Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க வேர்ஜினியா (Virginia) மாநிலத்தில் உள்ள campus of Virginia Tech university இல் நடத்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்து பலர் காயமைந்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க மற்றும் கனடியப் பல்கலைக்கழகங்களில் நடந்த துப்பாக்கி வன்முறைகளில் மாணவர்கள் பலர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது..! Deadly shooting at US university At least 20 people have been killed and more injured after a gunman went on the rampage at the campus of Virginia Tech university in Virginia, US. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6560685.stm

  2. காஞ்சிபுரம் அருகே வேன்ரயில் மோதல் : 11 பேர் பலி 4 பேர் படுகாயம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வேன் ரயில் மோதியதில் வேனில் பயணம் செய்த 11 வருவாய்துறையினர் பலியானார்கள் மேலும் 4 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூர் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்து சென்றபோது சென்னையிலிருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதியது. இதில் வேனிலிருந்த 11 பேர் உயிரிழந்தனர்.இந்த வேனில் சென்ற 23 பேரும் வேலுõர் மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் காஞ்சிபுரம் கோவிந்தவாடி கிராம கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு ஆளில்லா ரயில்வே கேட்டை தாண்ட முற்பட்டனர். அப்போது ரயில் டிரைவர் ஹாரன் அடித்தும் ரயில் வருவதற்குள் சென்றுவிடலாம் என்ற வேன் டி…

  3. ராமநாதபுரம்: ராமர் பாலம் என்பதே முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். மன்னார் வளைகுடா மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சேது சமுத்திர திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், இத் திட்டத்தில் இதுவரை 13.1 மில்லியன் கன அடி அகழ்வுப் பணி முடிந்துள்ளது. ஆதாம் பகுதியில் இப்போது அகழ்வுப் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் சுற்று சூழல் பாதிக்கப்படுமா என 2,424 முறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். கடலுக்கு அடியிலும் 2,003 மீட்டர் ஆழத்திற்கு பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. ராமர் பாலம் என்பதே இது …

  4. சென்னை விமான நிலையத்தில் விமானிகள் அடிதடி ஏப்ரல் 16, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 விமானிகள் கிண்டலடித்து பேசி கொண்டிருந்த போது அது பிரச்சனையாகி இருவரும் அடித்துக் கொண்டு உருண்டனர். பாரமெளண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளான விஜய் பார்மர்(57) மற்றும் அமெரிக்காவின் ஜோசப் கிராண்ட் பாக்ட்(55), இருவரும் நேற்று காலை பணிக்கு வந்தபோது கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜோசப் விஜய்யை பார்த்து, நீ விமான ஓட்ட வைத்திருக்கும் லைசென்ஸ் உண்மையானதா எனக் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே சண்டை முற்றியது. விஜய்யின் கன்னத்தில் ஜோசப் அறைந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டனர். இதைப் பார…

    • 2 replies
    • 1.1k views
  5. காதலியை கைப்பிடி; இல்லை மறந்து விடு பிரிட்டன் இளவரசருக்கு தந்தை உபதேசம் லண்டன் : "காதலியை கைப்பிடி; இல்லை, அவளை மறந்து விடு' என்று பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கு அவரின் தந்தை இளவரசர் சார்லஸ் அறிவுரை கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம்ஸ் (வயது 24). 2001ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்த போது, கேதே மிடில்டன் என்ற இளம் பெண்ணை சந்தித்தார். இருவரும் நண்பர்களாகினர். ஒன்றாக ஊர் சுற்றினர். பிரபலமானவர்களை பின் தொடர்ந்து சென்று புகைப்படங்கள் எடுக்கும் "பாப்பரசி' புகைப்பட கலைஞர்கள் இவர்கள் இருவரையும் துரத்தத் தொடங்கினர்.நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த இளவரசர் வில்லியம்ஸ் மிடில்ட…

