Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குர்திஷ் ராணுவ குழுவுக்கான ஆதரவை நிறுத்துக படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒய்ஜிபி என்று அறியப்படும் சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவுக்கு அளித்துவரும் ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என துருக்கி வலியுறுத்தியுள்ளது. சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து குர்திஷ் ராணுவ குழுவுக்கு எதிராக தற்போது துருக்கி சண்டையிட்டுவருகிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகிகள் ராஜிநாமா படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் நிர்வாகக் குழுவில் இருந்து மூன்று நிர்வாகிகள் ராஜிந…

  2. வட இங்கிலாந்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வீடுகள் அதிர்ந்தன! வட இங்கிலாந்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கத்தின் காரணமாக வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.30 மணியளவில் இங்கிலாந்தின் Workington மற்றும் Whitehaven நகரங்களுக்கு 3.2 ரிக்டர் அளவில் இடையே மையம் கொண்டு உருவானதாக தகவல். திடீரென ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் அச்சத்திற்குள்ளாகிய மக்கள் டுவிட்டரில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது குறித்து ஒருவர் 'கும்ப்ரியாவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்இ எனது வீடு முழுவதும் அதிர்ந்தது" என தனது டுவிட்டர் த…

  3. போர் பிரச்சாரம்: ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் போருக்கு தயாராகி வருகிறது. © EPA/IDA MARIE ODGARD | 02 அக்டோபர் 2025, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) 7வது கூட்டத்தில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (எல்) உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வாழ்த்தினார். கிரெம்ளின் ஆதரவு பிரச்சாரத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது, உக்ரேனில் ஆயுத மோதலை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவுடன் நேரடிப் போருக்குத் தயாராகி வருகிறது. செய்தி: ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு ஐரோப்பா தயாராகி வருவதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ கூறினார். "ரஷ்யாவுடன் இராணுவ மோதலின் வெளிப்படையான வரிசை உள்ளது, பொத…

    • 1 reply
    • 184 views
  4. கார்கிவ் மீது ஷெல் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு – ரஷ்யாவிற்கும் குறிப்பிடத்தக்க இழப்பு! உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது ஷெல் தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளன. குறித்த தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்று நகர முதலவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் முதல் இரவோடு இரவாக கார்கிவ் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், அனைத்து ரஷ்ய தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும் குறித்த தாக்குதலில் ரஷ்யாவும் குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்தது என்றும் கார்கிவ் முதலவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1269965

  5. 800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல் By DIGITAL DESK 3 13 NOV, 2022 | 08:32 AM சுமார் 800 கொவிட் 19 தொற்றாளர்களைக் கொண்ட உல்லாசப் பயணிகள் கப்பலொன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் இக்கப்பலில் மொத்தமாக சுமார் 4,600 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். நியூஸிலாந்திலிருந்து இக்கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது. 12 நாள் பயணத்தின் இடையில், கப்பலிலிருந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இக்கப்பலை இயக்கும் கார்னிவேல் அவுஸ்திரேலியா நிறுவனத்தன் தலைவர் மார்கரிட் பிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார். …

  6. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப்படைகளால் இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், இந்திய கப்பல் படைக்கு ஸ்கோபின் வகையைச் சேர்ந…

  7. படக்குறிப்பு,5 வயது சிறுமி தாலா, மற்றும் அவரது குடும்பத்தினர் கூடாரத்தில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜான் டோனிசன் பதவி, பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்து வயது சிறுமி தாலா இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் கண் விழித்திருந்தார், ஆனால் உடலில் அசைவில்லை. தாலா கடுமையான நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் சிறுமியின் படுக்கைக்கு அருகில் அவரது தந்தை இப்ராஹிம் முஹம்மது அல்-ஜலத் அமர்ந்திருந்தார். சிறுமியின் மெல்லிய மணிக்கட்டில் டிரிப்ஸ் செலுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொந்தரவு செய்யாமல், சிற…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன. தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப…

