Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சேப்லைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் மக்கள் குடியிருந்த வீடு ஒன்றும் நாசமானது. யுக்ரேன் ரயில் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடையும் நாளில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாகவும் யுக்ரேன் கூறியுள்ளது. யுக்ரேன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர். இந…

  2. ரஷ்யாவுடன்... கிரீமியா தீபகற்பத்தை, இணைக்கும் பாலம்... தகர்க்கப்பட வேண்டும்: உக்ரைனின் கருத்தால் பரபரப்பு! ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலம் தகர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைய தினங்களாக ஆக்கிரமிப்பு கிரீமியாவில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் இந்த கருத்து ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது. கிரீமியா தீபகற்பத்தை தங்களது பகுதியுடன் இணைத்து ரஷ்யா கட்டியுள்ள பாலம் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் அந்த பாலம் தகர்க்கப்பட வேண்டியது அவசியம் என உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் மிகய்லோ பொடோலியக் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்யா தாமாக முன்வந்து அ…

    • 26 replies
    • 996 views
  3. மலேசிய அரசியல்: சிறையில் முன்னாள் பிரதமர் நஜிப்; இனி என்ன நடக்கும்? - விரிவான அலசல் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நஜிப் ரஸாக் மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு. முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தா…

  4. கோட்டா தாய்லாந்தில் தங்கியிருக்கும் நிலையில் தாய்லாந்து பிரதமரின் பதவியும் பறிபோனது! தாய்லாந்தின் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை இடைநிறுத்த அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (24) தீர்மானித்துள்ளது. பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த மனு மீது அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகள் பிரதமருக்கு எதிராக 5:4 என்ற விகிதத்தில் வாக்களித்தனர், அதன்படி பிரதமரின் பதவிக்காலம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 23, 2022 உடன் முடிவடைந…

  5. சிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது உலகின் பெரும்பாலான நாடுகளில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இன்னும் அமலில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக பல நாடுகள் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி வருகின்றன. ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் 337ஏ சட்டப்பிரிவை ரத்து செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் த…

  6. "ஸபோரிஷியா" அணுமின் நிலையத்திலிருந்து... வெளியேற முடியாது: ரஷ்யா திட்டவட்டம்! தெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, ஸபோரிஷியா அணுமின் நிலைய வளாகத்தை இராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதனை ரஷ்யா நிராகரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல் மற்றும் செய்திப் பிரிவு இணை இயக்குநர் இவான் நெசயெவ் கூறுகையில், ‘உக்ரைனின் ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தைஇ ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்று ஐ.நா.வும் பிற நாடுகளும் விடுக்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாதது ஆகும். அவ்வாறு அந்…

  7. ஜுலு ராஜ்ஜியம்: நாடும், அதிகாரமும் இல்லாத இந்த மன்னர் பதவிக்கு ஏன் இத்தனை சண்டை, இவ்வளவு பெருமை? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஜுலு ராஜ்ஜியத்தின் புதிய மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஓராண்டு நீடித்த குடும்ப சண்டைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் நடந்த பாரம்பரிய விழாவில் மிசுசுலு கா ஸ்வெலிதினி ஜுலு மன்னராக முடிசூட்டப்பட்டார். ஜுலு என்பது தென்னாப்பிரிக்காவின் ஒரு பழங்குடி இனம். அதற்கென தனி நாடோ, எல்லையோ இப்போது இல்லை. 48 வயதான புதிய மன்னர், முந்தைய மன்னரின் மகன். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர், அவர் முறையான வாரிசு இல்லை என்றும் மறைந்த மன்னரின்…

  8. ரஷ்யாவில்... 10 குழந்தைகள், பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன், பெரும் தொகை பரிசு! ரஷ்யாவில்... 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான, குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு... ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் பெரும் தொகை பரிசாக வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புடின் வெளியிட்டுள்ள ஆணையில், ‘ரஷ்யாவில் 10 குழந்தை அல்லது அதற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டத்துடன் 1 மில்லியன் ரூபிள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்த விருதை 10 அல்லது மேற்பட்ட குழந்தையை பெற்ற ரஷ்ய குடிமகள் மட்டுமே பெறமுடியும். தகுதி பெற்ற பெண்களுக்கு அவர்களின் 10ஆவது குழந்த…

    • 38 replies
    • 1.3k views
  9. "விருந்து காணொளி" வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை... மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்! இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபின்லாந்து பிரதமராக இருந்துவரும் சன்னா மரின், விருந்தொன்றில் கலந்துக்கொண்ட காணொளியொன்று வெளியானதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெளிப்படையான காதலுக்காக அடிக்கடி விமர்சனங்களுக்கு இலக்காகி வரும், சன்னா மரின், ஒரு விருந்தில் பாடுவது, நடனம் செய்வது மற்றும் குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, 36 வயதான சன்னா மரின், சில அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர்கள், சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரினர். இதற…

  10. "சபோரிஜியா" அணுமின் நிலையத்தை... ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய, ரஷ்யா இணக்கம். சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக…

  11. அமெரிக்காவின், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு.. மீண்டும் தாய்வானுக்கு பயணம்! அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டு 12 நாட்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மார்கே தலைமையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் தாய்வானுக்கு சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தைபே விமான நிலையத்தில் அமெரிக்க அரசாங்கா விமானம் வந்திறங்கிய காட்சிகளை தாய்வான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, 2 நாட்ள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதன்போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு…