  6. மேற்கு ஜப்பானில் பூமியதிர்ச்சி. மேற்கு ஜப்பானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 5.4 றிச்டர் அளவான பூமியதிர்ச்சியில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கமெயமா நகரில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.19 மணியளவில் இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி டோக்யோ நகருக்கு மேற்கே 190 மைல் தொலைவில் 10 மைல் ஆழத்தில் மையங் கொண்டிருந்ததாக ஜப்பான் பூகர்ப்பவியல் நிலையம் தெரிவிக்கிறது. இப்பூமியதிர்ச்சி காரணமாக கூரைகள் சரிந்து விழுந்ததாகவும் பழைய கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் பல கட்டிடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் மின்சார விநியோகமோ, நீர் விநியோகமோ தடைப்படவில்லையென்பதும் இப்பூமியதிர்ச்சி தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்ப…

  7. ஒரு மார்க்கிற்கு ஜந்து முத்தம் தா! - பல்கலைகழகங்களில் நடக்கும் அட்டூழியங்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இது செக்ஸ் சில்மிஷ சீஸன் போலிருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இன்ஜினீயரிங் மாணவி சேட்னா, பல்கலைக்கழக விடுதியில் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக ரகுராமன், மணிக்குமார் ஆகிய இரண்டு பேராசிரியர்கள் சஸ்பெண்ட் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது ஆனார்கள். அடுத்ததாக, மதுரையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் பணிபுரியும் பாண்டியம்மாள் என்பவர் அந்தக் கல்லூரி முதல்வர், நூலகர் ஆகியோர் மீது பகீர் செக்ஸ் டார்ச்சர் புகாரைப் போட, போலீஸார் அதை விசாரித்துக் கொண்டிர…

  8. ஈராக்கில் 2003 ஆக்கிரமிப்புக்குப் பின்னர் 50க்கும் மேற்பட்டுள்ள உலங்குவானூர்திகளை(கெலிகளை) இழந்துள்ள அமெரிக்காவுக்குப் போட்டியாக பிரித்தானியாவும் தனது கெலிகளை தொலைக்க ஆரம்பித்துள்ளது..! இன்று மட்டும் இரண்டு பூமா வகை கெலிகள் வீழ்ந்து நொருங்கியுள்ளதுடன் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படைவீரர்கள் இருவர் உயிரிழந்து சில காயமடைந்துள்ளர்.

  9. தூக்கம் இல்லை என்று விமானி விமானத்தை ஓட்ட மறுப்பு : டில்லியில் 12 மணி நேரம் பயணிகள் தவிப்பு புதுடில்லி : சரியான தூக்கம் இல்லை என்று சொல்லி விமானி விமானத்தை ஓட்ட மறுத்ததால், புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான பயணிகள் 12 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளானார்கள். புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 02.30 மணிக்கு பிஏ143 என்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது. அதில் 225 பயணிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டபோது அந்த விமானத்தின் பைலட் கேப்டன் வில்லியம் விமானத்தை ஓட்ட மறுக்கிறார் என்று தெரியவந்தது. என்ன காரணத்தால்…

    • 3 replies
    • 1.1k views
  10. காதலிக்கு சம்பளத்தை அதிகரித்ததால் சர்ச்சை [15 - April - 2007] காதலிக்கு 31 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் சம்பளத்தை உயர்த்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உலக வங்கித் தலைவர் உல்போவிட்ச். ஈராக்கிற்கு எதிரான போரின் போது, அமெரிக்க இராணுவ கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பால் உல்போவிட்ச். அப்போது, பென்டகனில் துணைத் தலைவராக இருந்தார். `ஈராக்கிற்கு எதிராக புஷ்ஷுக்கு விவகாரமான யோசனைகளை வழங்கியது இவரே' என கடும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன. விமர்சனங்களுக்கு மத்தியில், 2005 இல் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மனைவியை பிரிந்து வாழும் உல்போவிட்ஸுக்கு தற்போது வயது 63. உலக வங்கி தலைவர் பொறுப்பை ஏற்ற நேரத்தில் ஷாஹா ரிஸா என்ற 53 வயது பெண்மணியுடன…

