Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்டா, ஒமிக்ரோன் திரிபுகள் சுனாமியை போல் ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை டெல்டா, ஒமிக்ரோன் போன்ற கொவிட்-19 வைரஸ் திரிபுகள் "சுனாமியை" போல் ஆபத்தான பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். அத்துடன் இது சுகாதார அமைப்புகளில் "மிகப்பெரிய அழுத்தத்தை" ஏற்படுத்தும் என்றும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். உலகளவில் பதிவான கொவிட்-19 தொற்றளர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 20 முதல் 26 வரை கிட்டத்தட்ட 4.99 மில்லியன் புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஐரோப்பாவில் புதிய தொற்றுக்க…

  2. இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: மனிதர்களை தாக்கும் முதலைகள் - அதிர்ச்சித்தகவல் சர்பாஸ் நசரி பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஆடு மேய்ப்பவரான சியாஹூக், ஒரு குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார். எளிமையான வீட்டு தரையில் படுத்திருந்த சியாஹூக், தனது வலது கையில் ஏற்பட்ட காயத்தால் கடுமையான வலியில் இருக்கிறார். இது ஒரு பயங்கரமான சம்பவத்தின் விளைவு. இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு கடும் வெப்பமான ஆகஸ்ட் மதிய வேளையில், பலவீனமான 70 வயதான இந்த மேய்ப்பன் ஒரு குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றார், அப்போது இரானின் பலூசிஸ்தான் பகுதியி…

  3. இது கடைசி அல்ல இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உலகை உலுக்கி வரும் ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்கிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.இந்நிலையில், கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் என ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், கொரோனா என்பது…

  4. சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது.அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது.சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒரும…

  5. பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாசாரத்தின் அம்சம் : இம்ரான் கான் (ஸீ இந்துஸ்தான்) ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர். அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் ப…

  6. பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை! பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் முகமூடி அணிந்த ஒரு நபர், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக பேசும் கணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இந்தக் காணொளியில் தன் பெயர் டர்த் ஜோன்ஸ் எனவும் அந்த நபர் கூறுகிறார். இந்த காணொளி ஸ்னாப்சாட் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் அவரைப் பின்தொடர்வோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விண்ட்சரில் உள்ள அரச குடும்பத்துக்க…

  7. புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் கிடையாது: சஜித் ஜாவித் புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால் புத்தாண்டு ஈவ் வெளியில் கொண்டாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அமைச்சர்கள் தரவை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், மக்கள் தங்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை தாமதமின்றி பெறுமாறு வலியுறுத்தினார். இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரண்டும் கிறிஸ்மஸில் பதிவு செய்யப்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன. இங்கிலாந…

  8. வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது. தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது. இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு ந…

  9. ஒமிக்ரோன் எதிரொலி: கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் பிரான்ஸ்! ஓமிக்ரோன் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில், கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல், தொலைதூரத்தில் பணிபுரிவது கட்டாயமாக்கப்படும். மேலும், பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சனிக்கிழமையன்று பிரான்ஸ் 100,000க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்ததால் இந்த செய்தி வந்துள்ளது. இதுவே பிரான்ஸில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆனால், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், புத்தாண்டை முன்னிட்டு முடக்கநிலை உத்தரவை கொண்டு …

  10. ஆப்கான் பெண்கள் வெளியில் செல்லத்தடை : தலிபான்கள் புதிய உத்தரவு ஆண் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள முடியாது என ஆப்கானிஸ்தானை நிர்வகித்து வரும் தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை சில மாதங்களுக்கு முன் தலிபான் அமைப்பு கைப்பற்றியது. கடந்த 1990களில் பெண்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர். தற்போது மீண்டும் நிர்வாகம் அவர்களிடம் வந்துள்ளதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். பாடசாலைகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் பெண் நிருபர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், முழு உடலை மறைக்கும் …

  11. மேற்கு லிபியாவில் படகு விபத்து: 27 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கின! ஐரோப்பிய ஒன்றியம் லிபிய கடலோரக் காவல்படைவில் குறைந்தபட்சம் 27 ஐரோப்பாவிற்குச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. திரிபோலியில் இருந்து 90 கிமீ (55 மைல்) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கோம்ஸில் உள்ள இரண்டு தனித்தனி இடங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் உட்பட புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல்களின் சிதைவின் மேம்பட்ட நிலை பல நாட்களுக்கு முன்பு கப்பல் விபத்து நடந்ததைக் குறிக்கிறது எனவும் மேலும் எண்ணிக்கை …

  12. காலநிலை மாற்றம்: விக்கிப்பீடியாவில் பொய் செல்வோருடன் போராடும் தனிப்படை மார்கோ சில்வா காலநிலை மாற்றம் தொடர்பான தவறான தகவலைக் கண்டறியும் நிபுணர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DAVID TETTA படக்குறிப்பு, டேவிட் டெட்டா விக்கிப்பீடியா முழுக்கவே நீண்டகாலமாக, காலநிலை மாற்ற மறுப்பாளர்களுடைய கருத்துளால் நிரம்பியிருந்தது. ஆனால், இப்போது உலகெங்கிலும் இருந்து பங்கெடுத்துள்ள தன்னார்வலர்களைக் கொண்ட குழு, காலநிலை மாற்றத்தை மறுப்பவர்கள் விக்கிப்பீடியாவில் தவறான தகவல்களைப் பகிர்வதைத் தடுக்க தீவிரமாக முயன்று வருகிறது. அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மற்றவரின் வீடுக…

