Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹலோவீன் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு; 14 பேர் காயம்: சிகாகோவில் சம்பவம் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 08:33 PM அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹலோவீன் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி, திங்கட்கிழமை (31) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 3 சிறார்களும் அடங்கியுள்ளனர் எனவும் அவர்கள் மூவரும் 3, 11 மற்றும் 13 வதானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஒரு சில விநாடிகளில் இச்சம்பவம் நடந்து முடிந்தது என சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கான காரணம் த…

  2. அமெரிக்க இடைக்கால தேர்தல்: 600 வார்த்தைகளில் புரிந்து கொள்ள உதவும் தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம். இடைக்காலத் தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றம், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது…

  3. நியாண்டர்தால்களின் எலும்பு புல்லாங்குழல்: மனிதர்களின் மூதாதையர்களுக்கு இசையறிவு இருந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 1995-ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான எலும்பை தொல்லியலாளர் இவான் டர்க் கண்டுபிடித்தார். கிடைத்த இடம் ஐரோப்பிய நாடானா ஸ்லோவேனியாவில் உள்ள திவ்ய பாப் குகை. பூமியின் பழைய கற்கால அடுக்கைத் தோண்டும்போது நியாண்டர்தால்களின் தீமூட்டும் இடம், கல் மற்றும் எலும்புக் கருவிகளுக்கு அருகே இந்த எலும்பால் ஆன பொருள் கிடைத்தது. "திவ்ய பாப் குகையில் கிடைத்த எலும்பு மனித வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மனிதன் எப்படி மனிதனாக உருவெடுத்தான் என்று தெரிந்து கொள்வதில் இது முக்கியமானத…

  4. கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புடின் அறிவிப்பு! உக்ரைனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக விலகுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் தனது கடற்படையைத் தாக்க கருங்கடலில் ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சனிக்கிழமை வெளியேறியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தம்…

  5. ரஷ்யாவின் பதிலடி தாக்குதல்களால் நிலை குலைந்த உக்ரைன் இரூளில் மூழ்கியது! உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவ்வில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு நகரமான கார்கிவில், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் அதன் கருங்கடல் கடற்படை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை…

  6. பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளி : பலி எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 31 OCT, 2022 | 01:33 PM கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளியின் போது உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த சூறாவளி அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளியை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தி…

  7. பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வெற்றி By T. Saranya 31 Oct, 2022 | 10:29 AM பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவை முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தோற்கடித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவும், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். லூலா டா சில்வா …

  8. சோமாலிய தலைநகரில் குண்டுவெடிப்பு - 100 மேற்பட்டோர் பலி 31 Oct, 2022 | 11:29 AM சோமாலிய தலைநகர் மொகாடிஸுவில் இடம்பெற்ற இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொஹம்மட் தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்று முன்தினம் இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. முதலில், ஒரு கார் வெடித்து சிதறி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடி வி…

  9. கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில் கனேடிய பாகங்கள்: ரஷ்யா குற்றச்சாட்டு! கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கருங்கடலில் 16 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய கப்பல்களை தாக்க முயற்சித்ததாகவும் செவஸ்டோபோல் விரிகுடாவில் நடந்த இந்த தாக்குதலை ரஷ்ய கடற்படை முறியடித்தாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்களில் காணப்பட…

  10. மண்டை ஓடுகளை தேடிவரும் ஜிம்பாப்வே: 'தலை பிரிந்தால் ஆவி அலையும்' டாமியன் ஜேன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY காலனிய ஆட்சிகாலத்தின் போது எடுத்து வரப்பட்ட மனித எச்சங்களை திருப்பி அளிப்பது குறித்து ஜிம்பாப்வேவுக்கு ஒத்துழைப்பு நல்குவதாக லண்டனில் உள்ள இயற்கை வரலாறு அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை, தெரிவித்துள்ளன. ஜிம்பாப்வேவில் இருந்து வந்திருந்த குழுவினரிடம் இரண்டு மையங்களின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிய ஆட்சிகாலத்துக்கு எதிராக போ…

  11. தென்னாப்பிரிக்காவில் புதிய ஜுலு மன்னர் பதவியேற்பு - யார் இவர்? மக்கள் ஏன் இவரை நேசிக்கிறார்கள்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, புதிய ஜுலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி பொதுவாக தென்னாப்பிரிக்கர்கள் அரியணையின் ரசிகர்கள் அல்ல. ஆனால், நேற்று நடந்த புதிய ஜுலு சாம்ராஜ்ஜிய அரசரின் முடிசூட்டு விழா மொத்த நாட்டையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தென்னாப்பிரிக்க வரலாற்றில் மிக முக்கிய தருணம். அந்நாட்டு வரலாற்றில் பல விஷயங்களுக்கு இந்த விழா தொடக்கமாக அமையவுள்ளது. ஜனாதிபதி சிரில் ரமபோசாவினால் 49 வயதான மிசுசுலு கா ஸ்வெலிதினி, முறைப்படி மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். கறுப்பின ஜனாதிபத…

  12. அமெரிக்காவை அச்சுறுத்தும் ட்ரோன் உற்பத்திக்கான ஈரான் - ரஷ்ய கூட்டு By DIGITAL DESK 5 30 OCT, 2022 | 03:07 PM - ஐங்கரன் விக்கினேஸ்வரா ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தி விடயத்தில ரஷ்யாவுடன் ஈரான் வலுவாக கைகோர்ப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணுஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படுமென வொஷிங்டன் அச்சங்கள் இல்லாமில்லை. 2000களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெளிப்பாடானது சமாதானமற்ற பயன்பாடுகளை நோக்கமாக கொண்டு இருக்கலாம் என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. வொஷிங்டன் சார்பான ஈரானிய அதிருப்த…

