உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அகமதாபாத்: பக்ரீத் திருநாளையொட்டி முஸ்லீம்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த டிவிட்டர் செய்தியில், இந்த திருநாள், நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பலப்படுத்த உதவட்டும் என்று கூறியிருந்தார் மோடி. பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/india/narendra-modi-tweets-eid-greetings-185462.html
-
- 0 replies
- 386 views
-
-
தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீனாவுக்கு எச்சரிக்கை! சீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சி.என்.என். நடத்திய டவுன் ஹால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பைடனிடம், சீனா தனது சொந்தம் என்று கூறிக்கொள்ளும் தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா முன்வருமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன், ‘ஆமாம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு கட்டாயம் உள்ளது’ என பதிலளித்தார். மேலும், அவர் கூறுகையில், சீனா மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருக்கப் போகிறார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை ஏனென…
-
- 0 replies
- 247 views
-
-
சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சவூதி அரேபியாவிற்கு பிரித்தானியா ஆயுதங்களை வழங்கியமை சட்ட ரீதியானதே என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம், சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருந்தமை தொடர்பில் இரகசியமான ஆதாரங்களை பரிசீலனை செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அமைச்சர்கள் சட்டவிரோதமான முறையில் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. சவூதி அரேபியா, ஏமனுடன் யுத்தம் செய்து வருவதாகவும் அதனால் ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெர…
-
- 0 replies
- 281 views
-
-
பிரபல மேடை நாடக இசை நிகழ்வான பிரெஞ்சுப் புரட்சியைத் தழுவிய கதையான "1789 Les Amants de la Bastille" நிகழ்ச்சிக்கான இன்றைய ஒத்திகையும் அதனைத் தொரடர்ந்து நிகழும் வானவேடிக்கைக்கான ஒத்திகையும் ஆயத்தங்களும் பரிசிலுள்ள Palais des Sports இல் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 20h30 இற்கு ஆரம்பமாகும் நிகழ்விற்கான ஒத்திகையை 18h00 மணியளவில் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைக்கான குண்டு ஒன்று வெடித்ததில் அருகிலிருந்த சீமெந்துச் சுவரும் மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்தது. மேடையில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களுமாகப் பதினைந்து பேர் படுகாயமுற்றனர். இதில் ஜந்து பேர் மிகவும் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் வைத்திய…
-
- 1 reply
- 655 views
-
-
இந்தியாவை சுற்றிவளைக்கும் எதிரிநாடுகளும்... ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் விளைவும்! இலங்கையில் நடந்த இனப்படுகொலைச் சம்பவத்தை, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் யாராலும் மறக்க முடியாது. தமிழர்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போடப்பட்டதுதான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்று சொல்லப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கான பல்வேறு நலன்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும், அதில் சொல்லப்பட்ட அம்சங்களை நிறைவேற்றியுள்ளதா இலங்கை அரசு? உண்மையில் அந்த ஒப்பந்தம் இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனுக்காக கொண்டுவரப்படவில்லை. அது, …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய சான்சலர் ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெர்லின்: ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து தேர்தலிகளில…
-
- 8 replies
- 647 views
-
-
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் என கூறப்படும் ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன. தொடர்புடைய விடயங்கள் ஊழல், திமுக மேலும் கலைஞ…
-
- 4 replies
- 793 views
-
-
காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கும் விமானம் காணாமல் போனமைக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு போலியான கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஈரானைச் சேர்ந்த 19 வயதான போரியா நூர் மெஹடாத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை என மலேசிய பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜேர்மனிக்கு செல்லும் முகமாக மேற்படி விமானத்தில் பயணித்துள்ளார். …
-
- 0 replies
- 373 views
-
-
ஜோ பைடன் உள்ளிட்ட... 963 அமெரிக்கர்கள், ரஷ்யாவுக்குள் நுழைய தடை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோதமான நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளதாகவும் ஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1283319
-
- 0 replies
- 145 views
-
-
பாகிஸ்தான்: தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் பலர் பலி படத்தின் காப்புரிமைREUTERS பாகிஸ்தானில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவெட்டா நகரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றது. ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மெதடிஸ்ட் தேவாலயத்தில் பிராத்தனைகள் நடந்துகொண்டிருந்த போது தாக்குதல் நடைபெற்றதாக இந்தப் பிராந்தியத்தின் உள்துறை அமைச்சர் சர்பராஸ் பக்டி உள்ளூர் ஊடகத்தில் கூறினார். இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தேவாலயத்தின் வாசலில…
-
- 0 replies
- 376 views
-
-
தனது மகனை தேச துரோகி என குற்றம் சாட்டிய முன்னாள் உயரதிகாரி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை, யேமெனை அச்சுறுத்தும் புதிய வகை தொற்று நோய் மற்றும் கடும் சூறாவளி, வறட்சி போன்ற பேரிடர்களை இந்த ஆண்டும் உலகம் சந்திக்குமா? உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 247 views
-
-
மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத். ஈரானின் எதிரிகளை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது. "அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன" என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலு…
-
- 0 replies
- 451 views
-
-
சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோ வ்ஸ் சாலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீடு உள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று (அக்.17) நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாடி வீட்டில் மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கையில் டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. ப.சிதம்பரம் வீட்டை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. உடனே கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து ஓடிச் சென்று இளைஞர்களை பிடித்தனர். வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரையும் பிடித்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் மோகன் புகைப்படம் எடுத்த 5 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 5 பேரும்…
