உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
இந்தோனீசியா நிலநடுக்கம்: சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 அதிர்வு, 26 பேர் மரணம், சுனாமி ஏற்படுமா? 15 ஜனவரி 2021, 06:09 GMT பட மூலாதாரம், EPA இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. வெள்ளிக்கிழமை இந்த பெரிய நிலநடுக்கம் நிகழ்வ…
-
- 0 replies
- 435 views
-
-
ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்! அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தல…
-
- 1 reply
- 728 views
-
-
கொரோனாவைரஸ் குறித்த விசாரணைகளிற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவினர் சீனா சென்றடைந்தனர் கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுகான் சென்றடைந்துள்ளது. இன்றுகாலை வுகான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினா இரண்டு வாரம் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். சீனா அதிகாரிகள் வழங்கவுள்ள மாதிரிகள் ஆதாரங்களின் அடிப்படையிலேயே உலக சுகாதார நிறுவனத்தின் குழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். பல தடங்களிற்கு பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனாவைரசின் தோற்றுவாயை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள…
-
- 1 reply
- 678 views
-
-
சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம் பீஜிங் சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். …
-
- 0 replies
- 541 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்? by : Anojkiyan பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 22 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸில் அதன் மக்கள்தொகையில் 0.29 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது. டிசம்பர் மாதம் 300 மில்லியன் டோஸ் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் விநியோக சங்கிலி பிரச்சினைகள் காரணமாக 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்த 12.5 மி…
-
- 2 replies
- 706 views
-
-
அணு ஆயுதத் தாக்குதல்; பென்டகனுக்கு எச்சரிக்கை - ட்ரம்ப்பைத் தொடரும் சர்ச்சை! அதியமான் ப ட்ரம்ப் தொடர்ச்சியாக ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு, சர்ச்சையாகி, பின் நீக்கியவற்றைத் தொகுத்தால், அவை பல்வேறு அத்தியாயங்களைப் பெறும் என்பதில் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்குத் தனது நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். வலதுசாரி நிலைப்பாடுகளை உடைய ட்ரம்ப், தனது சர்ச்சைக்குரிய செயல்களால் மக்களின் மத்தியில் அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். H1B விசா தொடங்கி, தற்போது நிகழ்ந்துவரும் ஆட்சி மாற்றம் …
-
- 0 replies
- 614 views
-
-
மேற்கு எத்தியோப்பியாவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் பலி மேற்கு எத்தியோப்பியாவை பாதிக்கும் சமீபத்திய தாக்குதலில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந் நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. சூடான் மற்றும் தெற்கு சூடானின் எல்லையான பெனிஷங்குல்-குமுஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை இந்த படுகொலை நடந்ததாக எத்தியோப்பியன் மனித உரிமைகள் ஆணையத்தின் (ஈ.எச்.ஆர்.சி) செய்தித் தொடர்பாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான ஆரோன் மாஷோ குறிப்பிட்டுள்ளார். 2 முதல் 45 வயது வரையிலான 80 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தலைநகர் அட…
-
- 0 replies
- 818 views
-
-
அமெரிக்க கேபிடல் கலவரத்தை தூண்டியமைக்காக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு கிளர்ச்சியை தூண்டுவதற்கு வழிவகுத்தமைக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க பிரநிதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் ஒரு கும்பல் கடந்த வாரம் அமெரிக்காவின் கேபிடல் ஹில் கட்டிடத்திற்கு நுழைந்து வன்முறையை ஏற்படுத்த வழிவகுத்தமையினை மேற்கொள் காட்டியே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதி இரண்டு முறை குற்றச்சாட்டுக்கு ஆளானது இது முதல் சந்தர்ப்பமாகும். கடந்த நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ட்ரம…
-
- 0 replies
- 641 views
-
-
அமெரிக்க சனநாயகம் பிரத்தியேகமானதா? அண்மைய நாடாளுமன்றக் கலவரம் கூறும் செய்தி என்ன? – தமிழில் ஜெயந்திரன் 46 Views அமெரிக்கத் தேர்தலின் பின்னர் மாநிலங்கள் ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செலுத்திய வாக்கை எண்ணி, ஜோ பைடனே ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு தற்போது துணை அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் மைக் பென்ஸ் (Mike Pence) ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க காங்கிரசின் இரண்டு சபைகளையும் கூட்டினார். வழமையாக இந்த நிகழ்வு மிக எளிமையான ஒரு நிகழ்வாகவும் ஒரு மணித்தியாலத்தில் நடந்து முடிகின்ற முழுக்க முழுக்கச் சம்பிரதாயபூர்வமான ஒரு நடைமுறையாகவுமே இதுவரை இருந்து …
-
- 0 replies
- 522 views
-
-
கொரோனா மருந்து வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் 2021க்குள் பெருமளவு மக்கள் நோய்எதிர்ப்பு சக்தியை பெறப்போவதில்லை- உலக சுகாதார ஸ்தாபனம் உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத் ஆரம்பித்தாலும் இந்த வருடம் பெறுமளவு மக்களிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்ப்போவதில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் நாடுகளும் மக்களும் சமூகவிலக்கல் நடவடிக்கைகளையும் நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்துகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களிற்கு பாதுகாப்பை வழங்கினாலும் 2021ற்…
-
- 1 reply
- 377 views
-
-
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த கிரிக்கெட் வீரரே புதிய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்- சுகாதார அதிகாரி Digital News Team 2021-01-13T21:50:25 வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பிரிட்டன் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கிரிக்கெட் வீரர் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 322 views
-
-
ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Antonio-Guterres.jpg ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக் கூறினார் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி உடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது. ஐ…
-
- 0 replies
- 411 views
-
-
