உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி! Published By: T. SARANYA 22 FEB, 2023 | 10:55 AM அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தொழிலதிபா் விவேக் ராமசாமி (37) அறிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தோ்தல் 2024 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிடும் தனது முடிவை குடியரசு கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலி ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட குடியரசு கட்சியைச் சோ்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபர…
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பாக பிரான்ஸ், ஜெர்ம…
-
- 16 replies
- 1.2k views
-
-
ரஸ்யாவின் பல நகரங்களின் மீது உக்ரைன் ஆளில்லா விமானதாக்குதல் Published By: RAJEEBAN 01 MAR, 2023 | 04:34 PM ரஸ்யாவின் தொலைதூர பகுதிகளிற்குள் உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொள்ள முயன்றது என மொஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் மொஸ்கோ உட்பட ரஸ்யாவின் பலபகுதிகளில் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொள்வதற்கு உக்ரைன் முயன்றது என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது. ரஸ்யாவின் எண்ணெய் சேமிப்பகம் ஒன்றில் திடீரென தீ மூண்டதாகவும் ரஸ்யாவின் இரண்டாவது பெரிய நகரின் வான்வெளியை அதிகாரிகள் திடீர் என மூடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஸ்கோவிற்குதென்கிழக்காக உள்ள ஆளில்லா விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது என ரஸ்…
-
- 3 replies
- 955 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் அவசியம் - அவுஸ்திரேலியாவில் போராட்டம் Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 02:41 PM கடும் புயல் மழையையும் பொருட்படுத்தாமல் சிட்னியில் நூற்றுக்கணக்கான மக்கள் காலநிலை மாற்றம் தொடர்பானஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சிட்னி சிபிடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் பெற்றோர்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பான ஐந்தாவது வருடாந்த ஆர்ப்பாட்டத்திலேயே இவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பல அவுஸ்திரேலிய நகரங்களில் காலநிலை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.ஆசிரிய…
-
- 0 replies
- 613 views
- 1 follower
-
-
ஈரானிய ஆயுதங்களுடன் படகை கைப்பற்றியதாக பிரிட்டன் தெரிவிப்பு Published By: SETHU 02 MAR, 2023 | 05:19 PM ஈரானிய ஆயுதங்களைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றை பிரித்தானிய யுத்த கப்பலொன்று இடைமறித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையொன்றின் போது இப்படகு இடைமறிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இவற்றில் அடங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிறிய படகு இருள்சூழ்ந்த நேரத்தில் சர்வதேச கடற்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருப்ப…
-
- 0 replies
- 744 views
- 1 follower
-
-
ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடுக்கலாம்: அமெரிக்க நீதித் திணைக்களம் Published By: SETHU 03 MAR, 2023 | 05:44 PM அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தொடுக்க முடியும் என அந்நாட்டு நீதித்திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியுற்றதை டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், 2021 ஜனவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தின் செனட் சபையில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணி சான்றளிக்கும் நடவடிக்கையின்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறும்: உக்ரைன் தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறக்கூடுமென உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களின் நகரமான பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கு, ரஷ்யா பல மாதங்களாக முன்னெடுத்துவரும் உக்கிர தாக்குதல்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், ‘பாக்முட் பகுதியில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அடுத்…
-
- 1 reply
- 872 views
-
-