  9. "கீவ்" மீது... முழுவீச்சில் தாக்குதல் நடத்த, ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் உக்ரைன் ராணுவத் தளபதி கூறியுள்ளார். ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரூஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்று…

  10. பிரேசில் வெள்ளத்தால் 146 பேர் பலி ; பாதகமான வானிலையால் மீட்பு பணிகள் பாரிய சிக்கலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் பேரழிவினை தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவினையடுத்து உயிர் தப்பியவர்களை தேடுவதற்கான மீட்பு பணிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமையன்று பலமுறை தங்கள் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. அனர்த்தம் காரணமாக குறைந்தது 27 குழந்தைகள் / சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட மொத்தம் 146 பேர் உயிரிழந்துள்ளனர், அதேநேரத்தில் காணால்போன 191 நபர்களை தேடும் பணிகளும் பாதகமான வானிலையினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. 900 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் காப்பகங்களில் …

  11. பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை! பணமோசடி வழக்கில் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்ப…

  12. Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 02:09 PM காசாவில் யுத்தத்தில் சிக்கிய ஒரு சிறுவனின் வாழ்க்கையை சித்தரிக்கும் விவரணச்சித்திரத்தை பிபிசி அகற்றியுள்ளதை தொடர்ந்து இஸ்ரேலின்அழுத்தங்கள்காரணமாகவே பிபிசி அதனை அகற்றியதுஎன குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன. காசா - போர்க்களத்தில் எப்படி உயிர்தப்புவது என்ற வீடியோவை சில நாட்களிற்கு முன்னர் பிபிசி வெளியிட்டிருந்தது. காசாவின் மீதான இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலின் மத்தியில் தப்பிபிழைத்து வாழும் 13 வயது சிறுவனின் வாழ்க்கை பற்றியது இந்த விவரணச்சித்திரம். காசாவில் இடம்பெற்ற பேரழிவு பற்றிய குழந்தைகளின் பார்வை குறித்த கருத்தே இந்த விவரணச்சித்திரம் என தெரிவித்திருந்த பிபிசி ,இது அவர்களின் அனுபவங்களிற்கான விலைமதிப்பற்ற சான்று என நாங்கள் …

  13. துனிசியா கடற்கரையில்... குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை! துனிசியாவில் குடியேற்றவாசிகள் பயணித்த படகு மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எழுபத்தைந்து பேர் காணவில்லை என குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு லிபியாவின் ஜவாரா கடற்கரையில் இருந்து வெளியேறி ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மூழ்கிய படகில் இருந்து 24பேர் மீட்கப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் பங்களாதேஷ், எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் ஆரம்ப எ…

  14. பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, குவாங்சோ அருகில் அமைந்திருக்கும் பன்யூ பகுதி ஷையன் கிராம் என்று அழைக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர், குவாங்சோ தெற்கு சீனாவின் 'பேர்ல்' நதிக்கரையில் அமைந்திருக்கும் துறைமுக நகரமான குவாங்சோவின் (Guangzhou) பல பகுதிகளில் தையல் இயந்திரங்களின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த தையல் இயந்திரங்களின் சத்தம், தொழிற்சாலைகளின் திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக, காலை துவங்கி, நள்ளிரவு வரை கேட்கும். மக்கள் அங்கு ஆயத்த ஆடைகளான டி-சர்ட், கால்சட்டை, மேலாடை, நீச்சல் ஆடைகள் ஆகியவற்றை தைத்து 150 நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். …

  15. உக்ரைனில்.... தங்களது படையினர், வீரமாக போரிடுவதாக புட்டின் பாராட்டு! உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய துருப்புக்கள், அங்கு வீரமாக போரிடுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை குறிக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) பொதுக் கூட்டம் நடைபெற்ற லுஷ்னிகி மைதானம் மற்றும் அதைச் சுற்றிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாக அறியமுடிகின்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புடின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். உக்ரைனில் தொடர்ந்து வீரமாகப் போரிட்டதாக தனது படைக…

