உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவரா? ட்ரம்ப் மறைமுக தகவல் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக விமர்சகர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன. இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ட்ரம்ப்,…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீடிக்க புதிய யுக்தியை கையாளும் அமெரிக்கா! ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடையை மேலும் நீடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த அமெரிக்கா, ‘ஸ்நாப்பேக்’ என்ற விதிமுறையை பயன்படுத்தி, தடையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் பொம்பியோ, ஐ.நா., பாதுகாப்பு சபைத் தலைவரை சந்தித்து பேசவுள்ளார். ‘ஸ்நாப்பேக்’ முறையில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை, உறுப்பு நாடுகள், வீட்டோ அதிகாரம் மூலம், தோற்கடிக்க முடியாது. மேலும், ஐ.நா.,வால் அமுல்படுத்தப்பட்டு, காலாவதியான தடை உத்தரவுகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை, ஸ்நாப்பேக் விதிமுறை வழங்குகிறது. இதன்படி தாக்கல் ச…
-
- 0 replies
- 369 views
-
-
-
- 0 replies
- 425 views
-
-
லெபனான் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி கொலை : ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர் குற்றவாளி என குற்றச்சாட்டு! லெபனான் முன்னாள் பிரதமர் ரபீக் அல்-ஹரியை 2005 இல் பாரிய குண்டு வெடிப்பில் படுகொலை செய்தமைக்காக ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் ஒருவரை குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி ஹிஸ்புல்லாவின் உறுப்பினர் சலீம் அய்யாஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈரான் ஆதரவு குழு மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் இந்த தாக்குதலை ஒழுங்கமைத்து நடத்தியதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந் நிலையில் லெபனானுக்கா…
-
- 1 reply
- 328 views
-
-
சீனாவின் யாங்சே ஆறு பெருக்கெடுப்பு – ஒரு இலட்சம் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்! சீனாவின் யாங்சே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இந்த வெள்ளம் 1,200 ஆண்டுகள் பழமையான உலக பாரம்பரிய தளத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆற்று வெள்ளம் காரணமாக தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 71 மீட்டர் லொஷன் ஜெயண்ட் புத்தர் சிலையை பாதுகாக்க ஊழியர்கள், பொலிஸார் மற்றும் தன்னார்வலர்கள் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெலில் 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வெள்ள நீர் அதன் கால்விரல்கள் அளவுக்…
-
- 0 replies
- 449 views
-
-
ஆஸ்திரேலிய மக்களுக்கு தடுப்பூசி இலவசம் பிரதமர் மோரீசன் அறிவிப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.135 கோடி) மதிப்பில் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறும்போது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என கூறினார். தொடர்ந்த…
-
- 0 replies
- 341 views
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
மாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி இப்ராகிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் கைது செய்தனர். பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி இப்ராகிம் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வந்ததுடன், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தது. இந்த நிலையிலேயே அவர் இராணுவத்தினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் உரையாடிய இப்ராஹிம் பவுபக்கர், ‘தமது பதவியை இராஜினாமா செய்வதாகவும் தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் ச…
-
- 1 reply
- 494 views
-
-
எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா ஜிங் சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.72-லட்சத்தைக் தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கு…
-
- 2 replies
- 548 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் திறமையற்ற தலைவர்- ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்ல அவர் திறமையற்றவரென முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனநாயக கன்வென்ஷன் நிகழ்வில் கலந்துகொண்ட மிஷெல் ஒபாமா,ஜோ பிடனை ஆதரித்துப் பேசினார். இதன்போதே டொனால்ட் ட்ரம்பை இவ்வாறு விமர்சித்துள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எப்போதெல்லாம் நாம் வெள்ளை மாளிகையை நோக்கி தலைமை அல்லது ஆறுதல் அல்லது ஒருங்கிணைந்த நிலைத்தன்மை போன்றவற்றை எதிர்நோக்கும் போதெல்லாம், நமக்கு அதற்கு மாற்றாகக் கிடைப்பது என்னமோ குழப்பம், பிரிவினை மற்றும் மனிதநேயமற்ற செயல்தான். மேலும் டொனால்ட் டிரம்ப், த…
-
- 2 replies
- 645 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது சிங்கப்பூர்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் நிலைகுலைந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் சரிவைக் கண்டது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் 6.7 சதவீத அளவுக்கு சரிவடைந்தது. இத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை சிங்கப்பூர் துணைப் பிரதமரும் நிதியம…
-
- 0 replies
- 341 views
-
-
இஸ்ரேலின் தோழனாகும் ஐக்கிய அரபு அமீரகம்; ட்ரம்ப்பின் மத்தியக் கிழக்கு மத்தியஸ்த அரசியல்! இஸ்ரேலுடன் தூதரக உறவைத் தொடங்கியிருப்பதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா போன்ற துறைகளில் உறவு மேம்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் இரு நாடுகளுக்கு இடையில் வேளாண் துறை, உணவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13-ல் இறுதிசெய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இருந்தது அமெரிக்காதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மத்தியக் க…
-
- 0 replies
- 397 views
-
-
-
- 1 reply
- 507 views
-
-
