உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
தகனமேடையில் `கேக்' வெட்டினார் சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் போபால், ஜன.12- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரசிங் தாக்குர். இவருக்கு நேற்று 51-வது பிறந்தநாள். அதை நூதனமாக கொண்டாட விரும்பிய அவர், அதற்கு தேர்ந்தெடுத்த இடம், சுடுகாடு. சுடுகாட்டுக்கு தனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட்டிச்சென்றார். பிணங்களை தகனம் செய்யும் மேடையில் பிறந்தநாள் 'கேக்'-ஐ வைத்தார். அங்கேயே 'கேக்' வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கு இருந்த அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினர். முன்னதாக, சுடுகாட்டில் உள்ள சிவன் கோவிலில் அவர் சாமி கும்பிட்டார். Dailythanthi
-
- 2 replies
- 1.6k views
-
-
நாய் மீது சவாரி செய்யும் குரங்கு அமெரிக்காவின் கோலராடோ பகுதியில் குரங்குகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நாய்கள் மீது சவாரி செய்யும் போட்டியில் டென்லர் அணியை சேர்ந்த குரங்கு கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. Maalaimalar
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - பிரித்தானிய அரசு தனது நாட்டினருக்கு எச்சரிக்கை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அரசு தனது நாட்டினரை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அவசிய தேவை இருந்தால் மட்டுமே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகளும் குழப்பநிலையும் காணப்படுகிறது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து செயற்படுங்கள். அரசியல் கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார் ஜனவரி 10, 2006 சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது …
-
- 8 replies
- 2.3k views
-
-
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ரூ.2700க்கு ஆண் குழந்தையை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்சூல் என்ற இந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. தாய் குழந்தையை தவிக்க விட்டு ஓடிப் போய் விட்டாள். தந்தைக்கோ காது கேட்காது, வாய் பேச முடியாத ஊமை. இதனால் குழந்தை பாட்டி ஷாஜகான் கடுன் வசம் இருந்தது. அதை அவளால் வளர்க்க முடியாததால் ரூ.2700க்கு விற்றாள். அந்த குழந்தையை நஸ்மா கதூர் என்ற பிச்சைக்காரி விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். நஸ்மா ஏற்கனவே பல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறாள். தற்போது இந்த குழந்தையும் அவள் பிச்சை எடுக்கவே வாங்கியிருப்பதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறினார்கள். இதை நஸ்மா மறுத்தாள். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இந்த க…
-
- 5 replies
- 2.1k views
-
-
விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! ஜனவரி 09, 2006 கொச்சி: ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார். விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத…
-
- 4 replies
- 2k views
-
-
அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது சென்னை : இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர இன்ஜினியரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லுõர் மாவட்டம் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம குரு பிரசாத்(26). இவர் ஆஸ்டர் டெலி சர்வீஸ் என்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தார். சமீபத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இலங்கையில் உள்ள மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து, ஆத்ம குரு பிரசாத் இலங்கை கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றலாகி அருகில் உள்ள கிவேலா என்ற இடத்தில் தங்கியிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம ஆசாம…
-
- 1 reply
- 1.5k views
-
-
அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் [திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்] தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்: சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வ…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஞாயிறு 08-01-2006 22:20 மணி தமிழீழம் [அமெரிக்க நிருபர் ] அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை. அமெரிக்காவின் சண்ரைஸ் பிரதேசத்தில் இரு இலங்கைப் பெண்களது சடலங்கள் அப்பிரதேச காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சொர்ணமணி முத்துலிங்கம்(வயது 63) அவரது மருமகள் ரசேல் லவன் (வயது 43) ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இவர்களது சடலங்களுக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரசேல் லவன் கணக்களாராக மியாமி-டேட் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மாமியார் தனது பேரப்பிள்ளைகளை பராமரிப்பதற்காக அன்மையில்தான் இலங்கையிலிருந்து வருகைதந்திருந்தார். விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விச…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் யாடிகி பகுதி சவு டேஸ்வரி காலனியை சேர்ந் தவர் கண்ணையா. இவரது மகன் சவுடய்யா (வயது 21) 8-ம் வகுப்பு வரை படித் துள்ளார். சவுடய்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் அந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். கடந்த 4 வருடமாக அவரது தொந்தரவு அதிகரித்து விட்டது. முதலில் இவன் பலரது வீடுகளில் புகுந்து திருட ஆரம் பித்தான். பின்னர் தெருவில் போவோர் வருவோரை தாக்க தொடங்கினான். அந்த வழியாக செல்வோரை கல்லால் தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தான். அவனது அட்டூழியம் அதிக மானதால் தினமும் அவனது பெற்றோருக்கு புகார் கள் வந்த வண்ணம் இருந்தது. இது பெற்றோருக்கு தலைவலியை கொடுத்தது. அவனது …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி 'உங்களால் முடியுமா?' என்ற வரிசையில் வெளியான டி.வி. நிகழ்ச்சி ஒன்றினால், அதன் தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த டி.வி. நிகழ்ச்சியில் இடுகாட்டில் சவப்பெட்டிக்குள் ஒருவர் 'பிணம்' போல் படுத்திருந்த காட்சி இடம் பெற்று இருந்தது. தற்செயலாக அங்கு வந்த மயானத்தில் பணி புரியும் 3 பெண்கள், பிணத்தின் கோட்டில் இருக்கும் சாவியை அகற்றும்படி கூறினார்கள். அந்த நேரத்தில் பிணமாக படுத்து இருந்தவர் 'திடீர்' என்று அசைந்ததால் படப்பிடிப்பு என்று அறியாத அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கிற்காக இப்போது அந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோ…
-
- 3 replies
- 1.9k views
-
-
மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் ஆஸ்திரேலியாவில் டாஸ் மானியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் டி பீல். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், தனது மார்பையே பிரஷ் போல பயன்படுத்தி ஓவியங்களை வரைகிறார்.மார்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு, அதைக்கொண்டு ஓவியம் வரைந்து அதில் மார்பைக் கொண்டே '' கையெழுத்தும் '' போடுகிறார். இவர் தனது ஓவியத்தை ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை செய்கிறார்.ஓவியம் வரைவதற்காக ஒவ்வொரு முறையும் வண்ணங்களை மாற்றும் போதெல்லாம் ஷவரில் நின்று குளிப்பது தான் சற்று சிரமமாக இருக்கிறது என்கிறார், டி பீல். Dailythanthi
-
- 0 replies
- 3.9k views
-
-
நாய்களுக்காக தனி பேக்கரி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாய்களுக்காக தனி பேக்கரி ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஹரியத் ஸ்டெர்ன்ஸ்டீன் இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறார். அங்கு நாய்களுக்காக வெவ்வேறு நறுமணத்துடன் கூடிய பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.சிலர் தங்கள் செல்ல நாயை கடைக்கே அழைத்து வந்து அது விரும்பும் வாசனை உள்ள பிஸ்கெட்டை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.சில வகை பிஸ்கெட்டுகள் பூனை மற்றும் நாய்களுக்கு பிடித்த 'எலும்பு' வடிவங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன. முதலில் அனைவரும் வேடிக்கையாக பார்த்துச் சென்றதாகவும், இப்போது சகஜமாக தங்கள் செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்று 'ஷாப்பிங்' செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அத…
-
- 15 replies
- 2.7k views
-
-
பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் பூகம்பம் ஏற்பட்டு கட்டி டங்கள் இடிந்து விழுவதும், ஏராளமானோர் உயிர் இழப்ப தும் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி வருகின் றன. நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து ஏற்படுவதை முன் கூட்டியே கண்டு பிடித்து எச்சரிககை விடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் புதிய வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடு 6 அல்லது 7 ரிக்டர் அளவு வரை நில நடுக்கம் ஏற்பட்டாலும் இடிந்து விழா மல் அப்படியே நிற்கும். கான்கிரிட் சுவர் மற்றும் துண்களுக்கு இடையே பிளாஸ்டிக் பலகைகள், பிளாஸ்டிக் வலைகள் ஆகிய வற்றை வைத்து இந்த புதிய வகை வீட்டை உருவாக்கி இருக்கிறார்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராஜிவ் கொலை வழக்கு கைதி முருகனை சந்திக்கிறார் அரித்திரா? வேலுõர்: ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் ஆயுள் தண்டனை கைதி நளினியை அவரது மகள் அரித்திரா நாளை (ஜன.9) சந்திப்பார் என தெரிகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவரது மனைவி நளினி வேலுõர் பெண்கள் சிறையில் உள்ளார். இவர்களின் மகள் அரித்திரா(15) இலங்கையில் வசித்து வருகிறார். சிறையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க அரித்திரா தமிழகம் வர முயன்றார். இலங்கை அரசு அரித்திராவுக்கு கடந்த ஓராண்டாக விஸா கொடுக்க மறுத்து வந்தது. தனது மகளுக்கு இலங்கை அரசு விஸா வழங்க வே…
-
- 1 reply
- 1.7k views
-
-
"இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை வாஷிங்டன்: ""தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் அமெரிக்க மாணவர்கள் இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை அமெரிக்கா துவக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கு தயங்குகின்றனர். இதனால், மற்ற நாட்டு மாணவர்களுடன் உரையாடவும், அவர்களுடைய கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்தி, அரபு, சீனம், ரஷ்யா மற்றும் பார்சி மொழிகளை கற்க வேண்டும். அமெரிக்க அதிபர் புஷ்சின் அ…
-
- 1 reply
- 1.6k views
-
-
மறைக்கப்பட்ட உண்மைகள் http://www.pentagonstrike.co.uk/flash.htm#Main பழைய விடையம்தான் இப்பொழுதுதான் காணக்கிடைத்தது.
-
- 0 replies
- 1.5k views
-
-
மயிரிழையில் உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் பொலிஸாரின் துவக்குச் சூட்டில் கூடச் சென்றவர் படுகாயம் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து ஹவன்முறைகள் அற்ற ஜே.வி.பி.' இயக்கத்தின் தலைவரும் ஜே.வி.பி. இயக்க ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மைத்துனருமான கலாநிதி எஸ். சந்திரா பெர்னாண்டோ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவருடன் காரில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்த தென்னாபிரிக்க வைத்தியரான ராஜேந்திரம் நடராஜா படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள தனது தனி பங்களாவில் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தேசித்துள்ளார். இப்போதெல்லாம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது பங்களாவில் பெரும்பாலும் தங்குவதில்லை. மாமல்லபுரத்திற்கு அருகே சிறுதாவூரில் பல ஏக்கர் பரப்பளவில் மிக மிக பிரமாண்டமாய் எழுப்பப்பட்டுள்ள பங்களாவில் தான் தங்குகிறார். சசிகலா சகிதமாய் அடிக்கடி இங்கு போய்விடுகிறார். டிசம்பர் 27ம் தேதி சிறுதாவூர் பங்களாவுக்குச் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். இந்த பங்களாவிலேயே புத்தாண்டை ஜெயலலிதா கொண்டாடினார். தொடர்ந்து இதே வீட்டிலேயே தங்கியிருக்கும் ஜெயலலிதா, பொங்கல் பண்டிகையையும் இங்கேயே கொண்டாட முடிவு செ…
-
- 0 replies
- 1.7k views
-
-
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்க…
-
- 10 replies
- 2.5k views
-
-
உளவு நிறுவனங்கள் உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது. பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள். இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான …
-
- 14 replies
- 2.8k views
-
-
சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் புவியல் பகுதி ஆய்வாளர் 02 தை 2006 உலகின் பல பாகங்களில் பாரிய நிலநடுக்கம் பூமியதிர்ச்சி ஏற்படலாம் என்று எதிர்வு கூறியதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி மேலதிகச் செய்தி தெரிந்தவர்கள் இணைக்கவும்.
-
- 19 replies
- 4.5k views
-