Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேலில் பாரிய அனர்த்தம் : ஏராளமானோர் உயிரிழப்பு இஸ்ரேல் நாட்டின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 44 பேர் சிக்கி பலியானார்கள், 103 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் வைத்தியசாலை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர். …

  2. மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்! மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மக்வேயின் வடகிழக்கில் மெய்க்டிலாவில் உள்ள நாட்டின் முக்கிய விமானத் தளத்தில் ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவ சதித் திட்டத்துக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் மேற்…

  3. ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பிரான்ஸிலுள்ள நகரசபைக்கு முன்னால் நேற்று முன்தினம் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுடன் சிங்களப் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது. இதன்போது அந்த பெண், “யுத்தத்தில் இராணுவத்தினரும் உயிரிழந்ததாகவும், அப்படியென்றால் தாங்களும் நீதி கோருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில், https://tamilwin.com/article/sinhala-woman-involved-in-argument-with-tamil-man-1619599786 நேரம் 7.56 ல் பாதரை கேட்க்கினம் அந்த சிங்கள பெண்ணுக்கு அது பற்றி தெரியவில்லை

  4. பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ் பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல் தற்காலிகமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இன்று அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா மீன்பிடி உரிமைகளை தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரான்ஸ் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி சேவைகளில் பழிவாங்கல்களுடன் பதிலளிக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவின் பொர…

  5. இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு 11 Views இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்க…

  6. மே 15 வரை இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான சேவையை இரத்து செய்தது ஆஸி. எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது. அதன்படி அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய அபாயகரமான கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மே 15 வரை இந்த இடைநீக்கம் நீடிக்கும் என்று மோரிசன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் - உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக…

  7. தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்: உலக சுகாதார அமைப்பு உலகளவில் உச்சமடைந்துள்ள கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய விடயமொன்றை முன்வைத்துள்ளது. அதாவது, சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம், குறைந்தது ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனம் மேலும் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரிதத்து செல்கின்ற நிலையில், அங்கு கொரோனாவினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கொரோனாவுக்கு மாத்திரமே உலக நாடுகள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதால் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசி செலு…

  8. இஸ்ரேல்... எதிர் காலத்தில், அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும்: ஈரானிய உயர் தளபதி எச்சரிக்கை! சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு ரொக்கெட் இஸ்ரேலிய அணு உலைக்கு அருகே தரையிறங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேல் எதிர்காலத்தில் அதன் வளங்களுக்கு அதிகமான தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என்று ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்தார். இஸ்ரேல் தொடர்ந்து தனது வளங்களைத் தாக்கினால் ஈரான் எவ்வாறு பதிலளிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு, ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி முகமது பாகேரி, ஈரானிய பதிலின் தன்மை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ‘சியோனிச ஆட்சி எளிதில் ஓய்வெடுக்காது’ என கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரிய மண்ணில் இலக்…

  9. இந்த கோடையில்... அமெரிக்கர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்: உர்சுலா வான் டெர் லேயன்! இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால் மாத்திரமே இது சாத்தியம் என அவர் தெரிவித்தார். நியூயோர்க் டைம்ஸிடம் வழங்கிய செவ்வியில், ‘இரு தரப்பினரும் ஒரே தடுப்பூசி போடும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் இது சாத்தியமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். இருப்பினும், அவர் சரியான கால அட்டவணையை வழங்கவில்லை. இது தொற்றுநோயியல் நிலைமையை சார்ந்தது என்று கூறினார். ஐரோப்பிய நாடுகள் ஒரு வரு…

  10. தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல் அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களிடமும் மற்றவர்களைப் போலவே தடுப்பூசிகள் செயற்பட்டன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆகியவையும் இரு வயதினரிடமிருந்தும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைக் கண்டறிந்தன. இதுவரை ஆய்வு செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத இரண்டு ஆய்வுகளில் அடங்கியுள்ள இந்த ஆய்வு…

  11. ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். …

  12. ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 கொரோனா நோயாளர்கள் பலி ; 46 பேர் காயம் பாக்தாத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையொன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர். இது கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை என்று அதன் அருகிலுள்ள மூன்று மருத்துவமனைகளின் மருத்துவ வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தியாலா பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆக்ஸிஜன் தொட்டி வெடித்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விபத்தினையடுதது பல அம்புயூலன்ஸ்கள் வைத்தியசாலையை நோக்கி விரைந்ததுடன், காயமடைந்தவர்களை வே…

  13. கொரோனாவில் இருந்து மீண்டாலும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல் புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இறப்பு அபாயம் அதிகம் என்பதும், அவர்களுக்கு பயங்கரமான நோய்கள் ஏற்படுவதும் ஆய்வில் தெரியவந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கொரோனாவின் கொடூரத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும், லட்சக்கணக்கானவர்கள் மீண்டும் வருகின்றனர். இந்த பயங்கர தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின்னர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்தவகையில் 87 ஆயிரம் கொரோனா நோயாளிக…

  14. புதிய கட்டுப்பாடுகளை... இந்திய பயணிகளுக்கு விதித்தது ஜேர்மன் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஜேர்மன் நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளதாவது, “இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் எங்களது தடுப்பூசி பிரசாரம் போலியாக அமையாமல் இருப்பதற்கே இத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். இதற்கமைய இந்தியாவில் இருந்து வருகைதரும் ஜெர்மனிவாசிகளுக்கு மாத்திரமே நாட்டுக்கு நுழைவதற்கு அனுமதி வழ…