    • 10 replies
    • 595 views
  12. தாய்லாந்தில்... 17 இடங்களில், குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள். தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1295076

    • 9 replies
    • 990 views
  13. ஆப்கானிஸ்தானில்... பிரபல மசூதியில், குண்டுவெடிப்பு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- 40பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் 40பேர் காயமடைந்தனர். காபூலின் கைர்கானா பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் நேற்று (புதன்கிழமை) மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டுவெடித்துள்ளது. மேலும் அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் ஒரு மருத்துவமனையில் மட்டும், 5 குழந்தைகள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில்,…

  14. சல்மான் ருஷ்டி யார்? முகமது நபியை அவமதித்ததாக முஸ்லிம்களின் வெறுப்புக்கு ஆளானது ஏன்? 13 ஆகஸ்ட் 2022, 02:27 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 1993-இல் சல்மான் ருஷ்டி பிரிட்டனின் கிங் கல்லூரி தேவாலயத்துக்கு முன்பு எடுத்த படம் நியூயார்க்கில் கத்தியால் குத்தப்பட்ட சர் சல்மான் ருஷ்டிக்கு கடந்த அரை நூற்றாண்டாகவே தனது இலக்கியப் பணியின் காரணமாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. பிரிட்டிஷ் நாவலாசிரியரான சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர்…

  15. எஸ்ரா மில்லர்: மனநல சிகிச்சையை நாடுவதாக வெளிப்படையாக அறிவித்த சூப்பர் ஹீரோ - தயக்கம் உடைகிறதா? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ்ரா மில்லர் ஹாலிவுட்டில் டி.சி காமிக் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் எஸ்ரா மில்லர் தனக்கு ஏற்பட்டுள்ள "சிக்கலான மனநல பிரச்னைகளுக்காக" சிகிச்சையை நாடியுள்ளதாக அறிவித்துள்ளார் என்கிறன ஊடகச் செய்திகள். தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைகளால் "வருத்தம்" அடைந்தவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக, பால்புதுமையரான எஸ்ரா மில்லர் தெரிவித்துள்ளார். 29 வயதான எஸ்ரா மில்லர் மீது, சமீபத்தில் அமெரிக்காவின் வெர்மாண்…

  16. அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின்... தாய்வானுக்கான, விஜயத்தின் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி! அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனா இராணுவம் மீண்டும் தாய்வான் தீவைச் சுற்றிலும் போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளது. தாய்வான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயார் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஷீ யீ தெரிவித்தார். மேலும், தாய்வான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இத…

  17. ஆங் சான் சூகிக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை Digital News Team 2022-08-15T18:03:42 மியான்மாரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட தலைவி ஆங் சான் சூகி திங்கள்கிழமை (15) இராணுவ நீதிமன்றத்தால் மேலும் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கிடைத்த 11 ஆண்டுகள் கூடுதலாக மேலும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். அவரது தண்டனைக்கு எதிராக சூகி மேன்முறையீட செய்வார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றது. ஊடகங்களுக்கோ பொதுமக்களுக்கோ உள்நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. சூகியின் சட்டத்தரணிகளிற்கும் தகவல்களை வெளியி…

  18. அமெரிக்காவை ஏமாற்றி தாலிபன்களிடம் ஹெலிகாப்டரை ஒப்படைத்த ஆப்கன் பைலட் இனாயதுல்லா யாசினி மற்றும் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 15 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,MOHAMMAD EDRIS MOMAND "சிலர் என்னுடன் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்கலாம். கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால் நான் அவர்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். நாடு ஒரு தாயைப் போன்றது. அதற்கு யாரும் துரோகம் செய்யக்கூடாது," என்கிறார் முகமது எட்ரிஸ் மொமண்ட். அமெரிக்காவில் விரிவான பயிற்சி பெற்ற ஆப்கானிய ராணுவ விமானிகளில் மொமண்ட் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தாலிபன்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியபோது, அவர் தனது அமெரிக்க க…

  19. அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி ! முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மார்ச் மாதம் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ரஷ்யா குறித்த ஆலையை இராணுவ தளமாக மாற்றி, அதை அணு ஆயுத அச்சுறுத்தலாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா, தெற்கு உக்ரேனிய நகரமான நிகோபோலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த தளம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தாலும், உக்ரேனிய தொழில்…

    • 24 replies
    • 1k views
  20. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது. மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று…

  21. நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் - மேடையிலேயே சுருண்டு விழுந்தார் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JOSHUA GOODMAN படக்குறிப்பு, விரிவுரை நிகழ்வின்போது தாக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் நிலையை பார்வையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு ஆளானார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்…

  22. ஆபிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ள எரித்திரியா என்னும் சிறிய நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு கணவரின் முதல் மனைவி இ…

  23. உக்ரைனுக்கு... ஒரு "பில்லியன்" அமெரிக்க டொலர்கள் மதிப்பில், ஆயுத பாதுகாப்பு உதவி! உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந…

    • 3 replies
    • 365 views
  24. வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. 9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்தி…

  25. லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.