கியூபா மீண்டும் பயங்கரவாத நாடு – அமெரிக்காவின் முடிவிற்கு கியூபா கண்டனம் by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/cuba-720x450.jpeg கரீபியன் தீவில் இருக்கும் கம்யூனிஸ நாடான கியூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக அமெரிக்கா அறிவித்து பொருளதாாரத் தடைவிதித்தமைக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோ பைடன் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் கியூபா பயங்கரவாத நாடு அல்ல என அவர் நம்புவார் என்றும் கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ட்ரம்ப் அரசாங்கம் இறுதி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை …
-
- 0 replies
- 495 views
-
-
பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை முதல் கொவிட்-19 சோதனை முடிவு அவசியம்! பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை 04:00 மணி முதல் கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும். பிரித்தானிய நாட்டவர்கள் உட்பட விமானம், ரயில் அல்லது படகு மூலம் வருபவர்கள் தாங்கள் இருக்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரம் வரை சோதனை செய்ய வேண்டும். அரசாங்கத்தின் பயண பட்டியலில் இல்லாத இடங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். சோதனை கிடைக்கும் மற்றும் திறன் தொடர்பான சிக்கல்கள் உள்ளன, எனவே சில நாடுகளுக்கு ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்படும். உதாரணமாக, செயின்ட் லூசியா, பார்படாஸ், ஆன்டிகுவா மற்றும் ப…
-
- 0 replies
- 416 views
-
-
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு இழப்பீடு கோரும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சீனா! அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம். உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு…
-
- 0 replies
- 301 views
-
-
இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்த பகுதி கண்டுபிடிப்பு- கடலில் விழுந்து வெடித்தது என தகவல்கள் Digital News Team இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜகார்த்தா கடலில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜய எயர் ஜெட் புறப்பட்டசில நிமிடங்களில் ராடரிலிருந்து காணாமல்போயுள்ளது. இந்நிலையிலேயே விமானம் கடலில் விழுந்த பகுதியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட கப்பல்களையும் கடற்படையி…
-
- 5 replies
- 992 views
-
-
ஜோ பைடன் பதவி ஏற்க முன்னர்... நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள் – புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க முன்னர் நாடு முழுவதும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆயுதப் போராட்டங்களை நடத்துவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. எனினும் தான் பதவியேற்பதற்கு அச்சப்படவில்லை என ஜோ…
-
- 0 replies
- 726 views
-
-
கொரோனாவின் உருவாக்கம் குறித்து 14ஆம் திகதி சீனாவில் விசாரணை கொரோனா வைரஸ் உருவான விதம் குறித்து நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14ஆம் திகதி சீனாவுக்கு நேரில் செல்கிறது. உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவின் வருகைக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து எதிர்வரும் 14ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் நிலவிய தாமதம் முடிவுக்கு வந்துள்ளது.…
-
- 0 replies
- 333 views
-
-
நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன் நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரிட்டன் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது. இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும் விமர்சகர்கள் இது அதன் நெருங்கிய அண்டை நாடுகளுடனான பல தசாப்த கால ஒருங்கிணைப்பை மாற்றியமைக்கிறது மற்றும் பிரிட்டனை உடைப்…
-
- 102 replies
- 9.5k views
- 1 follower
-
-
லண்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிப்பு! லண்டனில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். வைரஸின் பரவல் வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் போய்விடுவோம் என்பதுதான் உண்மை’ என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாங்கள் ஒரு பெரிய சம்பவத்தை அறிவிக்கிறோம், ஏனெனில் இந்த வைரஸ் எங்கள் நகரத்திற்கு அச்சுறுத்தல் நெருக்கடி நிலையில் உள்ளது. இப்போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் என்ஹெச்எஸ் (தேசிய சுகாதார சேவை) அதிகமாகிவிடக்கூடும். மே…
-
- 4 replies
- 580 views
-
-
அனைவரின் முன்னால் நம்மை சிறுமைப்படுத்துவது என்றால் அது என்ன நிறவெறி? சிட்னி நிறவெறி குறித்து அஸ்வின் கடும் வேதனை Digital News Team கருப்பினத்தவர், இந்தியர்கள், ஆசியர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசைபாடும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து அஸ்வின் கடும் வேதனையுடன் பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார். சிட்னியில் குறிப்பாக ரசிகர்களில் ஒருபிரிவினர் படுமோசமாக நடந்து கொள்வது வழக்கமாகி வருகிறது, அன்று பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு எதிராக நிறவெறி வசையை, கேலியைக் கட்டவிழ்த்து விட்டனர் சிட்னி ரசிகர்கள், ஆஸ்திரேலியாவில் இது மிகவும் சீரியசாகப் பார்க்கப்படும் விஷயம், புகார் தெரிவித்தால் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்க…
-
- 0 replies
- 741 views
-
-
போப் பிரான்சிஸின் தனிப்பட்ட வைத்தியர் உயிரிழப்பு போப் பிரான்சிஸின் தனிப்பட்ட வைத்தியர் கொவிட் தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக வத்திக்கான் செய்தித்தாளான 'L'Osservatore Romano' ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் போப்பாண்டவரின் தனிப்பட்ட வைத்தியராக ஃபேப்ரிஜியோ சோகோர்சி நியமிக்கப்பட்டார். 78 வயதான வைத்தியர் ஃபேப்ரிஜியோ சோகோர்சி, ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வத்திக்கான் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போப் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 561 views
-
-
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா Digital News Team அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை தூதரகத்தின் நான்கு பணியாளர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் இதனை அறிவித்துள்ளது. Thinakkural.lk
-
- 0 replies
- 644 views
-
-
வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிம் இல் சங் வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால், வட கொரியாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது. வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சங் ஆட்சி. பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் ஆட்சி. பிறகு தற்போது…
-
- 1 reply
- 1k views
-
-
வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தத…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-