Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தின் புகள்மிக்க "இண்டிபென்ரன்" நாளிதள்...! வட பகுதியில் சிறுவர்கள் எண்றாலும் கொல்லப்படுவர்...அவர்கள் கூட எங்களின் இலக்கு எண்றார் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தன.... இவர்கள் ஆயுதம் ஏந்த கூடியவர்கள்... பதினேளு வயதானாலும் வர்களால் (எங்களை ) முன்னால் நிற்பவர்களை கொல்ல முடியும்.. அரசாங்க பேச்சாலர் ரம்புல்லவும் சொன்னார்....! இதேவேளை யுனிசெவ்ம், கண்காணிப்புகுழுவும் இந்த தாக்குதல் பாடசாலை மாணவர்கள் மேல்த்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது எனும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றது... உனிசெவ் இவர்கள் முதலுதவி பயிற்ச்சிகாய் கூடியவர்கள் எண்றும்... கண்காணிப்பு குழு இந்த இடத்தில் பயிற்ச்சி முகாமுக்கானதோ ஆயுத தளவாடங்களுகள…

  2. யுத்தமுனைப்பினை இருதரப்பும் நிறுத்தி சமாதான பேச்சுக்கு திரும்ப வேண்டும் அமெரிக்க தூதரக பேச்சாளர் யுத்தத்தின் முனைப்பினை இருதரப்பும் நிறுத்தி உடனடியாக சமாதான பேச்சுக்களுக்கு திரும்புமாறு அமெரிக்க அரசு இருதரப்பையும் வலியுறுத்துவதாக அமெரிக்க தூதரக பேச்சாளர் இவான் வில்லியம் ஓவன் தெரிவித்தார். தற்போதைய யுத்த நிலைப்பாட்டில் அல்லது யுத்த முனைப்புகளில் இருந்து உடனடியாக விலகிக்கொள்ள அமெரிக்க அரசு தனது அழுத்தத்தை இருதரப்பின் மீதும் பிரயோகிப்பதாகவும் மேலும் அழிவுகள் நேராமல் இருக்க இருதரப்பும் உடனடிப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:முல்லைத்தீவி

  3. இந்தியா நிராகரித்ததால் பாகிஸ்தானிடம் 2 கப்பல் ஆயுதங்களை வாங்கியது சிறிலங்கா [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 18:57 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்காவுக்கு கனரக இராணுவ உதவிகளை செய்ய இந்தியா நிராகரித்தமையால் பாகிஸ்தானிடமிருந்து 2 கப்பல் ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது. இந்த ஆயுதக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த 14 ஆம் நாளன்று வந்தடைந்துள்ளன. முன்னதாக தனது ஆயுதக் கொள்வனவுப் பட்டியலை பாகிஸ்தானிடம் சிறிலங்கா அளித்தாக செய்திகள் வெளியாகின. இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதை அம்பலப்படுத்தியிருந்தது. கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இராணுவக் கொள்வனவு தொடர்பாக குறிப்பாக விமானப் படைக்கான …

  4. தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் சிங்கள தேசியக் கொடிகள் இன்று எரிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் வான் குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் பலியெடுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன. கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன், ஆட்சிக் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து 40 பெரியார் திராவிடர் கழகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் தலைமையில் சிங்களத் த…

  5. இந்தியா உதவினால் "தமிழ்நாடு விடுதலை"க்கான இயக்கம் தீவிரமடையும்: கொளத்தூர் மணி எச்சரிக்கை சிறிலங்காவுக்கு உதவினால் ஈழத்துக்கு அது சிறு பின்னடைவாகவும் "தமிழ்நாடு விடுதலை"க்கான தமிழ் தேசிய இயக்கம் தீவிரமடையும் என்று இந்திய அரசாங்கத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா. செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொளத்தூர் தா.செ. மணி வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கும் தவறை நிச்சயமாக இந்தியா மீண்டும் செய்யாது. பலாலி படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 11 ஆம் நாள் வான் தாக்குதலை நடத்தியபோது நான் பொதுக்கூட்டத்தில் இருந்தே…

  6. பலாலி படைத்தளம் மீதான தாக்குதல்: பேரெழுச்சியில் தமிழ்நாடு [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 08:20 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். பலாலி படைத்தளம் மீதான விமானத்தாக்குதல் செய்திகள் வெளியான உடனேயே தமிழ்நாட்டில் பேரெழுச்சியான அலை ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உலகத் தமிழர்கள் குவிந்திருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வளாகத்திலிருந்து எமது செய்தியாளருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் அளித்த உற்சாக நேர்காணல்: பல்வேறு தடைகளைத் தாண்டி உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு சேலத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வந்து குவிந்து கொண்டிருக்கிற தமிழர்கள், புலிகளின் வான்படை முதன்முதலாக செயற்பட…