  15. 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது! கொரோனா தொற்று இருப்பதை மறைந்தது 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான அவர் இருமல் மற்றும் 40 செல்ஸியசிற்கும் அதிகமான உடல் வெப்பநிலை இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை மற்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் பணிபுரியும் இடத்தில் ஐந்து பேருக்கும் மூன்று வயது குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த நபர் பல நாட்களாக அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக ஸ்பெயினின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள முன்ன…

  16. உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு- 384 ராணுவ வீரர்கள் மீட்பு சங்மோலி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பகுதியில் பனிப்பாறை உடைந்து அங்குள்ள தவுலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் அங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வந்த மின் நிலையத்துக்குள்ளும் சுரங்க பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடந்ததில் பலர் பிணமாக மீட்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில் இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 126 பேர் பேரை காண…

    • 1 reply
    • 488 views
  17. 24 நாள் உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நவல்னி ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முக்கிய எதிர்ப்பாளரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி மருத்துவ சிகிச்சை பெற்றபின் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் நவல்னி, தனது தனிப்பட்ட மருத்துவரிடம் மருத்துவ உதவி கோரி மார்ச் 31 அன்று தொடங்கிய உண்ணா விரதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறியுள்ளார். "நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள நல்ல மனிதர்களின் பெரும் ஆதரவுக்கு நன்றி, நாங்கள் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்" என்று நவல்னி தனது உண்ணாவிரதத்தின் 24 ஆவது நாளான இன்றைய தினம் இன்ஸ்டாகிராமில் பதிவில் தெரிவித்துள்ளார். அதேநேரம் உண்ணாவிரதத்தை…

  18. மியன்மாரில் இதுவரை 745 போராட்டக்காரர்கள் இராணுவத்தால் படுகொலை கடந்த பெப்ரவரி மாதம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளதுதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதிய நிலவரப்படி, இந்த இராணுவ ஆட்சிக்குழுவினால் 745 பேர் கொல்லப்பட்டதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட 3,371 பேர் கைது செய்யப்பட்டடுள்ளார்கள். இதற்கிடையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சனிக்கிழமை நடைபெறும் ஆசியான் உச்சிமாநாட்டி…

  19. மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா? 97 Views வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தால் ஆங் சான் சூகி தலைமை யிலான அரசு சர்வதேச ரீதியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த சூழலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப் பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது மியான்மர…

  20. சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை இரத்து செய்தது அவுஸ்ரேலியா: வலுக்கும் மோதல்! தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான ‘பெல்ட் மற்றும் வீதி’ திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண அரசாங்கத்துடன் கடந்த 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999ஆம் ஆண்டு சிரியாவும் 2004ஆம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவில் உள்நாட்டு அரசியல…

    • 1 reply
    • 863 views
  21. இஸ்ரேலிய அணுசக்தி தளத்திற்கு அருகே... வெடித்து சிதறிய சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை! சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை நாட்டின் தெற்கில் உள்ள டிமோனா நகரில் ஒரு அணுசக்தி நிலையத்திற்கு அருகே வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரகசியமான டிமோனா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த ஏவுகணை தரையிறங்கிய போதும், இந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதங்களும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதேவேளை, குண்டுவெடிப்பில் அணுசக்தி தளம் பாதிக்கப்படவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிரிய ஏவுகணை இஸ்ரேலிய விமானத்தின் மீது வீசப்பட்டதாகவும் அதன் இலக்கை மீறி டிமோனா பகுதியை அடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்த…

  22. 53 பேருடன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மாயம்: ஆஸி- சிங்கப்பூரின் உதவியை நாடும் இந்தோனேசியா! இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் காணாமல் போயுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்மூழ்கி கப்பல் நேற்று (புதன்கிழமை) பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.ஐ.நங்கலா-402 கப்பலைக் கண்டுபிடிக்க போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் இராணுவத் தலைவர் தெரிவித்தார். அத்துடன், தேடலுக்கு உதவுமாறு அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூருக்கு, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், நாடுகள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்ப…

  23. கொரோனா தடுப்பூசி – முக்கிய விடயத்தினை வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள்! கொரோனா தடுப்பூசிகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதையும், உயிரிழப்பதனையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட 600 இற்கும் குறைவான அமெரிக்கர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முழுமையாக கொரோனா தடுப்பூசியினைப் போட்டுக்கொண்ட 84 மில்லியன் பேரில் 0.01 சதவீதமானவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1211392

  24. ஜப்பானுக்கு எதிரான பாலியல் அடிமைத்தன இழப்பீட்டு கோரிக்கையை தென்கொரியா நிராகரிப்பு தென்கொரிய பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் போர்க்கால துன்பங்கள் தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியதை தென் கொரிய நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. இந் நிலையில் பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வலர்கள் இந்த முடிவைக் கண்டித்து, சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றமானது பெண்களின் மரியாதை மற்றும் கெளரவத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் போராட்டங்களை புறக்கணித்து வருவதாகக் கூறினார். அது மாத்திரமன்றி அவர்கள் ஒரு அறிக்கையில் வாதிகள் மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர். தென்…

  25. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு பட மூலாதாரம், GETTY IMAGES ஆப்ரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சென்ற ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்ட போது, தற்போது 45 வயதாகும் முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேல் முழங்காலை வைத்து அழுத்தியது படம்பிடிக்கப்பட்டது. மி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.