உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
ஈராக்கில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஈரான் தளபதி காஸிம் சுலைமானியின் நண்பரும், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியுமான ஷேக் முகமது அல் கவ்தாராணி என்பவரை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் சுலைமானியின் கொலைக்குப் பின் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஷேக் முகமது அல் கவ்தாராணி பற்றிய தகவல்களைத் தருவோருக்கு 10 மில்லின் டாலர் வெகுமதியாகத் தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/106666/ஹிஸ்ப…
-
- 0 replies
- 491 views
-
-
கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உலகளவிய ஐக்கியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார். பரிசுத்த பாப்பரசர் தனது உயிர்த்த ஞாயிறு செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். இது அலட்சியத்திற்கான அக்கறையின்மைக்காண தருணமில்லை என குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் உலகம் துயரத்தில் சிக்கியுள்ளதால் ஐக்கியப்படவேண்டிய தேவையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தின் உயிர்த்த ஞாயிறு செய்தியென்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் மக்கள் நெருக்கடிக்குள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு உதவுவதற்கும்,பின்னர் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவுவத…
-
- 3 replies
- 589 views
-
-
உலகம் முழுதும் சீரியஸ் கரோனா வைரஸ் நோயாளைகளை மீட்க வென்ட்டிலேட்டர்கள் நோக்கி அதிகம் ஓடும் காலக்கட்டத்தில் நியூயார்க்கில் சில மருத்துவர்கள் வென் ட்டிலேட்டர்களைக் கண்டு அச்சப்படத் தொடங்கியுள்ளனர். சில மருத்துவமனைகளில் வென் ட்டிலேட்டர்களினால் ஏற்படும் கரோனா மரணங்கள் எண்ணிக்கை வழக்கத்துக்கு அதிகமாக இருப்பதால் இந்த மெஷின்கள் சில நோயாளிகளுக்கு ஆபத்தாக இருப்பதாக கவலையடைந்துள்ளனர். மருத்துவர்கள் இன்னமும் கூட தாங்கள் கற்றுக் கொண்டுதான் சிகிச்சை அளிக்கிறோம் என்கின்றனர், ஏனெனில் அனுபவத்தின் அடிப்படையிலும், நிகழ் நேர தரவுகளின் அடிப்படையிலும்தான் கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். வென் ட்டிலேட்டர்கள் நுரையீரல் தோல்வி அடையும் நோயாளிகளுக்கு பிராணவாயுவை அளிக்கும் கர…
-
- 3 replies
- 520 views
-
-
99 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – சீனாவில் இரு மடங்காகும் அதிகரிப்பு! சீனாவில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் 99 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது முந்தைய நாளினை விட இரட்டிப்பான அதிகரிப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 6 ஆம் திகதிக்கு பின்னர் இது மிகப்பெரிய தினசரி எண்ணிக்கை என்றும் ஏறக்குறைய அனைத்து புதிய தொற்றுநோயாளிகளும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உள்ளடக்கியது. குறிப்பாக 99 வழக்குகளில் இரண்டு மட்டுமே உள்நாட்டில் பரவின என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீனாவின் வணிக மையமான ஷாங்காயிலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (11) நகர…
-
- 0 replies
- 406 views
-
-
அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு அழைக்க மறுக்கும் அல்லது அழைத்துக் கொள்வது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கா நாடுகளுக்கு உடனடியாக விசா தடைகளை போட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோய் காலக்கட்டத்தில் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துக் கொள்ளாத அல்லது அழைத்துக் கொள்ள மறுக்கும் அல்லது போக்கு காட்டும் நாடுகள் மீதான…
-
- 3 replies
- 606 views
- 1 follower
-
-
மனித நடமாட்டமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள் கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தொழிலாளர்களை பயன்படுத்தி இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். 19 ம் நூற்றாண்டு முதல் உறவினர்கள் எவருமற்ற அனாதைகளின் உடல்களை இந்த தீவிலேயே அதிகாரிகள் புதை;து வந்துள்ளனர். வழமையாக வாரத்திற்கு 25 உடல்கள் இந்த தீவில் புதைக்கப்படும் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சிறைக்கைதிகளிற்கு சிறிய கூலியை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளது. …
-
- 2 replies
- 544 views
-
-
’கொவிட்-19 இன் 2 ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’ கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனாவில…
-
- 3 replies
- 551 views
-
-
சீனாவில் வாழும் ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் இனவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொரோனா வைரஸ் குறித்து சீன அரசாங்கம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டவர்களிற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளன. சீனாவின் குவாங் சூ நகரில் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் ஹோட்டல்களிற்குள் நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டடுள்ளது. பல ஆபிரிக்க இனத்தவர்கள் தாங்கள் வெளிநாடுகளிற்கு செல்லவில்லை,கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ள போதிலும் தாங்கள் இந்த நிலையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். நாங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம், கண…
-
- 0 replies
- 441 views
-
-