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன? 4 ஜூலை 2021 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MOUSSA81 / GETTY IMAGES (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டது. அது மறுபகிர்வு செய்யப்படுகிறது) இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது. ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர் சுட்டுக் கொலை - போலீஸ் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா சையித் அகமது என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். மேற்கு சிட்னியில் உள்ள அவ்பேர்ன் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் சென்ற முகமது ரகமதுல்லா சையித் அகமது, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபரை கத்தியால் குத்தியதாகவும் இதைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்ற ரகமதுல்லா போலீசாரையும் தாக்க முயற்சித்ததாகவும் நியூ சவுத் வேல…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
உக்ரைன் அதிபரின் அதிரடி -இராணுவ தளபதியின் பதவி பறிப்பு உக்ரைன் நாட்டு இராணுவ தளபதியான எட்வர்ட் மிகளோவிச் மோஸ்க்ளோவை, அந்நாடு அதிபர் ஜெலன்ஸ்கி, எந்தவித காரணமும் சொல்லாமல் பதவியிலிருந்து நீக்கியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதவி பறிப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் உக்ரைன் அரசு நிர்வாகம், ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக பல அரசு அதிகாரிகளை கடந்த சில மாதங்களாக கையும் களவுமாக பிடித்துவருகிறது. அந்தவரிசையில்தான் இவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. என்றாலும் கூட இராணுவத் தளபதி, மோஸ்க்ளோவ் எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு மா…
-
- 1 reply
- 575 views
-
-
வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக் சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழு…
-
- 0 replies
- 414 views
-
-
ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி தலிபான்களால் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்ட ஐஎஸ் இயக்கத்தின் சிரேஷ்ட தளபதி ஒருவரை தலிபான் படையினர் கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஐஎஸ் இயக்கத்தின் பிராந்திய புலனாய்வு மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் தலைவரான காரி ஃபத்தேஹ் என்பவரே கொல்லப்பட்டார் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஸபிஹுல்லா முஜாஹித் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள், பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரி காரி ஃபத்தேஹ் எனவும் முஜாஹித் கூறியுள்ளார். https://akkinikkunchu.com/…
-
- 0 replies
- 278 views
-
-
சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்: எஃப்.பி.ஐ. பட மூலாதாரம், REUTERS சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார். “கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகையே பாதிப்பிற்குள்ளாகிய கொரோனா தொற்று எப்படி தோன்றிருக்கும் என்பது பற்றி எஃப்.பி.ஐ. தீர்க்கமான கருத்தை வெளிப்படையாக கூறுவது …
-
- 0 replies
- 231 views
-
-
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க் KaviFeb 27, 2023 06:39AM உக்ரைனுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெல…
-
- 8 replies
- 751 views
-
-
இரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது? மர்யம் அஃப்ஷாங் பிபிசி பெர்ஷியன் 28 பிப்ரவரி 2023, 07:25 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IRNA இரானில் குறைந்தபட்சம் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒரு மூத்த அரசு அதிகாரி சிறுமிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதை இறுதியாக ஒப்புக்கொண்டார். எந்தவொரு பள்ளி மாணவியும் உயிரிழக்கவில்லை. ஆனால் டஜன் கணக்கானவர்கள் சுவாசப் பிரச்னைகள், குமட்டல், தலைச்சுற்றல், சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 5 replies
- 885 views
- 1 follower
-
-
அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்.." ஓப்பனாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா அமெரிக்காவுக்கு தங்கள் ஏவுகணை மூலம் ஈரான் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. …
-
- 13 replies
- 1.1k views
-
-
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த டெல்லி - பெர்லின் முடிவு Published By: VISHNU 27 FEB, 2023 | 01:27 PM ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பின் போது, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு அறிக்கைக்கு இந்தியாவும் - ஜேர்மனியும் ஒப்புக்கொண்டன. 1974 மே மாத்தில் கையெழுத்திடப்பட்ட 'அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒத்துழைப்பு' தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் இரு நாடுகளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