  7. செஞ்சோலையில் கோர நர்த்தனம் ஆடிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் செயலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சத்தை மனிதநேயம் உள்ளோர் மனதை நடுநடுங்கச் செய்யும் படுகொலையை சிங்கள அரசின் விமானப்படை நடத்தி இருக்கிறது. இலங்கைத் தீவின் கிளிநொச்சிப் பகுதியில், செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகம் மனிதநேயத் தொட்டிலாக இயங்கி வருகிறது. சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற இனப்படுகொலையால் உயிர்நீத்த தமிழர்களின் குழந்தைகளை-தாய்-தந்தையரை இழந்த அனாதைக் குழந்தைகளைப் பாதுகாத்து, அரவணைத்து வளர்க்கும் சேவை மையமாக இந்த செஞ்சோலையை விடுதலைப் புல…

  8. இலங்கைக்கு போர் தளபாடங்கள் ஆயுதங்களை வழங்குவதை இந்திய அரசு ஒத்திவைத்தது [14 - August - 2006] [Font Size - A - A - A] இலங்கைக்கு இராணுவ தளபாடங்களையும் ஆயுதங்களையும் வழங்குவதை புதுடில்லி ஒத்திவைத்துள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரத்தை கருத்தில் கொண்ட இந்தியா இந்த முடிவையெடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஆயுதங்களை கோரியுள்ளது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டா என இலங்கை உறுதியளித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கிளேமோர்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய வாகனங்களையும் இலங்கை கோரியுள்ளது. மேலும், கடல்புலிகளை இலங்கைக் கடற்படையினர் வலிமை மிகுந்த எதிரிகளாக கருதுவதால் அவர்களை எதிர்கொள்வதற்கு இந்திய கடற்ப…

  9. இலங்கை, முல்லைத்தீவில் 16 குண்டுகளை வானிலிருந்து பொழிந்து 61 சிறார்களை அப்படியே புதைகுழிக்கு அனுப்பி வைத்திருக்கிறது இலன்கையில் புத்தன் வழி நடக்கும் சிங்கள அரச படைகள். இந்த குழந்தைகள் போராளிகளல்ல, அவர்கள் யுத்த பயிற்சியில் ஈடுபடவும் இல்லை, அவர்களது சடலங்களால் பிணக்காடாய் காட்சி தந்த செஞ்சோலை என்றளைக்கப்படுகிற அந்த வளாகத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கான எந்த தடையமும் இல்லை என ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பு, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரான நார்வே பிரதிநிதிகள் என அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், மீண்டும் மீண்டும் சிங்கள அரசு, சிங்கள தரப்பு மற்றும் கருணா குழு ஊடகங்களும் (அவற்றில் சில வலைப்பதிவுகளும் அடங்கும்) உண்மையை மூடிமறைத்து புலிகளை எதிர்ப்பதை அப்பாவி கு…

    • 0 replies
    • 957 views
  10. முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான் சிங்களக் காடையன்! கேள்வி கேட்க நாதியில்லை உலகில்! ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முணுமுணுப்புகள் - அவ்வளவே! கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை முறுக்கிக் கொண்டு! முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா, பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில் பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம் பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும் சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் ம…

  11. அமெரிக்க உற்பத்திகளுக்குள் அடங்கும் பெப்சி..கொக் போன்ற மென்பான விற்பனையை இந்தியா தடை செய்யுமானால்..இந்தியாவிற்கான அமெரிக்க முதலீடுகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்கா பொருளாதார யுத்த எச்சரிக்கை ஒன்றை இந்தியா மீது செய்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4789615.stm

    • 3 replies
    • 1.5k views
  12. முல்லைப் படுகொலை: சென்னையில் 17 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலைப் போராட்டம் [திங்கட்கிழமை, 14 ஓகஸ்ட் 2006, 19:49 ஈழம்] [புதினம் நிருபர்] முல்லைத்தீவில் சிறிலங்காவின் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 17ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளது. சேலத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 17 ஆம் நாளன்று மதுரையில் நடைபெற இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் "தமிழர் எழுச்சி" மாநாடு இரத்துச் செய்யப்பட்டு அன்றைய நாளில் சென்னையில் உண்ணாநிலைப் …