மீண்டும் தலைதூக்கும் புதிய ’எபோலா’ வைரஸ் Editorial / 2020 ஏப்ரல் 11 , மு.ப. 09:09 - 0 - 496 50 நாள்களுக்கு பின்னர் கொங்கோ நாட்டில் ஒருவருக்கு எபோலோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி புதிய எபோலோ வைரஸ் தொற்று கிழக்கு கொங்கோவின் பெனி நகரில் 26 வயதான இளைஞருக்கு உறுதியானது. அதன் பின்னர் 50 நாள்களுக்கு பின்னர் மீண்டும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் எபோலா வைரஸால் கொங்கோவில் 2,200 பேர் பலியானார்கள். வரலாற்றின் 2ஆவது மிக மோசமான எபோலா தொற்றின் மய்யமாக இருந்த பெனிநகரில் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கொங்கோவை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண…
-
- 0 replies
- 472 views
-
-
சீனாவில் இறைச்சி விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியல் .. சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.வூகானில் இருக்கும் ஈரபதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை விலங்குகளிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா விலங்கு ஆகியவற்றை வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம், ஆனால் இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. கெ…
-
- 1 reply
- 952 views
-
-
கொரோனாவால் சூழப்பட்ட நியூயோர்க் – நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை, தனி ஒரு மாநிலம் முந்தியது!!! கொரோனோ வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் தனிப்பட்ட பாதிப்புகளை அமெரிக்காவின் தனி ஒரு மாநிலமான நியூயோர்க் முந்திச் சென்றுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. கோவிட் -19 இன் பரவுகை ஆரம்பிக்கப்பட்ட பின் நேற்று வியாழக்கிழமை 10,000 பேர் புதிதாக இனம் காணப்பட்டு உள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 159,937 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் 153,000 பேர் மற்றும் இத்தாலியின் 143,000 பேர் என்ற எண்ணிக்கைகளை விட அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் த…
-
- 1 reply
- 380 views
-
-
கொரோனாவால் இத்தாலியில் 100 வைத்தியர்கள் உயிரிழப்பு இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளித்த 100 வைத்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள். வைத்தியர்கள், தாதியர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனாவுக்கு எதிராக போராடுவதாக அந்நாட்டு வைத்தியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இத்தாலியில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் …
-
- 2 replies
- 458 views
-
-
மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன. அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன. எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என…
-
- 0 replies
- 301 views
-
-
உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழலை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் தங்களது கைவரிசைகளை காட்டும் அபாயம் உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கூறியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொரோனோ குறித்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். கொரோனா போன்ற ஆபத்தான வைரசுகளை வைத்து உயிரி பயங்கரவாத தாக்குதலை சில அமைப்புகள் நடத்த முற்படலாம் என்ற அவர், கொரோனா தொற்று சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் என அச்சம் தெரிவித்தார். கொரோனா தொற்றை கையாளுவதில் நமக்கு ஏற்பட்டுள்ள இயலாமை பயங்கரவாதிகளுக்கு துணை போய் விடக்கூடாது என்றும் அவர் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ள…
-
- 0 replies
- 414 views
-
-
தென்கொரியாவில் குணமடைந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளனர் என கருதப்படும் 91 நோயாளிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்கொரியாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையைம் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களிற்கு மீண்டும் நோய் எப்படி தொற்றியது என்பதை உறுதி செய்யமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீண்டும் தொற்றிற்குள்ளாகவில்லை மாறாக நோயாளிகளிடம் மீண்டும் மீள் உற்பத்தியாகியுள்ளது என செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தவறானசோதனைகளும் இதற்கு காரணமாகயிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இந்த நோய்க்கான நோய் எதி…
-
- 0 replies
- 296 views
-
-
கொரோனா வைரஸ் எவரையும் தாக்கலாம் ஆனால் சில சமூகத்தினர் ஏனையவர்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் இனசிறுபான்மை குழுக்களின் மீது அளவுக்கதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது. தீவிரகிசிச்சை பிரிவின் தேசிய கணக்காய்வு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35 வீதமானவர்கள் சிறுபான்மை மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வேல்ஸ் வடஅயர்லாந்து மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகளில் உள்ள 2000 நோயாளிகள் மத்தியில் மேற்க…
-
- 4 replies
- 691 views
-
-
