உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான நகுமான் என்ற இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பெண்களின் உடல்களை போலீசார் மீட்டனர். 20 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அவர்களின் உடல்கள் அருகே பெண்கள் தவறாக நடந்தால் இதே தண்டனை வழங்கப்படும் என்று எழுதப்பட்ட அட்டை ஒன்று கிடந்தது. இதன் மூலம் அவர்கள் விபசார அழகிகள் என்று தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பஜாரூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை ஜெய்ஸ்-இ- இஸ்லாமி என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் விபசாரம் செய்யும் பெண்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. http://www.newsonews.com http://puspaviji13.net84.net
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாகவும். அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி …
-
- 10 replies
- 1.4k views
-
-
ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி.யை சுட்டுக் கொன்ற கும்பல்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு பட…
-
- 0 replies
- 443 views
-
-
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த தடை: மீறினால் சட்ட நடவடிக்கை! ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணங்களை பயன்படுத்த, தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான் அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்’ எ…
-
- 0 replies
- 183 views
-
-
Published By: DIGITAL DESK 3 13 MAY, 2024 | 10:55 AM வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில், …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 நேட்டோ வீரர்கள் பலி தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பயணம் செய்த . அதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். விபத்துக்காரன காரணம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை. எனினும், அப்பகுதியில் எதிரிப்படைகளின் நடமாட்டம் ஏதும் காணப்படவில்லை என அங்கிருந்து வரும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் வீரர்களை கொண்ட நேட்டோ படை முகாமிட்டுள்ளது. பெரும்பாலும் வான்வழி போக்குவரத்தையே …
-
- 0 replies
- 356 views
-
-
ஆப்கானிஸ்தானில், 2,500 வீரர்களை வைத்திருக்குமாறு... பைடனுக்கு அறிவுறுத்தல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியமை குறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி ஆகிய இருவரும் கூறினர். ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிப…
-
- 0 replies
- 393 views
-
-
ஆப்கானிஸ்தானில், கடந்த 24 மணித்தியாலங்களில் 11 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர் 14 July 10 04:53 pm (BST) ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 11 நேட்டோ படைவீரர்கள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் அமெரிக்க அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹெல்மான்ட் மாகாணத்தில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் 45 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 33 பேர் அமெரிக்கர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமாக 100 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்…
-
- 0 replies
- 308 views
-
-
ஆப்கானிஸ்தானில்.. அடுத்தடுத்து, குண்டுத் தாக்குதல்கள்: 31பேர் உயிரிழப்பு- 87பேர் காயம் ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது. இதில் 12பேர் உயிரிழந்தனர். 58பேர் காயமடைந்தனர். 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு ஒப்புக்கொண்டது. தலிபான்கள் தாங்கள் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பை தோற்கடித்துவிட்டதாக கூறுகின்றனர. ஆனால் இந்த குழு ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு சவாலாக உள்ளது. மஸார்-இ-ஷரீஃப் மசூதியின் ம…
-
- 0 replies
- 152 views
-
-
ஆப்கானிஸ்தானில்... நிரந்த அமைதியை, ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்! ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் ஆப்கான் நல்லிணக்க சபைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில், ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானில், …
-
- 3 replies
- 339 views
-
-
ஆப்கானிஸ்தானில்... பாடசாலைக்கு அருகாமையில், தற்கொலை குண்டுத்தாக்குதல்: 6பேர் உயிரிழப்பு- 11பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11பேர் காயமடைந்தனர். நகரின் மேற்கில் ஷியாக்கள் ஆதிக்கம் செலுத்தும் அப்துல் ரஹீம் ஷாஹித் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகாமையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதல்களில், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அருகில் இருந்த தனியார் பிரத்தியேக கல்வி நிலையம் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட…
-
- 0 replies
- 121 views
-
-
ஆப்கானிஸ்தானில்... பிரபல மசூதியில், குண்டுவெடிப்பு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு- 40பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மேலும் 40பேர் காயமடைந்தனர். காபூலின் கைர்கானா பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் நேற்று (புதன்கிழமை) மாலை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் இந்த குண்டுவெடித்துள்ளது. மேலும் அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் ஒரு மருத்துவமனையில் மட்டும், 5 குழந்தைகள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில்,…
-
- 0 replies
- 440 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கான... உதவியை, நிறுத்தியது உலக வங்கி ஆப்கானிஸ்தானை தாலிபான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து அந்நாட்டுக்கு வழங்கும் உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலைமை மற்றும் நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைவதாக உலக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலக வங்கி கடந்த 2002 முதல் 5.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1236092
-
- 0 replies
- 225 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆப்கானில் இந்திய தூதரகத்திற்கருகில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அங்குள்ள நிலைமையை ஆராய்வதற்கே இந்த உயர் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். காபூலிலுள்ள இந்தியத் தூதரகம் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இந்திய வெளிவிவகார அதிகாரி மற்றும் இராணுவ அதிகாரியும் அடங்குகின்றனர். இந்த தாக்குதலையடுத்து டில்லியில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்ற இ…
-
- 0 replies
- 560 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு... வந்த உக்ரேனிய, விமானம் கடத்தல்! உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த விமானம் உக்ரேனியர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு சென்றதாக உக்ரேனிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விமானம் கடத்தப்பட்டமையினால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து 31 உக்ரேனியர்…
-
- 0 replies
- 426 views
-
-
ஆப்கானிஸ்தான் : அமெரிக்க வீரர்களின் கொலைவெறி அமெரிக்க போர் வீரர் ஒருவர் தனது முகாமில் இருந்து வெளியே வந்து குழந்தைகள் உட்பட பதினாறு பேர்வரையில் கொன்றுள்ளார்.