  13. அரபுலகின் அதி நவீன இராணுவமாக வெளிப்படும் ஹிஸ்புல்லா போராளிகள் [13 - August - 2006] [Font Size - A - A - A] -அ.ரஜீவன்- ஹிஸ்புல்லா போராளிகளின் போரிடும் திறனையும், நவீன ஆயுதங்களையும் மேற்குலக ஊடகங்கள் ஒருவித ஆச்சரியத்துடன் பார்ப்பதை அவதானிக்க முடிகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பு முற்று முழுதாக புதிதானவொன்று போல தென்படுகின்றது என்கிறது நியூஸ்வீக். நவீன ஆயுதங்களையும், அற்புதமான ஒழுக்கநெறியையும் கட்டுப்பாட்டையும், கொண்டுள்ள அராபிய கெரில்லா இராணுவம் என ஹிஸ்புல்லா அமைப்பை அது வர்ணிக்கின்றது. அதன் வீரர்கள் மரணிக்கும் வரை போராட தயார் என்கின்றனர். எனினும், நவீன உடற் பாதுகாப்பு கவசங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கொண்டுள்ளனர். அவர்களது தந்திரோபாயம், …

  14. பெப்சி, கோக கோலாவுக்கு இந்தியா முழுவதும் தடை வந்தால் ஆதரிப்போம் என்று கருணாநிதி கூறினார். அந்நிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான பெப்சி, கோக கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக டெல்லியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் 2-வது முறையாக ஆய்வில் கண்டுபிடித்து கூறியுள்ளது. இந்த பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் இது நச்சுத்தன்மை கொண்டது என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் இந்த பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. பல்வேறு கட்சிகள் இந்த குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. டெல்லி, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் கல்வி நிலைய வளாகங்களில் இந்த …

  15. ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள விமான நிலையங்கள் குண்டு புரளி காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஒரு சில விமான சேவைகளே நடைபெறுகின்றது.

  16. இலங்கை பிரச்சனை : கருணாநிதியுடன் பிரதமர் தூதர் சந்திப்பு! புதன், 9 ஆகஸ்ட் 2006 (13:45 ஐளுகூ) சென்னை வந்துள்ள பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை குறித்து பேசினார்! இலங்கை அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி வந்து முக்கிய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்று அவரிடம் அயலுறவு துணை அமைச்சர் ஈ. அகமது வலியுறுத்தினார். இந்த நிலையில், இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் அணுகுமுறையை விளக்கவும், அதன் மீது தமிழக அரசின் கருத்தை அறியவும் பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன், தமிழக முதலமைச்சர் கருண…

  17. கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ACF தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தொடர்பில் அமெரிக்கா தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை முடிவுக்கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவி புரியும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இயலுமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான பாதையைத் திறந்துவிட…

  18. கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார். குடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை ஜனாதிபதி கார்லோஸ் லாகி தெரிவிக்கிறார். பொலிவியா நாட்டின் சுக்ரே என்ற நகருக்கு திங்கட்கிழமை வந்த அவர் இத் தகவலைத் தெரிவித்தார். வரும் 13 ஆம் திகதி காஸ்ட்ரோவுக்கு 80 ஆவது பிறந்தநாள் வருகிறது. இன்னும் 80 ஆண்டுகள் அவர் உயிரோடு இருப்பார் என்று கார்லோஸ் லாகி தெரிவித்தார். காஸ்ட்ரோ திரும்பிவரமாட்டார். அவருக்கு வயிற்றில் புற்றுநோய் என்று அமெரிக்கா செய்துவரும் பிரசாரம் உண்மை அல்ல என்று அதன் மூலம் நிரூபணமாகிவிடும் என்றும் குறிப்பிட்டார் கார்லோஸ் லாகி.

    • 0 replies
    • 740 views
  19. பாகிஸ்தானில் கடும் மழையால் பாலம் இடிந்து வீழ்ந்து 40 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 100 இற்கும் மேற்பட்டவர்கள் மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகி விட்டனர். வடமேற்கு மாகாணம் தான் இந்த மழையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மர்தான் நகரில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலத்தை தொட்டபடி சென்றது. இந்த பாலத்தின் மீது ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அந்த பாலம் திடீர் என்று இடிந்து விழுந்தது. பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் 100 இற்கும் மேற்பட்டவர்கள…

