Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நேற்றைய லண்டன் தாக்குதலில், தாக்குதலாளி பிரட்டனில் பிறந்தவர் என்று பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தாக்குதலாளி உட்பட இதுவரை 4 பேர் கொல்லப்பட்டு நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான புலன்விசாரணையில் இதுவரை எட்டுப்பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் மேலதிக விவரங்களையும் நேயர்கள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் காணலாம்.

  2. அமெரிக்காவுக்குள் நுழையும் சீன கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர் வரி? அமெரிக்க துறைமுகங்களுக்குள் நுழையும் சீனக் கப்பல்கள் மற்றும் சீனத் தயாரிப்புக் கப்பல்களுக்கு 1.5 மில்லியன் டொலர்கள் வரை வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் முன்மொழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளாவிய கப்பல் கட்டுதல், கடல்சார் மற்றும் தளவாடத் துறைகளில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா இதைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அறிக்கை, சர்வதேச அளவில் போட்டியிடும் அரசுக்கு சொந்தமான…

  3. டிரம்பிற்கும் 30 டிரில்லியன் டாலர் அமெரிக்க பத்திர சந்தைக்கும் இடையிலான மெல்லிய அமைதி 12/29/2025 அன்று இரவு 07:02 மணிக்கு AEDT வெளியிடப்பட்டது - 12/29/2025 அன்று இரவு 08:48 மணிக்கு AEDT திருத்தப்பட்டது. ராய்ட்டர்ஸ் பகிர் பிட்காயின் (BTC/USD) -0.09% US 10Y பணம் -0.235 என்பது யூரோ / அமெரிக்க டாலர் (EUR/USD) -0.15% பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன் -0.13% நியூயார்க், டிசம்பர் 29 (ராய்ட்டர்ஸ்) - ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 'விடுதலை தின' கட்டணங்கள் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க பத்திர சந்தையை கிளர்ச்சியில் தள்ளியதிலிருந்து, அவரது நிர்வாகம் மற்றொரு வெடிப்பைத் தடுக்க அதன் கொள்கைகளையும் செய்திகளையும் கவனமாக வடிவமைத்துள்ளது. ஆனால் போர் நிறுத்தம் பலவீனமாகவே உள்ளது என்று சில முதல…

  4. வெனிசுவேலாவுக்குச் சென்றார் அமெரிக்க தூதுவர் லாரா டோகு Published By: Digital Desk 3 02 Feb, 2026 | 08:46 AM வெனிசுவேலாவில் 07 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக் அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237593

  5. 25 NOV, 2024 | 11:07 AM லெபனானிலிருந்து ஹெஸ்புல்லா அமைப்பினர் 250க்கும் மேற்பட்ட ரொக்கட்களை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் இஸ்ரேல் ஹெல்புல்லா அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்த பின்னர் ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட கடும் ரொக்கட் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹெஸ்புல்லா அமைப்பின் ரொக்கட்கள் இஸ்ரேலிய தலைநகரையும்,வடக்கு மத்திய இஸ்ரேலையும் தாக்கியுள்ளன இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த நிலையிலேயே ஹெஸ்புல்லா அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிற்கும் ஹெஸ்புல்…

  6. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் Published By: Digital Desk 3 01 Jan, 2026 | 01:56 PM 2026 ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன. இளம் வயதினர் கல்வி கற்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்கனவே கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் கட்டாயமாக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடு வயது தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தத…

  7. உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா! அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும். மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஸ்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தையும் இது மீறுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க சட்டத்தின் கீழ், ஒரு வருட அறிவிப்பு கொடுத்து வெளியேறுவத…

  8. 23 NOV, 2023 | 10:38 AM சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு முழக்கத்துடன் தூதரக வளாகத்தில் 2 காலிஸ்தான் கொடிகளை பறக்கவிட்டனர். இந்தக் கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூலை 2-ம் தேதி, சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அதே தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொ…

