உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26862 topics in this forum
-
சாட் நாட்டின் அதிபர் மோதலில் சிக்கி உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு 58 Views மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டின் இராணுவம் அறிவித்திருக்கிறது. பிரான்ஸின் பாதுகாப்பு கூட்டணி நாடான சாட், சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பிரெஞ்சுப் படைகளது தலைமையகமாக உள்ளது. 68 வயதான டெபி சாதாரண படைச் சிப்பாயாக இருந்து 1990 இல் ஆயுதக் கிளர்ச்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர். ஆபிரிக்காவில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்கும் அதிபர்களில் ஒருவரான இட்ரிஸ் டெபி, லிபியா எல்லையோரம் கிளர்ச்சி…
-
- 0 replies
- 444 views
-
-
கொரோனா தொற்று அதிகரிப்பு : கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுவிஸ் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது. உணவகங்கள் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை சில பல்கலைக்கழகள் மீண்டும் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கும் வரை உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காணப்பட்டாலும் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தீர்மானம் நியாயமானது என அரசாங்கம் கூறுகிறது. https://athavannews.com/2021…
-
- 0 replies
- 373 views
-
-
சிம்பாப்வேயில் கொவிட்-19 தொற்று தீவிரம்: சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை! சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 41ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிய சிம்பாப்வே 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 320 கைதிகளை அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சிறைச்சாலைகள் நிரம்பிவழிவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால், 37,751பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,…
-
- 0 replies
- 198 views
-
-
அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்குள் இறந்துவிடுவார் – மருத்துவர்கள் எச்சரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என சமீபத்திய இரத்த பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடுமையான முதுகுவலி மற்றும் கால் உணர்வின்மைக்கு முறையான சிகிச்சை கோரி கடந்த 18 நாட்களாக 44 வயதான நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண…
-
- 2 replies
- 474 views
-
-
இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா - தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் இலங்கையில் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கை காவல்துறைக்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியுள்ளமைக்கு ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ் அகதிகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய எல்லைப்படை. ஆனால், இந்த நன்கொடை ஆஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் அங்கமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ட்ரோன்கள் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்காணிக்கவுமே உதவும்,” என தமிழ் அகதிகள் கவுன்சிலின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையிலிருந்து ஆஸ்திர…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும் குடியிருப்பு வாசிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக ப…
-
- 1 reply
- 380 views
-
-
பிரான்ஸில், ஜேர்மனி மற்றும் இத்தாலியில் கொரோனா தொற்று நிலவரம் ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சத்து 60 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1 இலட்சத்து 593 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 957 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 31 இலட்சத்து 37 ஆயிரத்து 907 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 526 ஆகவும் அதிகரித்…
-
- 0 replies
- 633 views
-
-
இளவரசர் ஃபிலிப்பின்.. இறுதிச் சடங்கு இன்று. 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் இறுதி மரியாதை! மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. 99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும். இந்த நிகழ்வில் 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்கேற்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…
-
- 1 reply
- 471 views
-
-
ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா? ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்! ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் (ஈ.எம்.ஏ) அடுத்த வாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசி குறித்த பரிந்துரையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தேசிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், பாதுகாப்புக் குழு விரைவான பரிந்துரையை வழங்கும் வரை ஏற்கனவே பெறப்பட்ட அளவுகளை சேமிக்க பரிந்துரைத்ததாகவும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாமதம் ஐரோப்பாவின் தடுமாறும் தடுப்பூசி பிரச்சாரத்திற்கு மேலும் ஒரு அடியாக அமைந்துள்ளது. அமெரிக்க மத்திய சுகாதார முகவரகம் 50 வயதிற்கு உட்பட்ட ஆறு பெண்கள் தடுப்பூசியை பெற்ற பிறகு அரிய இரத்த உறைவினால் பா…
-
- 0 replies
- 463 views
-
-
பெருநகர ரொறென்ரோவில்... கொவிட் தடுப்பூசி செலுத்தும், மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்! பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து செய்கின்றன அல்லது நியமனங்களை ஒத்திவைக்கின்றன. ஸ்கார்பாரோவில் சுமார் 10,000 நியமனங்கள் இரத்து செய்யப்படும். ஏப்ரல் 14ஆம் திகதி இரண்டு மருத்துவமனை மருந்தகங்கள் வழங்கல் சிக்கல்களால் மூடப்படுகின்றன. அவை எப்போது திறக்கப்படும் என்பதற்கான காலக்கெடு தெரியவில்லை.. இதே காரணத்திற்காக நோர்த் யோர்க் பொது மருத்துவமனை ஏப்ரல் 1…
-
- 0 replies
- 242 views
-
-
சைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா! ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. டஸன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பாரிய ‘சோலார் விண்ட்ஸ்’ இணைய ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020ஆம் ஆண்டு தேர்தலில் மாஸ்கோ தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. வியாழ…
-
- 2 replies
- 605 views
-
-
வியாழக்கிழமை இரவு இண்டியானாபோலிஸின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஃபெடெக்ஸ் வசதிக்கு வெளியேயும் வெளியேயும் துப்பாக்கி ஏந்திய ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், பலரும் காயமடைந்தனர் மற்றும் சாட்சிகளை தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு ஓடினர் என்று போலீசார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் பொலிசார் இந்த வசதிக்கு அழைக்கப்பட்டனர். மார்ச் 22 அன்று கொலராடோவில் மளிகை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதிலிருந்து நாட்டின் மிக மோசமான படப்பிடிப்புக்கு உள்ளூர் நேரம். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது துப்பாக்கிதாரி பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. "(துப்பாக்கி ஏந்தியவர்) வாகன நிறுத்துமிடத்திற்குள் வந்தார், அவர் தனது வாகனத்திலிருந்து…
