Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இத…

  2. ரஷ்ய அரச ஊடகங்களின் சில நடவடிக்கைகளுக்கு பேஸ்புக் தடை விதிப்பு உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்ய அரச ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் பேஸ்புக் தடை விதித்துள்ளது என சமூக வலைப்பின்னல் பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், "நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய அரச ஊடகத்திற்கு தடை விதிக்கிறோம். மேலதிகமாக ரஷ்ய அரச ஊடகங்களுக்கும் லேபிள்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இந்த மாற்றங்கள் ஏற்கனவே வெளிவரத் தொடங்கியுள்ளன, மேலும் வார இறுதியில் தொடரும்" என க்ளீச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள…

  3. 3 ஆவது நாளாக தொடரும் போர் ! உக்ரைனின் தலைநகரை முற்றுகையிட்டது ரஷ்யப் படை மூன்றாவது நாளாக உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுவருகின்றன. இந்த யுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பெரும் படைகள் உக்ரைனை முற்றுகையிட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனை மூன்று திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ்வை கைப்பற்ற கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்றும் போர் நீடிக்கிறது. பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. வானில் இருந்து குண்டு மழை பொழிவதாகவும் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் வெடிப்பதாகவும் யுத்தக்களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்…

  4. ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், மின்ஸ்க் நகரத்தில் யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், யுக்ரேன் “ராணுவமயமாக்கல் இல்லாமை உட்பட “சார்பற்ற நிலையை” அறிவிப்பதாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவித்துள்ளது. எப்போதும் யுக்ரேன் நேட்டோவில் சேரக்கூடாது என்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருந்து வருகிறது. யுக்ரேன் அதிபர், விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார் என்பதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லை. மின்ஸ்க் நகரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஏனெனில், 2014-ல் கிழக்கு யுக்ரேனில் வெடித்த மோதலை மு…

  5. பிரித்தானியாவுக்கே பதிலடி கொடுத்த ரஷ்யா ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து உட்பட அனைத்து பிரிட்டிஷ் விமானங்களுக்கும் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. வியாழன் அன்று ரஷ்யாவிற்கு எதிராக பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பெரிய தொகுப்பில், ரஷ்யாவின் தேசிய கேரியர் ஏரோஃப்ளோட் (carrier Aeroflot ) பிரிட்டிஷ் வான்வெளியில் இருந்து தடை செய்யப்படும் என்று அறிவித்ததை அடுத்து இந்த அறிக்கை ரஷ்யா…

  6. உக்ரைனில்... பிரிந்து சென்ற, இரண்டு பகுதிகளுக்கு பொருளாதார தடை: பிரித்தானியா தீர்மானம்! கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவிற்கு, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் தொடர்புடைய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க சமீபத்திய சட்டம் பயன்படுத்தப்படும் என அறியமுடிகின்றது. உக்ரைனில் ரஷ்ய ஊடுருவல் ஏற்பட்டால் பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் நடவடிக்கைகள் தண்டிக்கப்படாமல் போகாது என்று வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறினார். மேலும், ‘சர்வதேச சட்டத்தை மீறியத…

  7. உக்ரைனுக்கு... அப்பால், ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளலாம்: அமெரிக்கா அச்சம்! உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளனர். அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு அளித்த செவ்வியில், ‘வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலை நடத்துவதுடன், தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற முக்கிய நகரங்களைத் தாக்குவது ரஷ்ய திட்டத்தின் ஒரு பகுதி. உக்ரைனுக்கு அப்பால் ஒரு ரஷ்ய தாக்குதல் சாத்தியம். ஆனால் நேட்டோ நட்பு…

  8. உக்ரைன் யுத்தம்: வரலாற்றுப் பின்னணியும் நிகழ்கால விபரீதமும்! மின்னம்பலம்2022-02-25 சைபர் சிம்மன் ஆகாயம், நிலம், கடல் ஆகிய மூன்று மார்க்கங்களின் வழியாகவும் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, ஐரோப்பாவும் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியிலும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. அண்டை நாடான உக்ரைனைத் தாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ரஷ்யா மாதக்கணக்கில் மேற்கொண்டு வந்தாலும், அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று சொல்லிவந்ததை மீறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிறப்பு நடவடிக்கை எனும் பெயரில் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்வோம் என உக்ரைன் அறிவித்துள்ள நிலையில் போரும் பாதிப்பும் தீவிரமாகும் என்றே அஞ்சப்படுகிறது.…

  9. போர் மூண்டது : உக்ரைன் மீது ரஷ்யா பலமுனை தாக்குதல் ! எவர் தலையிட்டாலும் பதிலடி என்கிறார் புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக தாக்குதலை ஆரம்பித்துள்ளது. உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டன. உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டேசா நகர் மீதும் குண்டு மழை பொழியும் சத்தம் கேட்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைய…

  10. உக்ரைனில்... உள்ள இரு மாகாணங்களை, தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை! கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், புடினின் இந்த அறிவிப்பு அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைத்துள்ளதாக உலக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க வேண்டுமென ரஷ்ய ஆதரவு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. …

  11. ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணத் தடையும் விதிக்கப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரித்தானியா அந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தானியாவில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது. மேலும், ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனர…

  12. இங்கிலாந்தில் அனைத்து கொவிட் சட்டங்களும் அடுத்த மாதம் நிறைவுக்கு வருகின்றது: பிரதமர் பொரிஸ்! பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து தற்காலிக கொவிட் சட்டங்களும், அடுத்த மாதம் நிறைவுக்கு வருமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதற்கமைய, பொது இடங்களில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கொண்டு செல்லுதல், கல்வி நிலையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் முடிவுக்கு வரும். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு என்பதை அரசின் கட்டாயத்தின் பேரிலான நடவடிக்கை என்பதிலிருந்து தனிநபரின் பொறுப்பாக மாற்றும் எனது உத்தியின் ஒரு பகுதியாக தற்காலிக சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும். இதன்மூலம் நமது சுதந்திரத்தை இழக்காமல் …