  11. தமிழக பகுதி கால்வாயையும் முடித்து கொடுக்க சாய்பாபா உறுதி * சென்னை மக்களுக்கு புத்தாண்டு பரிசு! புட்டபர்த்தி : தெலுங்கு கங்கை திட்டத்தில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரையிலான 29 கி.மீ., கால்வாய் அமைத்துக் கொடுக்க சாய்பாபா உறுதி கொடுத்துள்ளார்.புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், நேற்று நடந்த தமிழ் வருட பிறப்பு விழாவில் சாய்பாபா பேசினார். அப்போது, இத்தகவலை தெரிவித்தார். தெலுங்கு கங்கை திட்டத்தில், ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணை முதல், தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வரை ரூ.200 கோடி மதிப்பில், ஏற்கனவே சத்யசாய் மத்திய டிரஸ்ட் மூலம் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜீரோ பாயின்ட் முதல், சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் பூண்டி, ரெட்ஹில்…

    • 31 replies
    • 3.8k views
  12. ‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருக்கிறீர்

  13. இங்கிலாந்தின் வெட்டி அரசி(அரச குடும்பம் என்று தான் சொல்லுறாங்க..அரசர் சும்மா குந்திட்டு இருக்கிறார்.. அவருக்கு நோ வலியு) குடும்பத்துக்கு ஓசி விளம்பரமுன்னா அளவு கணக்கே இல்லை. சாள்ஸ் - டயனா, சாள்ஸ் - கமீலா என்றும் இன்னும் பலவுமாக சோடி சேருறதும் புரியுறதுமே வேலையா இருந்தவங்களுக்கு.. இப்ப கொஞ்சக்காலமா.. டயனாவில் இழப்பின் பின்னரும் சாள்ஸ் ஒரு மாதிரியா கமீலாவோட செற்றிலானதன் பிறகு அரசி குடும்ப சோலிகள் குறைஞ்சிருந்திச்சு. இப்ப மிஸ்டர் வில்லியம் ( ஆமி ஒபீசர் - டயனா - சாள்ஸ் பிள்ளை) தொடங்கிட்டார் ரவுண்டு கட்ட. அவரு இப்ப தான் 2001 இல யுனில படிக்கேக்க பிடிச்ச காதலியை (Kate Middleton) விட்டுப் பிரிஞ்சுட்டதா இங்கிலாந்தில கதையடிபடுகுதாம்..! இது எங்க போய் முடியப் போகுதோ..…

    • 2 replies
    • 884 views
  14. வெள்ளி வியாபாரி குடும்பம் கொலை வழக்கில் 3 பேருக்கு துõக்கு தண்டனை : சேலம் கோர்ட் அதிரடி தீர்ப்பு சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியபாரி கொலை வழக்கில், 3 குற்றவாளிகளுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. சேலம் குகை அருகே மூ ங்கபாடி வீதியை சேர்ந்தவர் வெள்ளி வியாபாரி மோகன்ராவ் (48). இவரது மனைவி ஷீலா (40), மகன் பரபு (13). 2005 நவ.,9ம் தேதி அன்று மோகன்ராவ், அவரது வீட்டின் படுக்கை அறையிலும், அவரது மனைவி ஷீலா சமையலறையிலும், இவர்களது மகன் பரபு வீட்டின் ஹாலிலும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்களது வீட்டில் இருந்த 162 பவுன் தங்க நகைகள், 32 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொ…

  15. இன்டர்நெட் நட்பு: பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி- தொழிலதிபர் கைது ஏப்ரல் 13, 2007 சென்னை: இன்டர்நெட்டில் நட்புடன் பழகிய பின்னர் ரூ.20 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தவர் ராஜீவ் மேனன்(39). இன்டர்ெநட்டில் சேட்டிங்கின்போது சென்னையைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணாண வழக்கறிஞர் இந்துவுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர். கடந்த 2002ம் வருடம் முதல் சென்னையில் தங்கியிருந்த மேனன், இந்துவிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். அதை ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்துவிட்டார். அடுத்த சில நாட்களில் ரூ.8 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பித் தரவில…

