Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜி-20 அமைப்பில் இருந்து... ரஷ்யாவை, வெளியேற்ற வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்! ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும். இந்தோனேசியா மற்றும் பிற நாடுகள் ரஷியாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால்…

    • 2 replies
    • 285 views
  2. ரஷ்ய தாக்குதலை தடுத்து நிறுத்த ஐரோப்பா தாமதித்துவிட்டது : உக்ரேன் ஜனாதிபதி உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பேசிய உக்ரேன் ஜனாதிபதி , ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் தனது நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை அவர் கோடிட்டுக் காட்டினார், மேலும் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பா ஒன்றுபட்டதற்கு நன்றி தெரிவித்தார். பின்னர், ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதில் அவர்கள் மிகவும் தாமதமாக செயல்பட்டதாக ஐரோப்பிய தலைவர்களிடம் தெரிவித்தார். நீங்கள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளீர்கள். அதற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். இது சக்திவாய்ந்த நடவடிக்கை. ஆனால் சிறி…

  3. ரஷ்யாவின் படையெடுப்புக்கு... எதிரான போராட்டத்தில், உக்ரைன் தனியாக இல்லை: பிரித்தானியா ஆதரவு! ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை அதிகரிக்க வேலை செய்யும் …

  4. ரஷ்யப் படையெடுப்பு... இந்த தலைமுறையில் நிகழ்ந்த, பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல்: நேட்டோ! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுக்கூடிய நேட்டோ நாடுகளின் தலைவர்களின், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக உக்ரைன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர். நாங்கள் உக்ரைன் மக்களுடன் துணைநிற்கி…

  5. தடை செய்யப்பட்ட... கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணையை சோதித்தது வடகொரியா! வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன. ஜப்பானிய அதிகாரிகள் குறித்த ஏவுகணை 1,100 கிமீ (684 மைல்கள்) பறந்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால், நிலையான பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். மேலும், கோட்பாட்டளவில் அமெரிக்காவை அடைய முடியும். வடகொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா, செயற்கைக்கோள்…

  6. அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான காலமானார் அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 84. 1937 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்த மேடலின் ஆல்பிரைட்,1948 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் இவர் 1957 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம் பணிபுரிந்தார். அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் வெளியுறவுத்துறை மந்திர…

    • 1 reply
    • 323 views
  7. மரியுபோலில்... நடைபெறுவது, மிகப்பெரிய போர்க் குற்றம்: ரஷ்யாவை கடுமையாக சாடும் ஐரோப்பிய ஒன்றியம்! உக்ரைனின் மரியுபோலில் நடைபெறுவது மிகப்பெரிய போர்க் குற்றமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார். மேலும், எல்லாவற்றையும் அழித்து, கண்மூடித்தனமாக அனைவரையும் ரஷ்ய படைகள் குண்டுவீசி கொன்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷ்யா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஒன்று கூடினர். இதன்போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் …

  8. காதலியை சிறையில் திருமணம் செய்தார் ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு இலண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார். ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார். 2011 ஆம் ஆண்டு இலண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ், 37 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ்…

    • 1 reply
    • 267 views
  9. இழந்த பகுதிகளை... ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க, உக்ரைன் இராணுவம் தீவிர சண்டை! இழந்த பகுதிகளை ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க, உக்ரைன் இராணுவம் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்துவரும் போதிலும், ரஷ்யப்படைகள் அந்நாட்டில் முன்னேறுவதில் தோல்வியடைந்துள்ளதாக, ஜேர்மனி ஆட்சித்துறை தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், இருநாடுகளுக்கு இடையிலான போர் உக்ரைனை மட்டும் அழிப்பதில்லை எனவும், ரஷ்யாவின் எதிர்காலத்தையும் அழிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவுக்கு மேலும் பல தடைகள் குறித்து எச்சரிக்கை விடுத்த அவர், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தொடர்…

    • 1 reply
    • 216 views
  10. நேட்டோ அமைப்பின்... அவசர உச்சி மாநாடு இன்று! நேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய அவசர உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பை கடுமையாக விமர்சித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஐரோப்பிய சபை அமர்விலும் கலந்துகொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளின்போது உக்ரைன் மீதான பட…

  11. லண்டன் - ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் அதிகளவு குளோரின் வாயு வெளியேறியதை தொடர்ந்து சுவாசக் கோளாறு காரணமாக 29 பேர் வைத்திசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் 200 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேருக்கு பூங்காவில் உள்ள துணை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு "சுவாசிப்பதில் சிரமம்" இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். …

  12. ரஷ்யா – சீனா கூட்டணி இந்தியாவுக்கு நல்லதல்ல; பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவ தயார்; அமெரிக்க செயலர் உக்ரைன் மீதான ரஷ்யா-சீனா கூட்டணியை ஜனநாயகம் மற்றும் எதேச்சதிகாரங்களுக்கு இடையிலான விவாதமாக வடிவமைத்து, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் புதன்கிழமை கூறுகையில், பாதுகாப்பு தளவாடங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பதில் இருந்து இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்றார். அவருடனான பிரத்யேக நேர்காணலின் பகுதிகள்: ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி குறித்து, இந்தியாவின் அறிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்? இந்த போரில் என்ன இருக்கிறது என்பத…

    • 0 replies
    • 286 views
  13. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னிக்கு 9 ஆண்டு சிறை ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஜேர்மனியில் இருந்து ரஷ்யா வந்த நவால்னியை ரஷ்யக் பொலிஸார் பல்வேறு தேசவிரோத வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நவால்னி மீதான அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரஷ்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 11ஆயிரத்து 500 டாலர் அபராதத…

