Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் கடுங்குளிர்; ஐரோப்பாவில் அசாதாரண வெயில் - என்ன நடக்கிறது பூமியில்? பட மூலாதாரம்,EPA 4 ஜனவரி 2023, 06:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஜனவரி மாதத்திற்கான வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. போலாந்தின் வார்சாவில் கடந்த ஞாயிறன்று 18.9C (66F) என்ற அளவில் வெப்பநிலை பதிவானது இதேபோல், ஸ்பெயினின் பில்பாவ் பகுதியில் 25.1C என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. இது சராசரி வெப்பநிலையை விட 10C அதிகமாகும். அமெரிக்காவில் 60க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு காரணமான கடுமையான பனிப்புயலை தொடர்ந்து ஐரோப்பாவில் இந்த வானிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவ…

  2. ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் சடலமாக மீட்பு: 2 வாரங்களில் 3-வது மரணம் By RAJEEBAN 03 JAN, 2023 | 02:44 PM ஒடிசாவில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மற்றொருவரின் உடல், கப்பல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்றாவது நபர் இறந்துள்ளதாக ஒடிசா போலீசார் தெரிவித்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கி எம்.பி அல்ட்னா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் வழியில் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அந்தக் கப்பலில் பணியாளர் ஒருவர் இறந்த …

  3. கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு - இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் மெக்கன்சி பதவி,பிபிசி செய்தியாளர் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KCNA இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன் அறிவித்த ஆண்டும் அதுதான். 2017ல், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவை கடுமையாக எச்சரித்திருந்ததால் பதற்றம்…

  4. பிலிப்பைன்ஸ் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 51ஆக உயர்வு- 19பேரைக் காணவில்லை! பேரழிவு தரும் வெள்ளத்தை அடுத்து பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்தது மற்றும் 19 பேர் காணவில்லை. தெற்கு மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தற்போது அவசரகால முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலோர கிராமமான கபோல்-அனோனனில், தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, லேசான பொருட்களால் செய்யப்பட்ட குடிசைகள் ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டன. தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை சபையின் படி, வடக்கு மின்டானாவ் பகுதி பேரழிவின் முக்கியப் புள்ளியாக உள்ளது. அங்கு 25பேர் உயிரிழந…

  5. சீன விமானிகளிற்கு பயிற்சி வழங்குவதற்காக 100,000 டொலர்களை பெற்றார் ; முன்னாள் விமானிக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு By RAJEEBAN 03 JAN, 2023 | 11:25 AM அமெரிக்க மரைன் படைப்பிரிவின் முன்னாள் விமானி சீன விமானிகளிற்கு பயிற்சிகளை வழங்குவதற்கு 100,000 டொலர்களை பெற்றுக்கொண்டார் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. டானியல் டகனிற்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டுபத்திரத்தில் இ;வ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானந்தாங்கி கப்பல்களில் எவ்வாறு இறங்;குவது என பயிற்சிகளை வழங்குவதற்காக டானியல் டகன் 100,000 டொலர்களிற்கு மேல் பெற்றுக்கொண்டார் கொலம்பிய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் …

  6. 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 10:18 AM 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்தான் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அளித்தப் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். அவருடைய பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 2023ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் நா…

  7. பிரேசிலின் புதிய அதிபராக லுலா டா சில்வா பதவியேற்றார்! உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில் பலப்பரீட்சை நடந்தது. கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. பிரேசில் தேர்தல் நடைமுறையின்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்…

  8. “உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷியாவை துண்டாக்க முயற்சிக்கிறார்கள்” – ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், இருநாட்டுப் படைகளும் சளைக்காமல் போரிட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போரில் இருதரப்பிலும் பெரிய அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டார். மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் ப…

    • 139 replies
    • 8.7k views
  9. மனித உடலை கொண்டு மனித உரம் தயாரிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக மாறியது நியூயோர்க்! மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நியூயோர்க் மாறியுள்ளது. ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலை மண்ணாக மாற்ற முடியும். இது புதைக்கப்படுதல் அல்லது தகனம் செய்வதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகக் கருதப்படுகிறது. ‘இயற்கை கரிம குறைப்பு’ என்றும் அறியப்படுகிறது. ஒரு கொள்கலனில் மூடப்பட்ட பிறகு பல வாரங்களில் உடல் சிதைவதைப் பார்க்கிறது. 2019ஆம் ஆண்டில், வொஷிங்டன் இதை சட்டப்பூர்வமாக்கிய முதல் அமெரிக்க மாநிலமாகும். கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை இதைப் பின்பற்றின. எனவே,…

