Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. `ஸ்கூல் எப்போ சார் திறப்பீங்க?' - போராட்டத்தில் குதித்த இத்தாலி குழந்தைகள்! #MyVikatan விகடன் வாசகர் Student Protest ( Twitter image ) பள்ளிகளைத் திறக்கக் கூறி ஒரு போராட்டம் கண்டதுண்டா? அதுவும் பள்ளி மாணவர்களே போராடி கண்டதுண்டா? பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டிருப்பீர்கள். மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசாங்க திட்டங…

  2. உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா! கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான சீன …

  3. மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம் 17 Views மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்…

  4. அமெரிக்கக் கடற்படையிடம்... சிக்கியது மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கப்பல்! வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி என்ற ஏவுகணைக் கப்பலில் சென்ற அமெரிக்கக் கடற்படையே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மே 6, 7ஆம் திகதிகளில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு ஆயுதங்களுடனான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. குறித்த ஆயுதக் கப்பலில், டசின் கணக்கான ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன வகை 56ரக துப்பாக்கிகள…

  5. கட்டுப்பாட்டை... இழந்தது, சீன ரொக்கெட்! விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 21 டொன் எடையிலான இந்த ரொக்கெட், வரும் ஒன்பதாம் திகதி பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எ…

  6. ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பிரான்ஸிலுள்ள நகரசபைக்கு முன்னால் நேற்று முன்தினம் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுடன் சிங்களப் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது. இதன்போது அந்த பெண், “யுத்தத்தில் இராணுவத்தினரும் உயிரிழந்ததாகவும், அப்படியென்றால் தாங்களும் நீதி கோருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில், https://tamilwin.com/article/sinhala-woman-involved-in-argument-with-tamil-man-1619599786 நேரம் 7.56 ல் பாதரை கேட்க்கினம் அந்த சிங்கள பெண்ணுக்கு அது பற்றி தெரியவில்லை

  7. சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் ட்ரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால் ட்ரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின. இந்த சூழலில் ட்ரம்ப் மிகவிரைவ…

  8. பிரேஸில்: ரியோ டி ஜெனிரோ துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டனர்! பிரேஸிலில் போதைப்பொருள் கடத்தர்காரர்களை குறிவைத்து ரியோ டி ஜெனிரோவின் மிகப்பெரிய சேரி பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது நகர வரலாற்றில் பதிவான மிகக் கொடூரமான சோதனை நடவடிக்கை ஆகும். ரியோவின் சிவில் காவல்துறையின் சுமார் 200 உறுப்பினர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் குறித்த பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் தோட்டாக்களால் தாக்கப்பட்டாலும் உயிர் தப்பினர். ரியோவில் நடத்தப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் அதிகளவிலான உயிரிழப்பு…

  9. குண்டு வெடிப்பில், சிக்கினார்.... மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் இன்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காயமடைந்த மொஹமட் நஷீத், ஏ.டி.கே. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது…

  10. 27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் திங்களன்று கூறியுள்ளனர். மைக்ரோசாப்டின் பில்லியனர் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான அறிக்கையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். "கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், உலகெங்கிலும் வேலை செய்யும் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது அனைத்து மக்களையும் ஆரோக்கியமான, உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த உதவுகிறது" என்று அந்த பதிவில் கூறியுள்ளன…

  11. பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்! இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப், 2017ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் பெரும்பாலும் பார்வையில் இருந்து விலகியே இருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இளவரசர் பிலிப், அண்மையில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், ஆரோக்கியத்துடன் மருத்துவமனையிலிருந்து வ…

    • 33 replies
    • 3.1k views
  12. சிறுவர்களின் ஆபாச படங்களை பதிவேற்றி, இரகசியமாக இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய வலைத்தளங்களில் ஒன்றை ஜேர்மன் பொலிஸார் முடக்கியுள்ளனர். 400,000 க்கும் அதிகமான பயனாளர்களைக்கொண்ட "BOYSTOWN" என்றைக்கப்படும் இந்த வலைத்தளமானது 2019 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த வலைத்தளமானது உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பரிமாற்றிக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில் இளம் குழந்தைகளின் மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தின் பதிவுகளும் உள்ளன என்று அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வலைத்தளத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை ஜேர்மன் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் BOYSTOWN தளம் இணையத்தில…