  9. அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?,வறுமையை ஒழிக்க வரியை உயர்த்திய ஃபிலிப்பைன்ஸ் அதிபர், மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  10. யுக்ரைன் போர் நிறுத்தம் - ட்ரம்ப்பும் புடினும் சந்திப்பதில் சந்தேகம் General08 August 2025 யுக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை. வாசிங்டனும் மொஸ்கோவும் ஒரு சாத்தியமான உச்சி மாநாட்டை எவ்வாறு நடத்தப்போகின்றன என்பது குறித்து இதுவரை அறிவிப்புக்கள் வெளியிடவில்லை. இந்த சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் என்று கிரெம்ளினும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சந்திப்பு நடைபெற்றால் 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் புடின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தமைக்கு பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடைபெற…

  11. Published By: RAJEEBAN 14 MAR, 2025 | 02:33 PM பனாமா கால்வாயை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசனை கோரியுள்ளார் என இரண்டு அதிகாரிகள் ரொய்ட்டரிடம் தெரிவித்துள்ளனர். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையிலான சமவெளியின் மிக குறுகிய பகுதியில் அமைந்துள்ள உலகின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்றான பனாமாகால்வாயை அமெரிக்கா மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறைதெரிவித்துள்ளார். எனினும் அதனை இராணுவழிமுறை ஊடாக செய்யப்போகின்றாரா அல்லது வேறு வழிமுறையிலா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. டொனால்ட் டிரம்பின் …

  12. இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவில் பாலியல் தொழிலில் தள்ளப்படும் நேபாள பெண்கள், கை கால்களை இராணுவ பணியில் இழந்தும் விளையாட்டில் அசத்தும் உக்ரைன் துணை மருத்துவர் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.

  13. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி: புடினுக்கு கடும் கண்டனம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க் கட்சி வேட்பாளர் பெர்னீ சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்ட் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், “எனது பிரசாரத்துக்கு உதவுவதற்கு ரஷ்யா முயற்சிகள் செய்கிறது என கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ரஷ்யா எவ்வாறு தலையிட முயற்சி செய்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட எந்தவொரு முயற்சியையும் நான்…

  14. வடகொரியா ஏவுகணை வீச்சு: தென்கொரியா, ஜப்பானை நோக்கி 'கண்டம் விட்டு கண்டம்' பாயும் ஏவுகணை வீச்சு டெஸ்ஸா வோங், யிவெட் டான் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். அதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகிறார். தென் கொரியாவின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில் விழுந்த ஒரு ஏவுகணை உட்பட வட கொரியா புதன்கிழமை ஒரே நாளில் …

  15. கனடாவில் இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கட்டுரை தகவல் குர்ஜோத் சிங் பிபிசி பஞ்சாபி 9 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்தியர்களின் மாணவர் விசா (Student Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் அதிகமாகி இருக்கிறது. கனடாவின் குடிவரவுத் துறை பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளில் இது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 2025-இல் முடிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், 74% நிராகரிக்கப்பட்டுள்ளன. 2023 (27%) மற்றும் 2024 (23%) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிராகரிப்பு விகிதம் கிட்டத்தட்ட …

  16. அணுசக்தி ஒப்பந்த உடன்பாட்டில்... அமெரிக்க அளிக்கும் வாக்குறுதிகளை, நம்ப முடியாது: ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் தெரிவிப்பு! வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பது தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதில் முழு உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி ஆற்றிய உரையில், ‘அணுசக்தி ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஆனால…

  17. என்னை கொலை செய்தால் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு ஆட்களையமர்த்தியுள்ளேன் - பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி தெரிவிப்பு 25 NOV, 2024 | 01:02 PM பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சரா டட்டெர்டே ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ் தன்னை கொலை செய்தால் அதன் பின்னர் அவரை கொலை செய்வதற்கு ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தென்கிழக்காசியா நாட்டின் இரு முக்கிய அரசியல் குடும்பங்களிடையே மோதல் தீவிரமடைவதை வெளிப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி என்னை கொலை செய்தால் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அவரது மனைவி சபாநாயகர் ஆகியோரை கொலை செய்வதற்கு கொலைகாரன் ஒருவனை நியமித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். நான் ஒருவரிடம் பேசியுள்ளேன், நான் கொலைசெய்யப்ப…