  10. யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது By Sethu 01 Jan, 2023 | 12:51 PM இன்று ஜனவரி 1 ஆம் திகதி முதல் யூரோ வலயத்தில் குரோஷியா இணைந்துள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான நாணயமான யூரோவை தனது நாணய அலகாக இன்று முதல் குரோஷியாவும் பயன்படுத்துவதுடன், கடவுச்சீட்டுகள் அவசியமற்ற ஐரோப்பிய வலயத்திலும் குரோஷியா நுழைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இத்திட்டங்கள் அமுலாகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து சுமார் ஒரு தசாப்தத்தின் பின் இவ்வலயங்களில் குரோஷியா இணைந்துள்ளது 'குனா' எனும் தனது முந்தைய நாணயத்துக்கு குரோஷியா விடைகொடுத்துள்ளது. …

  11. சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் மற்றும் மரணங்கள் பற்றிய மேலதிக தகவல்களையும் தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் WHO அதிகாரிகள் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிர…

  12. அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு ! அணு ஆயுதங்களின் உற்பதியை வேகமாக அதிகரிக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை எதிர்கொள்ள ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு குறுகிய தூர ஏவுகணையை சோதனை செய்த சில மணிநேரங்களுக்கு பின்னர் கிம் ஜொங் உன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். வட கொரியாவை தனிமைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் வொஷிங்டனும் சியோலும் ஒரு சதித்திட்டத்தை மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே இராணுவ சக்தியை இரட்டிப்பாக்கவும் அமெரிக்கா மற…

  13. வான வேடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பிறந்துவிட்ட உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது. ஆஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப்…

  14. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்!! முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலம் அவர் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 இல், 1415 இல் கிரிகோரி XII க்குப் பிறகு விலகிய முதல் பாப்பரசர் இவர் ஆவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1318149

  15. உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் – 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு Posted on December 30, 2022 by தென்னவள் 14 0 உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தரை, வான், கடல் வழியாக நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த நவம்பரில் இந்தோனேசிய…

  16. இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றாா் நெதன்யாகு By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 09:27 AM இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6ஆவது முறையாக வியாழக்கிழமை (டிச.29) பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான…

  17. ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை பாதுகாக்க கோரிக்கை - யுக்ரேன் போருக்கு சென்றவர்களுக்காக கேட்கப்படும் சலுகை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி,பிபிசி செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்…

  18. எத்தியோப்பியாவில் முடிவுக்கு வந்தது உள்நாட்டு போர் 30 Dec, 2022 | 09:11 AM ஆபிரிக்க ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இந்த போரில் அப்பாவி மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலவரக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் நெருக்கடி நிலையை எத்தியோப்பியா அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் ஏனைய நகரங்களுடனான போக்குவரத்து வசதி திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் தொலைபேசி சேவைகளும் நிறுத்த…

  19. சூகிக்கு மேலும் 7 ஆண்டுகால சிறை மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் இன்று (30) வழங்கியுள்ளது. மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்…

  20. வரலாறை சமகாலத்துடன் இணைக்கும் புழுக்கள் ஓர் மருத்துவ அதிசயம் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். சளி, இ…

  21. உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் - நூற்றிற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன By RAJEEBAN 29 DEC, 2022 | 02:56 PM உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து ரஸ்யாவின் பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்தன. உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். தலைநகர் உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணை அலை தாக்குதல் எ…

  22. உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மரு…

  23. பனியால் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி By T. SARANYA 28 DEC, 2022 | 04:56 PM அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனிப்புயல் வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. பனிப்பொழிவு…

  24. மூளையை முடக்கும் அமீபா தொற்று : புதிய நோய்க்கு தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு By DIGITAL DESK 2 28 DEC, 2022 | 10:02 AM நாக்லேரியா ஃபாவ்லேரி (Naegleria fowleri) எனப்படும் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 1960களில் ஆஸ்திரேலியாவில் புதிய உயிர்க்கொல்லி நோய் கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நாக்லேரியா ஃபாவ்லேரி எனப்படும் அந்த ஒரு செல் உயிரி மனித மூளையை முடக்கி திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவ நிபுணரான மால்கொம் ஃப்லோர் என்பவர்தான் இந்த நோய்க் கிருமியை முதன் முதலில் கண்டுபிடித்து. …

  25. புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள விடுதியில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார். கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார். அவர் மாடியில் இருந்து குதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய தூதரக ஜெனரல் அலெக்ஸி இடம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.