    • 0 replies
    • 672 views
  20. இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை - வைகோ - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 12:39 இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அக்கறையின்றி செயற்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை தமிழக அரசு மாற்றிவிட்டது. இது குறித்து பொது மக்களிடம் எடுத்துரைப்போம். மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலின் நிலைப்பாடு குறித்து அதிமுக ம…

  21. புரட்சித்தலைவியின் அடிவருடிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.... நம்ம அம்மாவும் கின்னஸ் புத்தகத்தில் ஒரு சாதனைக்காக இடம் பெற்றிருக்கிறார்.... அனேகமாக இந்தியாவிலேயே அல்லது உலகத்திலேயே ஒரு மாநில முதல்வர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது இது முதல் முறையாக இருக்கக்கூடும்..... அதுகுறித்த சுட்டி இதோ : http://www.guinnessworldrecords.com/conten...?recordid=54234 விபரம் இதோ : Largest Wedding Banquet Jayalalitha Jayaram, former Tamil Nadu chief minister and movie star, hosted a luncheon for over 150,000 guests at her foster son's wedding. The banquet was served in grounds by the coast in the state capital, Madras, on September 7, 1995. (http://madippa…

    • 3 replies
    • 1.6k views
  22. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை, சேலம், மதுரையில் நடத்திய ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாடுகளில் தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தோழர் தியாகு பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரைகளிலிருந்து. இப்போது ஈழத்திலே நடக்கும் பேச்சு வார்த்தைக்கான சூழலை உருவாக்கியதே விடுதலைப்புலிகள் தான். நாங்கள் அமைதிக்காக நிற்கிறோம். நாங்கள் போர் வெறியர்கள் அல்ல. நாங்கள் ஆயுதங்களை காதலிக்கிறவர்கள் அல்ல என்று இந்த உலகத்திற்கு மெய்ப்பிக்கிற விதத்திலே அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். பேசுகிறாயா பேசத் தயார். அந்த பேச்சு வார்த்தையிலே நீ என்ன தீர்வைச் சொல்லப் போகிறாய் சொல் என்றார்கள். கடந்த காலத்திலே தந்தை செல்வா சிங்கள ஆட்சிகளோடு பேசினார். கடந்த காலத்திலே தமிழர் அய்க்கிய விட…

  23. ஈழச் சிக்கலைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து திசை திருப்பி வருகின்றன. என்ன நடந்தாலும் தமிழினம் அமைதி காக்கவேண்டுமென விரும்புகின்றன. 2001 டிசம்பர் 24 ஆம் தேதி புலிகள் சிங்கள அரசுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டபோது, மாபெரும் வெற்றியின் வாசலில் நின்று கொண்டுதான் அதைச் செய்தார்கள். அமெரிக்க ஆயுதங்கள் ஒருபுறம், இந்திய நெருக்குதல்கள் மறுபுறம் - இவற்றுக்கிடையே தான் மாபெரும் ஆனையிரவு இராணுவ முகாமைத் தகர்த்து, 14 பயணிகள் விமானங்களையும் அழித்து, 50,000க்கும் மேற்பட்ட போர்த் தளவாடங்களைக் கைப்பற்றி - சமநிலை இராணுவ பலத்துடன் கிறிஸ்துமஸ் நாளில் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிங்கள ராணுவம் செல்லக் கூடாது, துரோகக் குழுக்களின்…

    • 1 reply
    • 1.1k views
  24. பிடல் காஸ்ட்ரோ கடந்த அரை நூற்றாண்டு காலமாக உலகின் ஆகர்சமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிவரும் கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ கடந்த வாரம் சத்திர சிகிச்சைக்கு உள்ளாகுமுன்னர் ஆட்சியதிகாரத்தை சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தமை பெருமளவு ஊகங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 80 ஆவது வயதை எட்டவிருக்கும் கம்யூனிஸ்ட் தலைவரின் மறைவைக் காண்பதற்கு அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்கள் அமெரிக்க அதிகார வர்க்கத்தினரும் அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் செய்துகொண்டிருக்கும் கியூபர்களுமே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவின் கோடிப்புறத்தில் எண்ணற்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபாவில் சோசலிச ஆட்சியை நிலைநிறுத்தி…

  25. இலங்கை காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : கருணாநிதி! வெள்ளி, 4 ஆகஸ்ட் 2006 (13:55 ஐளுகூ) கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறிலங்க காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்! தமிழக சட்டப் பேரவையில் இன்று உயர்கல்வி மானியத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறிய கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார். கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் சிறிலங்க காவல் அதிகாரிகள் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப் பேரவை உறுப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.