ரஷ்யா நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என யுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரு சிறார்கள் உட்பட 9 பொதுமக்களும் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள சந்தையொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வருடம் சிரியாவில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட ரஷ்ய தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் நடத்தி…

  3. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜெர்மனியை சேர்ந்த பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர இராக் மற்றும் சிரியாவுக்கு பயணித்தது தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளன (கோப்பு படம்) கட்டுரை தகவல் எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி,பிபிசி செய்திகள் 25 ஜூன் 2023, 07:00 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்த ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குர்தி மொழி பேசும் யாஸதி மதத்தைச் சேர்ந்த சிறுபா…

  4. ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 07:12 AM ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை வெளியிடுகின்றது. ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர…

  5. கட்டுரை தகவல் எழுதியவர்,ரெபெக்கா மோரெல், ஆலிசன் ஃபிரான்சிஸ், கேரெத் எவான்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 32 நிமிடங்களுக்கு முன்னர் ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கியில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்ததன் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. இதற்கிடையே அந்த நீர்மூழ்கி தொடர்பான எச்சரிக்களை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என்று அதன் தலைமை செயல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக மின்னஞ்சல் தகவல்கள் காட்டுகின்றன. ஓஷன்கேட் நிறுவனத்தினுடைய டைட்டன் நீர்மூழ்கியின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கைகளை அந்த நிறுவனத்தின் தலைவரால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக, ஒரு முன்னணி ஆழ்கடல் ஆய்வுப் பயண வல்லுநருடனான மின்னஞ்சல்…

  6. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 24 ஜூன் 2023, 02:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டைட்டானிக் கப்பலை தேடிச் சென்ற ‘டைட்டன் நீர்மூழ்கியின்’ உள்ளிருந்தே வெடிப்பு நிகழ்ந்து விபத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலின் மேற்பரப்பிலிருந்து 4000 மீட்டர் ஆழத்திற்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அங்கே பல அசம்பாவிதங்கள் நடக்கலாம். மிகக் குறிப்பாக டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் பொதிந்து கிடக்கின்றன. அத்தனை பெரிய ஆழத்திற்குள் சூரிய ஒளிகளால் ஊடுருவ முடியாது. இதனால் இப்பகுதியை ‘midnight zone’ என்…

  7. ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரில் முன்னின்று போராடிவரும் ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை பெரும்பாலான களங்களில் உக்ரேனிய ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதுடன் பல முக்கிய களங்களையும் ரஸ்ஸியாவுக்காக கைப்பற்றி வந்திருக்கிறது. அண்மைய சில மாதங்களாக வாக்னர் படைப்பிரிவின் தலைவர் ப்ரிகோஷின் தனது படைகளுக்கு தருவதாக ரஸ்ஸிய உறுதியளித்த வளங்களை கிரமமாகத் தருவதில்லையென்றும், ரஸ்ஸிய உயர் பாதுகாப்புப் பீடம் தனது படைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறிவந்தார். வாக்னர் தலைவருக்கும் ரஸ்ஸிய ராணுவ உயர்பீடத்திற்கும் இடையிலான இந்த முறுகல் நிலை நேற்று முக்கிய திருப்பம் ஒன்றினை அடைந்தி…

  8. செயற்கை இறைச்சிக்கு அமெரிக்கா பச்சைக் கொடி கொழுப்பு, எலும்பு இல்லாமல் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் கோழி இறைச்சிக்கு சிங்கப்பூரைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் தற்போது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. கோழியைக் கொல்லாமல், அதன் இறைச்சியிலோ அல்லது கருமுட்டையில் இருந்தோ பிரித்தெடுக்கப்படும் செல்களுக்கு ஊட்டச்சத்து செலுத்தி உருவாக்கப்படும் இவ் இறைச்சியானது முதன்முதலில் சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்தே தற்போது அமெரிக்க அரசும் அதனை உற்பத்தி செய்து விற்க 2 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த இறைச்சி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டது என்பதை வாடிக்கை…

  9. டைட்டானிக்கின் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியிலிருந்த அனைவரும் உயிரிழப்பு – அமெரிக்க கடற்படை Published By: Rajeeban 23 Jun, 2023 | 05:44 AM டைட்டானிக் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. டை;டானிக்கின் சிதைவுகளுக்கு அருகில் நீர்மூழ்கியின் சிதைவடைந்த ஐந்து பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ரியர்அட்மிரல் ஜோன் மகுவர் உறுதிசெய்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு பேரழிவு வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என கருதக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். நீர்…