  13. மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி ; 70 பேர் காயம் மெக்ஸிகோவின் தலைநகரில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்தில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாயன்று மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர அரசாங்கத்தின் ச…

  14. ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். …

  15. விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்தது ரஷியா- வாங்க ஆர்வம் காட்டும் நாடுகள் கொரோனா வைரசானது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியான கார்னிவாக்-கோவ் என்ற மருந்தை ரஷியா கண்டுபிடித்து, கடந்த மாதம் பதிவு செய்தது. இதுவே விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியாகும். நாய்கள், பூனைகள், நரிகள் மற்றும் மிங்க் ஆகிய விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கியது கண்டறியப்பட்டதையடுத்து, தடுப்…

  16. ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக விலகும் அமெரிக்கத் துருப்புகள்: அங்கே அவர்கள் கொடுத்த விலை என்ன? – தமிழில் ஜெயந்திரன் 6 Views அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின் 20வது நினைவு தினத்தில் ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற அமெரிக்க இராணுவத்தினர் அனைவரும் நாடுதிரும்பியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்ற கிட்டத்தட்ட 2500 இராணுவத்தினரின் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர்களின் கடந்த இருபது வருடப்பணி தொடர்பாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள் ஆப்கான் நாட்டின் பாதுகாப்புப்படையினருக்குத் துணையாக இருந்த…

  17. இஸ்ரேலில் பாரிய அனர்த்தம் : ஏராளமானோர் உயிரிழப்பு இஸ்ரேல் நாட்டின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 44 பேர் சிக்கி பலியானார்கள், 103 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் வைத்தியசாலை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர். …

  18. மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்! மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மக்வேயின் வடகிழக்கில் மெய்க்டிலாவில் உள்ள நாட்டின் முக்கிய விமானத் தளத்தில் ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவ சதித் திட்டத்துக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் மேற்…

  19. இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு 11 Views இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்க…

  20. மே 15 வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான சேவையை இரத்து செய்தது ஆஸி. எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய அபாயகரமான கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மே 15 வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று மோரிசன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் - உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக…

  21. 53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா! இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார். அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்ப…

  22. பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ் பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல் தற்காலிகமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இன்று அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா மீன்பிடி உரிமைகளை தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரான்ஸ் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி சேவைகளில் பழிவாங்கல்களுடன் பதிலளிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவின் பொர…

  23. தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்: உலக சுகாதார அமைப்பு உலகளவில் உச்சமடைந்துள்ள கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை முன்வைத்துள்ளது. அதாவது, சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம், குறைந்தது ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனம் மேலும் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரிதத்து செல்கின்ற நிலையில், அங்கு கொரோனாவினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கொரோனாவுக்கு மாத்திரமே உலக நாடுகள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதால் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசி செலு…

  24. இஸ்ரேல்... எதிர் காலத்தில், அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும்: ஈரானிய உயர் தளபதி எச்சரிக்கை! சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் இஸ்ரேலிய அணு உலைக்கு அருகே தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் எதிர்காலத்தில் அதன் வளங்களுக்கு அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என்று ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்தார். இஸ்ரேல் தொடர்ந்து தனது வளங்களைத் தாக்கினால் ஈரான் எவ்வாறு பதிலளிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி முகமது பாகேரி, ஈரானிய பதிலின் தன்மை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ‘சியோனிச ஆட்சி எளிதில் ஓய்வெடுக்காது’ என கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரிய மண்ணில் இலக்…

  25. இந்த கோடையில்... அமெரிக்கர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்: உர்சுலா வான் டெர் லேயன்! இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால் மாத்திரமே இது சாத்தியம் என அவர் தெரிவித்தார். நியூயோர்க் டைம்ஸிடம் வழங்கிய செவ்வியில், ‘இரு தரப்பினரும் ஒரே தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் இது சாத்தியமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். இருப்பினும், அவர் சரியான கால அட்டவணையை வழங்கவில்லை. இது தொற்றுநோயியல் நிலைமையை சார்ந்தது என்று கூறினார். ஐரோப்பிய நாடுகள் ஒரு வரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.