உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
சீன குளிர்கால ஒலிம்பிக் பங்கேற்பாளர்களுக்கு My2022 செயலி கட்டாயம்: எச்சரிக்கும் சைபர் வல்லுநர்கள் சோஃபி வில்லியம்ஸ் & பிரான்செஸ் மாவ் பிபிசி நியூஸ் 20 ஜனவரி 2022 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, குளிர்கால ஒலிம்பிக் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சீனாவின் பிரத்யேக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அது பயனர்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாக வழிவகுக்கலாம் என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். My2022 என்கிற அந்தச் செயலி…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
நேட்டோவை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுதை தவிர வேறு எந்தத் தீர்வும் இல்லை: ரஷ்யா முடிவு! நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீர்வையும் ஏற்கப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், ‘உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதை மேற்கத்தி நாடுகள் கண்டித்து வருகின்றன. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்காகவே படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு துளியும் கிடையாது. இருந்தாலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன…
-
- 0 replies
- 335 views
-
-
19 ஜனவரி 2022, 08:55 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய சேனலில் ஒளிபரப்பாகும் செய்தி வடகொரியா, இரண்டு குறைந்த தொலைவில் பறந்து சென்று தாக்கும் பெலாஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடற்கரைக்கு அருகில் நீரில் ஏவி பரிசோதித்தது. ஏவுகணைகள் பியாங்யாங் நகரத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து திங்கட்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் ராணுவம் கூறியது. ஜப்பானும் வடகொரியாவின் இந்த ஏவுகணைப் பரிசோதனையை உறுதிப்படுத்தியது. கடந்த இரு வார காலத்தில் வடகொரியாவின் நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
சுனாமிக்கு இலக்கான டோங்காவின் நிலை என்ன? சேதத்தை மதிப்பிட விமானங்களை அனுப்பியுள்ள நியூஸிலாந்து- அவுஸ்ரேலியா! எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை மதிப்பிடுவதற்காக ஒரு விமானம் புறப்பட்டது என நியூஸிலாந்து பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன், சுனாமி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாக நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். தூசி காரணமாக குடிநீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜெசிந்தா கூறியுள்ளார். டோங்காவில் 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்ற…
-
- 2 replies
- 539 views
-
-
பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் அறிக்கை, பிளாஸ்டிக் மாசுபாடு உண்டாக்கியுள்ள உலகளாவிய அவசரநிலை நெருக்கடி, வலுவானதோர் உடன்படிக்கையை ஐ.நா கொண்டுவரவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது. சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் ( Environmental Investigation Agency), பிளாஸ்டிக்கால் ஏற்படும் கேடுகளுக்கான ஆதாரங்கள் உள்ளன என்கிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டின் அச்சுறுத்தல் காலநிலை நெருக்கடிக்குச் சமமானது என்றும் அந்த நிறுவனம் வாதிடுகிறது. இப்போது நாம் சுவாசிக்கும் காற்…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெஃப் பெசோஸ் கொரோனா பெருந்தொற்று, உலக பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையின் கோரப் பிடியில் தள்ளியிருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அமைப்பு தன் அறிக்கையில் கூறியுள்ளது. மார்ச் 2020 முதல், உலகின் டாப் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. பொதுவாக, டாவோஸ் நகரத்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்கத்தில், ஆக்ஸ்ஃபாம் தன் உலகளாவிய சமத்துவமின்மை குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. …
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: இதுவரை 26பேர் உயிரிழப்பு- ஆறு பேர் காயம்! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 26பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த 26 பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல், பத்கிஸ் மாகாணத்தின் கிழக்கே 41 கி.மீ. பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் மையத்தின் தகவலின்படி ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல வீட…
-
- 0 replies
- 221 views
-
-