  10. கூண்டுச் சண்டைக்கு மஸ்க், ஸக்கர்பேர்க் தயார்! இடத்தையும் அறிவித்தார் மஸ்க் Published By: Sethu 23 Jun, 2023 | 10:16 AM டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க்கும் கூண்டுச் சண்டையில் மோதுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். டுவிட்டரும் பேஸ்புக்கும் உலகின் முன்னிலை சமூக வலைத்தளங்கள். ஒன்றுக்கு ஒன்று போட்டியானவையாகவும் கருதப்படுகின்றன. தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரர்களான் இலோன் மஸ்க்கும், மார்க் ஸக்கர்பேர்கும் அரசியல், செயற்கை நுண்ணறிவு உட்பட பல விடயங்களில் எதிரெதிரான அபிப்பிராயங்களை வ…

  11. உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியல் அவுஸ்திரேலியாவின் டெர்வெண்ட் ஆற்றில் 3 பாகை செல்சியஸ் உறையும் நீரில் 2000 பேர் நிர்வாணக் குளியளில் ஈடுபட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 22-ஆம் திகதி, ஆண்டிலேயே குறைந்த பகல் பொழுதை கொண்ட நாள் என்பதால் அதனை கொண்டாடும் விதமாக, கடந்த பத்தாண்டுகளாக இவ்விநோத செயலில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1335979

    • 1 reply
    • 666 views
  12. பெண் கைதிகளால் வெடித்த மோதல்; 41 பேர் உயிரிழப்பு மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் (Honduras) ,தாமரா (Tamara)பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்துள்ளது. இதில் 41 பெண் கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் எனவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1335807

  13. பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM படக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திரா ராவ் பதவி,பிபிசி செய்திகள் 55 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் சவக்கிடங்கின் மேலாளர் பல ஆண்டுகளாக மனித உடல் உறுப்புக்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் செயல்படும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் பிணவறையில் இருந்து இந்த உடல் உறுப்புக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். அந்த பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் இருந்து மனித உறுப்புகள் சட்டவிரோதமாகத் திருடப்பட்டு, பின்னர் விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விற்பனை தொடர்பாக ஹார்வர்ட் மருத்துவ…

  15. Published By: SETHU 19 JUN, 2023 | 05:54 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பிரதேசத்தில் இஸ்ரேலிய படையினர் இன்று நடத்திய முற்றுகையில் பலஸ்தீனியர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த மோதல்களில் இஸ்ரேலிய படையினர் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர் மூலமும் இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. 4 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 61 பேர் வன்முறைகளில் காயடைந்தனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 15 வயதான அஹ்மத் சகீர் என்பவரும் கொல்லப்பட்டதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது, கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அபு சாரியா (29) தனது…

  16. பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுச் செயலளர் ஆண்டனி பிளிங்கென், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை திங்கட்கிழமையன்று (ஜூன் 19) சந்தித்தார். சீன தலைநகர் பீஜிங்கில் இச்சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பிற்குப் பிறகு, ஜின்பிங், “இருதரப்பும் சில குறிப்பிட்ட விஷயங்களில் முன்னேற்றத்தையும் ஒப்புதலையும் எட்டியிருக்கின்றன. இது மிக நல்ல விஷயம்,” என்று கூறியிருக்கிறார். மேலும், ஜின்பிங், “இச்சந்திப்பின் மூலம் அமெரிக்கா-சீனா உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கு பிளிங்கென் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளைச் செய்வார் என்று நம்புகிறேன்,” என்றார். நாடுகளுக்கிடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் …

  17. Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 11:01 AM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட் அனுமதியளித்துள்ளது. செனெட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜனவாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்கவேண்டும்,இரண்டுமுதல் ஆறுமாதங்களிற்குள் அவர் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் . பிரதமர் ஒக்டோபரில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுபம் கிஷோர் பதவி,பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு நிகராக வளரத் துடிக்கும் சீனா உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது. இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் செல்வாக்கு பெருகி வருகிறது. இது இந்தியாவுக்கு எந்த வகையில் நெருக்கடியை ஏற்படுத்தும்? சௌதி அரேபியா மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் 7 ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சந்தித்துகொண்டனர். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இவ்விரு நாடுகளையும் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பல ஆண்டு…

