உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலை குண்டுதாரி இலங்கையின் ஈஸ்டர் தின தொடர் குண்டு வெடிப்பை போன்று பிரித்தானியாவின் செயின்ட் போல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்துவரும் ஹேஸைச் சேர்ந்த சபியா ஷேக், ( வயது -36) பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலைகுண்டுதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸைச் சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் , ஒருவரைக் கொல்வதைவிடவும் கொடூரமான செயல்களை செய்வதை விரும்புவதாக பொலிஸ…
-
- 0 replies
- 553 views
-
-
சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 15:13 PM வாஷிங்டன் ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வகை செய்யும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. இது ஹாங்காங்கின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலாகும் எனக் கூறி அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பலவும் கண்டிக்கும் நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதன் மீது தடைகள் விதிப்பதற்கு அமெரிக்…
-
- 0 replies
- 463 views
-
-
மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவ…
-
- 0 replies
- 439 views
-
-
பாகிஸ்தான் விமானங்கள், ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு அமைப்பினால் ஆறு மாதங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு சொந்தமான PAKISTAN AIRLINES இல் பணிபுரியும் விமான ஊழியர்கள் பலர், உரிமம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே PAKISTAN AIRLINES விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிற்கு சொந்தமான விமான சேவைகளில் பணிபுரிந்து வந்த 860 விமானிகளில், 262 பேர் போலியான உரிமம் மற்றும் விமானி தேர்வில் மோசடியில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது. பாகிஸ்தானின…
-
- 1 reply
- 398 views
-
-
கனடாவில் பிரதமர் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் செல்ல முயன்ற இராணுவவீரர் கைது July 3, 2020 கனடா பிரதமர் ஒட்டாவாவில் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதத்துடன் வாகனத்தை செலுத்த முயன்ற இராணுவவீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓட்டாவாவின் விசேட பகுதியொன்றிற்குள் காணப்பட்ட பாதுகாப்பு கதவுகளை தகர்த்துக்கொண்டு டிரக்கினை செலுத்த முயன்ற இராணுவவீரர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் ரீடோ ஹோல் வீடு அமைந்துள்ள பகுதியை நோக்கியே குறிப்பிட்ட இராணுவவீரர் தனது டிரக்கினை செலுத்தியுள்ளார். ரீடோ ஹோல் வீட்டை சுற்றி அமைந்துள்ள இரு பாதுகாப்பு கதவுகளை உடைத்துக்கொண்டு சென்ற அந்த இராணுவவீரர் வாகனத்தில…
-
- 0 replies
- 386 views
-
-
மெக்ஸிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி சூடு: 24பேர் உயிரிழப்பு! மத்திய மெக்ஸிகன் நகரமான இராபுவாடோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 24பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோவின் இராபுவாடோவில் நேற்று (புதன்கிழமை) நடந்த தாக்குதல் குறித்து, குவானாஜுவாடோ மாநில பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 3பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குவானாஜுவாடோவின் சட்டமா அதிபர் கார்லோஸ் ஜமரிபா, இந்த கொலையை விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளார். இதை அவர் ‘கோழைத்தனமான குற்றச் செயல்’ என்று விப…
-
- 0 replies
- 250 views
-
-
மியன்மார் மண்சரிவில் 162 பேர் பலி! மியன்மார் – வடக்கு பகுதியில் பச்சை மரகத கல் அகழ்வு இடம்பெறும் ஜாட் சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (02) காலை 6:30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 200 சுரங்க தொழிலாளர்கள் வரை மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 162 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்த 54 பேர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://newuthayan.com/மியன்மார்-மண்சரிவில்-162-பே/
-
- 0 replies
- 410 views
-
-
சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 15:52 PM பீஜிங் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந…
-
- 0 replies
- 476 views
-
-
அமேரிக்காவின் சிஸ்கோ நிறுவனம். இந்த நிறுவனத்தில் இதுவரை, அமேரிக்க சட்டங்களுக்கு அமைய, மத வேறுபாடு, நிறவேறுபாடு இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தியர்களின் சாதி பிரச்னை, நீதிமன்று வரை சென்றுள்ளதால், அமெரிக்க சட்டத்தில் அது குறித்த தெளிவில்லை என்பதால், அமெரிக்க நீதித்துறையும், சிஸ்கோ நிறுவனமும் கலங்கி நிற்கின்றன. இந்த பிராமணியம் எங்கு போனாலும் இதே கதை தானோ? "ஜாதி" அமெரிக்கா போயும் இந்த சாக்கடை ஒழியலை.. 2 இந்தியர்கள் மீது புகார்.. சிஸ்கோ மீது அதிரடி வழக்கு நியூயார்க்: அமெரிக்காவே போனாலும் நம் ஆட்கள் இந்த சாதியை விட மாட்டேங்கறாங்களே.. பட்டியலின நபரின், சாதியை குறிப்பிட்டு மனம் நோகும்படி பேசியதாக 2 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இந்தி…
-
- 19 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவை... பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐரோப்பிய ஒன்றியம் அத்தியாவசிய தேவைகளற்ற பாதுகாப்பான பயணங்களுக்கான நாடுகளை வரிசைப்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பட்டியலில் இருந்து அமெரிக்காவை புறம்தள்ளியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் ஏனைய நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பதிவாகியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் சுகாதார நலன் கருதி குறித்த தடையினை ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த குறித்த தடை இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுக்கு வருவதுடன், நாடுகளுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்தும் அனும…
-
- 0 replies
- 264 views
-
-
2036 வரை அதிபராக பதவி வகிக்கும் புதினின் சட்ட திருத்தம்- ரஷ்ய மக்கள் ஆதரவு ரஷ்ய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பதிவு: ஜூலை 02, 2020 07:05 AM மாஸ்கோ, ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார். வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்க…
-
- 0 replies
- 317 views
-
-
பாகிஸ்தான் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக முதல் பெண் நியமனம் பாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்கனவே மேஜர் ஜெனரலாக பதவிவகித்த பெண் அதிகாரியான நிகர் ஜோஹர் நேற்றைய தினம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, மூன்று நட்சத்திர ஜெனரலின் பதவியைப் பெற்ற மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் பெண் அறுவை சிகிச்சை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை மற்றும் கணவர் என இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ள நிலையில், ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள இராணு…