-
- 3 replies
- 1.1k views
-
-
"விருந்து காணொளி" வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை... மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்! இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபின்லாந்து பிரதமராக இருந்துவரும் சன்னா மரின், விருந்தொன்றில் கலந்துக்கொண்ட காணொளியொன்று வெளியானதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெளிப்படையான காதலுக்காக அடிக்கடி விமர்சனங்களுக்கு இலக்காகி வரும், சன்னா மரின், ஒரு விருந்தில் பாடுவது, நடனம் செய்வது மற்றும் குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, 36 வயதான சன்னா மரின், சில அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர்கள், சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரினர். இதற…
-
- 5 replies
- 402 views
-
-
இங்கிலாந்தில் மாணவர்கள் மத்தியில் வன்முறைகள் வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் இந்த மாணவியை இன்னொரு மாணவி பிளேட்டால் வெட்டி துன்புறுத்தியுள்ளார். இன்னோர் இடத்தில் ஆசிரியை ஒருவர் மாணவனுடன் தகாத உறவு வைத்ததுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். எங்கே போகுது இளைய சமூகம்...??! http://news.bbc.co.uk/1/hi/england/south_y...ire/5125120.stm
-
- 4 replies
- 903 views
-
-
கனடா கியுபெக் மேயர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் காலமானாரென La Prairie நகராட்சி அதிகாரிகளின் தகவலின் படி தெரியவந்துள்ளது. 51-வயதுடைய Roussel -ற்கு குளவி கொட்டுவதால் அலர்ஜி உண்டாவதில்லை என நகர பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இவருக்கு பல தடவைகள், கிட்டத்தட்ட 15 தடவைகள் அவரது காலில் குளவிகள் கொட்டியிருப்பதாக நம்ப படுகின்றது. அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் வந்து அவருக்கு அட்ரனலின் ஊசி போட முயன்றுள்ளனர் ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது ஒரு அதிர்ச்சியான நிலை எனவும் இது போன்ற ஒரு வழியில் ஒருரை இழப்பது என்பது மிகவும் கடினமானதெனவும் நகரத்தின டைரக்டர் ஜெனரல் Jean Bergeron, தெரிவித்துள்ளார். Roussel வெளிப்படையாக குளவிகளிற்கு அலர்ஜி அற்றவராக இருந்தாலும் எ…
-
- 0 replies
- 488 views
-
-
தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் - ஏன்...எங்கே? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக 'உலகப் பார்வை' பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பெட்டிக்குள் பத்து வயது சிறுவன் படத்தின் காப்புரிமைAFP மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்கு ஒரு சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்ட பத…
-
- 0 replies
- 345 views
-
-
ஐ.நா. உப மனித ஆணைக்குழுவில் முல்லைப் படுகொலை [சனிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2006, 05:36 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஐக்கிய நாடுகள் சபையின் உப மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் "சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற சுவிஸ் நாட்டை தளமாக கொணடு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சிறிலங்கா அரசின் கடந்த கால படுகொலைகளை சமர்ப்பித்துள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.08.06) நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுவிஸ் நாட்டை தளமாகக்கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் சார்பாக திருமதி டியெற்றி மக்கோணால் அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றினார். http://www.eelampage.com/?cn=28291 அவர் தனதுரையில் கூறியதாவது: "இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசுகளினால் தமிழ் …
-
- 0 replies
- 709 views
-
-
அமெரிக்க அதிபர் - வடகொரிய தலைவர் நேருக்கு நேராக சந்திக்க ஆர்வம், மழைக்காலம் நெருங்குவதால், ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் வங்கதேச எல்லை முகாம்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 168 views
-
-
நான்காவது முறையாக ஜெர்மனியின் அதிபரானார் ஏஞ்சலா மெர்கெல்! ஜெர்மனியில் 6 மாத கால அரசியல் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து நான்காவது முறையாக பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் அதிபர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த பொருளாதார பின்னியை கொண்ட ஜெர்மனியில் 2005ஆம் ஆண்டு முதல் மூன்று முறை ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 6 மாக காலமாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இடம்பெற்று வந்த அனைத்த…
-
- 2 replies
- 398 views
-
-
துக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயக…
-
- 1 reply
- 680 views
-
-
எஃப்.எம். ரேடியோக்களை விட இன்று அதிக அளவில் பொதுமக்களால் விரும்பிக் கேட்கப்படுவது தொலைபேசி உரையாடல்கள்தான். இந்திய அரசியலில் இன்று தவிர்க்கவே முடியாமல் போய்விட்ட தொலைபேசி உரையாடல்கள் அரசியல்வாதிகள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைபேசி உரையாடல்கள்தான் முக்கிய பங்கு வகித்தது. ஆ.ராசாவின் பதவி பறிப்பு, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடங்கியது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீதான சர்ச்சை என நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பல ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தன. ‘நாட்டின் பாது காப்புக்கும், வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கவும் இப்படிப்பட்ட தொலைபேசி ஒட்டுக்கேட்பு தேவைதான்’ என அண்மையில் பிரதமர் ம ன்மோகன் சிங் கருத்துத் தெ…
-
- 0 replies
- 479 views
-
-
துருக்கியில் பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் துணைத்தலைவர், ஆசிரியர் செயலாளர், விரிவுரையாளர் ஒருவர் மற்றும் பணியாளர் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாகவும் தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர்…
-
- 0 replies
- 400 views
-
-
'ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக வேண்டும்' - டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ரஷ்யாவின் கூட்டாளியான சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று கடும் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் ரசாயன ஆயுத தாக்குதலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதலை சந்திக்க ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும…
-
- 0 replies
- 344 views
-
-
உலகப் பார்வை: புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம் புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா படத்தின் காப்புரிமைNASA சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள புதிய உலகங்களை தேடும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, புதிய விண்வெ…
-
- 0 replies
- 259 views
-