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு... அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தததையடுத்து, ஆப்கானிஸ்தானில் வசிக்க விரும்பாத மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கமைய 2 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆப்ரிக்க நாடான உகாண்டா அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 500 பேர் உகாண்டாவின் என்டபே விமானநிலையத்தில் தரையிறங்கினர். இதேபோல 20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 5 ஆயிரம் பேருக்கு பிரித்தானியாவில் வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ப…
-
- 0 replies
- 605 views
-
-
ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா! ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் தேவைப்படும் மக்கள் பிரித்தானியா வருவதை நோக்கமாகக் கொண்டது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான சிறந்த ஏற்பாட்டை பிரித்தானியா கவனித்து வருகின்றது. முழு விபரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எத்தனை அகதிகள் வர முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிரித்தானியா ஒரு பெரிய மனம் கொண்ட நாடு. பிரித்தானியா எப்போதும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு பா…
-
- 45 replies
- 2.7k views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட பறவையை ஆய்வு செய்யும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரி. ஆப்கானிஸ்தானில் இதுவரை மனித வெடிகுண்டுகளை பயன் படுத்தி வந்த தலிபான்கள் தற் போது பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பார்யப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பறவை பறந்தது. அந்தப் பறவையை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். படுகாயங்களுடன் கீழே விழுந்த பறவையை பாதுகாப்புப் படை யினர் சோதனை செய்தனர். அப் போது அந்த காட்டுப் பறவை யின் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. அந்த பறவையின் இறகுகளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்…
-
- 2 replies
- 608 views
-
-
ஆப்கானிஸ்தான் அஷ்ரஃப் கனி அரசு வீழ்ந்த பரபரப்பான கடைசி சில மணி நேரங்கள்: தாலிபன்கள் பிடிக்கு காபூல் வந்தது எப்படி? மொகமது மடி, அகமது காலித், சையது அப்துல்லா நிசாமி பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AP IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 15 அன்று, காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தாலிபன்கள். தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனியின் புத்தகம் அவரது மேசையிலேயே இருக்கிறது. ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் புதிய அரசு ஒன்றை அமைத்துள்ளனர். கல்வி, சர்வதேச முதலீடு, ஜனநா…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவ தளம் மீது தலிபான்கள் தாக்குதல்: 23 படையினர் உயிரிழப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது நேற்று மற்றும் நேற்று முன்தினம் தலீபான் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 23 படையினர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலங்களில் தலிபான் போராளிகள் நடத்திய 3 வது தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நட…
-
- 0 replies
- 350 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக, தலிபான்கள் மீது... தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை…
-
- 0 replies
- 291 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவப் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!!! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இராணுவப் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், பாரிய துப்பாக்கிச்சூடு இடம்பெற்று வருவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மார்ஷல் பாஹீம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலேயே, இன்று அதிகாலை முதல் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்களா? அல்லது, இராணுவத்தினரினுள் ஏற்பட்ட குழப்ப நிலைமையால் சம்பவமா? என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லை. இருப்பினும், மேற்படி நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டு வருவதா…
-
- 0 replies
- 173 views
-
-
ஆப்கானிஸ்தான் உலகத்தால் கைவிடப்படுகிறது: போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை யோகிதா லிமாயே பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள் ஒவ்வொரு முறையும் நான் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும்போதெல்லாம் என்னை அங்குள்ள மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தெரிந்தவுடன், தாங்கள் டெல்லிக்குச் சென்று வந்த நாள்களையும், அங்கிருந்ததை அவர்கள் எந்த அளவு விரும்பினார்கள்…
-
- 0 replies
- 478 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கப் படையினர். காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. நங்கஹார் மாகாணத்தில் வைத்து அந்த நபர் தாக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே வியாழக்கிழமை நடந…
-
- 3 replies
- 502 views
-