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் கொரோனா உயிரியல் கிருமியின் தொற்றினால் உலக அரசியலின் ஒழுங்கு மாற்றத்திற்குள்ளாகிறது. ஆசியாவை விட ஐரோப்பாவே அதிக இழப்புக்களை எதிர் கொண்டு வருகிறது. சீனாவில் தோன்றியது எனக் கூறினாலும் ஐரோப்பாவே பலியிடப்படும் தேசமாக மாறிவருகின்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் இவ்வகை போர் ஒன்று பற்றிய எச்சரிக்கைகளும் ஆங்காங்கே சிறிய அளவிலான தாக்குதல்களும் நடந்தேறியிருக்கின்றன. இவ்வகை யுத்தம் ஒன்று பற்றிய எதிர்வு கூறல்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. இது ஒரு மூன்றாம் உலக யுத்தமாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஆயிரக்கணக்கான சிறிய யுத்தங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் பலத்துக்கும் பலவ…
-
- 1 reply
- 486 views
-
-
கொரோனா வைரஸை உலகம் எப்படி வென்று கொண்டிருக்கிறது? இந்த ஐந்து செய்திகள் நிச்சயம் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை தரும்
-
- 0 replies
- 384 views
-
-
சாட் இராணுவத்தின் தாக்குதலில் 1000 பேகோஹராம் தீவிரவாதிகள் பலி! மத்திய ஆபிரிக்க நாடான சாட் டின் மேற்கு பகுதியில் போகோஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேகோஹராம் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது. சாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மார்ச் 31 ஆம் திகதி சாட்டின் எல்லைப் பகுதிகளிலும், நைஜர் மற்றும் நைஜீரியாவின் பகுதிளிலும் ஆரம்பிக்கப்பட்ட பேகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் நடவடிக்கையானது புதன்கிழமை முடிவடைந்துள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் 52 சாடியன் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், அனைத்து தீவிரவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். …
-
- 0 replies
- 602 views
-
-
கொரோனா சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு அரசாங்கத்தால் பல நடைமுறைகள் முடக்கப்பட்டுள்ளன. சில வேலைத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்பிடி தப்பிப்பது என்ற பயம் ஒருபுறமும், தமது வாழ்க்கையினை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்ற யோசனை மறுபுறமும் ஒவ்வொருத்தரையும் ஆட்கொண்டுள்ளது. உலகமே இவ்வாறான நெருக்கடி நிலையை …
-
- 0 replies
- 431 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி உறவை அம்பலப்படுத்திய பெண் மரணம் 9 ஏப்ரல் 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி ஆகியோர் இடையே இருந்த உறவை வெளிப்படுத்திய முன்னாள் அரசுப் பணியாளர் லிண்டா…
-
- 0 replies
- 806 views
- 1 follower
-
-
அசோசியேட்டட் பிரஸ் நவம்பர் தேர்தலிற்கான களம் தயாராகியுள்ளது ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபிடென் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது,எதிர்பாராத இடர்கள் எதுவும் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நிலை மாறும். அவர் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை எதிர்த்து போட்டியிடுவார். பேர்னி சான்டெர்ஸ் தனது பிரச்சாரத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதை தொடர்ந்தே இந்த நிலை உருவாகியுள்ளது. யூன் வரையில் தேர்தலில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுவதற்கு அவசியமான பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஜோ பிடெனிற்கு கிடைக்காது. ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த எவரும் போட்டியிடுவதற்கு இல்லாத நிலையில் அவரே வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் மி…
-
- 0 replies
- 544 views
-
-
உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு by : Litharsan கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்றுநோயால் 2020ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி 13 முதல் 32 வீதம் வரை, அதாவது மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை மேலும் மோசமாக இ…
-
- 0 replies
- 273 views
-
-
இத்தாலியில் மற்றுதொரு விபரீதம் : 850 அடி நீளமான பாலம் இடிந்து வீழ்ந்தது இத்தாலியின்மிகப்பெரிய 850 அடி நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இத்தாலியின் மாஸா கராரா மாகாணத்தில் அல்பியானோ மாக்ராவில் உள்ள மாக்ரா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் ஒன்றே இன்று காலை இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. எனினும், கொவிட் -19 காரணமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில், பாலம் இடிந்து விழும் போது இரு வாகனங்கள் மட்டுமே பயணித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்தில் இரண்டு சாரதிகள் மட்டும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயங்களுக்கு உள்ளாகியவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/79583
-
- 4 replies
- 615 views
-
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறதா இத்தாலி? இத்தாலியில் இந்த மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் குசெப் கொன்டே தெரிவித்துள்ளார்.அங்கு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பிரிட்டன் ஊடகங்களுக்கு அவர் அளித்த முதல் பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இந்த மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்குவோம். அந்த நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும்” என்றும் பிபிசியிடம் பேசிய அவர் கூறினார். இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் வீதம் மெதுவாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரிக்க தற்போது அது ஒரு சதவீதமாக உள்ளது.அதேபோல…
-
- 0 replies
- 372 views
-