  14. கீவ் புறநகரை மீட்டது உக்ரேன் படை உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதியை உக்ரேன் இராணுவம் மீட்டுள்ளது. அதேநேரத்தில் துறைமுக நகரான மரியுபோலைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்ததை தொடர்ந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி துவங்கிய இந்தப் போர், ஒரு மாதத்தை எட்டவுள்ளது. தலைநகர் கீவ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த அதன் புறநகர் பகுதியை உக்ரேன் இராணுவம் மீட்டுள்ளது. இதையடுத்து, கீவ் நகருக்குள் வருவதற்கான முக்கிய நெடுஞ்சாலை, உ…

  15. ரஷ்யாவை... ஜி20 அமைப்பில் இருந்து விலக்க, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் திட்டம் ! ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து விலக்குவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை மாற்றவேண்டும் என்ற பரிந்துரையை போலந்து, அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த அமைப்பில் இருந்து ரஷியாவை நீக்க கோருவது மேற்கிலிருந்து ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் பொருளாதாரத் தடைகளை அதி…

  16. இதுவரை... சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள், கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு! போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யாவின் 509 டாங்கிகள், 1,556 கவச போர் வாகனங்கள் மற்றும் 252 பீரங்கி அமைப்புகளை அழித்துள்ளதாகவும் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதமுள்ள பட்டியலில், 80 ரொக்கெட் லொஞ்சர், 45 வான் பாதுகாப்பு உபகரணங்கள், 99 விமானம், 123 ஹெலிகொப்டர்கள், 1,000 வாகன உபகரணங்கள், 3 கப்பல்கள்- படகுகள், 70 எரிபொருள் தொட்டிகள், 35 ஆளில்லா விமானங்…

  17. விபத்துக்குள்ளான சீன விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்! தென்மேற்கு சீனாவில் 133 பேரை ஏற்றிச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற சைனா ஈஸ்டர்ன் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணிக்கு புறப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன. விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை என்றும் மாகாண அவசர மேலாண்மை பணியகத்தை மேற்கோள் காட்டி மாநில ஒளிபரப்பு தொலை…

  18. போயிங் விமான விபத்து: 10 ஆண்டுகளில் 320 விபத்துகளை சந்தித்த நூற்றாண்டு கால நிறுவனத்தின் விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AIRTEAMIMAGES.COM 132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் மார்ச் 21 திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …

  19. நாஜி முகாமில் இருந்து தப்பி, ரஷியாவால் கொல்லப்பட்டவருக்கு ஜெர்மன் பாராளுமன்றம் அஞ்சலி Posted on March 22, 2022 by தென்னவள் 10 0 புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ் டோரா, பெர்கன் பெல்சன் ஆகிய 4 நாஜி முகாம்களில் இருந்து தப்பியவர் போரிஸ் ரோமன்சென்கோ என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே, ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து…

    • 0 replies
    • 218 views
  20. உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்! உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள நோவோசெலிட்ச் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் 50 டன் எடையுள்ள விஷ வாயு தொட்டி சேதமடைந்ததாக பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ ஸிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இது அம்மோனியா மேகத்தை உருவாக்கியது. மேகம் சுமார் 2.5 கிலோ மீற்றர் (1.5 மைல்) பகுதியை பாதித்தது. சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையில் அவசர பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அ…

  21. உக்ரைன் மீது ரஷ்யா அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் மேற்குபகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கொன்றை அழிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஸ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இதுவரை எந்ததகவல்களையும் வெளியிடா நிலையிலேயே முதல்தடவையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\ உக்ரைன் மீதான தாக்குதலில் முதல்தடவை கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஸ்ய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஹைப்பர்சோனிக் ஏரோபலிஸ்டிக் ஏவுகணைகளுடன் கூடிய கின்சல் ஏவுகணை அமைப்பு …

  22. சீனா அவுஸ்திரேலிய உறவுகள் முன்னொருபோதும் இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் உட்பட பல நிகழ்வுகள் காரணமாக சீனாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன என ஆசிய பசுபிக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 27 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக இந்த வாரம் அறிவித்துள்ளது. 2040 ம் ஆண்டிற்குள் இராணுவ தொழிலாளர்களின் எண்ணிக்கையை18000த்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. 2040ம் ஆண்…

    • 0 replies
    • 240 views
  23. உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் : அமெரிக்க ஜனாதிபதி போலாந்து பயணம் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலாந்துக்கு பயணமாகவுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரேனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரேன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் உக்ரேனில…

  24. ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்: உக்ரைன் துருப்புக்கள் தொடர்ந்து போராட தீர்மானம்! மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடுவை உக்ரைன் நிராகரித்துள்ளது. மாஸ்கோ உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா காலக்கெடு விதித்தது. உக்ரைனிய அதிகாரிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டால், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் திறக்கப்படும் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது. இருப்பினும், உக்ரைனியர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, களத்தில் தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளனர். இதுகுறிறத்து உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் கூறுகையில், ‘தொடர் சண்டையால் பொதுமக்க…

  25. அர்ஜென்டீனாவை மீட்டெடுக்க IMF நடவடிக்கை! கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அர்ஜென்டீனாவுக்கு 45 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு அர்ஜென்டீனா செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அர்ஜென்டினா முன்பு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றிருந்தது, ஆனால் அதன் தவணைகளை செலுத்தத் தவறியதால் அதை மறுசீரமைக்க வேண்டியிருந்தது. கடனானது IMF பணிப்பாளர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். புதிய முறையின் கீழ், 2018 இல் பெறப்பட்ட $ 57 பில்லியன் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் மூலதனப் பற…

    • 0 replies
    • 349 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.