  13. ஹிட்லர் தந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஜெர்மனியில் இருந்து ஜப்பான் பயணித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PAN MACMILLAN (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 60ஆவது கட்டுரை இது.) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரை 1942 மே 29 அன்று தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே சந்தித்தார். ஜெர்மன் வெளிவிவகார …

  14. ஹாலோவீன் நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு, தென்கொரியாவில் துக்க தினம் பிரகடனம் ! சியோலில் ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினத்தை தென் கொரிய ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார். மேலும் இன்று முதல் விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையிலான காலம் தேசிய துக்க தினம் என்றும் அவர் அறிவித்துள்ளார். சியோலின் இடாவோன் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் என்றும் 19 வெளிநாட்டவர்களும் அதில் அடங்குவதாக தீயணைப்பு …

  15. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கத்தார் நடத்துவதற்கு எதிர்ப்பு ஏன்? 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தார் நாட்டில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை காண உலகம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தும் வளைகுடா நாடான கத்தார் நாட்டின், தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் எழுந்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை விவகாரத்தில் கத்தார் நிலைப்பாடு என்ன? இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி தன் பாலினத்தவர்களின் பால…

  16. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல் By Digital Desk 5 29 Oct, 2022 | 09:48 AM அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் அவரின் கணவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் கணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் 82 வயது பொல் பெலோசியின் மீது சுத்தியலால் தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போல் பெலோசியின் தலையிலும் கையிலும் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நான்சி பெலோசியை சந்திக்கவேண்டும்…

    • 1 reply
    • 270 views
  17. உக்ரைனில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக சுமார் நான்கு மில்லியன் மக்கள் பாதிப்பு! எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்கள் காரணமாக, உக்ரைனில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக சுமார் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் கிவ்வில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்வெட்டு, கிவ் மட்டுமல்ல, டினிப்ரோ நகரம் உட்பட உக்ரைனின் மத்திய பகுதிகளையும் தாக்குகின்றன. மின்வெட்டு மக்களின் வீடுகளில் உள்ள அசௌகரியத்தைத் தவிர, வீதி விளக்குகள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது. உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ், ரஷ்ய…

  18. வருடாந்தர வால்டாய் டிஸ்கஷன் கிளப்பில் சர்வதேச வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் தேசபக்தர். அவரது 'மேக் இன் இந்தியா' யோசனை பொருளாதாரரீதியாக முக்கியமானது. அவர் தலைமையில் நிறைய முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எதிர்காலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் சொந்தமானது. புதின் மற்றவர்கள் இந்திய நாட்டின் மீதான எந்தவொரு தடையையோ அல்லது கட்டுப்படுத்துதலையோ விதிக்க முயன்றாலும், தனது தேசத்தின் நலனுக்காக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மேற்கொள்ளும் திறன்கொண்டவர்களில் மோடியும் ஒருவர். பிரிட்டிஷ் காலனியாக இருந்து, நவீன நாடாக …

  19. குவைத் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருட சிறை By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 05:14 PM குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. லஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குவைத் மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிபதிகளுக்கு இத்தண்டனைகளை விதித்துள்ளது. நீதிபதிகள் 7 பேருக்கு 7 முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீதிபதிகள் இருவரை பணியிலிருந்து நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மற்றொரு நீதிபதி நிராபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபத…

  20. ஐரோப்பாவில் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல்- டீசல் கார்களுக்கு தடை! எதிர்வரும் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை தடைசெய்யும் சட்டத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதையும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டது. அத்துடன், மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த தசாப்தத்தில் புவி வெப்பமடைதலுக்கு காரணமான வாயுக்களின் உமிழ்வை 55 சதவீதம் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை இலக்குகளை அடைவதற்கா…

  21. ட்விட்டரை கைப்பற்றினார் ஈலோன் மஸ்க்: அடுத்து என்ன நடக்கும்? 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP உலகின் பெரும் பணக்காரரான் ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 3 லட்சத்துக்கு 52 ஆயிரம் கோடி. ட்விட்டரை கைப்பற்றியது குறித்து ட்விட்டர் தளத்திலேயே சூசகமாகப் பதிவிட்டுள்ளார் ஈலோன் மஸ்க். எனினும் ட்விட்டர் நிர்வாகம் இதுபற்றி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுவிட்டதாக…

  22. உலக அமைதி- வளர்ச்சியைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட சீனா இணக்கம்! உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போரைக் சீனா கண்டிக்க மறுப்பது குறித்து அமெரிக்கா என்ன கருதுகிறது என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், சீன ஜனாதிபதியின் இந்த சமரச கருத்து வந்துள்ளது. சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தாய்வானில் ‘வெளிநாட்டு தலையீடு’ என்று கூறிய…

  23. ரிஷி சூனக், கமலா ஹாரிஸ் மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள் 26 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரிஷி சூனக், கமலா ஹாரிஸ் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சூனக் பதவியேற்றுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது ஒரு வரலாற்றுபூர்வ நிகழ்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரிஷி சூனக்குக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்காக எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார். …

  24. மனிதகுல வரலாறு: பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள் கிரேம் கிரீன் . ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS RAINIER மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன. வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை …

  25. ரேடியம்: பல பெண்களுக்கு பயங்கரமான மரணத்தைக் கொடுத்த இருட்டில் ஒளிரும் பொருள் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேரி கியூரி - பியரி கியூரி மூக்கை சுத்தம் செய்யும் போது இருட்டில் பளபளத்த கைக்குட்டை கிரேஸ் ஃப்ரீருக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் தன் வாழ்க்கையில் இருளின் ஆரம்பம் இது என்று அவர் அறிந்திருக்கவில்லை. கிரேஸ் 1917 வசந்த காலத்தில் 70 பெண்களுடன் சேர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.