  18. இன்றைய நிகழ்ச்சியில் * போர் நீடிக்கும் சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பியோட்டம்; லிபியக் கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த தன்னால் இயலாது என லிபியா எச்சரிக்கை; * வரி ஏய்ப்பை தடுக்கப்போவதாக ஐரோப்பாவின் ஐந்து முக்கிய நாடுகள் சபதம்; பனாமா ஆவணங்கள் வெளியானதால் ஸ்பானிஷ் அமைச்சர் பதவி விலகல்; * ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கல்வி முடியும் முன்பே பல சிறுமிகள் விலகுவது ஏன் என்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் காணலாம்.

  19. பதற்றங்களுக்கு மத்தியில்... ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்! பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்த இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், எதிர்வரும் திங்கள்கிழமை மாஸ்கோவிற்கும், செவ்வாய்கிழமை கியேவிற்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் பிப்ரவரி …

  20. பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது அவர் நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர் ஆனார். இப்போது என்ன நடக்கிறது? ராணி இறந்ததும் உடனடியாக அவரது வாரிசான, இளவரசர் சார்ல்ஸுக்கு மணிமுடி சென்றது. லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்புக்கு முன்பாக சனிக்கிழமை பிரிட…

  21. உருகும் ஆபிரகாம் லிங்கன் சிலை! அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி மெழுகு சிலை அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே வடிவமைக்கப்பட்டதாகும். அந்த சிலையின் தலை பகுதி, கால்கள் தற்போது உருகி உள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அங்கு நிலவியதாக வானிலை மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தான் இந்த வெள்ளை நிற மெழுகு சிலை வடமேற்கு வொஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெளி…

  22. லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் சுவாமிநாதன் நடராஜன் & பேட்ரிக் ஜேக்சன், லண்டன் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LHAKPA SHERPA படக்குறிப்பு, 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் லக்பா ஷெர்பா தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். அவர் 10-வது முறையாகச் செய்துள்ள சாதனை, அவரது சகோதரரால் அறிவிக்கப்பட்டது. நேபாள அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். இதைச் செய்துள்ள முதல் பெண் என்ற ப…

  23. பட மூலாதாரம், AFP via Getty Images கட்டுரை தகவல் நிக் மார்ஷ் பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர். சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும். 2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும். முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும். ஆனால், வரும…

  24. ட்ரம்ப் உருவாக்கிய புதிய “Board of Peace” ஐநாவுக்கு எதிரானதா? -- -- --- *ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக்கரம் நீட்டும் சீனா! *இலங்கையை முழுக் கட்டுப்பாட்டில் எடுக்க இந்தியா முயற்சி *தமிழ்தரப்பின் உள்ளக மோதல்கள் டில்லிக்கும் கொழும்புக்கும் சாதகம்! --- --- --- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார சபையின், சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுடன் பதை்துக் கொள்ளும் முறையில் வெளியிட்ட கருத்துக்கள், சீனாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. நேட்டோ இராணுவக் கூட்டணி இனிமேல் தேவையற்றது என்ற தொனியும், அந்த அணிக்கான செலவை நூறுவீதமும் அமெரிக்கா தான் வழங்கி வருவதாகவும் கூறியமை, ஏனைய நோட்டோ அங்கத்துவ நாடுகளின் கௌரவத்துக்க…

  25. ரஷ்யாவுக்கு... ஆதரவுக் கரத்தை நீட்டுமா சீனா? அச்சத்திற்கு மத்தியில் பைடன் அவசர பேச்சுவார்த்தை! ரஷ்யாவுடனான சீனாவின் உறவு மற்றும் உக்ரைனில் நிலவிவரும் போரில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வளர்ந்து வரும் அமெரிக்க கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இருநாட்டு தலைவர்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 13:00 மணிக்கு தொலைபேசியில் உரையாடவுள்ளனர். கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு இவரும் பேசவுள்ளனர். ரஷ்யாவிற்கு இராணுவ ஆதரவை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முன்னதாக அமெரிக்க …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.