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு டி614டி என்று பெயரிடப்பட்டுள்ளது. மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் …
-
- 0 replies
- 396 views
-
-
முதல் கொரோனா தடுப்பூசி காப்புரிமை வழங்கிய சீனா கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்று உலகத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் உலகம் முழுதும் கொரோனா வ…
-
- 0 replies
- 448 views
-
-
https://prruk.org/china-us-power/ China & US Power Tony Norfield looks at China-US power relations and examines whether the US can stop China’s rise. This was first published on Tony’s Economics of Imperialism blog. Can China do much to fight back against the power wielded by the US in the world economy? At first sight, that looks unlikely. China is big, but world trade is conducted in dollars, and the US has economic, political and military influence across the globe. The usual result of a tally of US might is that its position as hegemon is unassailable. But that would overlook how measures of its strength depend upon the world staying i…
-
- 0 replies
- 710 views
-
-
நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கனடாவுக்குள் நுழைய முயற்சி! கனடாவும் அமெரிக்காவும் எல்லையை மூடுவதை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்போது, எங்கள் பகிரப்பட்ட எல்லையில் 12,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் திருப்பி விடப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் கனடாவுக்கு வருகை தந்து தொற்றுநோயையும் மீறி, கடையை வேடிக்கை பார்க்க வருகிறார்கள். மார்ச் 22 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை 12,819 அமெரிக்க குடிமக்கள் பகிரப்பட்ட எல்லையிலிருந்து விலகிச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கனடாவுக்கு வருகை தருவதை வெளிப்படுத்திய பின்னர் உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. 6,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் வெளியிடப்படாத பிற காரணங்களுக்காக திரு…
-
- 0 replies
- 435 views
-
-
அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை டிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ…
-
- 4 replies
- 908 views
-
-
வெள்ளப் பெருக்கினால் வட கொரியாவின் முக்கிய அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டிருக்கலாம்? வட கொரியாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நாட்டின் முக்கிய அணுசக்தி நிலையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தொகுதியை சேதப்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவைக் கண்காணிக்கும் வலைத்தளமான 38 நொர்த், ஒகஸ்ட் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலான வெள்ளப்பெருக்கின் போது, யோங்பியோன் அணு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அணு உலை குளிரூட்டும் முறைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதனை காட்டியுள்ளது. கொரிய தீபகற்பம் சமீபத்திய வரலாற்றில் மிக நீண்ட மழைக்காலத்தை பெறும் இடமாகும். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வட மற்றும் தென் கொரியா இரண்டிலும் சேதத்தையும் இறப்புகளையும் ஏற்பட…
-
- 1 reply
- 448 views
-
-
இஸ்ரேலில் ஆளும் கூட்டணி உடைய வாய்ப்பு: நான்காவது முறையாக தேர்தல் நடைபெறுமா? இஸ்ரேலில் ஆளும் கூட்டணியில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளதால், ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் இஸ்ரேஸ் நான்காவது முறையாக இன்னொரு தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேலில், கடந்த ஓராண்டில், மூன்று முறை பொதுத் தேர்தல் நடைபெற்று எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், இறுதியாக நடந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியும், பென்னி கன்ட்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சியும் இணைந்து, கடந்த மே மாதம் ஆட்சி அமைத்தன. இதன்படி பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். இரண்டு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்…
-
- 1 reply
- 510 views
-
-
இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு லண்டன், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய அவசியம் காரணமாக, பல்வேறு கட்டுப்படுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் வணிக வளாகங்கள், கேசினோக்…
-
- 0 replies
- 656 views
-
-
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி …
-
- 16 replies
- 2.4k views
-
-
அமெரிக்கர்கள் – கனேடியா்களிடையே எல்லைகளில் தொடரும் முரண்பாடுகளால் பதட்டம்.! தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா- கனடா எல்லைகளில் இரு நாட்டவா்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்தாலும் வணிக நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கனடாவுக்குள் வரும் அமெரிக்க வாகன சாரதிகள் எல்லையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மார்ச் 21 முதல் மூடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 21 வரை இந்த எல்லை மூடல் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். எனினும் அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்தும் தீவிரமாக இருப்பதால் அதன் பின்னரும் எ…
-
- 0 replies
- 813 views
-
-
ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா வேலை நிமித்தம் காரணமாக அமெரிக்கா செல்வோருக்கு வழங்கப்படும் ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பல இலட்சம் பேர் வேலையிழந்த நிலையில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் விதமாக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் வேலை தொடர்பான விசாக்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய சென்ற பல இலட்சம் பேர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து இந்திய அரசும் அமெரிக்கா…
-
- 0 replies
- 551 views
-