  16. நாணயத்தில் 'கிராஸ்'- ஆர்எஸ்எஸ் பாய்ச்சல் ஏப்ரல் 13, 2007 டெல்லி: புதிய இரண்டு ரூபாய் நாணயத்தில் கிறிஸ்துவ மதத்தை வளர்க்கும் விதமாக சிலுவை சின்னம் போடப்பட்டுள்ளதாகவும், இந்த நாணயத்தை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, இது ஒற்றுமையின் சின்னம் என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் என்கின்றன. மேலும் இதை திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்…

  17. அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை ஏப்ரல் 12, 2007 பாலாசூர்: அணு ஆயுதத்துடன் 3,000 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக ஏவி சோதனையிட்டது. ஒரிஸ்ஸா மாநிலத்தில் வங்காள விரிகுடாவில் உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள டி.ஆர்.டி.ஓவின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ஏவுகணை இன்று காலை 10.52 மணிக்கு ஏவப்பட்டது. கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஏவுகணை 90 கி.மீ. உயரத்துக்கு நேராக பாய்ந்து சென்று பூமியின் வளி மண்டலத்தைக் கடக்கும். பின்னர் அங்கிருந்து பூமிக்குள் நுழையும் இலக்கை நோக்கி பாயும். இன்று ஏவப்பட்ட ஏவுகணை கார் நிகோபார் தீவுகளுக்கு அருகே உள்ள இலக்கை தாக்கும் வகையில்…

    • 5 replies
    • 1.5k views
  18. வெடிகுண்டு பயங்கரம் தப்பித்த மாணவர்கள்! அணுகுண்டு ஒன்று விமானத்தில் இருந்து போடப்பட்டது போன்ற பேரதிர்வு. காதுகளைப் பிளந்து கொண்டு சென்ற அந்தச் சத்தம் கேட்டு "குய்யோ முய்யோ' என்று மக்கள் அலறியடித்து ஓடினார்கள். பிய்ந்த சதைகள் மரத்தின் கிளைகளிலும், சாலைகளிலும் சிதறிக் கிடந்ததைப் பார்த்து ஸ்பாட்டிற்கு சென்ற அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கலங்கி நின்றனர். ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்ட அந்தப் பயங்கர வெடி விபத்தில் விழுந்தது ஏராளமான சடலங்கள்.....! பலரும் காயம் அடைந்து கடுமையான உயிர் போராட்டத்தில் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டிவனத்திலிருந்து கடந்து சென்றால் கூட்டேரிப்பட்டு என்ற கிராமம். அதற்கு அரு…

  19. ஏப்ரல் 11, 2007 ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில் பணியில் இருந்த 4 பெண் போலீசார் தூக்கத்தில் தங்களது துப்பாக்கிகளை தொலைத்ததால் நான்கு பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் ஆண், பெண்களுக்கென்று தனித்தனியாக 2 முகாம்கள் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி பெண்கள் முகாமில் பணியில் ஈடுபட்டு இருந்த வெங்கடேஸ்வரி, கவிதா, சுகுமாரி, சித்ரா ஆகியோர் வைத்திருந்த இரு .303 ரக துப்பாக்கிகள் தொலைந்து போயின. இதையடுத்து ராமேஸ்வரம் போலீசார் மண்டபம் முகாமில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் அந்த துப்பாக்கிகள் கிடந்தது. து…

  20. இராஜதந்திர அழுத்தத்தினால் ஈரானின் அணு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாமென கூறும் அமெரிக்கா ஈரான், மீது அதிகளவில் இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் அதன் அணுசக்தி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான்மீது இராஜதந்திர அழுத்தங்களை அதிகரிப்பதன் மூலம் இவ் விடயத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்பும் அதேவேளை, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான நிலையை நாம் அடைந்துள்ளோம் என அரச திணைக்கள பேச்சாளர் சீன் மக்கோமக் தெரிவித்துள்ளார். மேலும், இது ஈரானிய அரசுக்கும் ஈரானுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளார். அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஈரான் நிறுத்துவது தொடர்பான நிபந்தனையுடன் ஈரானிய அதிகாரிகளை சந்தி…