அபுதாபியில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் – மூவா் பலி January 17, 2022 ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்று அடுத்தடுத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். . மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 0 replies
- 291 views
-
-
ஜப்பான் கரையோரத்தை சுனாமி தாக்கியுள்ளது டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது. தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய பிரதேசங்களில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்தமையை அடுத்து நேற்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹொக்கைடோவில் இருந்து ஒக்கினாவோ வரையிலான கரையோர பகுதிகளில் கடல் மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர வாழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆழ்கடல் ஏற்பட்ட எரிமலை வெ…
-
- 0 replies
- 319 views
-
-
கொரோனா வைரஸ்: கோவிட் தொற்றுநோய் பேரிடர் அதன் இறுதி ஆட்டத்திற்குள் நுழைகிறதா? Getty Images "கோவிட் பெருந்தொற்றுப் பேரிடர் முடிந்துவிட்டதா?", "நான் எப்போது என் வாழ்க்கையை இயல்பாகத் தொடர முடியும்?" கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய மனப்போக்கு யாருக்குத்தான் ஏற்படவில்லை. எனக்கு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கான பதில், மிக விரைவில்... பெருந்தொற்றுப் பேரிடரின் இறுதி ஆட்டத்தில், ஒமிக்ரான் அதிகமாகக் காயப்படுத்தக்கூடும் என்ற கணிப்பு வளர்ந்து வருகிறது. ஆனால், அடுத்ததாக என்ன வரும்? ஒரு விரல் சொடுக்கில் கொரோனா வைரஸை மறையச் செய்யமுடியாது. அதற்குப் பதிலாக, "எண்டெமிக் (ஆண…
-
- 0 replies
- 269 views
-
-
மரணத்தின் விளிம்பில் ஆப்கான் மக்கள் : தலிபான்களுக்கு அவசர வேண்டுகோள் - ஐ.நா.எச்சரிக்கை ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மரணத்தின் விளிம்பில் உள்ளனர். 8.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் மக்கள் பட்டியினால் வாடி வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொ…
-
- 2 replies
- 288 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் Posted on January 14, 2022 by தென்னவள் 14 0 ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் முடிவுக்கு வரும் எனறு ஈரான் ஆதரவு போராளிகள் குழு அறிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 2,500 வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து 4 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று ஏவுகணைகள் அமெரிக்க த…
-
- 0 replies
- 315 views
-
-
பிரித்தானிய முடக்கத்தில் விருந்து: மன்னிப்புக் கோரினார் பொரிஸ்! பதவியை இழப்பாரா? January 12, 2022 பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவலகத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன்சன் முதல் முறையாகத் தனது மன்னிப்பை வெளியிட்டிருக்கிறார். உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகள…
-
- 0 replies
- 397 views
-
-
ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த வட கொரியா! வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக, மாநில ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடப்பு ஆண்டின் நாட்டின் முதல் பெரிய ஆயுத சோதனை முன்னெடுக்கப்பட்டதாக மாநில ஊடகமான கே.சி.என்.எ. குறிப்பிட்டுள்ளது. இந்த ஏவுகணை 700 கிமீ (434 மைல்கள்) தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டுப்பாடு மற்றும் குளிர்காலத்தில் செயல்படும் திறன் போன்ற வசதிகளையும் இந்த ஏவுகணை சோதனை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட குறைந்த உயரத்தில் இலக்குகளை நோக்கி பறக்கும் மற்றும் ஒலி…
-
- 10 replies
- 971 views
-
-
தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதார வரி – கியூபெக் அரசாங்கம் முடிவு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டிலேயே தடுப்பூசி போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது இதுவே முதல்முறை என முதல்வர் அறிவித்தார். கியூபெக்கில் சுமார் 12.8% மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் 85% க்கும் அதிகமானோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன. எனவே முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என முதல்வர் …
-
- 1 reply
- 306 views
-
-