-
- 5 replies
- 542 views
- 1 follower
-
-
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக டென்மார்க் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேநேரம், தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி குறித்து அந்தந்த நாடுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209911
-
- 0 replies
- 208 views
-
-
ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் ‘செப்.11’ மீளப்பெறப்படும்! ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்கள், எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் மீள பெறப்படும் என ஆப்கான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரையும் மீள அழைப்பதில் உறுதியாகவுள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இதுதொடர்பான அறிவிப்பை இன்று (புதன்கிழமை) வெளியிடுவார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, நியூயோர்க் இரட்டை கோபுரங்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலில், ஏறக்குறைய மூவாயிரம் பேர் உயிரிழந்ததோடு 25ஆயிரத்திற்…
-
- 1 reply
- 314 views
-
-
ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்! வடக்கு ஈராக்கின் எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியிலுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு துருக்கிய சிப்பாய் உயிரிழந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈர்பிலில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆளில்லா வான்வழி விமானம் நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குதல் இதுவாகும். அமெரிக்க படைகள் மற்றும் பாக்தாத்தில் உள்ள தூதரகம் ஆகியவற்றின் மீது தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களுக்…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியாவின் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இதேபோல், இலங்கை மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ப…
-
- 2 replies
- 516 views
-
-
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு! ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆய்வு முடியும் வரை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்ற…
-
- 0 replies
- 394 views
-
-
சிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை! இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரியாவில் 2011ஆம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது…
-
- 0 replies
- 465 views
-
-
அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு நிலவும் அமைதியற்ற நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக மின்னிசோட்டா மாகாண ஆளுநர் டிம் வால்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே ம…
-
- 2 replies
- 584 views
-
-
சீனாவும் ரஷ்யாவும் சுயநலத்துக்காக மியன்மார் இராணுவத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு! மியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிக்கு சீனாவும் ரஷ்யாவும் முட்டுக்கட்டை போடுவதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவா் ஜோசப் போரில் தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மியன்மாரில் இராணுவ ஆட்சியாளா்களின் அடக்குமுறையால் நாட்டு மக்கள் ரத்தம் சிந்தி வருவது உலகையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது எ…
-
- 0 replies
- 266 views
-
-
அகதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்க்கத் தடை! – யேர்மனிய எதிர்க்கட்சி தேர்தல் வாக்குறுதி! 70 Views யேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. குடியேற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக எதிர்த்துவருகின்ற ஏஎப்டி (Alternative für Deutschland-AfD) கட்சி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தனது வாக்குறுதிகளில் அகதிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. ‘இயல்பான யேர்மனி’ (‘Germany. But normal.’) என்ற அர்த்தம் கொண்ட சுலோகத்தின் கீழ் அக்கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து யேர்மனியை வெளியேற்றுகின்ற டெக்ஸ…
-
- 0 replies
- 471 views
-
-
`பாலின பாகுபாடு, பாலியல் வன்முறைகள்!' - சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பிய கூகுள் ஊழியர்கள் சே. பாலாஜி கூகுள் - சுந்தர் பிச்சை ஆல்பாபெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிடத்தில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், நிர்வாகம் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் சுந்தர் பிச்சைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களை இப்படி தான் நடத்த வேண்டும் என்று மற்ற நிறுவனங்களுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் வேதனை அளிப்பதாக, கூகுள் ஊழியர்கள் சமீப காலமாக மனம் குமுறி வருகின்றனர…
-
- 0 replies
- 542 views
-
-
ஈரானின் புதிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்! ஈரானில் புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி அமைப்பான ‘அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஒஃப் ஈரான்’இன் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமால்வண்டி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது. கடந்த சனிக்கிழமை, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருக்கும் புதிய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்த மறுநாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் யாரும் பாதிக்…
-
- 0 replies
- 344 views
-
-
இந்தோனேஷியாவில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170யைக் கடந்தது. தேசிய பேரழிவு தணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, அடோனாராவில் குறைந்தது 72பேர் உயிரிழந்தனர். அத்துடன் லெம்படாவில் 47பேர் உயிரிழந்தனர் மற்றும் 22பேர் காணவில்லை. கத்தோலிக்க பெரும்பான்மை கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை இடமாற்றம் செய்வதாக இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உறுதியளித்துள்ளார். மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டு பகுதிகளான லெம்படா மற்றும் அடோனாரா தீவுகளுக்கு விஜயம் செய்தபோது விடோடோ இந்த உறுதிமொழியை அளித்தார். இரண்டு தீவுகளில் பா…
-
- 0 replies
- 284 views
-
-
நடான்ஸ் அணுசக்தி தளம் மீதான தாக்குதல் ; ஈரான் கண்டனம் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சம்பவம் “அணுசக்தி பயங்கரவாதத்தின்” செயலால் ஏற்பட்டது என்று நாட்டின் அணுசக்தித் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை தெஹ்ரான் கொண்டுள்ளது. நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்திற்கு எதிரான செயல், அணுசக்தித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தடுப்பதில் நாட்டின் தொழில்துறை மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் எதிரிகளின் தோல்வியைக் காட்டுகிறது என்றும் ஈரானின் அணுசக்தி அமைப்பின் (AEOI) தலைவர் அலி அக்பர் சலேஹி கூறினார். இந்த சம்பவத்தை அணுசக்தி ஒப்பந்தத்துடன் நேரடியாக இணைத…
-
- 1 reply
- 704 views
-