  21. அணுத் திட்டம் தொடர்பான ஈரானின் அறிவிப்பை கடுமையாக விமர்சிக்கிறது அமெரிக்கா கைத்தொழில் உற்பத்திகளுக்காகவே அணு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்வதாக ஈரான் தெரிவித்திருப்பதை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. ஈரான் தொடர்ந்து சர்வதேச சமூகத்திற்கெதிராக சவால் விடுவதுடன் தனது அணு நிகழ்ச்சி செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துகிறது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமைதிக்காகவே தான் அணு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்வதாக ஈரான் தெரிவிக்கின்ற அதேவேளை, அணு குண்டுகளை தயாரிப்பதற்காகவே ஈரான் இச் செயற்பாடுகளை மேற்கொள்வதாக மேற்குலகு அஞ்சுகிறது. ஈரானின் அறிவிப்புத் தொடர்பாக நாங்கள் மிக அவதானமாக கவனம் செலுத்தி வருகிறோம். அணு சக்தி தயாரிப்பில் அவர்கள் ஓர் …

  22. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேத்துவா என்ற இடத்தில் கோவில் திருவிழாவுக்காக வந்த யானைக்கு மதம் பிடித்து, பாகனை அடித்துக் கொன்றது. பின்னர் பாகனின் உடலை தூக்கிக் கொண்டு தெருக்களில் ஓடியதால் மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். சேத்துவாவில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் யானைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான யானைகள் கலந்து கொண்டன. அதில் ஒன்று, பூங்குன்னம் பகுதியைச் சேர்ந்த வினயன் என்கிற யானை. இதன் பாகன் உன்னி (50). பட்டம் கட்டி அலங்காரம் செய்து யானை வினயன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து தன்னைக் கட்டியிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பியது. இதைப் பார்த்த கோவிலுக்கு வந்தி…

    • 3 replies
    • 3k views
  23. சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உ.பியில் வழக்கு சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தனிநபர் சட்ட வாரியம் சார்பில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அதில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் பழமை வாய்ந்த ராமர் பாலம் சேதமடையும், அழிந்து விடும். நாசா நிறுவனத்தின் கார்பன் டேட்டிங் முறைப்படி, ராமர் பாலம் 17 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்பட்டுள்ளது. எனவே ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. முத்தமிழ்

  24. வெப்பநிலை மாற்றத்தினால் இன்னும் 13 வருடங்களில் ஆசியாவில் பட்டினி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்பு: ஐ.நா. விஞ்ஞான மன்றத் தலைவர். நிகழவிருக்கும் வெப்பநிலை காலநிலை மாற்றத்தினால், ஆசியாவில் உணவுப் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு, அனல்காற்று, வெள்ளம் ஆகியன உண்டாகும். அவற்றால் ஆசியாவின் கோடிக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்குச் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்படுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் மன்றத்தின் தலைவர் ராஜேந்திர பச்சூரி. உலக நாடுகளின் பிரசித்திபெற்ற காலநிலைமாற்ற விஞ்ஞானிகள் 2,500 பேரைக் கொண்ட மேற்படி மன்றத்தின் பூமி வெப்பமடைதல் தொடர்பான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இங்கு வெளியிடப்பட்டது…

  25. போலி பாஸ்போர்ட்டுடன் லண்டன் செல்ல முயன்ற 5 இலங்கைத் தமிழர்கள் கைது ஏப்ரல் 10, 2007 சென்னை: சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட்டுடன் லண்டன் செல்ல முயன்ற 2 பெண்கள் உள்பட 5 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து லண்டன் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. அப்போது பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது 2 பெண்கள் உள்ளிட்ட 5 இலங்கைத் தமிழர்களின் பாஸ்போர்ட் போலியானது எனத் தெரிய வந்தது. இத்தாலியில் அந்த பாஸ்போர்ட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஐந்து பேரையும் விமான நிலைய போலீஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.