தெற்கு இத்தாலியில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு! தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கலாப்ரியா பகுதியில் உள்ள கடற்கரை நகரமான குரோடோன் அருகே படகை தரிக்க முற்பட்டபோது கப்பல் உடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில், குறைந்தது 150பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியேறி வருவதாக இத்தாலியின் ஜனாதிபதி கூறினார். சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி, இன்னும் 30பேர் …
-
- 0 replies
- 476 views
-
-
உக்ரைன்- ரஷ்ய பேர் நிறுத்தத்திற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானம் ! உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுத்து சீனா அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளில் சீனா ஈடுபடுவது ஒரு நல்ல விடயம் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவ…
-
- 4 replies
- 475 views
-
-
யுக்ரேன் போர்தான் புதினின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறதா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி,ரஷ்ய சேவை ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்று ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் கேட்ட ஒரு விஷயம் குறித்து நான் தொடர்ந்து சிந்திருக்கிறேன். அந்த நேரத்தில் புதினை அடுத்த 16 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு திருத்தத்தை ஆதரிக்கும்படி ரஷ்யர்கள் வலியுறுத்தப்பட்டனர். மக்களை வலியுறுத்துவதற்காக, அந்த செய்தித்தொகுப்பாளர், உலக அமைதியின்மைக்கு மத்தியில் ரஷ்யா எனும் கப்பலை சிறப…
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
இந்தியாவின் அயல்நாடுகளிற்கான சீனாவின் கடன்கள் - வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்த பயன்படுத்தப்படலாம் - அமெரிக்கா Published By: RAJEEBAN 25 FEB, 2023 | 08:56 AM இந்தியாவின் அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்துவதற்காக பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளது. மத்திய தென்னாசியாவிற்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படலாம் என நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பாக்கி…
-
- 1 reply
- 485 views
- 1 follower
-
-
பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது? பட மூலாதாரம்,SOPA IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன. உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம். பிபிசி அலுவலகங்களி…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
ரஷ்யாவிற்கு எதிரான பத்தாவது பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்! ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் ஓராண்டு நிறைவையொட்டி ரஷ்யாவிற்கு எதிரான பத்தாவது பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்திய சுற்றுத் தடைகள் ரஷ்யா மீதான கூடுதல் வர்த்தகக் கட்டுப்பாடுகளை வழங்குகிறது. இதனை சுவிடன் ஐரோப்பிய சபையின் தலைமையகம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரஸ்ஸல்ஸில் அறிவித்தது. மேலும், இந்த தடைகள், போருக்கு நிதியளிப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் தொடர்பான கடுமையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் நிறுவ…
-
- 0 replies
- 538 views
-
-
யுத்தத்துக்கு முடிவு காண ரஷ்யா, உக்ரேன் அவசரமாக பேச வேண்டும்: சீனா வலியுறுத்தல் Published By: SETHU 24 FEB, 2023 | 03:24 PM உக்ரேனிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரேனும் அவசரமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என சீனா இன்று வலியுறுத்தியுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில சீனா இக்கோரிக்கையை விடுத்துள்ளது. 'அரசியல் தீர்வுக்கான' 12 அம்ச திட்டமொன்றை சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகக்காக அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என சீனா கோரியுள்ளது. அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதை மாத்திரமல்லாமல், அணுவாயுதங்க…
-
- 1 reply
- 732 views
- 1 follower
-
-
2022 ஜனவரி முதல் 10 இற்கும் அதிகமான அமெரிக்க பலூன்கள் சீனாவில் பறந்துள்ளன: சீனா குற்றச்சாட்டு Published By: SETHU 13 FEB, 2023 | 04:27 PM சீன வான்பரப்புக்குள் அமெரிக்காவின் பலூன்கள் பறந்துள்ளதாக சீனா இன்று கூறியுள்ளது. 2022 ஜனவரி முதல் 10 இற்கும் அதிகமான தடவைகள் அமெரிக்காவின் பலூன்கள் சீனாவின் வான்பரப்பில் பறந்து என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் கூறினார். பெய்ஜிங் நகரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். சீனாவின் பலூன் ஒன்றை அமெரிக்க சுட்டு வீழ்த்திய நிலையில், சீனா இவ்வாறு கூறியுள்ளது. 'ஏனைய நாடுகளின் வான்பரப்பில் அமெரி…
-
- 13 replies
- 1k views
- 1 follower
-