  13. பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு ஒப்புதல் கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்! கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை ப…

  14. யுக்ரேன் பதற்றம்: “எந்த நேரத்திலும் ரஷ்ய படையெடுப்பு நடைபெறலாம்” – எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக யுக்ரேனைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. வேறு சில நாடுகளும் தங்கள் நாட்டினர் யுக்ரேனில் இருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையால், பிற நாடுகளும் யுக்ரேனில் உள்ள தங்களின் குடிமக்களுக்கு புதிய எச்சரிக்கை…

  15. கொரோனா போல இன்னொரு வைரஸ் வரும்..! – பீதியை கிளப்பும் பில்கேட்ஸ்! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் புதிய வைரஸ் உருவாக உள்ளதாக பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கிய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளது. விரைவில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முழுவதுமாக குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பில் கேட்ஸ் “உலகளவில் கொரோனா பர…

    • 5 replies
    • 529 views
  16. ஐரோப்பாவை தாக்கிய கடுமையான புயலால் எட்டு பேர் உயிரிழப்பு! வடமேற்கு ஐரோப்பாவை மணிக்கு 196 கிமீ (122 மைல்) வேகத்தில் தாக்கிய கடுமையான புயல் அப்பகுதியில் குறைந்தது எட்டு பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் அட்லாண்டிக் புயலான யூனிஸ் புயல், கட்டடங்களை சேதப்படுத்தியது மற்றும் விமானம், நிலம் மற்றும் கடல் வழியான பயணங்களை முடக்கியது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவின் பெரும் பகுதியை தாக்கிய யூனிஸ் புயல், பெல்ஜியம், நெதர்லாந்து மற்ற…

  17. 1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன். 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். 169,000 முதல் 190,000 ரஷ…

  18. கிழக்கு உக்ரேனில் 2,000 போர்நிறுத்த மீறல்கள் பதிவு 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். உக்ரேன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார். இதேவேளை கிழக்கு உக்ரேனில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்கள் சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளன. இந் நிலையில் உக்ரேனின் ஜனாத…

  19. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச எல்லையை திறக்கும் அவுஸ்ரேலியா! அவுஸ்ரேலியா தனது சர்வதேச எல்லையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் திறந்துள்ளது. இந்த செய்தி மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கிறது. கொவிட் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், உலகின் கடுமையான பயணத் தடைகளை அவுஸ்ரேலியா விதித்தது. எனினும், அவுஸ்ரேலியர்கள் மற்றும் சிலர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) சிட்னி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் விமானங்களில் வரத் தொடங்கினர். …

  20. போர் விமானம் மீது லேசர் தாக்குதல் : சீனா மீது அவுஸ்ரேலியா குற்றச்சாட்டு சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று தனது போர் விமானம் ஒன்றின் மீது “மிலிட்டரி கிரேட்” லேசரை பிரகாசித்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்தபோது, சீனக் கப்பல் வடக்கு அவுஸ்ரேலிய அரபுரா கடலில் சென்று கொண்டிருந்தது என்றும் அறிவித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தொழில்சார் மற்றும் பாதுகாப்பற்ற இராணுவ நடத்தையை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் குற…

  21. பிரேசில் வெள்ளத்தால் 146 பேர் பலி ; பாதகமான வானிலையால் மீட்பு பணிகள் பாரிய சிக்கலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் பேரழிவினை தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவினையடுத்து உயிர் தப்பியவர்களை தேடுவதற்கான மீட்பு பணிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமையன்று பலமுறை தங்கள் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. அனர்த்தம் காரணமாக குறைந்தது 27 குழந்தைகள் / சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட மொத்தம் 146 பேர் உயிரிழந்துள்ளனர், அதேநேரத்தில் காணால்போன 191 நபர்களை தேடும் பணிகளும் பாதகமான வானிலையினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. 900 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் காப்பகங்களில் …

  22. கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதலின் வரலாறு டோனி பெரோடட் பிபிசி ட்ராவல் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 30வது கட்டுரை இது.) நியூயார்க் நகரத்தின் 82வது தெருவில் உள்ள வீடு எண் 155, மன்ஹாட்டனின் அப்பர் வெஸ்…

  23. உக்ரைனின்... எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா? உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் மழலையர் பாடசாலையின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அமைந்துள்ள மழலையர் பாடசாலையின் மீதே நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, ஒரு ஆசிரியரும், காவலாளியும் காயம் அடைந்தனர். 32 குண்டுகள் நகரின் மீது விழுந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும், மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்காவில் 20…

  24. வேல்ஸில்... கொவிட் கால அனுமதி பத்திர சட்டம் நிறைவுக்கு வருகின்றது! வேல்ஸில் பெரிய நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குள் நுழைய, விதிகள் நீக்கப்பட்டதால், மக்கள் கொவிட் கால அனுமதி பத்திரத்தை காட்ட வேண்டியதில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு கொவிட் தடுப்பூசி அல்லது சமீபத்திய எதிர்மறையான சோதனை முடிவுக்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க கொவிட் கால அனுமதி பத்திரங்கள் உதவும் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் விமர்சகர்கள் நெறிமுறைகள் குறித்து கவலைகளை எழுப்பினர். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் சில நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குச் செல்வதற்கு, கடந்த 48 மணி நேரத்த…

  25. ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வெளியேற்றம்! மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.