  13. இது பல தசாப்தங்களாக உருவாக்கத்தில் இருக்கும் ஒரு தருணம். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, அடுத்த தசாப்தத்தில் நாசாவின் முதன்மையான விண்வெளி கண்காணிப்பு, கிறிஸ்துமஸ் காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொலைநோக்கி 7:20 a.m. ET மணிக்கு பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஏரியன் 5 ராக்கெட்டின் மேல் உயர்த்தப்பட்டது. "நாசாவெப் விண்வெளி தொலைநோக்கியின் லிஃப்டாஃப் எங்களிடம் உள்ளது!" நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. "காலை 7:20 மணிக்கு ET (12:20 UTC), அறிவியலின் புதிய, அற்புதமான தசாப்தத்தின் ஆரம்பம் விண்ணில் ஏறியது. #UnfoldTheUniverseக்கான வெப்பின் நோக்கம், விண்வெளி பற்றிய நமது புரிதலை நமக்குத் தெரிந்தபடியே மாற்றிவிடும்." தொற்றுநோய் மற்றும்…

  14. கப்பல் கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காணாமல் போன 20 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு போலீசார…

  15. ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்த கிறிஸ்தவ பாதிரியார்: பாலியல் வல்லுறவு செய்ததாக 21 ஆண்டுகள் சிறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ORENBERG DI ரஷ்யாவில் 70 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்ததாகக் கூறும் பழமைவாத கிறிஸ்தவ பாதிரியாராக இருந்த ஒருவருக்கு குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரஷ்யாவில் யுரல் மலைத் தொடர் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இவரது தேவாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பல குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அவர்களிடம் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் நிக்கோலாய் ஸ்ட்ரெம்ஸ்கை எனும் இவர்மீது …

  16. ஒமிக்ரோன் எதிரொலி: கிறிஸ்மஸில் விமான பயணங்களுக்கு இடையூறு! கிறிஸ்மஸில் மில்லியன் கணக்கான மக்கள் பயண இடையூறு மற்றும் அதிகரித்த கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் மீண்டும் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன. வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா, ஒரே இரவில் முடக்கநிலை உத்தரவை விதித்துள்ளது. மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையில் நிலையில் உள்ளது. மற்ற வகைகளை விட ஓமிக்ரோன் லேசானது என்று ஆரம்பகால கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், விஞ்ஞானிகள் தொற்ற…

  17. கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம்! கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உறு…

  18. ஹொங்கொங்கில் தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றம்! ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி, அகற்றப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆணையிட்டதற்கு அமைய நேற்று (புதன்கிழமை) இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ‘இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது’ என பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. 8 மீட்டர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத்…

  19. சீனா அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளை ஆயுத போட்டியில் முந்தப்போவது எப்படி? - விரிவான வரைகலை விளக்கம் டேவிட் பிரவுன் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீனா தனது படைகளை அதிவேகமாக பெருக்கிக் கொண்டிருக்கிறது. ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அதன் முன்னேறும் வேகம் பல மேற்கத்திய நிபுணர்களிடையே தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளன. ராணுவ ஆற்றல் அடிப்படையிலான உலகளாவிய சமநிலையில் திட்டவட்டமான மாற்றம் நடந்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். 2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக்குமாறு அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். 2049ஆம் ஆண…

  20. ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்! ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பா…

  21. ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வில் தகவல்! டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரோன் மாறுபாடு லேசான நோயை ஏற்படுத்தக்கூடும் என ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப ஆய்வுகளை கண்டறிந்த பின்னர், கொவிட் தரவைக் கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் நல்ல செய்தி என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் ஒரு பெரிய அலை தொற்றுகள் இன்னும் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர். நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக 100,000க்கும் மேற்பட்ட புதிய தினசரி நோய்த்தொற்றுகளை பிரித்தானியா தெரிவித்துள்ளது. வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் புதிய விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்தில் மேலும் தடைகள் எதுவும…

  22. டென்மார்க்கில் குற்றம் புரிந்தால் இனி கொசோவோ நாட்டில் சிறை December 23, 2021 டென்மார்க் அதன் வெளிநாட்டுச் சிறைக் கைதிகளை கோசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றவுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.முதற் கட்டமாக 300 சிறை அறைகளை டென்மார்க் கைதிகளுக்கு வழங்குவதற்கு கொசோவோ முன்வந்துள்ளது. அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறைகளுக்கு வாடகையாக டெனிஷ் அரசு வருடாந்தம் 15 மில்லியன் ஈரோக்களைக் வழங்கும். கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில் Gjilan என்ற இடத்தில் அமைந்துள்ள சிறைக்குக் கைதிகளை அனுப்புவது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்துஆரம்பிக்கப்படும். கைதிகள் டென்மா…

  23. இளவரசி ஹயா: ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் தர துபாய் ஷேக்குக்கு உத்தரவு - மலைப்பூட்டும் மண முறிவு வழக்கின் தீர்ப்பு பிராங்க் கார்ட்னர் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் மற்றும் அவரது பிரிந்த மனைவி, இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன் இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு என்று விவரிக்கப்படுகிறது. துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர் மற்றும் அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீனவானம்சமாக £550 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடிக…

  24. கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். ஸ்க…

  25. நான்காவது தடுப்பூசியை செலுத்த இஸ்ரேல் தீர்மானம் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக நான்காவது தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுநோய் நிபுணர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நான்காவது தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளனர். இந்த திட்டத்தை வரவேற்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நஃப்டலி பென்னட், அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஒமிக்ரோன் தொற்று உறுதியான முதலாவது மரணம் எங்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலில் குறைந்தது 340 ஒமிக்ரோன் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.