ஒமிக்ரான்: 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EUROPA PRESS NEWS/GETTY IMAGES அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார். 2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவது…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ரகசியங்கள் கசிவு – டென்மார்க் உளவுப் பிரிவுத்தலைவர் தடுப்புக்காவலில்! January 11, 2022 டென்மார்க் வெளிநாட்டு உளவுப் பிரிவின் தலைவர் லார்ஸ் ஃபின்சென் (Lars Findsen) கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பியநாடுகளின் தலைவர்களது ரகசிய தொடர்பாடல்கள் ஒற்றுக் கேட்கப்பட்டு அவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவரகத்துக்குக் (U.S. National Security Agency) கசியவிடப்பட்டன என்று குற்றம் சாட்டப்படுகின்ற விவகாரம் தொடர்பாகவே அவர் நீதிவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் என நம்பப்படுகிறது. தனிநபர்கள் தொடர்பான ரகசிய தகவல்களைக் கசிய விட்டனர் என்ற குற்றச் சாட்டில் லார் ஃபின்சென் உட்பட புலனாய்வுஅதிகாரிகள் நா…
-
- 0 replies
- 387 views
-
-
உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்! மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம், பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். 57 வயதான டேவிட் பென்னட், பால்டிமோரில் ஏழு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு மூன்று நாட்களுக்குப் பிறகு நன்றாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பென்னட்டின் உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக இந்த மாற்று அறுவை சிகிச்சை கருதப்பட்டது, இருப்பினும் அவர் உயிர் பிழ…
-
- 1 reply
- 383 views
-
-
கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார். இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபை நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. …
-
- 0 replies
- 280 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISPR பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரே என்ற மலை உச்சி நகரத்திற்கு அருகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலின்போது சுமார் 1,000 வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,PUNJAB POLICE, PAKISTAN தலைநகர் இஸ்லமாபாத்திற்கு வடக்கே அமைந்துள்ள மலை நகரம் தான், முர்ரே. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் சிக்கித…
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 4 ஆண்டுகளில் முதன்முறையாக டோக்கியோவில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக டோக்கியோ கேட் (Tokyo Gate) பாலத்தில் ஒரே நேரத்தில் 100 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோன்று பனி காரணமாகத் டோக்கியோவில் பல விமானச் சேவைகளும் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட…
-
- 0 replies
- 274 views
-
-
10 ஆண்டு காலம் குடும்பத்தோடு கூட பேசவில்லை - கூகுள் மேப்பில் சிக்கிய இத்தாலியின் மாஃபியா தலைவர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE MAPS படக்குறிப்பு, கியாச்சினோ கம்மினோ போல தோற்றமளித்த கூகுள் மேப்ஸ் படம் பல ஆண்டுகளாக பல்வேறு சட்ட முகமைகளிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த ஒரு இத்தாலிய மாஃபியா தலைவர், கூகுள் மேப் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கியாச்சினோ கம்மினோ என்கிற 61 வயதான நபர், ஸ்பெயின் நாட்டிலுள்ள கலபகர் என்கிற பகுதியில் கண்டறியப்பட்டுள்ளார். அங்கு தான் அவர் மேனுவல் என்கிற பெயரில் வாழ்ந்து வந்தார். கூகுள் ஸ்ட்ரீட் வியூ தளத்தில் இருந்த படத்…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
அமெரிக்க கேபிடல் கட்டட தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு: ட்ரம்பை கடுமையாக சாடிய பைடன்! அமெரிக்க கேபிடல் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு பைடனின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை சான்றளிக்க காங்கிரஸ் கூடியபோது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் கட்டடத்தை முற்றுகையிட்டனர். அமெரிக்க அரசியல்வாதிகள், ட்ரம்பின் ஆதரவாளர்களிடம் இருந்து பயமுறுத்தும் நேரடி காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கேபிடல் கட்டட தாக்குதல் சம்பவம் அமெரிக்க அரசியல் வரலாற்றில், ஒரு கரும்புள்ளியாகப் பதிவானது. அந்நிகழ்வு நடந்து முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அது குறித்து க…
-
- 1 reply
- 216 views
-
-
ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என வகைப்படுத்தப்படக்கூடாது: உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார சபையின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ், ‘டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமிக்ரோன் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும்…
-
- 0 replies
- 197 views
-
-
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு! அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர். புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியு…
-
- 1 reply
- 238 views
-