  19. பட மூலாதாரம்,CITY OF MESA 18 ஜூன் 2023 அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ‘மெஸா’ என்ற சுற்றுலா தளம், ஆட்டிஸம் குறைபாடு உடையவர்கள் எந்தவொரு அசௌகரியமும் இன்றி சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதற்கு வழிகாட்டியாக இருந்தவர் ‘விசிட் மெஸா’ (visit mesa) சுற்றுலா பணியகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் கார்சியா. கடந்த 2018ஆம் ஆண்டு, மார்க் காசியா, ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனுடன் குடும்ப சுற்றுலாவிற்கு சென்றிருந்தார். ஆனால் அங்கே அவருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனை அங்கே அனைவரும் வினோதமாக பார்ப்பதும், சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் தனது மகனிடம் பொறுமையின்மையை கடைபிடித்ததும் அவ…

  20. இப்படி ஒரு இனங்களுக்கான மோதலை என் வாழ்நாளில் நான் யேர்மனியில் பார்த்ததில்லை” என யேர்மனிய பொலீஸ் அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். Nordrhein-Westfalen மாநிலத்தில் எசன் நகரில் சிரியா, லெபனான் இனக் குழுக்களிடயில் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் மோதல் ஒன்று இடம் பெற்றிருந்தது . ஆரம்பத்தில் 70 முதல்80 வரையிலானோர் வரையில் பங்கு பற்றிய இந்த மோதல் 500 பேருக்கு மேலானோர் பங்கு பற்றும் அளவுக்கு விரவடைந்திருந்தது. எசன் நகரில் ஒரே குடியிருப்பில் வசிக்கும்இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவே 16.06.2023 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் இரத்தக் களறியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சிறார்களுக்கிடையில் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையே அடிப்படையானது என அ…

  21. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஸ்ய ஜனாதிபதி புட்டினிடம் கோாிக்கை விடுத்துள்ளாா். உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்டையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்ரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆபிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தென் ஆபிரிக்கா, எகிப்து, செனகல், கொங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆபிரிக்க குழு, தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா தலைமையில் உக்ரைன் சென்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இதனையடுத்து ரஸ்யாவுக்கு சென்ற குறித்த ஆபிரி…

  22. பாராளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவுஸ்திரேலிய பாராளுமன்ற எம்.பி கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற எம்.பி .லிடியா தோர்ப். இவர், சக எம்.பி.யான டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டை பாராளுமன்ற அவையில் முன்வைத்திருக்கிறார். பாராளுமன்ற அவையில் கண்ணீர் மல்க லிடியா பேசும்போது, “ நான் இந்த பாராளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரான டேவிட் வானால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவர் படிக்கட்டில் தள்ளி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதே போன்ற நிகழ்வு இங்கு பலருக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பணிக்காக இதனை வெளியே கூறாமல் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் செய்தது …

  23. பட மூலாதாரம்,EPA-EFE படக்குறிப்பு, பாலிஸ்தீனத்தில் புதிதாக உருவெடுத்துள்ள 'லயன்ஸ் டென் ' போன்ற போராட்டக் குழுக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,யூசப் எல்டின் பதவி,பிபிசி உலக சேவை 17 ஜூன் 2023, 06:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு கூட இதுநாள்வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் 30 வயதுக்குட்பட்ட பாலஸ்தீன இளைஞர்கள். பாலஸ்தீன தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்களில் பலர் கூறுகின்றனர். இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையேயான பிரச்னைக்கு ‘இரண்டு நாடுகளின் தீர்வு’ எனு…

  24. Published By: RAJEEBAN 16 JUN, 2023 | 05:45 AM கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில் டிரக் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற உடனேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் கனடாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 15 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் மருத்துவமனைகளிற்கு எடுத்துச்செல்லப்பட்…

  25. கட்டுரை தகவல் எழுதியவர்,ரூபர்ட் விங்க்ஃபீல்ட் - ஹேயஸ் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, அகுடா தீவுக்கூட்டம். இது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமான மிக ஏழ்மையான தீவுப் பகுதி. இங்கு வாழும் 13,000 மக்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்துள்ளார். அலெனா என்ற 28 வயதே ஆன அந்த சாகச மருத்துவர், கோவிட் பெருந்தொற்றைத் தன்னால் சமாளிக்க முடிந்த அளவுக்கு, அந்நாட்டின் மோசமான மருத்துவத் துறையின் நிலைமையையும் அரசாங்கத்தையும் சமாளிக்க முடியவில்லை என்கிறார். 13,000 மக்கள்; ஒரே மருத்துவர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.