-
- 0 replies
- 973 views
-
-
பிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை! பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு (François Fillon) ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் பிரான்சுவா பில்லனுக்கு 375,000 யூரோக்கள் அபராதம் மற்றும் தேர்தலில் போட்டியிட பத்து வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி பெனிலோப் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் மார்க் ஜூலாட் ஆகியோருக்கும் பரிஸ் தீர்ப்பாயம் கடுமையான தண்டனைகளை விதித்தது. பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது, உடந்தையாக இருந்தமை மற்றும் மறைத்து வைத்தமை ஆகியவைக்காக அவர்கள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட…
-
- 2 replies
- 841 views
-
-
கொரோனா பாதிப்பு: நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்- டொனால்டு டிரம்ப் தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை நான் பார்க்கும்போது நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: ஜூலை 01, 2020 07:37 AM வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 26 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாசி கொரோனா பாதிப்பு நடவ்டிக்கையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது நாம் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை" என்றும் கூறினார். இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் கூறி இரு…
-
- 0 replies
- 392 views
-
-
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை உயரக்கூடும்- உயர் சுகாதார நிபுணர் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை உயரக்கூடும் என உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார். பதிவு: ஜூலை 01, 2020 06:46 AM வாஷிங்டன்: தொற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும்,பொதுமக்களும் எடுக்கத் தவறினால், புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார். உலகிலேயே 26 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மிகபாதிப்படைந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க தொற்று …
-
- 0 replies
- 282 views
-
-
இலங்கை குறித்து ஜெனீவாவில் ஐ.நா செயலாளர் கவலை! ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா.மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கதிற்கு மத்தியில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்கு வைக்கப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மிச்சேல் பச்லெட் மேலும் தெரிவிக்கையில், “பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும்…
-
- 1 reply
- 471 views
-
-
சீனாவில் புதிய வைரஸ் காய்ச்சல் – மனிதர்களுக்கும் தொற்ற வாய்ப்பு! சீனாவில் ப்ளு (Flu) என அறியப்படும் வைரஸ் தொற்று நோயாக மாறக்கூடிய புதிய வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. பன்றியிலிருந்து பரவும் இந்த வைரஸ் காரணமாக ஒரு வகை காய்ச்சல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. https://newuthayan.com/சீனாவில்-புதிய-வைரஸ்-க/
-
- 1 reply
- 411 views
-
-
24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்…
-
- 0 replies
- 483 views
-
-
காஸ்ஸெம் சோலேமானீ தாக்குதல் விவகாரம்: ட்ரம்புக்கு பிடியாணை- இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்! ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது. இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப் கைது…
-
- 1 reply
- 597 views
-
-
-
ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்வான் மோதலுக்கு முன் தற்காப்பு கலை படைப்பிரிவை ராணுவத்தில் சீனா சேர்த்து உள்ளது. பதிவு: ஜூன் 29, 2020 10:22 AM புதுடெல்லி கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது. இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்ட…
-
- 0 replies
- 489 views
-
-
மோதல் போராக மாறும்: இந்தியாவை குறைவாக எடை போட கூடாது - சீனா பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை இந்தியா-சீனாவிற்கிடையேயான மோதல் போராக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறி, சீனாவின் அரசுக்கு அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பதிவு: ஜூன் 29, 2020 07:25 AM பீஜிங் இந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு இந்தியாவின் ராணுவமும், விமான படையும் தீவிரமாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர்…
-
- 0 replies
- 690 views
-
-
ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள்- ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த அமெரிக்க விமானங்கள் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நுழைந்த நிலையில் அவற்றை ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் வழிமறித்து, எல்லையை விட்டு வெளியேற்றியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான Poseidon ரக போர் விமானமும், RC-135 உளவு விமானமும் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லைக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை ரஷ்யாவின் SU-30 ரக ஜெற் விமானங்கள் வழிமறித்ததுடன், ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை அமெ…
-
- 0 replies
- 427 views
-
-
கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூன் 29, 2020 06:43 AM லண்டன் உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் வரும் 4-ஆம் த…
-
- 0 replies
- 929 views
-
-
பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்? நம் உலகத்தில் புதிய தாராளவாதச் சூழலில் அதீதமாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை இந்த கரோனா பெருந்தொற்று கூர்மையாக அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில். அமெரிக்க நாட்டின் இனவாதக் குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. புதிய தாராளவாதக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு 40 வருடங்களுக்குப் பிறகான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நாட்டின் ஒட்டுமொத்த வளத்தில் 20% வளத்தை 0.1 பங்கு ஜனத்தொகையினர் சேர்த்துள்ளனர். ஜனத்தொகையில் பாதிப் பேர், மைனஸ் மதிப்பில் உள்ளனர். 70% மக்கள், அரசின் நிதி உதவியை நம்பி வாழும் நிலை உள்ளது. பெரும்பாலான மக்கள், அன்றன்று வேலைக்கு எஜமானர் அழைப்பதை எதிர்பார்த்து வாழும் அபாயகரமான சூழலில் உள்ளனர…
-
- 0 replies
- 1k views
-