  16. 400 பில்லியன் டொலர் சொத்துக்களைத் தாண்டிய முதல் நபரானார் எலோன் மஸ்க்! ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கின் (Elon Musk) சொத்து மதிப்பானது 400 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியுள்ளது. இதனால், வரலாற்றில் முதற் தடவையாக 400 பில்லியன் சொத்து மதிப்பினை கடந்த முதல் நபர் ஒன்ற பெருமையை எலோன் மஸ்க் பெற்றுள்ளார். SpaceX இன் அண்மைய உள் பங்கு விற்பனையானது அவரின் நிகர சொத்து மதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது அவரது செல்வத்தில் தோராயமாக 50 பில்லியன் டொலர்களை சேர்த்ததுடன் SpaceX இன் மொத்த மதிப்பீட்டை சுமார் 350 பில்லியன் டொலர்களாக கொண…

  17. ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி செய்திகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb

  18. கிழக்கில்... ரஷ்யாவின் தாக்குதல்களை, முறியடித்துள்ளதாக... உக்ரேனிய படைகள் அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு எல்லைக்கு அருகே ரஷ்யாவில் எதிரிப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யா கிழக்கில் புதிய தாக்குதலுக்கான தயார்படுத்தல்களுக்காக இராணுவ வாகனங்களை நகர்த்தி வருவதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், ஆறு தாக்குதல்களை முறியடித்ததாகவும், நான்கு டாங்கிகள், பல ரஷ்ய வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைனின் இராணுவம் கூறுகிறது. மேலும் ஒரு விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் உட்பட ஏழு வான் இலக்குகளைத் தாக்கியதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. டான்ப…

  19. மாலத்தீவில் 30 நாட்களுக்கு ‘எமர்ஜென்சி’ நீட்டிப்பு: எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் மாலத்தீவில் அவசர நிலையை (எமர்ஜென்சி) 30 நாட்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மாலத்தீவில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட அரசியல் தலைவர்கள் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்தி மீண்டும் அதிபராக யாமீன் திட்டமிட்டார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், ஆளும் கட்சி எம்.பி.க் கள் 12 பேர் …

  20. உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்: உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று தாக்குதல்காரர்கள் பாராளுமன்றம் மற்றும் நகரின் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்துள்ளனர். குண்டுவெடிப்பால் பலரின் உடல்கள் வீதிகளில் சிதறி இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக ஐ.எஸ். அமைப்பு கூறியதாக அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்…

  21. துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை புளோரிடாவில் பாடசாலை ஒன்றில் அப்பாடசாலையின் முன்னாள் மாணவரான நிகோலஸ் க்ரூஸ் என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி; ட்ரம்புக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் முன் …

  22. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 10:18 AM பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்ப…

  23. ஈரானில் பாரிய மனித புதைகுழி – கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்! ஈரானில் கொரோனாவினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கோம் நகரில் பாரிய மனித புதைகுழிகளை காண்பிக்கும் செய்மதி படங்கள் வெளயாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நியுயோர்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களினால் குறித்த செய்திமதிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரானின் புனித நகரத்தில் உள்ள மயானமொன்றில் தோண்டப்பட்ட நீளமான புதைகுழிகளின் செய்மதி படங்களே வெளியாகியுள்ளன. மக்சார் என்ற தொழில்நுட்ப நிறுவனம் மார்ச் முதலாம் திகதி இந்த செய்மதி படங்களை எடுத்துள்ளது. செய்மதிப் புகைப்படங்கள் ஈரானில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகயிருக்கலாம் என்ற சந்தேகங்கள…

  24. Published By: DIGITAL DESK 3 22 JUN, 2024 | 10:40 AM அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. காயமடைந்த 10 பேரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். தெற்கு ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஃபோர்டைஸ் நகரத்தில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்ததாகவும் ஆர்கன்சாஸ் மாநில பொலிஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கத் துப்பாக்கி வன்முறை பதிவேடுகள் …

  25. ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை! ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம் வீழ்ந்ததாக பல ஆதாரங்கள் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாண தலைநகராக இது மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதால் கிளர்ச்சியாளர்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களை கைப்பற்றி இப்போது முக்கிய நகரங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.